Sunday, November 20, 2016

திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்

திருப்பதி;பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தபோதிலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.
புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள்

இதுகுறித்து கோவிலின் மக்கள் தொடர்பு அதிகாரி தாலரி ரவி கூறுகையில், ''9-ந்தேதியில் இருந்து 10 நாட்களில் உண்டியலில் ரூ.30 கோடியே 36 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஆன வசூலை விட இது ரூ.8 கோடி அதிகம். ஒரு நாளில் அதிகபட்ச வசூல், கடந்த 17-ந் தேதி வசூலான ரூ.3 கோடியே 53 லட்சம். குறைந்த வசூல் என்றால் 10-ந்தேதி ரூ.2 கோடியே 28 லட்சம் வசூலானதுதான்'' என்று கூறினார்.மேலும், ''இப்போது புதிதாக வெளியாகியுள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகள், பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருக்கின்றன'' என்றார்.இங்கு ஒரு ஆண்டுக்கு உண்டியல் ரொக்க பண வசூல் மட்டும் ரூ.1,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Paramedical intake: 27k register for 56k seats

Paramedical intake: 27k register for 56k seats  TIMES NEWS NETWORK  13.06.2026 Ahmedabad : Admissions for paramedical programmes in Gujarat,...