Tuesday, November 29, 2016

“இவரிடமிருந்துதான் இரக்கக் குணத்தைக் கற்றார் எம்.ஜி.ஆர்!''- என். எஸ்.கே பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

- எஸ்.கிருபாகரன்

50-களின் மத்தியில் சென்னையின் மத்தியில் உள்ள அந்த பிரபல மண்டபம் பிரபலஸ்தர்களால் நிரம்பி வழிந்தது. விழா நாயகனை விழா எடுத்த பிரபலமும் விழாவுக்கு வந்த பிரபலங்களும் மேடையில் பாராட்டித்தள்ளினர். பணமுடிப்பும் பாராட்டும் குறைவின்றி கொடுக்கப்பட்டது விழாவின் நாயகனுக்கு. நடந்து முடிந்த அந்த விழா குறித்து திரையுலகமே பல மாதங்கள் ஆச்சர்யமாக பேசிக்கொண்டனர். காரணம் விழா நாயகன் சாதாரண ஒரு டிரைவர். தனக்கு பல ஆண்டுகள் காரோட்டிய டிரைவரை கவுரவிக்க அவருக்குப் பிரபலங்களைக் கூட்டி விழா எடுத்த அந்த மனிதநேயர் வேறு யாருமல்ல; கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை என்.எஸ்கிருஷ்ணன்.

நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் தொடங்கி திரையுலகில் ஈடில்லாத நகைச்சுவை மேதையாகத் திகழ்ந்தவர். திரையுலகில் தான் சம்பாதித்ததை வாரி வழங்கி மகிழ்ச்சியடைந்தவர் கலைவாணர்



பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம் ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும் இடம்பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா முதற்படம். புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும் அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச் செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப் போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.

இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார். ஆனால் கலைவாணரின் செயல் வெறுப்போடு கொஞ்சம் அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது. 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன் கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன். ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக் கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்துபோனார் மதுரம். புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர் இருவரும்.

சாதாரண நடிகராக மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றபின்னரும் கலைவாணரின் இரக்க குணம் சற்றும் குறையவில்லை. வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினார். திரையுலகில் வள்ளல்குணத்துக்கு உதாரணமாக ஒருவரை காட்டச்சொன்னால் சிறுகுழந்தையும் எம்.ஜி.ஆர் என்ற மனிதரை அடையாளம் காட்டும். எம்.ஜி.ஆர் என்ற மனிதநேயரின் வள்ளல்குணத்துக்கு வழிகாட்டி கலைவாணர்தான். கலைவாணரிடமிருந்துதான்தான் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டேன் என பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பெருமிதமாகக் குறிப்பிட்டதுண்டு.



1966-ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலருக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்து எம்.ஜி.ஆர் எழுதியவற்றை பார்ப்போம். “புகழ் மிகுதியின் அடித்தளத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை அவரது அறிவும் பண்புமே நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல. பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால் திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள். சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால் அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.

இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.

இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.



'மாய மச்சேந்திரா' படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், படக் கம்பெனிச் சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத் தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்.

மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள். இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;



நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துக் கொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்து கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்து கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால் பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?



அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துக் கொண்டார்கள். இவர் தான் கலைவாணர்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம். ஆனால் ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால் அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலினும் பெரியது; மலையினும் உயர்ந்தது. அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை.



அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார்.ஆனால் பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்துக்குள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துக் கொள்வார்கள்.

கலைவாணர் அவருடைய கடைசி கால கட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி. அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போறாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!



அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது. இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்பு மிக்க செயல்கள்தாம். கலைவாணரின் மறைவின் போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சிபேதம், மொழி பேதம், இனபேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!

அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?  மனம் திறந்தார் பதிவாளர் மோகன் 


கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 80 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன் ராஜினாமா செய்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 88 உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதிக்கும், பதிவாளர் பொறுப்பு பி.எஸ்.மோகனுக்கும் நேரிடையாகவே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவு பதிவாளர் மோகன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து பி.எஸ்.மோகனிடம் பேசினோம். "நான், இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். வேதியியல் துறையின் தலைவராகவும் உள்ளேன். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டேன். நான் பணியில் இருந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் 88 உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கடந்த 19ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்த துணைவேந்தர் கணபதி என்னிடம் தெரிவித்தார். அதன்படி சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இந்த சமயத்தில் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்திலிருந்து கடந்த 18ம் தேதி ஒரு ஃபேக்ஸ் வந்தது. அதில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசிடமிருந்து வந்த கடிதத்தை துணை வேந்தர் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். இந்த சமயத்தில் சிண்டிகேட் கூட்டத்தை கடந்த 22ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யுமாறு துணைவேந்தர் கணபதி, எனக்கு வாய்மொழியாக தெரிவித்தார். அதன்படி அன்றைய தினத்தில் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே 40க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமன உத்தரவை பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த தகவல் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்துக்கு தெரியவந்ததும் அங்கிருந்து கூட்டத்தை நடத்தியதற்கான விளக்கத்தை கேட்டனர். அப்போதுதான், நான், துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதம் தாமதப்படுத்திய விவரம் எனக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக எனக்கும், துணைவேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட, என்னை அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தெரிவித்தார். உடனே நானும் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட 'ரிலிவிங்' ஆர்டரில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய அரசு அனுப்பியதை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. எந்த தவறும் செய்யாத என் மீது இதுபோன்ற குற்றசாட்டுக்கள் கூறப்பட்டதால் அந்த 'ரிலிவிங்' ஆர்டரை நான் பெறவில்லை. என் தரப்பு நியாயத்தை சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் விளக்கமாக கொடுக்க உள்ளேன்"என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து துணை வேந்தர் கணபதியிடம் கேட்டோம். "சிண்டிகேட் கூட்டம் நடத்தக் கூடாது என்று உயர்கல்வித்துறை அனுப்பிய அந்த கடிதத்தை கூட்டம் முடிந்த பிறகு எனக்கு பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடக்கும் போது கூட அதை நடத்தக்கூடாது என்று அரசு அனுப்பிய தகவலை என்னிடம் பதிவாளர் பொறுப்பிலிருக்கும் மோகன் சொல்லவில்லை. மேலும், யுஜிசி விதிப்படியே 80 உதவி பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றவரிடம், பணம் வாங்கிக் கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறதே என்று கேட்டதற்கு, மெரிட் அடிப்படையிலேயே பணிநியமனம் நடந்தது. இந்த பதவிக்கு போட்டியிட்டு பணி கிடைக்காதவர்கள் தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள்" என்றார்.

எஸ்.மகேஷ்


Return to frontpage

பார்வை: கடுகு டப்பா பணமும் கறுப்புப் பணமா?

பிருந்தா சீனிவாசன்

இன்னும் முப்பது நாட்களில் கறுப்புப் பணக் கறையில்லாமல் புத்தம் புதிதாகப் பிறக்கப்போகும் இந்தியாவைப் பார்ப்பதற்காகப் பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் கறுப்புப் பணம் முற்றாக ஒழிந்து, அதன் காரணமாகத் தங்கள் வங்கிக் கணக்கில் வந்து குவியப்போகிற லட்சங்கள் பற்றிய கனவிலும் சிலர் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.

“கால் கடுக்க ஏடிஎம் வாசலில் நின்றால் என்ன, நம் நாட்டு எல்லையைக் காக்கும் வீரர்களை நினைத்துப் பார்த்தால், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்று பலர் தேசப்பற்றுடன் உரையாற்றுவதையும் பார்க்க முடிகிறது. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன சமூக வலைதளங்களில் உலாவரும் அவல நகைச்சுவையும் ‘மீம்’ சித்தரிப்புகளும். அதுவும் நகைச்சுவை என்ற பெயரில் இல்லத்தரசிகளை மையமாக வைத்து வெளியாகிற ஒவ்வொன்றும் அபத்தத்தின் உச்சம்.

பெண்கள் இந்தியர்கள் இல்லையா?

“எங்கள் வீட்டு கடுகு டப்பாவில் ஒளித்துவைத்திருந்த கறுப்புப் பணம் வெளிவந்துவிட்டது” என்று சொல்கிற ஆண்கள், அவைதான் குடும்பத்தைத் தொய்வில்லாமல் நடத்த உதவிய அச்சாணி என்று உணர்ந்திருக்க நியாயமில்லை. “கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் கார்ப்பரேட் ஆட்கள் சிக்குகிறார்களோ இல்லையோ, எங்கள் வீட்டம்மா பெரும்தொகையுடன் கையும் களவுமாகச் சிக்கிவிட்டார்” என்று பெருமிதத்துடன் நிலைத்தகவல் பதியும் அல்லது அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களிடம் பணம் இருப்பதே மாபெரும் குற்றம் என்று சொல்லவருகிறார்களா?

நாட்டைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பு இல்லாத நோட்டுகளாக அறிவித்ததெல்லாம் சரிதான். அதன் ஒரு அங்கமாக நாடு முழுவதும் பணத்தைக் கையாளுவது குறைந்து, பணஅட்டைகள் மூலமே பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்று தொலைநோக்குடன் பேசுவதும்கூடப் பரவாயில்லை. ஆனால் வங்கிக் கணக்கு, கடன் அட்டை, ஏடிஎம் மையம் என்று நவீன இந்தியாவின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் தெரியாமல், அப்படியே தெரிந்திருந்தாலும் அவற்றைக் கையாளும் சுதந்திரம் இல்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களை இந்த அறிவிப்பு பாதிக்கக்கூடும் என்று அதிகாரத்தில் இருக்கும் எந்த ஆணுக்கும் தெரியாதா? பணம் என்பது ஆண்கள் மட்டுமே கையாளக்கூடிய பொருள் என்ற நினைப்பின் வெளிப்பாடுதானே, பெண்கள் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல் தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு?

எது கறுப்புப் பணம்?

ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவோ, மனைவியோ, மகளோ மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கும் பணம், குடும்ப நலனுக்கான சேமிப்பு என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர். “அப்படியென்ன புருஷனுக்கும் புள்ளைக்கும் தெரியாம சேர்த்துவைக்க வேண்டியிருக்கு?” என்று கொதித்தெழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் இப்படிச் சேர்த்துவைக்கும் பணம், அவர்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கல்ல. குழந்தைகளின் கல்வி, திருமணம், நகை, அத்தியாவசியப் பொருள் என்று ஏதோவொரு முக்கியமான செலவுக்குப் பணம் இல்லாமல் கணவன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது கைகொடுத்து உதவும் பணம். அந்தப் பணம், வீட்டுக் கணக்கில்

இருந்து திருடப்பட்டதல்ல. வீட்டுச் செலவுக்காகக் கணவன் கொடுக்கும் பணத்தில், செலவைக் குறைத்து மிச்சப்படுத்தியது. அப்படி மிச்சப்படுத்திய பணத்தைச் சிறுகச் சிறுக சீட்டு கட்டிப் பெரிதாக்கியது. தன்னுடைய தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக்கொண்டு குடும்பத்துக்கென ஒதுக்கிவைத்தது. இப்படிச் சேமித்த பணத்தைத்தான் ‘கறுப்புப் பணம்’ என்று சொல்லி நகைக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

பெண்கள் ஏன் சேமிக்கிறார்கள்?

பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை ஏன் பதுக்கி (அப்படிச் சொல்ல வேண்டும் என்றுதானே பலரும் விரும்புகிறார்கள்) வைக்கிறார்கள்? அதற்குக் காரணமும் ஆண்கள்தான். வாங்குகிற சம்பளத்தை முழுதாக வீட்டில் ஒப்படைக்காத கணவர்களால் நிறைந்தது நம் நாடு. சம்பளப் பணத்தை மனைவியிடம் கொடுக்கிற கனவான்களும் பாதியை எடுத்துக்கொண்டு, வீட்டுச் செலவுக்கெனக் கொஞ்சமாகக் கிள்ளித்தான் தருவார்கள். சில ஆண்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கும் உயரிய சிந்தனையோடு டாஸ்மாக் கடைகளில் செலவழித்துவிடுவார்கள். அரசாங்கத்துக்குப் போக மீதமிருக்கும் பணம்தான் வீடு வந்து சேரும். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அந்த வீட்டுக் குழந்தைகள் பிழைத்திருப்பதும், படித்து முன்னேறுவதும்.

பறிபோன பணம்

நகரங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகிற வீடுகளில் பெண்களின் சம்பளப் பணத்தைக் கையாள்வது பெரும்பாலும் அந்த வீட்டு ஆண்தான். பெண்ணின் கையில் பணத்தையும் குடும்ப நிர்வாகத்தையும் ஒப்படைப்பது, தங்கள் ஆண்மைக்கு இழுக்கு என்றே பலரும் நினைக்கிறார்கள். சம்பளப் பணம் முழுவதையும் மனைவியிடம் ஒப்படைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், அங்கே தலைக்கு மேல் வெள்ளமாகக் கடன் தொகை ஓடும். அந்தக் கடனைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் மனைவியின் தலையில்தான் விழும். இத்தனை சிக்கல்களுக்கு நடுவேதான் ஒரு பெண் பணத்தைச் சேமிக்க வேண்டியிருக்கிறது.

அப்படிச் சேமித்த பணத்துக்கும், பணமதிப்பு நீக்கம் மூலம் கேடு வந்துவிட்டது. எல்லாப் பெண்களுக்கும் வங்கிக் கணக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கையாளுவது கணவன் என்கிற நிலையில், தாங்கள் சேமித்துவைத்திருந்த பணத்தைக் கணவனிடமோ, மகனிடமோ கொடுக்க வேண்டிய நிலை. அப்படிக் கொடுக்கப்பட்டு வங்கிக் கணக்கில் ஏறும் பணம், முழுதாக இவர்கள் கையை வந்து சேரும் சாத்தியம் குறைவு. அதுவும் பணத் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், பெண்களின் சேமிப்பு வாராக் கடனாகித்தான் போகும்.

அல்லல்படும் பெண்கள்

பெண்களின் இந்தச் சேமிப்பு பல குடும்பங்களில் சிக்கல்களையும் மனத்தாங்கலையும் ஏற்படுத்திவிட்டது. “நான் வீட்டில் இருந்தபடியே துணிகளை விற்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் எட்டாயிரம் ரூபாயைச் சேர்த்துவைத்திருந்தேன். அதை என் கணவரிடம் கொடுத்து மாற்றித் தரச் சொன்னேன். எனக்கே தெரியாமல் இவ்வளவு பணம் வைத்திருந்தாயா என்று கோபித்துக்கொண்டார். என் மீது அவருக்கிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதாம்.

என்கிட்டே சரியா பேசறதுகூட இல்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி கனி. இல்லத்தரசிகளின் நிலை இப்படியென்றால், முதியவர்கள் படும் பாடு இன்னும் மோசம். மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் சேர்த்துவைந்திருந்த சொற்பப் பணத்தை மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டிய நிர்பந்தம். “வயசான காலத்துல எல்லாத்துக்கும் அவங்க கைய எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? ஆத்திர அவசரத்துக்கு என் கையில கொஞ்சம் பணம் வேணாமா? இப்ப அதையும் பறிகொடுத்துட்டேன்” என்று சொல்லும் செந்தாமரையின் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனம் பலருக்கும் புரிவதில்லை.

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுவரும் பெண்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. தினசரி கூலி, வாரக் கூலியை நம்பிக் குடும்பம் நடத்தும் அவர்கள், வங்கிக் கணக்குக்கும் கடன் அட்டைக்கும் எங்கே போவார்கள்? மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் காய்கறி, பழம், பூ, பால், மீன் போன்றவற்றை விற்கும் பெண்களின் வருமானம் குறைந்துவிட்டது.

சிலர் வருமானமே இல்லாமல் அல்லல்படுகிறார்கள். “ஒரு நாளுக்கு ஐநூறு ரூபாய்க்கு பூ வித்துடு வேன். பூ வாங்கவே காசில்லை. மார்கெட்ல கடன் சொல்லி வாங்கிட்டு வந்தேன். என்கிட்ட ரெகுலரா வாங்குறவங்க எல்லாம் சில்லறை இல்லைன்னு சொல்லிட்டுப் போறாங்க. இன்னைக்கு பொழுதை எப்படி ஓட்டுறதோ” என்று புலம்பும் சாந்தி அக்காவைப் பற்றி நமக்கென்ன கவலை? இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டுப் பிறக்கப் போகும் புதிய இந்தியாவை வரவேற்க இப்போதே தயாராவோம்.


வாசகர் வாசல்: பதுக்கல் நல்லது!



மத்திய அரசுக்கு,

மத்திய வர்க்கத்து இல்லத்தரசியின் மடல். கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு எட்டு மணியளவில் தாங்கள் ஆடிய செல்லும் நோட்டு, செல்லாத நோட்டு மங்காத்தாவால் ஸ்தம்பித்துப்போன கூட்டத்தில் நானும் ஒருத்தி. காரணம் அப்போது என்னிடம் இருந்த கறுப்புப் பணம் 35 ஆயிரம் ரூபாய். “எவ்வளவு வச்சிருக்க? எல்லாத்தையும் எடு. இல்லைன்னா அது வெறும் பேப்பர்தான்” என்று என் கணவர் பயமுறுத்தினார். அவரிடம் கொடுத்தாலும் திரும்ப கைக்கு வராது என்பதால், அது எனக்கு வெறும் பேப்பர்தான்.

“இனிமேல் வங்கி அட்டை மூலமாகத்தான் பணப் பரிமாற்றம் நடக்கப் போகுது. இனி என்னை ஏமாத்தி எதுவும் சுருட்ட முடியாது. நாட்ல மட்டுமில்லை, வீட்லயும் பதுக்க முடியாது தெரியும்ல” என்று அகமகிழ்ந்தவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். நவம்பர் 6-ம் தேதிதான், “மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். உங்கிட்டே எவ்ளோ இருக்கோ குடு. அப்புறமா தர்றேன்” என்று ஒப்பந்தம் போட்டார்.

இல்லத்தரசிகளின் கறுப்புப் பணத்தில்தான் முக்கால்வாசி இந்தியா இயங்குகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், வீடு, நிலம் வாங்க, நல்லது கெட்டதுக்கு செய்முறை செய்ய என கணவன்மார்களின் தேவை அனைத்துக்குமே பக்கத்து வீட்டு அக்காவிடம் வாங்கிய கைமாத்தாக, நகையை அடகுவைத்த பணமாக வலம்வருவது எல்லாமே கள்ளப் பணம்தான் பிரதமரே!

இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கக்கூடும் என்றாலும், நாட்டைக் காக்கும் இந்தப் போரில் நாங்கள் பங்குபெற முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். ரூபாய் நோட்டு பற்றாக்குறையைச் சமாளிக்க நோட்டு அடிக்கும்போது எங்களையும் கவனத்தில் கொண்டு சற்று கூடுதலாகவே அடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ரூபாய் நோட்டுக்குள் ஜிபிஎஸ் பொருத்துவது தொடர்பாகப் பலரும் ஆலோசனைகளை வழங்கிவரும் வேளையில், இல்லத்தரசிகள் சங்கத்தின் சார்பாக நாங்களும் சில யோசனைகளை முன்வைக்கிறோம். டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக அறிவிப்பது, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘300 ரூபாய் கொடு, வந்து தர்றேன்’ என்று கேட்கும் கணவன்களைத் திருத்துவது இப்படி ஏதாவது திட்டம் இயற்றினால் கறுப்புப் பண ஒழிப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். நன்றி!

- சஞ்சலா ராஜன், கோயம்புத்தூர்.

இதிலுமா அரசியல்?

By சந்திர. பிரவீண்குமார்  |   Published on : 29th November 2016 02:03 AM 
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில், எங்கள் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்தோம். அனைவருமே இந்த நடவடிக்கையை ஆதரித்தாலும், நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்தன.
வங்கிகள் செயல்படத் தொடங்கியதும் வீட்டிலிருக்கும் அனைவரும் முடிந்த அளவு பணத்தை எடுத்தோம். பல இடங்களில் வங்கி அட்டைகளை ஏற்று கொண்டனர். திட்டமிட்டு செயல்பட்டதால், குழப்பங்கள் எதுவும் நிகழவில்லை. எனது சொந்த அனுபவம் இது.
வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கை, இதேபோல் பலரது அன்றாட செலவுகளை நிச்சயம் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எரிவாயு நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் மட்டும் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளிலும், தானியங்கி மையங்களிலும் வரிசைகள் அதிகரித்தன. பல தொழில்கள் தாற்காலிகமாக முடங்கின.
போதாததற்கு வதந்திகளும் ஏராளமாகப் பரவின. சாமானிய மக்கள், மாதாந்திர சம்பளதாரர்கள் போன்றோரின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பாதிப்புகளையும் மீறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பேசி வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், கள்ள நோட்டுகள் பற்றிய அச்சத்தால், 500 ரூபாய் நோட்டுகளை பலர் வாங்க மறுத்தது, நினைவிருக்கலாம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கள்ள நோட்டு நடமாட்டத்தை நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், உடனடியாகவும் துணிச்சலாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதைதான் மோடி மத்திய அரசு செய்துள்ளது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
அதேபோல், கணிசமான சிலர் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர். கருப்புப் பணத்தை ஒழிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்பது அவர்களின் கருத்து.
பிரதமரின் நடவடிக்கையை பா.ஜ.க. மட்டுமல்ல, நிதீஷ் குமார் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரிக்கின்றனர்.
எதிர்பார்த்ததைப்போல், காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி கட்சி ஆகியவை எதிர்க்கின்றன. மோடி எதிர்ப்பாளர்களுக்கோ, வழக்கம் போல மோடியைத் திட்டுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, அவ்வளவே.
மத்திய அரசின் நடவடிக்கையில் சில குறைகள் இருக்கலாம். அவற்றை விமர்சிப்பது நியாயமானதும்கூட. ஆனால், எதிர்க்கட்சிகளோ அரசைக் குறை கூறுவதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றன.
சமூக வலைதளங்களிலும், பொது அரங்குகளிலும் கடுமையாக விமர்சித்து மக்களிடம் அவநம்பிக்கையை உருவாக்கியதோடு, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் மறுத்தன.
கருப்புப் பணமும் கள்ள நோட்டுகளும் நாட்டின் பல்வேறு தளங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு, அதிரடி நடவடிக்கையை எடுத்திருத்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
அவகாசம் கொடுத்திருந்தால், கருப்புப் பணக்காரர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு என்பதே நிதர்சனம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் மன்னர் ஆட்சி முறையும், ஜமீந்தார் முறையும் ஒழிக்கப்பட்டன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றால் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைத்தாலும் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படவே செய்தது. அதனால், அந்தச் சீர்திருத்தங்களைக் குறை கூற முடியுமா?
அரசியல் காரணங்களுக்காக அவசரநிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சில நன்மைகளை இன்னும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்யத் தவறுவதில்லையே?
உச்சகட்டமாக, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மாற்றினார். சாதாரண உள்ளூர் அரசியல்வாதியே கோடிகளில் புரளும் உண்மை அனைவருக்கும் தெரியும்.
அப்படியிருக்க, சில தலைமுறைகளாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து வரும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர், வெறும் ரூ.4,000 மட்டுமா வைத்திருப்பார் என்று மக்கள் நகைப்புடன்தான் பார்த்தனர்.
கேரளத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆட்சியின்போது நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை அமல்படுத்தியதால், நம்பூதிரிகள் பட்ட துன்பங்கள் ஏராளம். அதற்காக, அந்த திட்டத்தைத் தவறு என்று சொல்லிவிட முடியுமா?
சிங்கப்பூரில் முன்னாள் அதிபர் லீ குவான் யூ அந்நாட்டைத் தூய்மைப்படுத்த கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். முதலில் அதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், பின்னர் அதற்கு மக்கள் ஒத்துழைத்தனர்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்தபோது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டன. ஆளுங்கட்சியைக் குறை கூறி கொண்டிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் ராணுவ வீரர்கள் முட்டை சாப்பிட ஒத்துழையுங்கள் என்று சர்ச்சில் கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வரிசையில் நின்று முட்டைகளைத் திருப்பியளித்தனராம்.
எதற்கெல்லாமோ வெளிநாட்டவரைப் பின்பற்றும் நாம், அரசியல் நாகரிகத்தில் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது?
மக்களுக்கு சேவை புரியும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. அரசின் திட்டங்களை விமர்சிப்பதோடு, ஆளுங்கட்சி செய்யத் தவறிய கடமைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டு விட்டன.

'அமைச்சரை அனுசரிக்காவிட்டால் இதுதான் கதியா?!'  -பல்கலைக்கழகத்தை பதற வைத்த 26 கோடி ஊழல்



பேராசிரியர் பணி நியமன ஊழல் புகார் தொடர்பாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டுள்ளார். ' அமைச்சர் ஒருவர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படாததே, விவகாரம் இந்தளவுக்கு வெடிக்கக் காரணம்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழ்நாட்டில் ஊழல் புகார்களில் சிக்காத பல்கலைக்கழகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, உயர்கல்வித் துறை சீரழிந்து வருகிறது. நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் மோகன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ' பதவியில் இருந்து விலகுமாறு துறையின் உயர் அதிகாரியிடம் இருந்து அழுத்தம் வந்ததே இதற்குக் காரணம். இதற்கு முன்பு பதிவாளராக இருந்த செந்தில் வாசன் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்துக்கு வேதியியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மோகன் பொறுப்பேற்றார். இப்போது அவரும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார்' என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.  

"பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 76 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் அண்மையில் நடந்து முடிந்தன. பணியிடங்கள் நிரப்புவது குறித்து தகவல் வெளியானதும், அமைச்சர் ஒருவர் துணைவேந்தர் கணபதியை வீட்டுக்கு வரவழைத்தார். ' பதவிக்கு வந்துவிட்டால், அமைச்சரை வந்து சந்திக்கக் கூடாது என்பது விதியா? ஏன் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை' என சத்தம் போட்டுள்ளார். ' நான் பதவிக்கு வந்தபோது தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. முதல்வர் அப்பாயின்மெண்ட்டும் கிடைக்கவில்லை' என விளக்கம் அளித்தார் கணபதி. இதை ஏற்றுக் கொள்ளாத அமைச்சர், துணைவேந்தரை கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத துணைவேந்தர் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்துவிட்டார் என அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர். சில நிமிடங்கள் கழித்து, யாருக்குப் பணி வழங்க வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர். ஆனால், அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பணியிடங்கள் வழங்கப்படவில்லை. அதுதான் வேறு விதங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது" என விரிவாகவே விளக்கினார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர். தொடர்ந்து,

" பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடத்த வேண்டும் என்பதில் துணைவேந்தர் உறுதியாக இருந்தார். அதற்கேற்ப, பணி நியமன தேர்வுக் கமிட்டியில், ஆளுநர் பிரதிநிதியாக வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நியமிக்கப்பட்டார். சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு துணைவேந்தர் மணிமேகலை தேர்வு செய்யப்பட்டார். அரசு பிரதிநிதியாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார் . இவர் மீது சில புகார்கள் உள்ளன. 'இவை திட்டமிட்டே நடத்தப்பட்டது' என கல்வியாளர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டது. இதையும் மீறி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் தகுதிக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஸ்லெட், நெட் தேர்வு எழுதியவர்கள், ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் என துறை வல்லுநர்கள் முன்னிலையே நேர்காணல் நடந்தது. இதில், அமைச்சர் கொடுத்த பட்டியியலில் இருந்தவர்களுக்குப் பணியிடம் வழங்கப்படவில்லை.

இதனால் கொந்தளித்த அமைச்சர், உயர்கல்வித் துறையின் முக்கியப் புள்ளியின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தார். 'சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிடக் கூடாது' என்பதற்காக, உயர்கல்வித் துறையில் இருந்து கடைசி நிமிடத்தில் ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு பணியிடத்துக்கான ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இதையும் அமைச்சர் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. எனவேதான், பேராசிரியர் பணியிடத்துக்கு 45 லட்சம் ரூபாய் வரையில் விலைபோனது என தகவல் பரப்பப்பட்டது. சொல்லப் போனால், இவ்வளவு தொகைகளை பேரம் பேசி முன்கூட்டியே வாங்கிக் கொண்டது அமைச்சர் தரப்புதான். பணியிடத்துக்கு வேண்டப்பட்டவர்கள் வராததால், உயர்கல்வித்துறையின் உதவியோடு கூடுதல் நெருக்கடிகளைக் கொடுக்கிறார். இதில், யாரையாவது பலியாக்க வேண்டும் என்பதற்காக, பதிவாளரை விலகச் சொல்லிவிட்டனர். வரும் நாட்களில் கூடுதல் அழுத்தங்களை துணைவேந்தர் கணபதி சந்திக்க நேரிடும்" என்றார் ஆதங்கத்தோடு.

" பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது ஆளுநர் அலுவலகத்தின் பார்வை எப்போதும் விழுந்து கொண்டே இருக்கும். அதற்கேற்ப, துணைவேந்தர்களும் ஆளுநர் அலுவலகத்தை அனுசரித்துச் செல்வது வழக்கம். அரசு, ஆளுநர் என இரண்டு தரப்பிலும் 

நெருக்கடிகளை சந்திக்க வேண்டும். தற்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், பல்கலைக்கழகங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகங்களில் உள்ளூர் அமைச்சர்கள் தலையிடுவதால், சரியான நிர்வாகத்தை அளிக்க முடிவதில்லை. ' பல்கலைக்கழகம் நன்றாக இருக்க வேண்டும்' எனக் கவலைப்படும் துணைவேந்தர்களும் நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக அவர்களைத் தயார்படுத்தும் வேலைகளில் அ.தி.மு.கவினர் இறங்குகின்றனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என ஆளுநர் தீவிரமாக விசாரித்தால், பல உண்மைகள் வெளியாகும்" என்கின்றனர் பல்கலைக்கழக வட்டாரத்தில்.


- ஆ.விஜயானந்த்

Digital signature on degree certificates


THIRUVANANTHAPURAM: As part of its ongoing e-governance drive, Kerala University has installed a ‘digital signature device' that can affix the signature of the Vice-Chancellor on degree certificates.

The first batch of certificates sporting the electronically generated signature of Vice-Chancellor A. Jayakrishnan was printed on Thursday.

“A Vice-Chancellor signs hundreds of certificates in a day. On some days, I have signed 1,000 certificates at one go. It takes it toll on you,” Dr. Jayakrishnan told The Hindu as he demonstrated the operation of the device.

Security features

The device is designed in such a manner that the Vice-Chancellor has to operate it in person.

First he has to place his thumb on a scanner so that the computer can confirm that it is the Vice-Chancellor himself who is operating the system.

Then he has to key in a user name and a password which is known only to him. Again, before giving the command to print certificates, he has to get his thumb scanned again for a final confirmation of identity.

As many as 100 certificates can be printed at a time. After each batch of certificates is printed, the Vice-Chancellor has to manually sign a form which states the number of certificates printed and the time of printing. This, according to Dr. Jayakrishnan, makes the new system tamper-proof.

“The device has been placed right next to the Vice-Chancellor's desk and will not under any circumstance be taken out of his chamber for printing certificates,” he said.

For students, the installation of the new system will mean a drastic reduction in the waiting period for getting a degree certificate signed by the Vice-Chancellor.

“We have amended the university ordinance and the Senate and the Syndicate have cleared the amendment. Of course, I will still sign a certificate personally if for any reason I am required to do so,” Dr. Jayakrishnan added.

The software has been designed by the Technopark firm Azinova Technologies and the device cost the varsity Rs.1.66 lakh.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...