Saturday, November 19, 2016

பணத்தட்டுப்பாட்டால் மனநல பாதிப்பில் மக்கள்: சம்பவங்களுடன் எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

பிடிஐ

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் கிராமப்புற வர்த்தகர்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி மனநல பாதிப்பு நிலைக்குத் தள்ளப்படுவதாக உளவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் கிராமப்புற உருளைக்கிழங்கு மொத்த விற்பனையாளர் ஒருவர் ரூ.50-60 லட்சம் பெறுமான உருளைக்கிழங்குகளை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். இவர் சிறிய காய்கறி வியாபாரிகளுக்கு அதனை ரொக்கத்திற்கு விற்று வருபவர், ஆனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் வாங்குவதற்கு ஆளில்லாமல் வியாபாரம் நின்று போனது. இதனையடுத்து மனத்தளவில் பாதிப்படைந்த மொத்த வியாபாரி வாய்க்கு வந்த படி பேசிய படி தான் இறந்து விடுவோம் என்ற அச்சப்பட்டு மூலையில் ஒடுங்கிக் கிடப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் பிறகு மூத்த மனநல மருத்துவர் சஞ்சய் கார்க் என்பவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் கூறும்போது, “தனது ஒட்டுமொத்த ரூ.50-60 லட்சம் பெறுமான உருளைக் கிழங்குகள் விற்காமல் விரயமாகி விடும் என்று அவர் கடுமையாக பயந்து போயுள்ளார். இதனால் ஏற்படும் நஷ்டம் தன்னை அழித்து விடும் என்று மரணபயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பல உளவியல் மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது, ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றினால் மனச்சோர்வு உள்ளிட்ட மனநிலை பிரச்சினைகளுடன் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் தங்களை அணுகுவதாக தெரிவித்தார்.

பொதுவாக இவர்கள் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். காரணம் மேற்கு வங்கத்தின் கிராமப்புற வர்த்தகத்தில் கார்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பண உபயோகம் இன்னும் பெரிய அளவுக்கு இல்லை என்பதே.

சாந்தாஸ்ரீ குப்தா என்ற மற்றொரு மன நல மருத்துவர் கூறும்போது, தன்னை அணுகிய கணவனை இழந்த 50 வயது பெண்மணி தன்னுடைய கணவனின் சேமிப்பான ரூ.30 லட்சம் பணத்தை மாற்ற முடியாமல் கடும் மனக்கவலையில் சிக்கினார் என்றார்.

“இந்தத் தொகையில் ஒரு குடியிருப்பு ஒன்றை வாங்கி மீதிப்பணத்தில் தன் மகன் திருமணத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் தற்போது கடந்த 10 நாட்களாக கடும் மன அவஸ்தையிலும், மன பாதிப்பிலும் அவர் என்னை அணுகியுள்ளார்,நான் அவருக்கு ஆலோசனைகளையும் சிகிச்சையும் அளித்து வருகிறேன்” என்றார்.

பூரி மற்றும் திகா என்ற ஊர்களில் ஹோட்டல் நடத்தி வரும் அசீஸ் ரே, மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கடுமையாக குடித்து விட்டு குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதாக மனநல மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

“சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைந்து போனதால் அவரது வர்த்தகம் கடுமையாக பின்னடைவு கண்டது. விடுதியில் தங்கியிருப்பவர்கள் கூட பணத்தை கொடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குடியை அதிகப்படுத்தினார் இதனால் நடத்தையும் பாதிக்கப்பட்டது” என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கார்க் என்பவர் கூறுகிறார்.

ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாராந்திர செக்-அப் செய்து கொள்ள முடியவில்லை, மருத்துவக் கட்டணங்களுக்கு போதுமான பணம் இல்லை.

சில நோயாளிகள் சில சோதனைகளையும் சிகிச்சைகளையும் சீரான இடைவெளியில் எடுத்துக் கொள்வது அவசியம் ஆனால் பணத்தட்டுப்பாடு இவர்களை பாதிப்பதால் அவர்களது ஆரோக்கியம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது, என்கிறார் மற்றொரு மருத்துவர்.

தற்போது பணத்தட்டுபாடு காரணமாக் மன உளைச்சல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஆழ்நிலை பிராணாயாமம், இசை கேட்க வைத்தல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மனநல மருத்துவர் கார்க் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவினால் குடும்ப தலைவிகள் மீதும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி செய்யும் குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடும்ப தலைவிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை தாராளமாக வங்கியில் டெபாசிட் செய்யலாம். அவர்களின் டெபாசிட் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதேபோல ஜன்தன் வங்கி கணக்குதாரர்கள் ரூ.50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கறுப்பு பணத்தை மாற்ற சில குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஜன்தன் வங்கி கணக்குதாரர்கள் உதவி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஜன்தன் வங்கி கணக்குதாரர்களிடம் ஆசைவார்த்தை காட்டி கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்படி குடும்ப தலைவிகள், தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை தீவிரமாக ஆய்வு செய்யும். தவறு இழைப்பவர்கள் மீது வருமான வரித் துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நோட்டு மாற்றுவதில் சிக்கல்: வங்கிகளில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்பு - பொதுமக்கள் ஏமாற்றம்

விரலில் வைக்க மை வராதது, ரிசர்வ் வங்கியிலிருந்து போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று பெரும்பாலான வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்று வதில் சிக்கல் ஏற்பட்டது. பல வங்கிகளில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதை யடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வரு ழ்ழ்ணம் மாற்றுவதை தடுப்பதற்காக பணம் எடுப்பவர்களின் விரல்களில் மை வைக்கப்படும் என கடந்த செவ் வாயன்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வங்கிகளுக்கு மை வரவில்லை. இதனால், இத்திட் டத்தை செயல்படுத்துவதில் குழப் பம் நிலவுகிறது.

ரிசர்வ் வங்கி பணம் அனுப்பவில்லை

இந்நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறி விப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500-க்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தது. இதைக் கேட்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று அந்த 2 ஆயிரம் ரூபாய் கூட பெரும்பாலான வங்கிகளில் வழங்கப்படவில்லை. பல வங்கி களில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்கப் பட்டன. ரிசர்வ் வங்கியில் இருந்து போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, “விரலில் வைப்பதற்கான அடையாள மை வராததால் பெரும் பாலான வங்கிகளில் இன்று (நேற்று) பழைய ரூபாய் நோட்டு களை மாற்றித் தரவில்லை. மேலும், சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படுகின்றன. இதை வாங்க பொதுமக்கள் மறுக்கின்றனர்.

வங்கி ஊழியர்கள் பாதிப்பு

தொடர்ந்து விடுமுறையின்றி வங்கி ஊழியர்கள் வேலை செய்து வருவதால் பலர் உடல்நலம் பாதிக் கப்பட்டு விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் வங்கி வாடிக்கையாளர் களுக்கு சேவை வழங்க முடியாத நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு அவற்றை மாற்றி தரவும் முடிய வில்லை. அத்துடன், மத்திய கூட்டுறவு சங்க வங்கி ஊழியர்களின் போராட் டத்தால் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, “விரலில் வைக்க மை வராததால் வங்கிகளில் இன்று (நேற்று) பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்தவர்களுக்கு பணம் வழங்கவில்லை. அத்துடன், புதிய 500 ரூபாயும் இதுவரை வரவில்லை. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் பணம் வழங்க முடியவில்லை’ என்றார்.

ரிசர்வ் வங்கியிலும்..

பணம் மாற்றுவதற்கு கைவிரலில் மை, ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே பழைய நோட்டுக்கள் மாற்றப் படும் என்ற அறிவிப்பால் நேற்று ரிசர்வ் வங்கியில் பணம் மாற்றுவோர் எண்ணிக்கை பெரு மளவு குறைந்தது.

வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத மை வைக்க வேண்டாம்: நிதியமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


வங்கிகளில் பணம் மாற்ற வாடிக்கையாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவின்போது வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர் களுக்கு அழியாத மை வைக்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள் ளது. இதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 19-ம் தேதி பல்வேறு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் பணம் மாற்றச் செல்லும் வாடிக்கை யாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம். கை விரலில் அழியாத மை வைக்கும் முறை தேர்தலில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பணம் மாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Thursday, November 17, 2016

இவர்களும்தான் பணத்தை ஒழித்தார்கள்.. ஆனால் கடைசியில் என்னாச்சு தெரியுமா?
oneindia tamil

டெல்லி: பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பை பலரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். ஆனால் சாமானிய பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைக்காக தெருத் தெருவாக அலைந்து கொண்டுள்ளனர். மோடியைப் போலவே மேலும் பல நாடுகளிலும் கூட பண ஒழிப்பு நடந்தது. ஆனால் எதுவுமே எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதுதான் முக்கியமானது.

உண்மையில் அந்த நாடுகளில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை, அந்த அரசுகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கருப்புப் பணத்தை முடக்க அல்லது அழிக்கப் போய் தற்போது பெரும்பான்மையான மக்களின் தவிப்பை வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் திட்டமும், நோக்கமும் மிக நல்ல விஷயம்தான் என்றாலும் கூட முறையான திட்டமிடல் இல்லை. குறிப்பாக வங்கிகள் மகா மோசமான திட்டமிடலை மேற்கொண்டதால்தான் இந்தப் பெரும் குழப்பம். இதையெல்லாம் முன்கூட்டியே சரி செய்திருக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதுவும் கூட வாயைப் பொத்திக் கொண்டுதான் உள்ளது.

இதற்கு முன்பு பல நாடுகளிலும் இதுபோல அதிரடியாக பெரிய மதிப்பிலான பணத்தை ஒழித்துப் பார்த்தனர். ஆனால் அங்கு தோல்வியிலேயே அந்த நடவடிக்கைகள் முடிந்துள்ளன. அதுகுறித்த ஒரு ரவுண்டப்...

Source: tamil.oneindia.com

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன் அப்போது வெடித்துச் சிதறக் காத்திருந்த நேரம். கார்பசேவ் அதிபராக இருந்தார். ஆண்டு 1991. அந்த ஆண்டு ஜனவரி மாதம் உயரிய மதிப்பிலான ரூபிளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தார் கார்பசேவ். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இதை அறிவித்தார் கார்பசேவ். 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் கார்பசேவ்.

நடந்தது என்ன?

ஆனால் இந்த ரூபிள் ஒழிப்பால் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லை. பணவீக்கம் சற்றும் குறையவில்லை. மாறாக மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. இது கார்பசேவின் பதவியை குறி வைத்த புரட்சிக்கும் வித்திட்டது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியன் சிதறியது.

வட கொரியா

2010ம் ஆண்டு வட கொரியாவின் மறைந்த சர்வாதிகாரி கிம் ஜோங் 2 இதேபோன்ற கரன்சி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் அது பெரும் விபரீதத்திற்கே விட்டது. நாடே பஞ்சத்தில் மூழ்கியது. சாப்பிடக் கூட எதுவும் இல்லாமல் மக்கள் செத்து விழுந்தனர். மிகப் பெரிய விலை உயர்வையும் நாடு சந்தித்தது. இதை சற்றும் எதிர்பாராத கிம், மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அசரடித்தார். அதேசமயம், இந்த சீர்திருத்தத்திற்கு யோசனை கூறிய நிதித்துறை அமைச்சரை தலையைத் துண்டித்துக் கொலை செய்து கிம் அதிரவும் வைத்தார்.

ஜயர்

ஜயர் நாடு 1990களில் பெரும் பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது. இதையடுத்து சர்வாதிகாரி மொபுடு செசே சீக்கோ கரன்சிகளில் சீர்திருத்தங்களை அறிவித்தார். 1993ம் ஆண்டு சில கரன்சிகளை அவர் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார். அது பெரும் பண வீக்கத்திற்கு இட்டுச் சென்றது. டாலருக்கு எதிரான ஜயர் நாட்டு கரன்சியின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. உள்நாட்டுப் போர் வெடித்தது. 1997ல் மொபுடு ஆட்சியை விட்டுத் துரத்தப்பட்டார்.

நைஜீரியா

நைஜீரியாவில் 1984ம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி முகம்மது புஹாரி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தார். புதிய ரூபாய் நோட்டுக்களை அவர் வெளியிட்டார். புதிய நிறத்துடன் வந்த அந்த ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையே அது சீர்குலைத்து விட்டது. பின்னர் வந்த புரட்சியில் புஹாரி வெளியேற்றப்பட்டார்.

மியான்மர்

1987ம் ஆண்டு மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் புழக்கத்தில் இருந்த பணத்தில் 80 சதவீத மதிப்பை குறைத்து அறிவித்தனர். கருப்புப் பண ஒழிப்பை குறி வைத்தே இந்த நடவடிக்கை. ஆனால் அது அப்பாவி மக்களைத்தான் கடுமையாக பாதித்தது. போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கானா

ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் 1982ம் ஆண்டு 50 செடி கரன்சி ஒழிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் சீர் குலைந்தன. மக்களுக்கு வங்கிகள் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. நாடே ஸ்தம்பித்தது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பல மைல் தூரம் நடந்து வந்து வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற முடியாமல் பல கோடிப் பணம் வீணாக மூட்டை மூட்டையாக வீசப்பட்டது.

திட்டமில் இல்லாவிட்டால் தோல்விதான்

சரியான திட்டமிடல் இல்லாததால் வந்த வினைதான் இந்த நாடுகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம். இந்தியாவிலும் கூட தற்போது முறையான திட்டமிடல் இல்லாமல்தான் பெரும் குழப்பமாக உள்ளது. எனவே மோடியின் நடவடிக்கை எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்லுமேயேனால் இந்தத் திட்டத்தை தோல்வி என்று இப்போதே கூறி விடலாம்.. காரணம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மக்கள்தான்.. கருப்புப் பண முதலைகளோ அல்லது பெரும் பணக்காரர்களோ அல்ல!

Dailyhunt

வங்கி டெபாசிட் ரூ. 2.5 லட்சத்தை தாண்டினால் நடவடிக்கை: பான் கார்டு அவசியமாகிறது

பிடிஐ

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை செலுத்துவோர் பான் கார்டு விபரத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பலரும் ரூ. 49 ஆயிரத்தை பல முறை தங்கள் வங்கிக் கணக்கில் போட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையான காலத்தில் ஒரு கணக்கில் போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாயிருந் தால் அது வரி விதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றார்போல மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஆண்டு வருவாய் கணக்கு தாக்கல் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டில் ஒரு தனிநபர் தங்கள் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால் அது குறித்த தகவலை தங்களுக்கு தெரிவிக்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு வரி விதிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாகக் குறைத்துள்ளது.

நடப்புக் கணக்குகளில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் போடப்பட்ட தொகையின் அளவு ரூ. 12. 50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.

இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் தபால் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஒருவரே பல வங்கிகளில் கணக்கு வைத்து அதை செயல்படுத்தினால் அது எவ்விதம் ஒருங்கிணைக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.

பயணம் மகிழ்ச்சியாய் அமைய...


ரயில் நிலையத்திற்குள் நுழைந் ததுமே உங்கள் பயணம் இனி தாய் அமையட்டும் என்று ஒலிபெருக்கியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நாமும் அதை கேட்டுவிட்டு ரயில் ஏறினால் அரு கில் இருப்பவர் கூட சில சமயங் களில் நம்மிடம் சரியாக பேச மாட்டார். மேலும் பொழுதுபோக்கு அம்சங்களும் பயணத்தின் போது இருக்காது. நீண்ட தூர பயணங் களின் போது நாம் மொபைல் போன் வழியாக பாடல் கேட்பதுண்டு. அதுவும் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்தான்.

ஆனால் இனி அப்படி ரயில் பயணிகள் கஷ்டப்படத்தேவை யில்லை. உங்களை மகிழ்விக்க பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே கொண்டு வர உள்ளது. ஏற்கெனவே இலவச வை-பை திட்டத்தை ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது. தற்போது ரயில் பயணத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் முயற்சியில் இந்திய ரயில்வே இறங்கியுள்ளது.

அதாவது ரயில் பயணத்தின் போது நாடகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள், பக்தி சார்ந்த விஷயங்கள், பாடல்கள் என அனைத்தையும் ரயில் பயணத்தின் போது பார்ப்பதற்கு ரயில்வே துறை முயற்சித்து வருகிறது. இதை யொட்டி ஆப்லைன் ஸ்ட்ரீமிங் சந்தையில் முன்னணியில் உள்ள மூவிங் டாக்கிஸ், ஸ்பீடு பெட்ச், மைப்ரீடிவி ஆகிய நிறுவனங்க ளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக ராஜ தானி எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தங்களது சேவையை மூவிங் டாக் கிஸ் நிறுவனம் சோதனை முறையில் பரிட்சித்து பார்த்துள்ளது. ஸ்பீடு பெட்ச் நிறுவனமும் சோதனை முறையில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிட்சித்து பார்த்துள்ளது.

இந்த பொழுதுபோக்குச் சேவை மூலம் ரயில்வே துறைக்கு மிகப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த மூன்று வருடத்திற்குள் ரயில்வே துறையின் பொழுதுபோக்குச் சந்தை 2,277 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் கூறியுள்ளது. இது ஐந்து வருடங்களில் 3,495 கோடி ரூபாயாக உயரும் என்றும் ஒரு மணி நேரத்தில் 70 லட்சம் பேர் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் விளம்பரங்கள் மூலம் அதிகமான வருமானம் ரயில்வே துறைக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. தற்போது பல நிறுவனங்கள் ரயில்வேயுடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

முக்கியமான ரயில் நிலையங்களில் வை-பை வசதி கொண்டு வந்தது. பல ரயில்களில் பயோ-டாய்லெட் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தது உட்பட சமீப காலத்தில் ரயில்வே சேவையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 1000 ரயில்களில் ரயில் ரேடியோ சேவையை ரயில்வே துறை ஆரம்பித்தது. இது பயணிகளிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரேடியோ மூலம் விளம்பரங்கள் அதிகமாக வருவதால் வருவாயும் ரயில்வே துறைக்கு கிடைத்து வருகிறது.

அதனால் அடுத்தடுத்த வருடங்களில் அனைத்து ரயில்களிலும் ரேடியோ சேவையை அளிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுவரும் பொழுது ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பதோடு பயணிகளின் பயணமும் மகிழ்ச்சியாக அமையும்.

NEWS TODAY 10.06.2026