Friday, February 3, 2017

சென்னை கடலை பாழாக்கிய இரண்டு கப்பல்கள் சிறைபிடிப்பு


சென்னை எண்ணூர் அருகே, விபத்துக்குள்ளான 2 கப்பல்களை இந்திய கடலோர பாதுகாப்புப்படை சிறைபிடித்துள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே, கடந்த வாரம் 28-ம் தேதி மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூரை நோக்கி வந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மீது ஈரான் கப்பல் மோதியது. இதில் மும்பையில் இருந்து டீசலை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் சேதமடைந்து, கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த விபத்து காரணமாக, கடலில் கொட்டிய கச்சா எண்ணெய், எண்ணூர் முதல் திருவான்மியூர் கடல் பகுதி வரை பரவியது. இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனைத்தொடர்ந்து, கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் சிறைப்பிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் இந்திய கடலோர பாதுகாப்புப்படை இன்று சிறைபிடித்தது.

61 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே நிரம்பிய அணை... தப்பிக்குமா தமிழகம்?

 TN drought 2017


பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை கேரள அரசு துரிதப்படுத்தி வருகிறது. அரசியல் கட்சியினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினர் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர். பவானி நதி நீரை முழுக்க முழுக்க நம்பி இருக்கும் கீழ்பவானி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அணைகட்டப்படும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆர்பாட்டம் செய்துவந்துள்ளனர்.

இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது;

பவானி நதியின் குறுக்கே , கேரளா வனப்பகுதியில் 6 தடுப்பணைகளை கேரளா அரசு கட்டிவருகிறது. அட்டப்பாடி, மஞ்சக்கண்டி, தேக்குவட்டை, பாடவயல், சீரக்கடவு, சாவடியூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டும் வேலை துரிதமாக நடக்கிறது. மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகுதான் எந்த வனப்பகுதியிலும் கட்டுமானப் பணிகளை செயல்படுத்த முடியும். ஆனால், கேரளா அரசு இந்த துறையின் அனுமதி பெறாமல் வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டிவருகிறது.

கேரளா ஒரு மழை மாநிலம், ஆனால், தமிழ்நாடு அப்படி அல்ல. இது ஒரு மழை மறைவு மாநிலம். மேற்கு தொடர்ச்சி மலை நதிகளை நம்பித்தான் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தேவை இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும், கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சந்திக்கும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மலைச்சரிவில் உள்ள அமைத்திப் பள்ளத்தாக்கு என்கிற இடத்தில்தான் பவானி நதி உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இந்த நதி கேரளாவுக்குள் 35 கி.மீ. தூரம் மேற்கு நோக்கி பயணித்த பிறகுதான் தமிழ்நாட்டு வனப்பகுதியில் நுழைகிறது. அது தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் உள்ள பில்லூர் மின் அணையில் நிரம்பி வழிந்து பவானி சாகர் அணையை வந்தடைகிறது. பில்லூர் அணையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் பாசன அணை, கொடிவேறி கால்வாய் ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் ஈரோடு,திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர்நிலத்திற்கு பாசனம் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால், ஈரோடு மாவட்டத்திற்கு உலகபுகழ் சேர்க்கும் மஞ்சள் விவசாயம் அழிந்து போய்விடும்.

பவானி சாகர் அணைக்கட்டப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் 6 முறை மட்டும்தான் இந்த அணை முழுமையாக நிறைந்துள்ளது. எப்போதுமே பற்றாக்குறை பாசனம்தான் நடந்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமான இறுதித்தீர்ப்பில், காவிரியில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி. தன்ணீர் கொடுக்கவேண்டும் என்று ஆணை உள்ளது. கபினி அணையில் இருந்து 21 டி.எம்.சியும், பவானியில் இருந்து 6 டி.எம்.சியும். அமராவதியில் இருந்து 3 டி.எம்.சி.தண்ணீரும் வழங்க வேண்டும் என்கிறது அந்த தீர்ப்பாணை. ஆனால், பவானி நதி பயணிக்கும் 35 கி.மீ. கேரளா எல்லைப்பகுதியில் வசிக்கும் பலரும் நீர் ஏற்று பாசனமுறையில் ஆற்றில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீரை முறை தவறி எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் 2,500 ஏக்கர் பாசனம் செய்கிறார்கள்.

இது காவிரி நதி நீர் பங்கீடு இறுதி தீர்ப்புக்கு புறம்பானது. மேற்கு மாவட்டங்களை பாலைவனமாக்கும் செயல் இது. கேரளா அரசின் இந்த அத்து மீறலை, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.. இல்லையென்றால், பாரம்பரியம் காக்க நடந்த கடல் புரட்சி போல, பவானி நதியை காக்கும் நதி புரட்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.” என்றார்.

தமிழக விவசாயிகளின் நலன்காக்க இயற்கையும், அரசும் மனது வைக்க வேண்டும்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் சிக்கிய சென்னை இன்ஸ்பெக்டர்!



ரூபாய் நோட்டு விவகாரத்தில் சென்னை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற காலஅவகாசமும் கொடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அதை மாற்றினர். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், புரோக்கர்கள் உதவியுடன் சில வங்கி அதிகாரிகள் மூலம் கறுப்புப் பணம் மாற்றப்பட்டதாக ஆர்.பி.ஐ.க்கு தகவல்கள் சென்றன. அதை நிரூபிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டு மாற்றிய விவகாரத்தில் சிக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தில் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை அண்ணாநகரில் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கும் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்ததாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதில் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினோம். விசாரணை முடிவில் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வந்தார். அவர், வழக்குகளை விசாரிக்கும் ஸ்டைலே தனி ரகம் என்பது போலீஸ் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். துறைரீதியான விசாரணை அவரிடம் நடந்து வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் சொல்வதற்கும் ஒருகாரணம் இருக்கிறது. ஜெயசந்திரன் மீதுள்ள குற்றச்சாட்டில் இன்னும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இந்த விவகாரத்தை மூடிமறைக்கவே போலீஸார் முயற்சித்தனர். சென்னை போலீஸ் ஐ.பி.எஸ் உயரதிகாரிகளுக்கு மட்டுமே இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும். குறிப்பாக பத்திரிகைகளுக்கு தெரியக்கூடாது என்ற அந்த உயரதிகாரிகளின் உத்தரவை அப்படியே அவருக்கு கீழ் உள்ள சில அதிகாரிகளும் பின்பற்றி வருகின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்திலேயே இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த விசாரணை குழுவில் உள்ள நேர்மையான ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, இன்ஸ்பெக்டர் விவகாரத்தை வெளியில் சொல்லி விட்டார்.

ஜெயசந்திரன் விவகாரம் வெளியில் தெரிந்ததும் ஐ.பி.எஸ்.விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கடும் தலைவலி ஏற்படுத்தி உள்ளது. இதனால் எந்த தகவலும் சொல்லாமல் நேற்று வரை மூடிமறைத்த அவர்கள் ஜெயசந்திரனிடம் விசாரணை நடந்து வருவதை மட்டும் சொல்லத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் விசாரணை முடிந்து ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜெயசந்திரனை காப்பாற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் முயற்சித்து வருகிறார். இதனால் ஜெயசந்திரன் மீது புகார் கொடுத்தவரின் பெயரைக் கூட சொல்ல போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர்" என்றனர்.

-எஸ்.மகேஷ்

Thursday, February 2, 2017

பெட்ரோல் ஊத்தி கொளுத்தச் சொன்னதா காதல்?! - கேரள கல்லூரி அதிர்ச்சி

கேரளாவின் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் லஷ்மி (20) மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ஆதர்ஷ் (26) இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணங்களால், ஆகாஷ் உடனான தன் காதலை முறித்துக்கொண்டு லஷ்மி விலகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சில மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்திருந்த லஷ்மி மீது பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் லைட்டரைக் கொண்டு தீயைப் பற்ற வைத்துள்ளார் ஆதர்ஷ். கண்ணிமைக்கும் நேரத்தில் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார் ஆதர்ஷ். ஆதர்ஷ் புதன் அன்று இரவே இறந்துவிட, 65 சதவிகித தீக்காயங்களுடன் லஷ்மி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இவர்களைக் காப்பாற்ற வந்த சக மாணவர்கள் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆதர்ஷ் உடனான காதலை முறித்துக்கொண்ட லஷ்மியின் மீதான கோபத்தினால்தான் ஆகாஷ் இவ்வாறு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இச்சம்பம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் இச்சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்.

இந்நிலையில் காதல் முறிவு, ஒருதலைக்காதல் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு உதாரணம் சுவாதி, வினுப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் மீது நடத்தப்பட்ட ஒருதலைக் காதல் கொடூர நிகழ்வுகள். அதன் வடுக்கள் மறையாத சூழலில்....இப்போது லஷ்மி.

லஷ்மி மற்றும் ஆதர்ஷ் இடையே என்ன பிரச்னையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அதற்கு ஒருவரை கொலை செய்யும் அளவுக்கு வன்முறையை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். கோட்டயத்தில் நடைபெற்ற சம்பவத்தை வாசகராகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். மேலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் கருத்தை கீழே இருக்கும் கமென்ட் பாக்ஸில் பதிவிடலாம்.

- கு.ஆனந்தராஜ்
Dailyhunt
மூக்கில் நுழைந்து மூளை அருகில் உலாத்திய கரப்பான். உயிருடன் வெளியே எடுத்த அரசு மருத்துவர்கள்

சென்னை: எப்போதாவது அரிதாக நடைபெறும் சில சம்பவங்கள் உண்டு. அதுபோன்று தூங்கும் போது மூக்கின் வழியே சென்று மூளைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார் செல்வி. 42 வயதான இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 11.30 மணியளவில் அவரது மூக்கில் ஏதோ நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு எழுந்தார். மூக்கில் எரிச்சல், அரிப்பு, வலி உள்ளிட்ட தொந்தரவுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த செல்வி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் செல்விக்கு மூக்கில் சதை வளர்ந்திருக்கும் என்று சந்தேகமாக கூறப்பட்டது. அவர்கள் கொடுத்த மருந்தை சாப்பிட்டும் செல்விக்கு வலி குறையவில்லை.

வலியை தாங்க முடியாத செல்வி அருகில் இருந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட ஸ்கேனில் செல்வியின் மூளைக்கு அருகில் கரப்பான் இருப்பது தெரியவந்தது.


மூளை அருகில் கரப்பான் இருப்பது தெரிய வந்தவுடன் செல்வி பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதைவிட அவரை மேலும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது தனியார் மருத்துவமனையில் அதனை எடுக்க வழிவகை இல்லை என்பதுதான். அதனால் அவர் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

இதையடுத்து, செல்வி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றார். காது, மூக்கு தொண்டை பிரிவு டாக்டர்கள் எம்.என்.சங்கர், முத்து சித்ரா ஆகியோர் மூக்கு உள்நோக்கு கருவி மூலம் அவரை பரிசோசதனை செய்தனர். அப்போது மூளையின் அடிப்பகுதியில் கரப்பான் பூச்சி உயிரோடு உலாத்திக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


மருத்துவமனையில், வேக்கம் சக்ஷன் கருவி மூலம் கரப்பான் பூச்சியை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. பின்னர், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மூக்கு உள் நோக்குக் கருவி மூலம் கரப்பான் பூச்சி உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது.


எந்த வித அறுவை சிகிச்சையும் இன்றி நவீன கருவிகள் மூலம், மூளையின் அருகில் இருந்த கரப்பான் பூச்சி நீக்கப்பட்டதால் செல்விக்கு வலி தீர்ந்தது. இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

Aircel-Maxis deal: Special CBI court discharges Maran brothers, all other accused


Earlier, all the accused had denied the allegations against them made by the investigating agencies and had moved bail pleas.


New Delhi :

In a big relief to Maran Brothers, a Special court has discharged all accused in Aircel-Maxis deal cases lodged by CBI and ED.

Ex-Telecom Minister Dayanidhi Maran and his brother Kalanidhi Maran with other accused were charged with cases regarding transfer of stakes in the Malaysia-based Maxis Communications.

Expressing his happiness over the judgement, Dayanidhi Maran said, "I am Very happy, let me absorb this news. It is a big moment for us , let us savour it. "

Earlier, all the accused had denied the allegations against them made by the investigating agencies and had moved bail pleas.

During arguments on framing of charges, Special Public Prosecutor Anand Grover had claimed that Dayanidhi had “pressurised” Chennai-based telecom promoter C Sivasankaran to sell his stakes in Aircel and two subsidiary firms to Malaysian firm Maxis Group in 2006. The charge was strongly refuted by Dayanidhi.

CBI had filed a charge-sheet against the Maran brothers, Ralph Marshall, T Ananda Krishnan, M/s Sun Direct TV (P) Ltd, M/s Astro All Asia Networks Plc, UK, M/s Maxis Communications Berhad, Malaysia, M/s South Asia Entertainment Holdings Ltd, Malaysia and then Additional Secretary (Telecom) late J S Sarma.

They were charge sheeted for alleged offences punishable under section 120-B (criminal conspiracy) of the IPC and under relevant provisions of the Prevention of Corruption Act.

In the money laundering case, ED has charge sheeted the Maran brothers, Kalanithi’s wife Kavery, Managing Director of South Asia FM Ltd (SAFL) K Shanmugam, SAFL and Sun Direct TV Pvt Ltd (SDTPL) under provisions of the Prevention of Money Laundering Act (PMLA).

(With Inputs from PTI)

நேற்று சிறுசேரி உமா மகேஸ்வரி..இன்று புனே ரசிலா...என்ன சொல்கிறார்கள் ஐடி பெண்கள் #ITSafety

சிக்கலில் ஐடி பெண்கள்

‘’பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் எதுவும் நிகழ்வதே இல்லை. இரவோ பகலோ அவர்களின் தனிமைக்கு உத்திரவாதம் இருக்கிறது. ஆண், பெண் புரிதலில் பெண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை’’
- இப்படியெல்லாம் நிகழ வேண்டும் என்பது தான் அனைவரின் கனவாக இருக்கும். ஆனால் நிகழ்காலம் அதற்கெல்லாம் வெகு தொலைவில் இருக்கிறது என்பதையே பல கொடூர சம்பவங்கள் மூலமாக கோட்டிட்டு காட்டுகிறது.சமீபத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் நடந்தது என்ன?

சென்னை,சிறுசேரியில் அமைந்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி திடீரென காணாமல் போக 8 நாட்கள் கழித்து அவருடைய உடலை புதரில் இருந்து கண்டுப்பிடித்தனர். அங்கே கட்டட தொழிலாளர்களாக வேலைப் பார்த்தவர்கள் மூன்று பேர் அவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்து குப்பையைப் போல புதரில் வீசி சென்றது பின்பு விசாரணையில் தெரியவர குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைத்தது. இரவுப் பணியை முடித்துவிட்டு வந்த உமா மகேஸ்வரிக்கு இந்த நிலைமை என்றால் விடுமுறை நாளில் வேலைக்குச் சென்ற ஐடி பணியாளர் ரசிலாவின் நிலைமையும் கொடூரம்.
‘வேலியே பயிரை மேய்ந்தாற் போல’...என்பார்களே அப்படியான சம்பவம் தான் ரசிலாவுக்கு நிகழ்ந்திருக்கிறது. புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் ரசிலா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வேலை காரணமாகப் பணிக்குச் சென்ற ரசிலாவை நீண்ட நேரமாக தொடர்பு கொள்ள முடியாமல் போக கடைசியில் பணியிடத்திலேயே அங்கு வேலை பார்த்த காவலாளியால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு இழைக்கப்படும் இவ்வாறான கொடுங்குற்றங்களுக்கு எப்போதும் வேறு முகங்கள் இருப்பதில்லை. நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படும் நிலையில் ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கான அவலங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வரும் பின்னணியை குறித்து அத்துறை சார்ந்தவர்களிடமே பேச முற்பட்டோம். என்ன சொல்கிறார்கள் ஐடியில் வேலை பார்க்கும் பெண்கள்?

Representative Image



வசந்தப்பிரியா, ஐடி ஊழியர், புனே:


எனக்கு சொந்த ஊர் சென்னை. 15 வருஷமா புனேவுல தான் இருக்கேன். ரசிலா கொலையைப் பத்தி இங்க உள்ள என்னோட ஃப்ரெண்ட்ஸ் சொல்லி தான் எனக்கும் தெரியும். ரசிலாவுக்கும், அங்கே உள்ள செக்யூரிட்டிக்கும் சனிக்கிழமை அன்னைக்கே ஏதோ பிரச்னை இருந்ததா சொல்றாங்க. மறுநாள் ஞாயிற்று கிழமை ரசிலா வேலைக்கு வந்தப்பவும் அதே பிரச்னை தொடர்ந்திருக்கு. ஒரு கட்டத்துல மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்னு ரசிலா சொல்லி இருக்காங்க. செக்யூரிட்டியோ கம்ப்ளெயிண்ட் பண்ண வேண்டாம்னு சொல்லி கேட்டிருக்கார். நடுவுல என்ன நடந்ததுனு தெரியல. கடைசியில அது கொலையா முடிஞ்சிருக்கு. எல்லாருமே ஒரே ஒரு செக்யூரிட்டி இருந்ததால தான் இப்படி ஆகியிருக்கு, ரெண்டு பேர் இருந்திருந்தா நடந்திருக்காதுனு சொல்லிட்டு இருந்தாங்க.ஒரு பொண்ணுக்கிட்ட தகாத முறையில நடந்துக்க ஒருத்தர் தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது எத்தனை பேர் இருந்தாலும், பெண்ணுக்கான பாதுகாப்பை அவ தான் உறுதிப்படுத்திக்கணும். ஐடியை பொறுத்த வரைக்கும் இங்கே பெண்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க. கல்யாணம், குழந்தைனு அவங்க ஏற்கெனவே தங்களோட நேரத்தை குடும்பத்துக்காக செலவு செய்றப்ப, இந்த மாதிரியான பிர்ச்சனைகளையும் சந்திச்சு மேல வர்றது ரொம்பவே சவாலா இருக்கு. வெளிநாடுகள்ல இருக்குற மாதிரி ஜென்ரல் ஷிப்ட்ல பெண்களை வேலைக்கு அமர்த்தலாம். வேலை நேரத்துல தங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் உடனுக்குடன் அதை தைரியமாகப் பேசி ஆரம்பத்துலயே தீத்துக்கப் பாக்கணும். தேவையில்லாமல் நம் குடும்ப சூழல்களை மற்றவர்களிடம் பகிர்வதோ, அல்லது பயந்து பயந்து பேசுவதோ, தேவையில்லாமல் கோபப்படுவதோ இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்கணும்.

ரம்யா, ஐடிஊழியர், சென்னை:

எங்க கம்மெனியில ஜென்ரல் ஷிப்ட்ல வர்றவங்க, நைட் 8 மணிக்கு மேல தொடர்ந்து வேலைப் பாத்துட்டு இருந்தா, அதுக்கப்புறம் வெளிய போக அனுமதி தர மாட்டாங்க. மறுநாள் காலையில தான் வெளிய போக முடியும். அதனால சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கிளம்ப்பணும்னு விதிமுறை இருக்கு. இரவு நேர ஷிஃப்ட்ல வர்றவங்களுக்கு கம்பெனியில கேப் அரேஞ்ச் செஞ்சு தருவாங்க. கண்டிப்பா வீடு வரைக்கும் டிராப் பண்ணிடுவாங்க. கேப்ல போறவங்க, கிளம்புற நேரத்தை,ஸ்வைப் கார்டு மூலமா பதிவு பண்ணிட்டு தான் வெளியேற முடியும். இதனால் பெரும்பாலும் பணியாளர்கள் கண்காணிக்கப்படுறாங்க. விடுமுறை நாட்கள்ல வந்து வேலை பாக்க வேண்டி இருந்தா எச்.ஆரிடம் அனுமதி வாங்கணும். சில பேருக்கு கொடுத்திருக்கிற புராஜக்ட்டைப் பொறுத்து அவங்க வீட்ல இருந்தும் வேலை பாக்க முடியும். அப்படி முடியாதவங்க ஆபிஸ் வருவதா இருந்தா பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கிட்டு வருவது நல்லது. அதே போல நிர்வாகமும், செக்யூரிட்டி வசதிகள் சரியா இருக்கானு உறுதிப்படுத்திக்கணும்.

கிருஷ்ணவேணி, ஐடி ஊழியர், பெங்களூரு:

எங்க கம்பெனியில இரவு 7 மணிக்கு மேல வெளிய போனாலும் சரி, உள்ளே வருவதா இருந்தாலும் அவங்களே டிராவல் ரெடி பண்ணிடுவாங்க.புதுசா வேலைக்கு சேரும் பெண்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பாங்க. அதனால அவங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் பணிச்சுமை அதிகமா இருக்கும். இந்த மாதிரியான நேரத்தில் இரவில் தங்கியும் வேலை பார்ப்பாங்க. எங்க கம்பெனியைப் பொறுத்த வரைக்கும், முதல் 10 நாட்கள் மட்டுமே இரவில் தங்க அனுமதி தருவாங்க. அதுக்கப்புறம் கிடையாது. தனியா வந்து வேலை பாக்குறதுக்கு பதிலா வீட்ல இருந்தே வேலை பாக்க அனுமதி கேட்கலாம். ஹார்ட்வேர் தொடர்பான வேலையா இருந்தா கண்டிப்பா வீட்ல இருந்து பாக்க முடியாது. அதனால அவங்க துணைக்கு புராஜெக்ட் மேனேஜர் வரணும்னு சொல்லி கேட்கலாம். எல்லாத் துறைகளிலுமே தப்பு நடக்க வாய்ப்பிருக்கு. அதனால எதையுமே மறைக்காம ஆரம்பத்துலயே குடும்பத்தாரிடம் சொல்வது நல்லது.

திவ்யா, ஐடி ஊழியர், சென்னை:

நம்மோடு பணி புரிபவர்கள் யார், எப்படி பட்டவர்கள் என்பதை எல்லாம் நாம் உடனுக்குடன் புரிந்து கொள்வது கஷ்டம். அதனால் நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வரை யாரிடமும் நெருங்கிப் பழகிவிட வேண்டாம். ஆண் பெண் குறித்த புரிதல் அடிப்படையில் சமூகத்துக்கே வர வேண்டி இருக்கிறது. விடுமுறை நாட்கள்ல கண்டிப்பா தனியாக வேலை பார்க்கவே தேவையில்லை. ஐடி துறை மட்டுமல்ல ..இங்கே பெண்களுக்கு எல்லா இடத்திலும் இப்படிப் பட்ட பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களில் ஆரம்பித்து துணிக்கடைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் வரை எல்லோருக்குமே பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருக்கின்றன. வேறு துறையை சார்ந்த பெண்களின் பிர்ச்னைகள் எளிதில் வெளியே வருவதில்லை. ஆனால் ஐடியை பொறுத்த வரை அது பூதாகரமாக வெளிப்படுகிறது. சமூக மாற்றம் நிகழ நீண்ட காலம் பிடிக்கலாம். அதனால் பெண்கள் தங்களை பாதுகாப்பு உணர்வோடு வைத்திருப்பதோடு, பெண்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஐடி துறையில் பெண்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? #ITSafety என்கிற ஹேஷ் டேக்குடன் ட்வீட் செய்யுங்களேன்...
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
நாளை அவைக்கு வரணும்! அனிதா கேள்விக்கு முதல்வர் பதில்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு, நாளை நீங்கள் அவைக்கு வரவேண்டும். முழுமையாக பதில் தருகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். Details will be provided tomorrow, OPS informs Anitha Radhakrishnanநாளை அவைக்கு வரணும்! அனிதா கேள்விக்கு முதல்வர் பதில் | Details will be provided tomorrow, OPS informs Anitha Radhakrishnan - VIKATAN



-பொன்.விமலா

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...