Tuesday, January 10, 2017

தவிர்க்க முடியாது!

By ஆசிரியர்  |   Published on : 10th January 2017 01:11 AM
சில நீதிமன்றத் தீர்ப்புகள் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாக அமைவதில்லை. அப்படி ஒரு தீர்ப்பு ஜனவரி 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் நோக்கம் உன்னதமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அது நடைமுறை சாத்தியமா என்றால் இல்லை.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(3)இன்படி, வேட்பாளரோ அவரது முகவரோ அல்லது அவரது ஒப்புதலுடன் வேறு ஒருவரோ மதம், ஜாதி, இனம், குழு, மொழி ஆகியவற்றின் பெயரால் வாக்குகள் கோருவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்படியொரு பிரிவு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இருக்கிறதே தவிர, இது அப்படியே பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.

பின்பற்ற முடியுமா என்று கேட்டால், அதுவும் சாத்தியம் என்று முடியவில்லை.

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு இந்தச் சட்டப் பிரிவின் வரம்பை அதிகரித்து விட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பெரும்பாலான வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழல் ஏற்படக்கூடும். ஏழு பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நான்கு பேரின் பெரும்பான்மையுடன் அறிவிக்கப்பட்டிருக்கும் தீர்ப்புப்படி, இனிமேல் 90% வேட்பாளர்களின் வெற்றி நீதிமன்றங்களில் தடை கோரப் படலாம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஏதாவது ஒரு மதத் தலைவரோ, ஜாதி சங்கத் தலைவரோ, குறிப்பிட்ட வேட்பாளரின் ஒப்புதலுடன், அவருக்கு வாக்களிக்கும்படியோ, அல்லது எதிர்த்து நிற்பவருக்கு வாக்களிக்காமல் இருக்கும்படியோ வேண்டுகோள்

விடுத்தால், அந்த குறிப்பிட்ட வேட்பாளர் பதவி இழக்கக் கூடும். வேட்பாளரின் ஒப்புதலுடன்தான் அந்த மதத் தலைவர் அல்லது ஜாதி சங்கத்தைச் சேர்ந்தவர் வேண்டுகோள் விடுத்தார் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை.
இது ஏதோ ஜாதி அல்லது மதத்தின் பெயரால் விடுக்கப்படும் வேண்டுகோள்களுக்கோ, பிரசாரத்திற்கோ மட்டுமானதல்ல. மொழியின் பெயரால் ஒரு வேட்பாளர் வாக்குக் கேட்டாலும், இனத்தின் பெயரால் வாக்குக் கேட்டாலும்கூடப் பொருந்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தாய்மொழிக்காகப் போராடுவேன் என்பதைத் தேர்தல் பிரச்னையாக்க முடியாது. முல்லைப் பெரியாறு பிரச்னையிலோ, காவிரி நீர்ப் பிரச்னையிலோ தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்று தமிழினத்தின் பெயரால் வாக்குகள் கோர முடியாது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையே அடையாள அரசியல்தான். ஜாதி ரீதியாக, மத ரீதியாக, இன ரீதியாக, மொழிவாரியாகப் பிரிந்து கிடக்கும் நாடு இந்தியா. ஆனாலும் நாம் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே தேசமாகத் தொடர்கிறோம் என்றால் அதற்குக் காரணம், எல்லா பிரிவினரும் தங்களது அடையாளத்தை இழந்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்பதுதான்; நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எல்லா பிரிவினரும் பங்கு பெற முடிவதால்தான். அதற்கு அடையாள அரசியல் உதவுகிறது.

தெலுங்குதேசம் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் போன்று அந்தந்த மாநிலம் சார்ந்த அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்துவதும், அகாலி தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று மதத்தின் அடையாளத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்துவதும் தவறு என்று ஒதுக்கிவிட முடியாது. அனைத்துத் தரப்பினருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறார்கள் என்றாலும் பகுஜன் சமாஜ் கட்சி என்பது சமார் பிரிவு பட்டியல் ஜாதியினரின் கட்சி என்றும், சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை யாதவர்களின் கட்சி என்றும், ராஷ்ட்ரிய லோக தளம் ஜாட்களின் கட்சி என்றும்தான் அடையாளம் காணப்படுகின்றன.

தமிழகத்தில் தங்களை திராவிடக் கட்சிகள் என்று அழைத்துக் கொள்ளும் கட்சிகள், தமிழினத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதாகத்தான் சொல்லிக் கொள்கிறார்கள். ஏனைய பல ஜாதிக் கட்சிகள் தங்களுக்கு ஜாதி முலாம் பூசப்படுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்கூட அவர்களை மக்கள் குறிப்பிட்ட ஜாதி அடையாளத்துடன்தான் பார்க்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென்று பொதுவான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அவர்களது நோக்கம் என்னவோ குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் அடையாளமாகத் திகழ்வதுதான். அந்தப் பிரிவினரின் வாக்கு பலத்தில்தான் அதன் தலைவர்கள் வலம் வருகிறார்கள்.
இதெல்லாம் தவறு என்று அறிவுஜீவிகள் வாதம் செய்யலாம். மதத்தின் பெயரால் வாக்கு கோருவது தவறு என்று முழங்கும் பலர், ஜாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் வாக்குக் கோருவதை ஏற்றுக் கொள்ளும் போலித்தனம் காணப்படுகிறது. இவர்களைவிட வாக்காளர்கள் புத்திசாலிகள். அவர்கள் அடையாளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எந்தத் தேர்தலிலும் இந்தியாவில் வாக்களித்ததில்லை.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கருத்துக் கூறிய மூன்று நீதிபதிகளின் வாதத்தில்தான் யதார்த்தம் இருக்கிறது. "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் களைந்துவிட முடியாது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெற்றிகரமாகத் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்ட வண்ணம்தான் இருந்து வருகிறது. மக்களாட்சியில் மக்களே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்ப்பளித்துக் கொள்வார்கள்' என்கிற அவர்களது கருத்துதான் நடைமுறை சாத்தியம்.
அடையாள அரசியல் இருந்தால்தான் இந்தியா போன்ற தேசத்தில் இருக்கும் எல்லா பிரிவினரின் உணர்வுகளையும் தேர்தல் மூலம் பிரதிபலிக்க முடியும். அடையாள அரசியலில் தவறில்லை, துவேஷ அரசியல்தான் தவறு!

அச்சுறுத்தாத பேச்சு!

By பி.எஸ்.எம். ராவ்  |   Published on : 10th January 2017 01:11 AM  |
rao
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு, அவரது வயது முதிர்ந்த தாய் உள்பட நாட்டின் 125 கோடி பேரையும் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியது.

பூமிப்பந்தில் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இதுபோன்று நிகழ்ந்ததில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் வங்கிகளின் வாயிலிலும், ஏடிஎம் மையங்களின் முன்பும் மணிக்கணக்கில் தவமிருக்க வேண்டியதாயிற்று.
இதன் காரணமாகத்தான், யார் வீட்டில் எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளதோ, அவர்கள் எல்லோரும் ஒருவித அச்சத்துடனேயே, புத்தாண்டையொட்டி மோடி பேசியதைக் கேட்க குழுமினார்கள்.
அவர்களது அச்சத்துக்கு அடிப்படைக் காரணம் உள்ளது. ஒரு சில குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக, கோடிக்கணக்கான அப்பாவிகளுக்குத் தீங்கு இழைக்கும் வகையிலான நடவடிக்கைகளைத் தன்னால் எடுக்க முடியும் என்று மக்களுக்கு மோடி ஏற்கெனவே உணர்த்தியிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக, மேலும் பயமுறுத்தும் வகையில் எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடாதது மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக, தான் அறிவித்த திட்டத்தின் தோல்வி குறித்து அந்த உரையில் அவர் வாயே திறக்கவில்லை.
கருப்புப் பணத்தை வெளிக் கொணர்கிறேன் என்றும், கள்ளநோட்டுகளை ஒழிக்கிறேன் என்றும், அதன் பின்னர் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவோம் என்றும் கூறி அவர் கொண்டு வந்த திட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் இறந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை.
அவரது திட்டத்துக்கு மக்களிடம் மாற்றுத் திட்டம் இருந்தது போலவும், மக்கள் தாங்களாகவே முன்வந்து அவரது திட்டத்தால் ஏற்பட்ட கஷ்டங்களை ஏற்றுக் கொண்டது போலவும், மக்கள் செய்த யாகங்களுக்காக அவர் நன்றி கூறினார்.
கூடுதலாக மக்களுக்காக என்று சில திட்டங்களையும் அவர் தனது உரையில் அறிவித்தார். நிதிநிலை அறிக்கை உரையில் நிதி அமைச்சர் அறிவிப்பது போலவும், கடன் திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பது போலவும் அவரது உரை இருந்தது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலுக்காக இருந்தாலும் சரி, ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பட்ட அவதிக்கு ஈடு செய்வதாக இருந்தாலும் சரி, கூர்ந்து ஆய்வு செய்தோமானால், பிரதமரின் இந்த எதிர்பாராத "பரிசுகள்' கண்ணுக்குப் புலப்படும் வகையிலான பலன்களை அளிக்கப்போவதில்லை.
வீட்டுக் கடன் தொடர்பான வட்டிச் சலுகைகளை பிரதமர் வெளியிட்டார். அதன்படி, ரூ. 9 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 4 சதவீதமும், ரூ. 12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3 சதவீதமும் வட்டியிலிருந்து தள்ளுபடி செய்யப்படும். ஊரகப் பகுதிகளில் வீடு கட்ட ரூ. 2 லட்சம் வரை பெறப்பட்ட கடனுக்கு வட்டித் தொகையில் இருந்து 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த அறிவிப்புகள் வரவேற்கத் தகுந்தவை என்றாலும்கூட, வீட்டுக் கடன் பெறுவதில் உண்மையான பிரச்னை வட்டி விகிதம் அல்ல; வீட்டுக் கடன் பெறுவதற்கான திறனும், அதைத் திரும்பச் செலுத்துவதும்தான்.
பிரதமரின் மற்றோர் அறிவிப்பு- விவசாயிகள் நலன் காக்கும் வகையில், ரபி பருவ சாகுபடிக்காக கூட்டுறவு வங்கிகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க் கடனில் 60 நாள் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்பது.
ஆனால், சிறு, குறு விவசாயிகளின் மிகப் பெரிய புகார் என்னவென்றால், கூட்டுறவு வங்கிகள், இதர வங்கிகளில் இருந்து தேவையான அளவு கடன் கிடைப்பதில்லை என்பதுதான்.

வங்கிகள் அளிக்கும் கடன் தொகையில் விவசாயிகளின் பங்கு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அத்துடன், அமைப்பு ரீதியாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் கூட்டுறவு வங்கிகளின் பங்கு குறைந்துகொண்டே வருகிறது என்பது கண்கூடு.
1992-க்கு முன்னர் வரை, கூட்டுறவு வங்கிகளின் கடனில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அது இப்போது 17 சதவீதமாகக் குறைந்துவிட்டது. எனவே, இப்போது பிரதமர் அறிவித்துள்ள இந்தச் சலுகை பலன் அளித்தாலும், மிகக் குறைவானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விவசாயக் கடன் வழங்குவதற்காக நபார்டு வங்கிகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது மோடியின் மற்றோர் அறிவிப்பாகும். சிறு, குறு விவசாயிகளுக்கும்,

குத்தகைதாரர்களுக்கும் கடன் அளிக்கும் முறையை செம்மைப்படுத்தாத வரை இதுபோன்ற அறிவிப்புகள் எதிர்பார்த்த பலனை அளிக்காது.
அதேபோன்று, அடுத்த 3 மாதங்களுக்குள் 3 கோடி விவசாயக் கடன் அட்டைகள் "ரூபே' அட்டைகளாக மாற்றப்படும் என்பது மோடியின் மற்றுமோர் அறிவிப்பு. இதுபோன்று மாற்றுவதால் கூடுதலாக பணம் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் இதுவும் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கப் போவதில்லை.

மேலும், நமது நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் வெறும் 40 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் உள்ளன. எனவே, "எந்த வங்கியிலிருந்தும் விவசாயிகள் பணம் பெறலாம்' என்பது வெற்று அறிவிப்பே ஆகும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு விற்றுமுதல் அடிப்படையில் வங்கிக் கடன் 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தனது உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அரசின் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது. ஆனால், பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் தொகை, இந்த அறிவிப்பால் அதிகரிக்குமா என்பது கேள்விக்குறியே.

இதேபோன்று, மூத்த குடிமக்களின் சேமிப்புத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும்வகையில், ரூ. 7.5 லட்சம் வரை செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 ஆண்டுகளுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுபோன்ற டெபாசிட்டுகளுக்கு வங்கிகள் ஏற்கெனவே 7 சதவீதம் அளித்துவரும் நிலையில், மோடியின் புதிய அறிவிப்பின் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக கூடுதலாக ரூ. 625 மட்டுமே கிடைக்கும். ஆனால், நாட்டில் உள்ள மூத்த குடிமக்களில் சொற்பமானவர்களே இந்த அளவுக்கு சேமிப்பு வைத்துள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

மேலும், முறைசார்ந்த தொழில் துறையில் 6 சதவீதம் பேர் மட்டுமே ஏதாவது சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக, நாட்டில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 53 மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக, மகப்பேறு கால உயிரிழப்பைத் தடுக்கும் விதமாக கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் தொகை ரூ. 4 ஆயிரம் என்பது ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு வேண்டுமானால் சிறிய அளவில் பலன் கொடுக்கக் கூடியதாக அமையும்.

மொத்தத்தில், புத்தாண்டையொட்டி, பிரதமர் மோடி டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்புகள் மிகப் பெரிய பலன்களை அளிக்கப் போவதில்லை என்பது தெளிவு.

பிப்ரவரி முதல் நாள் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மிகப் பெரும் சலுகைகளை அவர் அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்ததன் மூலம் கடும் இன்னல்களுக்கு ஆளாக்கியதுபோல, உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் வகையில் மேலும் ஏதாவது அதிரடி அறிவிப்புகளை மோடி வெளியிட்டு விடுவாரோ என்ற அச்சமே மக்களிடையே இருந்தது.
குறைந்தபட்சம் அதுபோன்று எதுவும் அறிவிக்காததால், தாற்காலிகமாகவேனும், அவரது புத்தாண்டுப் பேச்சுக்குப் பின்னர் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர, இனி மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கிடைத்த அனுபவங்கள், மக்களின் மீதும், நமது நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் அந்த அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கம் குறித்து மோடியும், அவரது அரசும் ஆய்வு மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
ஓர் அறிவிப்பு தோல்வியில் முடிந்தநிலையில், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்க்கக் கூடிய பலன்களை அளிக்காததாகவும், எதிர்விளைவுகளை அளிக்கக் கூடியதாகவும் ஆகிவிடக் கூடாது.

இதற்கு முன்னர் அறிவித்த திட்டங்களின் தோல்விகளில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் அதன் செயல்பாடுகள் ஜனநாயகரீதியாகவும் அமைய வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகள், நிலைமையை மோசத்தில் இருந்து படுமோசம் என்ற நிலையை எட்டச் செய்வதாக அமைந்துவிடக் கூடாது.

Sunday, January 8, 2017

  • HRD constitutes committee to selected new UGC chairman


New Delhi, Jan 6 (PTI) The Union HRD ministry has decided to constitute a three member committee to search for a new chairman of the University Grants Commission (UGC) as the tenure of the present incumbent Ved Prakash is about to end.

According to officials the ministry has decided to constitute the panel which would be headed by Dr H R Nagendra, who is Chancellor of S-VYASA and is also likely to include former VC of Saurashtra University D P Singh and former VC of Lucknow University.

It is also learnt that as the present UGC chairperson is on leave, the HRD ministry has asked JNU VC M Jagadesh Kumar to officiate as the Commission head in his absence.

PIL on nepotism in medical university rejected by Madras HC

CHENNAI: Madras high court has declined to entertain a PIL (Public interest litigation) which accused vice-chancellor of Tamil Nadu Dr MGR Medical University, Dr Geethalakshmi, of appointing her doctor-husband R Sugumar and doctor-sister S Usha as members of top academic bodies, and purchasing high-end cars against the rules.
Filed by Varaaki, the PIL sought a direction from the governor-chancellor to take action against the medical university's vice-chancellor.


Dismissing the PIL, and rapping the PIL petitioner, the first bench comprising chief justice Sanjay Kishan Kaul and justice M Sundar said: "We are completely dissatisfied with the bonafides of this petition. The power of the vice-chancellor, in turn, is checked by various bodies, where agendas are placed and approved. Thus, there is a control and check mechanism provided under the provisions of the Tamil Nadu Dr MGR Medical University Act, 1998 itself."

The petitioner said that he had already sent representations to the government and the governor complaining that the vice-chancellor had purchased a high-end car over and above what had been provided for in the budget, and that she had appointed her husband as member of Standing Academic Board and Faculty of UG Medicine and Surgery of the university, and sister as Standing Academic Board and Faculty of Medicine and Medical Specialties in the university.

Rejecting the PIL, the first bench referred to the complaints to the governor-chancellor and said, "the chancellor would be quite aware of what has been alleged...merely because a person unconnected with the subject matter even wrote letters to the chancellor, it would not give him the right to seek a direction from the court, that the chancellor must act in a particular manner."

They then dismissed the PIL saying they were not inclined to entertain it. They also referred to the fact that the petitioner had been writing letters to the vice-chancellor levelling allegations against her and threatening her not to continue in the post.

B Valarmathi to head textbook corporation

CHENNAI: The Tamil Nadu government on Friday appointed former social welfare minister and senior AIADMK leader B Valarmathi as chairman of the Tamil Nadu Textbook and Educational Services Corporation. "The terms and conditions of appointment of Valarmathi will be issued separately," said a brief order issued by school education secretary D Sabitha.

Valarmathi, who lost the 2016 polls from Thousand Lights, is the party's literary wing secretary and one of its spokespersons.

Madras HC dismisses PIL questioning VC

CHENNAI: The Madras high court has declined to entertain a PIL which accused the vice-chancellor of Tamil Nadu Dr MGR Medical University Dr Geethalakshmi of appointing her husband Dr R Sugumar and doctor Dr S Usha as members of top academic bodies, and purchasing high-end cars against rules. Filed by Varaaki, the PIL sought a direction to the governor-chancellor to take action against the medical university vice-chancellor.

Dismissing the PIL, and rapping the petitioner, the first bench comprising Chief Justice Sanjay Kishan Kaul and Justice M Sundar said: "We are completely dissatisfied with the bonafides of this petition. The power of the vi ce-chancellor, in turn, is checked by various bodies, where agendas are placed and approved.

"Thus, there is a control and check mechanism provided under the provisions of the Tamil Nadu Dr MGR Medical University Act, 1998 itself."

They then dismissed the PIL saying they were not inclined to entertain it.

Chargesheet filed in Swathi murder case

By M Sathish  |  Express News Service  |   Published: 08th January 2017 03:19 AM  |  
CHENNAI: The City Police filed chargesheet in the sensational Swathi murder case about a week ago, naming as the sole accused, Ram Kumar, who died under custody in the Puzhal prison.
Reliable sources in the city police told Express that Assistant Commissioner (Nungambakkam) Devaraj filed the chargesheet in the 13th Metropolitan Magistrate court. The chargesheet is yet to be ‘numbered’ in the court.

“No other person was named in the chargesheet,” said a court source. Confession statements, reportedly given by Ram Kumar when in custody, and the photos of Swathi taken from his phone, were among evidence attached.
Swathi, working with IT major Infosys, was hacked to death on June 24 morning at the Nungambakkam railway station. The incident created shock waves across the country. Amidst much public pressure, police arrested Ram Kumar, a youth from southern Tirunelveli. On September 18, Ram Kumar, according to police, committed suicide by biting a live wire in the Puzhal Prisons.

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...