Thursday, November 17, 2016

பயணம் மகிழ்ச்சியாய் அமைய...


ரயில் நிலையத்திற்குள் நுழைந் ததுமே உங்கள் பயணம் இனி தாய் அமையட்டும் என்று ஒலிபெருக்கியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நாமும் அதை கேட்டுவிட்டு ரயில் ஏறினால் அரு கில் இருப்பவர் கூட சில சமயங் களில் நம்மிடம் சரியாக பேச மாட்டார். மேலும் பொழுதுபோக்கு அம்சங்களும் பயணத்தின் போது இருக்காது. நீண்ட தூர பயணங் களின் போது நாம் மொபைல் போன் வழியாக பாடல் கேட்பதுண்டு. அதுவும் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்தான்.

ஆனால் இனி அப்படி ரயில் பயணிகள் கஷ்டப்படத்தேவை யில்லை. உங்களை மகிழ்விக்க பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே கொண்டு வர உள்ளது. ஏற்கெனவே இலவச வை-பை திட்டத்தை ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது. தற்போது ரயில் பயணத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் முயற்சியில் இந்திய ரயில்வே இறங்கியுள்ளது.

அதாவது ரயில் பயணத்தின் போது நாடகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள், பக்தி சார்ந்த விஷயங்கள், பாடல்கள் என அனைத்தையும் ரயில் பயணத்தின் போது பார்ப்பதற்கு ரயில்வே துறை முயற்சித்து வருகிறது. இதை யொட்டி ஆப்லைன் ஸ்ட்ரீமிங் சந்தையில் முன்னணியில் உள்ள மூவிங் டாக்கிஸ், ஸ்பீடு பெட்ச், மைப்ரீடிவி ஆகிய நிறுவனங்க ளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக ராஜ தானி எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தங்களது சேவையை மூவிங் டாக் கிஸ் நிறுவனம் சோதனை முறையில் பரிட்சித்து பார்த்துள்ளது. ஸ்பீடு பெட்ச் நிறுவனமும் சோதனை முறையில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிட்சித்து பார்த்துள்ளது.

இந்த பொழுதுபோக்குச் சேவை மூலம் ரயில்வே துறைக்கு மிகப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த மூன்று வருடத்திற்குள் ரயில்வே துறையின் பொழுதுபோக்குச் சந்தை 2,277 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் கூறியுள்ளது. இது ஐந்து வருடங்களில் 3,495 கோடி ரூபாயாக உயரும் என்றும் ஒரு மணி நேரத்தில் 70 லட்சம் பேர் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் விளம்பரங்கள் மூலம் அதிகமான வருமானம் ரயில்வே துறைக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. தற்போது பல நிறுவனங்கள் ரயில்வேயுடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

முக்கியமான ரயில் நிலையங்களில் வை-பை வசதி கொண்டு வந்தது. பல ரயில்களில் பயோ-டாய்லெட் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தது உட்பட சமீப காலத்தில் ரயில்வே சேவையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 1000 ரயில்களில் ரயில் ரேடியோ சேவையை ரயில்வே துறை ஆரம்பித்தது. இது பயணிகளிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரேடியோ மூலம் விளம்பரங்கள் அதிகமாக வருவதால் வருவாயும் ரயில்வே துறைக்கு கிடைத்து வருகிறது.

அதனால் அடுத்தடுத்த வருடங்களில் அனைத்து ரயில்களிலும் ரேடியோ சேவையை அளிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுவரும் பொழுது ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பதோடு பயணிகளின் பயணமும் மகிழ்ச்சியாக அமையும்.

No comments:

Post a Comment

HC: RTI can’t be used for obtaining personal info

HC: RTI can’t be used for obtaining personal info  TIMES NEWS NETWORK 13.06.2026 Bengaluru : The Right to Information (RTI) Act cannot be em...