Wednesday, December 14, 2016

Accreditation now easy for deemed-to-be universities

TIE BREAK Institutes can apply for NAAC accreditation even if they have other campuses which have not been approved by UGC or HRD ministry 122 97 64 32 1

* TILL JULY 2016


Deemed-to-be universities can go for National Assessment and Accreditation Council (NAAC) accreditation even if their off-campuses have not been approved by the University Grants Commission (UGC) or the human resource development (HRD) ministry, UGC has decided.

The move is likely to benefit 122 deemed-to-be Indian universities, including Narsee Monjee Institute of Management Studies; Indian School of Mines, Dhanbad; Banasthali University, Rajasthan; Indian Veterinary Research Institute, Uttar Pradesh; Lakshmibai National University of Physical Education, Gwalior; and Tata Institute of Fundamental Research, Mumbai.

This can be done if the deemed universities’ off-campuses are not assessed, UGC said in a recent decision. It examined the issue of NAAC accreditation for the main campuses of the deemed universities with offcampus centre(s) which did not have required approvals or permissions of the UGC or HRD ministry.

NAAC can be asked to delink the accreditation of the main campus of such universities from their off-campuses and carry out the accreditation process of the main campuses, a UGC source said.

As per earlier rules, deemed universities declared as such under Section 3 of the UGC Act were eligible for NAAC’s assessment and accreditation process regardless of the number of years of establishment. The institutes had to get assessed all of their approved constituent units and campuses within the country and off-shore campuses, if any. Those with units or campuses not approved by Total universities NAAC accredited* MHRD or UGC did not qualify for accrediation.

According to Prof DP Singh, director, NAAC, “Earlier, all centres of a deemed-to-be university had to be approved by the UGC or MHRD to be eligible for accreditation. But now, these varsities can apply to NAAC, barring their unapproved centres.”

UGC (Mandatory Assessment and Accreditation of Higher Educational Institutions) Regulations, 2012, notified on January 19, 2013, make it mandatory for every higher education institution to get accredited by an accreditation agency after passing out of two batches or six years. A graded by NAAC* B graded by NAAC*

“Unapproved campuses were holding up accreditation for deemed-to-be universities but now they can go ahead and apply for accreditation for campuses which are approved. This will even help in improving their quality,” says Prof Singh. The rule is currently applicable to deemed-to-be universities but it “may be, perhaps, extended to other varsities as well.”

In late 2014, the UGC had written to these institutions asking them to shut down their off-campus centres for allegedly “violating” the stipulated number of off-campus centres allowed under the Deemed University Regulations, 2010.

Earlier this year, the government C graded by NAAC* allowed deemed universities to open off-campus centres after five years of existence, provided they had NAAC accreditation. While a private deemed university can open six such campuses, government institutions have no restriction on off-campus centres.

The UGC (Institutions Deemed-to-be Universities) Regulations 2016 state that each constituent unit included in the original proposal of application for a deemed-to-be university will have continuous accreditation for two cycles with the highest grade offered and also get valid highest grade for third cycle, either from NAAC or an accreditation agency.

National Eligibility-cum-Entrance Test – Super Specialty (NEET-SS)

Press Information Bureau
Government of India
Ministry of Health and Family Welfare
14-December-2016 12:14 IST
National Eligibility-cum-Entrance Test – Super Specialty (NEET-SS)
The National Eligibility-cum-Entrance Test for entrance to DM/MCh in terms of Section 10 of the Indian Medical Council Act, 1956 as amended in 2016 shall be conducted by the National Board of Examinations.

The examination shall be held at various cities on 10th June 2017.  The examination shall be held as a Computer Based Test and shall comprise of 200 Multiple Choice Questions from the MD/MS curriculum followed at medical colleges in India duly prescribed /adopted by Medical Council of India with prior approval of the Ministry of Health & Family Welfare, Government of India. 

NEET-SS is a single window entrance examination for entry to DM/MCh/PDCC courses.  No other examination either at state level or institutional level entrance examination conducted by any University /medical colleges /institutions shall be valid as per the Indian Medical Council Act, 1956 with effect from 2017 admission session.

Scope of Examination: NEET-SS 2017 shall be a single eligibility cum entrance examination namely ‘National Eligibility-cum-Entrance Test for admission to Super Specialty Courses’ for the academic session 2017 which shall include the following:
    i.    DM/MCh/PDCC courses at all Private Medical Colleges, Institutions & Universities/Deemed Universities across the country
  ii.    DM/MCh/PDCC courses at Armed Forces Medical Services Institutions.

AIIMS, New Delhi /PGIMER, Chandigarh/ SRICHITRA, Thiruvanathapuram /NIMHANS, Bengaluru  /JIPMER, Puducherry are institutions  not covered by NEET-SS.

National Board of Examinations is an autonomous organization established by Government of India in 1982 with prime objective of conducting post graduate examinations on all India basis. 
National Board of Examinations also conducted the NEET-PG for MD/MS/PG Diploma admissions in 2013, 2017; NEET MDS 2017 and All India Post Graduate Medical Entrance Examination (AIPGMEE) during the period 2014 – 2016. 

For further queries, if any, please contact mail@natboard.edu.in or NBE office at 011-45593000/1800111700 (Toll Free).

மின்சாரம் இல்லாமல் பாதிப்பு: புறநகர் பகுதி மக்கள் அவதி



பதிவு: டிசம்பர் 14, 2016 11:05

சென்னை:

வார்தா புயலால் சென்னை புறநகர் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.

மின் வினியோகம் இல்லாததால் பாத்ரூம் தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பாதிப்படைந்தனர். எங்கேயாவது தண்ணீர் கிடைக்காதா என்ற ஆவலில் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.

சமையல், குளியல், குடிநீர் போன்ற அனைத்து தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர்.

மேலும் மின்சாரம் இல்லாததால் அனைத்து அத்தியாவசிய பணிகளையும் செய்ய முடியாமல் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் புறநகர் பகுதிகள் மின்சப்ளை இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

சென்னையில் மின் வயர்கள் பூமிக்கு அடியில் செல்கிறது. புறநகரில் மின் வயர்கள் மேலே செல்கின்றன. வார்தா புயலால் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்தன.

என்றாலும் புறநகர் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து போர்கால அடிப்படையில் பணிகளை செய்து இருந்தால் மின் வினியோகம் கிடைத்து இருக்கும். இந்த வி‌ஷயத்தில் புறநகர் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக புறநகர் வாசிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்து உள்ளனர்.

3-வது நாளாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாததால் புறநகர் பகுதியை சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள். பலர் தங்களது சொந்த ஊருக்கும், பக்கத்து ஊர்களில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்ற வண்ணமாய் உள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். சிலர் ஓட்டல்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

முதலில் மின்சார சப்ளை செய்யுங்கய்யா: புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் ஆவேசம்


பதிவு: டிசம்பர் 14, 2016 14:47
சென்னை:

“வார்தா” புயல் வருமுன்னே முன்னேற்பாடுகள் நல்லாத்தான் இருந்தது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழு.

மீட்பு படகுகள், மணல் மூட்டைகள், நிவாரண முகாம்கள், சமையல் கூடங்கள்.

அவசர உதவிக்கு ஆம்புலன்சுகள், தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டறைகள் என்று எல்லா ஏற்பாடுகளும் குறை ஒன்றும் இல்லை என்று பாராட்ட வைத்தன.

புயல் விடை பெற்று இன்று 3-வது நாள்! நடந்ததும், நடப்பதும் என்ன?

திரும்பும் திசையெல்லாம் விழுந்த மரங்கள் அப்படியே கிடக்கின்றன.

தன் கையே தனக்கு உதவி என்பது போல் பொதுமக்களே கிளைகளை மட்டும் வெட்டி அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்து விட்டார்கள்.

பஸ் போக்குவரத்தும், ரெயில் போக்குவரத்தும் சீராகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மிக குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் மணிகணக்கில் காத்து நிற்கிறார்கள்.

கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அவ்வப்போது ஒரு ரெயில் இயக்கப்படுகிறது. இதே நிலைதான் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய வழி தடங்களிலும்.

இதனால் எல்லா மின்சார ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

மாதவரம் பால் பண்ணை பகுதியில் வேலை பார்க்கும் சுமார் 3000 தொழிலாளர்களின் வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ்சீட் போட்டு அமைக்கப்பட்டிருந்தன. அந்த வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளியில் தஞ்சம் புகுந்தனர்.

இதே போல் தாம்பரம் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் அவர்கள் தங்கி இருந்த குடிசைகளை இழந்து தவிக்கிறார்கள்.

மூன்று நாட்களாகியும் மின் விநியோகம் இல்லை. மேடவாக்கம் பகுதியில் கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பல்லாவரம் பகுதியில் கீழ்க்கட்டளை, கணேஷ் நகர், கொடுங்கையூர் பகுதியில் கம்பன் நகர் மற்றும் நங்கநல்லூர், பெருங்குடி உள்பட பல இடங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் அப்படியே கிடக்கின்றன.

ஒவ்வொரு பகுதியாக சீர் செய்து வருவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வார்தாவின் தாக்குதல் மிக பயங்கரமாக இருக்கும் என்பது தெரியும். அதற்கு ஏற்ற வகையில் மின் பழுதுகளை உடனடியாக சீரமைக்க தேவையான உபகரணங்களும், பணியாளர்களும் தயார் நிலையில் இருந்திருக்க வேண்டாமா? என்று பொதுமக்கள் ஆவேசப்படுகிறார்கள்.

குப்பை அள்ளும் லாரிகள், மருத்துவ குழுக்கள், தண்ணீர் லாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றுகின்றன. அவர்களிடம் “முதலில் மின்சார சப்ளையை கொடுங்கய்யா? மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அகல் விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவை கழிக்கிறார்கள். மின்சப்ளை இல்லாததால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

பால் கிடைக்கிறது. ஆனால் பாதுகாக்க வழியில்லை. குளிப்பதற்கும், வீட்டு தேவைகளுக்கும் சொட்டு தண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறார்கள். கழிவறைக்கு பயன்படுத்தவும் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

பலர் லாரிகளில் தண்ணீர் வாங்கி நிலத்தடி தொட்டியில் நிரப்பி விட்டனர். மோட்டாரை இயக்கி தண்ணீரை மேலே ஏற்றுவதற்காக ஜெனரேட்டர்களுக்கு அலைகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 வாடகை வசூலிக்கிறார்கள். அதற்கும் பலர் முன்பதிவு செய்துள்ளார்கள். முன்னுரிமை அடிப்படையில்தான் ஜெனரேட்டர்களை வாடகைக்கு கொடுக்கிறார்கள்.

நேற்றும், இன்றும் புயல் வீசவில்லை. வெயில்தான் வீசுகிறது. 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்திருந்தால் புயல் வந்த சுவடே தெரியாமல் போயிருக்கும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எதையும் எதிர்பாராமல் மீட்பு பணிகளில் ஒத்துழைக்க பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். பணிகளை முடக்கி விட்டால் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க முடியும்.

பிளாட்ஃபாரத்தில் வாழும் மக்களுக்கு 90 வீடுகள் அன்பளிப்பு: மகளுக்கு வித்யாசமான கல்யாணப் பரிசு தந்த பணக்காரத் தந்தை!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 14th December 2016 01:22 PM
மகளின் கல்யாணப் பரிசாக, வீடற்றவர்களுக்கு 90 வீடுகளைப் பரிசளித்து ஊராரையும், உறவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் அவுரங்காபாத்தைச் சேர்த்த தொழிலதிபர் ஒருவர்.
வழக்கமாகத் தங்களது மகன் அல்லது மகள் திருமணத்திற்காக கோடி, கோடியாக பணத்தை வாரி இறைக்கும் கோடீஸ்வர, லட்சாதிபதி தந்தைகளுக்கு நடுவே தனது இத்தகைய பெருந்தன்மையான செயல் மூலம் அஜய் முனாட் மிகவும் வித்யாசமான நபராகத் தோற்றமளிக்கிறார்.
தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 70 லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை செலவளிப்பதாக இருந்த அஜய், தனது வசிப்பிடத்தின் அருகே எவ்வித வசதிகளும் இன்றி பிளாட்பாரங்களில் உறங்கும் மக்களைக் கண்டு மனமிரங்கியவறாக, குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து திருமணத்தின் போது செலவிடப்படவிருந்த ஆடம்பரச் செலவுகளுக்கான தொகையை வைத்து வீடற்ற மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தரலாம் என முடிவு செய்தார். அஜயின் கோரிக்கையை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி மகளின் திருமண நாளன்று வீடற்ற மக்களில் சிலருக்கு சுமார் 90 வீடுகளைக் கட்டி அவற்றில் அவர்களை அஜய் குடியேற்றினார்.
தன்னைப் போன்ற பணம் படைத்தவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு வீண் ஆடம்பரச் செயல்களில் இறங்காமல், இப்படி இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அதற்கொரு முன்னுதாரணமாக இருக்கட்டும் என்று தான், தான் தனது மகளின் திருமணச் செலவுகளை குறைத்து இப்படி ஒரு நற்செயலில் ஈடுபட்டதாக அஜய் முனாட் தெரிவித்தார்.
இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் அஜய் முனாட் ‘இந்த சமூகம் சார்ந்து நமக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றன’ நாம் ஒவ்வொருவருக்கும் அவற்றை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. நாம் அனைவருமே நிச்சயமாக அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.’ என்று தெரிவித்தார்.
அஜய் முனாட்டின் இந்த அதிரடி நல்லெண்ணத்தைப் பற்றி அவரது மகளின் கருத்து என்ன? என்று தெரிந்து கொள்ள முயற்சித்த போது, கல்யாணப் பெண்ணான அஜயின் மகள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘எனது திருமணச் செலவுகள் குறித்த எனது தந்தையின் முடிவு, சமூக நல்லெண்ணம் சார்ந்து எனக்கு மிகுந்த மன ஆறுதலை அளிக்கிறது. அதோடு என் வாழ்வில் என்றென்றைக்குமான மிகச்சிறந்த கல்யாணப் பரிசாக நான் கருதிக் கொள்ளத் தக்க வகையிலான பெருமித உணர்வையும் இப்பரிசு எனக்கு அளிக்கிறது. என்றார்.

எல்லாப் பணக்காரத் தந்தைகளும் இம்மாதிரி அதிரடி முடிவெடுத்தால் நாடு சுபிட்சமாகி விடும்.

தமிழகத்தை கொடூரமாக தாக்கிய கோரப் புயல்கள் ஒரு பார்வை...!

Published on : 13th December 2016 07:55 PM 

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர தற்போது சென்னையைத் தாக்கிய வர்தா புயல் "அதிதீவிர"ப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த அந்தப் புயல், சென்னை - கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பிறகும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.



ஃபானூஸ் புயல்:
அடுத்து தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களில் ஒன்று ஃபானூஸ் புயல். கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த புயல், டிசம்பர் 7-ஆம் தேதி, மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் சுமார் 25 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அதோடு, வட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் இப்புயல் கடுமையாக பாதித்தது.


நிஷா புயல் : ஃபானூஸ் புயலை அடுத்து தமிழகத்தைத் தாக்கிய கடும் புயல் நிஷா. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான இந்த புயல், மறுநாள் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 189 பேர் உயிரிழந்தனர்.


ஜல் புயல்: கடந்த 2010-ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்த இந்த புயல், நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அன்று மணிக்கு சுமார் 111 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது. இந்த புயலால், 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த புயல் சீற்றத்தால் 54 பேர் உயிரிழந்தனர். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்தது தமிழகம்.


தானே புயல்: கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவான தானே புயல், மணிக்கு சுமார் 165 கிலோமீட்டர் வேகத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால், 46 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துபோனது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் நாசமாகின. கடலூர், நாகை. காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் மாவடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது கூட முழுமையாக சீரடையவில்லை.


நீலம் புயல்: 2012-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான நீலம் புயல், அக்டோபர் 31-ஆம் தேதி மணிக்கு 83 கி.மீட்டர் வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. நீலம் புயல் சீற்றத்தால் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.


மடி புயல்: கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி உருவான மடி புயல், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வழியாக கரையை கடந்தது. இதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வெளியேற்றப்பட்டனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.


வர்தா புயல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்கிழக்கு வங்கக்கடலில் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான அதிதீவிரப் புயலான “வர்தா” புயல், டிசம்பர் 12-ஆம் தேதி மாலை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை புறநகர் பகுதியான பழவேற்காடு அருகே 6.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. வர்தா புயலின் கடும் சீற்றத்தால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. சென்னை மட்டும் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட அதிதீவிர புயலுக்கு "வர்தா' என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும். இந்த ரோஜாவின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்: 3 நாள்களுக்குள் மின்விநியோகம் சீராகும்: மின் வாரியம் அறிவிப்பு


By DIN | Published on : 14th December 2016 12:55 AM 

 வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் 10 ஆயிரம் மின்கம்பங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், 3 தினங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் சீராகும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்தா புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை சேதமடைந்தும், முழுவதுமாக பெயர்ந்து விழுந்தும் விட்டன. இதற்கான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், படப்பை அருகே உயர் மின் கோபுரத்தை சீரமைக்கும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான எம்.சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து புயலின் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
10 ஆயிரம் மின்கம்பங்கள்: வர்தா புயலால் இதுவரை 10 ஆயிரம் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மரங்கள் பெயர்ந்து விழுந்ததாலும், கிளைகள் உடைந்து விழுந்ததாலும், 450 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. 24 உயர் அழுத்த மின் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.
3 ஆயிரம் மட்டுமே இருப்பு: சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு 3 ஆயிரம் மின்கம்பங்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தன. எனவே, பிற மாவட்டங்களில் இருந்து மீதம் 7 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து தளவாடங்களும் கையிருப்பில் உள்ளன.
பணியில் 9 ஆயிரம் ஊழியர்கள்: வரலாறு காணாத இந்தச் சேதத்தை சீரமைப்பதற்காக சென்னையில் உள்ள 6 ஆயிரம் மின் ஊழியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 70 அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மின்உற்பத்தி நிலையங்கள் இயக்கம்: சென்னையில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயக்கத்தில் உள்ளன. இதனால் போதுமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பேசின் மேம்பாலம் வாயு மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரம் விநியோகம்: சென்னையில் இதுவரை ராஜ்பவன், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, பரங்கிமலை, கோடம்பாக்கம், அசோக் நகர், ராமசாமி சாலை, பி.டி. ராஜன் சாலை, ஜெருகம்பாக்கம், மதாண்டாபுரம், லட்சுமி நகர், அய்யப்பன்தாங்கல், ஸ்ரீ ராமச்ந்திரா மருத்துவமனை, காரப்பாக்கம், குன்றத்தூர் சாலை, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், லஸ், ராயப்பேட்டை, அபிராமபுரம், எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, அடையாறு, வேளச்சேரி, கொட்டிவாக்கம், சிறுசேரி, திருவான்மியூர், பெசன்ட் நகர், இந்திரா நகர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், முகப்பேர், அரும்பாக்கம், மதுரவாயல், திருவேற்காடு மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
3 நாள்களில் மின்விநியோகம்: சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பிற பகுதிகளிலும் துரித கதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரத்தில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்குள் மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

NEWS TODAY 07.06.2026