பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? மனம் திறந்தார் பதிவாளர் மோகன்

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 80 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன் ராஜினாமா செய்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 88 உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதிக்கும், பதிவாளர் பொறுப்பு பி.எஸ்.மோகனுக்கும் நேரிடையாகவே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவு பதிவாளர் மோகன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவல் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்துக்கு தெரியவந்ததும் அங்கிருந்து கூட்டத்தை நடத்தியதற்கான விளக்கத்தை கேட்டனர். அப்போதுதான், நான், துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதம் தாமதப்படுத்திய விவரம் எனக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக எனக்கும், துணைவேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட, என்னை அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தெரிவித்தார். உடனே நானும் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட 'ரிலிவிங்' ஆர்டரில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய அரசு அனுப்பியதை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. எந்த தவறும் செய்யாத என் மீது இதுபோன்ற குற்றசாட்டுக்கள் கூறப்பட்டதால் அந்த 'ரிலிவிங்' ஆர்டரை நான் பெறவில்லை. என் தரப்பு நியாயத்தை சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் விளக்கமாக கொடுக்க உள்ளேன்"என்றார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து துணை வேந்தர் கணபதியிடம் கேட்டோம். "சிண்டிகேட் கூட்டம் நடத்தக் கூடாது என்று உயர்கல்வித்துறை அனுப்பிய அந்த கடிதத்தை கூட்டம் முடிந்த பிறகு எனக்கு பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடக்கும் போது கூட அதை நடத்தக்கூடாது என்று அரசு அனுப்பிய தகவலை என்னிடம் பதிவாளர் பொறுப்பிலிருக்கும் மோகன் சொல்லவில்லை. மேலும், யுஜிசி விதிப்படியே 80 உதவி பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றவரிடம், பணம் வாங்கிக் கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறதே என்று கேட்டதற்கு, மெரிட் அடிப்படையிலேயே பணிநியமனம் நடந்தது. இந்த பதவிக்கு போட்டியிட்டு பணி கிடைக்காதவர்கள் தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள்" என்றார்.
எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment