Thursday, February 2, 2017

பெட்ரோல் ஊத்தி கொளுத்தச் சொன்னதா காதல்?! - கேரள கல்லூரி அதிர்ச்சி

கேரளாவின் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் லஷ்மி (20) மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ஆதர்ஷ் (26) இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணங்களால், ஆகாஷ் உடனான தன் காதலை முறித்துக்கொண்டு லஷ்மி விலகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை சில மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்திருந்த லஷ்மி மீது பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் லைட்டரைக் கொண்டு தீயைப் பற்ற வைத்துள்ளார் ஆதர்ஷ். கண்ணிமைக்கும் நேரத்தில் தன்மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டுள்ளார் ஆதர்ஷ். ஆதர்ஷ் புதன் அன்று இரவே இறந்துவிட, 65 சதவிகித தீக்காயங்களுடன் லஷ்மி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இவர்களைக் காப்பாற்ற வந்த சக மாணவர்கள் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆதர்ஷ் உடனான காதலை முறித்துக்கொண்ட லஷ்மியின் மீதான கோபத்தினால்தான் ஆகாஷ் இவ்வாறு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இச்சம்பம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் இச்சம்பவத்துக்கான காரணம் தெரியவரும்.

இந்நிலையில் காதல் முறிவு, ஒருதலைக்காதல் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு உதாரணம் சுவாதி, வினுப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோர் மீது நடத்தப்பட்ட ஒருதலைக் காதல் கொடூர நிகழ்வுகள். அதன் வடுக்கள் மறையாத சூழலில்....இப்போது லஷ்மி.

லஷ்மி மற்றும் ஆதர்ஷ் இடையே என்ன பிரச்னையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அதற்கு ஒருவரை கொலை செய்யும் அளவுக்கு வன்முறையை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். கோட்டயத்தில் நடைபெற்ற சம்பவத்தை வாசகராகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள். மேலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் கருத்தை கீழே இருக்கும் கமென்ட் பாக்ஸில் பதிவிடலாம்.

- கு.ஆனந்தராஜ்
Dailyhunt

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...