Friday, February 3, 2017

உங்க வழி.. தனி வழியா? #MorningMotivation


ஜனவரி முடிஞ்சு பிப்ரவரியும் வந்தாச்சு. வழக்கமானதா இல்லாம புது மாதிரியா இந்த மாதத்தை அப்ரோச் பண்ணுவோமா!? மாற்றம் ஒண்ணுதான் மாறாததுன்னு சொல்லுவாங்க. ஆனா மாற்றம் தானா வந்துடாதுல்ல. எல்லா பெரிய பெரிய மாற்றங்களுக்கும் பின்னாடி இருக்க சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி பார்ப்போமா?

"வேற..வேற..வேற மாதிரி யோசி கண்ணா"

புதுசா என்ன பண்ணலாம் ரொம்ப மெனக்கெடவேண்டாம் பாஸ். எல்லா விஷயத்தையும் நம்ம வைகைப்புயல் சொன்ன மாதிரி "பிளான் பண்ணிப் பண்ணனும்" அவ்ளோதான். ஆனா அது எல்லோரும் பிளான் பண்ண மாதிரி இல்லாம புது மாதிரியா இருக்க வேண்டியதுதான் நம்ம பொறுப்பு. எல்லாப் பெரிய மாற்றமும் சின்ன சின்ன மாற்றங்கள்ல இருந்து தான் வரும்னு ஒரு பழமொழி இருக்கு (யார் சொன்னதுன்னுலாம் கேட்கப்படாது). ஆனா அந்த சின்ன சின்ன மாற்றங்கள் வெறும் கனவுகளா இல்லாம செயல்களா இருந்தா அதுதான் ஓப்பனிங் ஷாட். அதுக்கப்புறம் அடிச்சு விளையாட வேண்டியதுதான்.

"உங்க வழி தனிவழியா!?"

"கரைகளைக் கடக்கும் துணிவு இருந்தால்தான், புதிய கடல்களைக் கண்டுபிடிக்க முடியும்." இதை யார் சொன்னது தெரியுமா? நம்ம அப்துல்கலாம் ஐயா சொன்னது. எந்த விஷயத்தையும் செய்ய ஆரம்பிற்கும் முன்னாடி துணிவு வேணும். அவ்வளவு சீக்கிரம் ஆழம் தெரியாம எதுலயும் காலை விட மாட்டோம்லனு காலரை தூக்கி விடுறிங்களா?. நீங்க தொண்டனா இருக்க ஆசைப்பட்டா உங்களுக்கு இந்த வழிமுறை செட் ஆகலாம். ஆனா எல்லோருக்குமே தலைமைக்கான ஆசை இருக்கும்ல. உங்களுக்காகவும் அப்துல்கலாம் ஐயா சொன்ன விஷயம் "அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்து எடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு". தொண்டனா? தலைவனா? முடிவு உங்க கையில தான்.

"அமைதியான கடலும் திறமையான மாலுமியும்"



"அமைதியான கடல்கள் எப்போதும் திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை." என்றொரு பழமொழி உண்டு. இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும்தானே? உங்கள் செயல்களின் மீது எந்தவித விமர்சனங்கள் இல்லாமலோ, தடைகள் இல்லாமலோ வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதில் உங்கள் திறமையை எப்போதுதான் காட்டுவது? அதற்கான களத்தை அமைத்துக் கொள்வது உங்கள் பொறுப்புதான். நமக்கு வேண்டியதை முழுமையான மனதுடன் நாம்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அமைதியான கடல்ல எந்தவித தொல்லையும் இல்லாம பயணம் செய்யுறது நல்லாத்தான் இருக்கும். ஆனா ஒரு சுனாமி வந்தா அதை எதிர்க்கிற மனவலிமை அமைதியான பயணத்துல கிடைக்காதே பாஸ். #எதிர்நீச்சலடி.. பின்பு ஏற்று கொடி!

"கனவு காணுங்கள்"

உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி கனவு காணும் தைரியம் இருந்தால், அதை சாதிக்கும் தைரியமும் தானாய் வந்து சேரும் என்பார்கள். கனவுகள் இல்லாத எந்த வெற்றியாளனையும் வரலாறு கண்டது இல்லை இனி காணப் போவதுமில்லை என தைரியமாகச் சொல்லலாம். ஒருமுறை சிறுவன் அலெக்சாண்டர் தனது குரு அரிஸ்ட்டாட்டிலுடன் காலை நேர பூஜை ஒன்றில் அமர்ந்திருந்தார். அப்போது தனக்கு அருகிலிருந்த சாம்பிராணியை அள்ளி நெருப்பில் போட அந்த இடமே புகை மண்டலமானது. "இந்தியாவைக் கண்டுபிடித்து அங்கிருந்து சாம்பிராணியை கொண்டுவா. பிறகு இந்த மாதிரி பயன்படுத்து" என அரிஸ்ட்டாட்டில் கடிந்து கொள்ள அலெக்ஸ்சாண்டருக்கு இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது கனவாகவே உருவெடுக்க ஆரம்பித்தது. அக்கனவை, நிஜமாக்க இந்தியாவை தேடிவர, வழியில் உலகின் பாதியை வெல்ல அடித்தளமாய் அமைந்தது. "கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவு தான் சிந்தனையாகவும், சிந்தனை தான் செயலாகவும் மாறுகிறது." இதுவும் நம்ம அப்துல்கலாம் ஐயா சொன்னதுதான்.

வெற்றிபெற பல சூத்திரங்கள் உண்டு. அவற்றில் இவற்றையும் கருத்தில் கொள்ளுங்கள். ரெடி.. ஸ்டெடி.. கோ! உங்கள் ​​​​கனவுகள் நனவாகட்டும்!

- க. பாலாஜி

கணவன் மனைவி பிரிவால் குழந்தை நிலை என்னவாகிறது தெரியுமா?

குழந்தை children
இந்தியாவிலுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்குகளில் 52 சதவிகிதத்துக்கும் அதிகமானவை, கணவன் மனைவிக்கு இடையிலான விவாகரத்து மற்றும் கருத்து மோதல் தொடர்பானவை என்றும் அதனால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அதிர்ச்சியைத் தருகிறது என்.சி.ஆர்.பி(National Crime Records Bureau) அறிக்கை.

பெற்றோர்க்கு இடையிலான விவாகரத்து பிரச்னையால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர் தங்களுக்குள்ளான சண்டையால் குழந்தையிடம் பரிவாக பேசாமல், கவனிக்காமல், அவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகள் தாம் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதுபோல உணர்கிறார்கள்.

குழந்தைப் பருவ ஆரோக்கிய வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் சரியாக கிடைக்காமல் தன்னை மாற்றுத்திறனாளிக்கு இணையாக நினைப்பதுடன், அச்சூழல் குழந்தைகளை வன்முறை குணம் கொண்டவர்களாகவும் மாற்றிவிடுகிறது. இதனால் சிறுவயதிலேயே கல்வியில் கவனம் இல்லாமை, தோல்வியை ஏற்றுக்கொள்ளாத மனப்பக்குவம், மனநிலை குழப்பம், ஆளுமை திறன் குறைவு, நாள்பட்ட மன தளர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம், எதிர்பாலினத்தவரை அணுகுவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பதுடன் இவற்றால் இளம் வயதிலேயே குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் மாறுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அம்மா-அப்பா இருவரிடமும் இருந்து அன்பான அரவணைப்பும், அச்சமில்லாத வளர்ப்பு முறையும் கட்டாயம் கிடைக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் அக்குழந்தை தவறான பாதைக்கும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என பல வழக்குகளிலும் முன் உதாரண தீர்ப்புகளை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.

கணவன்-மனைவி இருவரும் ஒருமித்த கருத்து மற்றும் ஆசை பரிமாற்ற நிலைகளைக் கடந்துதான் பெற்றோர் ஸ்தானத்தை பெறுகிறார்கள். அப்போது உங்கள் அன்பிற்குத்தானே குழந்தைகள் பரிசாகக் கிடைக்கின்றனர். ஆனால் ஒரு குற்றமும் இழைக்காத குழந்தைகள், கணவன் - மனைவிக்கு இடையிலான மோதல்கள் மற்றும் கருத்துவேறுபாடுகளினால் ஏன் தனிமை மற்றும் மனநல போராட்டங்களை சந்திக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர் விவாகரத்துப் பெற்றுவிட்டால், தன் சக நண்பர்களால், சமூகத்தால் அக்குழந்தை எதிர்கொள்ளும் சங்கடங்கள், மாறுபட்ட பார்வை, பேச்சுக்கள் அனைத்தினாலும் அவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்.

எல்லா பிரச்னைகளும் மனம் விட்டுப் பேசித் தீர்க்கக் கூடியவையே. கணவன் - மனைவிக்கு இடையேயும் சண்டை வருவது இயல்புதான். அதனை ஆரம்பக் கட்டத்திலேயே குழந்தைகள் பார்வையில் இல்லாத வகையில், தங்களுக்குள் பேசித் தீர்த்து வன்மத்தை வளர்க்காமல் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கையை இன்பமாகக் கழிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ரோல்மாடல் தன் பெற்றோர்தான். அதன்படி தன் பெற்றோரைப் போலவே என் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், முடிந்தவரையில் பிறருக்குப் பயன்தரும் வகையிலும் அமைய வேண்டும் என ஒரு குழந்தை நினைக்க வேண்டும். மாறாக தன் பெற்றோரின் சண்டை, வன்மத்தைப் பார்த்து வளர்ந்து, அதுப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளக் கூடாது.

குழந்தைகள் மனித வளத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அவர்கள் இருக்கும் இடத்தை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றிவிடுவார்கள். அந்த மகிழ்ச்சி பெற்றோர்கள், தாத்தா-பாட்டி, உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர் என எல்லோர் வாயிலாகவும் கிடைக்க வேண்டும். அதில் முதலானவர்களும் முடிவானவர்களும் பெற்றோரே.

உங்கள் குழந்தை பலர் போற்றும் வண்ணம் இன்பமாய் வாழவேண்டுமா அல்லது தங்களால் வாழ்க்கையையே இழக்க வேண்டுமா என்பது பெற்றோராகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

- கு.ஆனந்தராஜ்


Madras University VC search panel narrows down names

TIMES OF INDIA

CHENNAI: Around 20-25 candidates have been short-listed on Thursday by the three-member search panel constituted by the state government to finalise the vice-chancellor for University of Madras.

Although the panel members remained tight-lipped regarding the names, government sources indicated that former UNOM syndicate member Sriman Narayanan, former Criminology Head of Department(HoD) Thilagaraj and UGC vice-chairman H Devaraj are front-runners.

The meeting started at 11am and ended at around 3pm. A panel member said the list was made according to University Grants Commission (UGC) norms. "We shall be meeting again next week, hopefully to narrow down on the final short-list," the member said.

The going rate for the UNOM VC post has shot up to from Rs 4 crore to around Rs 8-12 crore, a top source in the university said. "This is because there are more than 100 professor vacancies, the going rate for each of which is around Rs 30 lakh," the source added.

The three member search panel consisted of PN Veda Narayanan, a retired vigilance commissioner, Dr R Balasubramanian, a faculty in SRM University and R Surendira Prasad, a former syndicate member of the UNOM.

UNOM has been without a vice-chancellor since R Thandavan was relieved in January 2016. Absence of VC has stalled many academic decisions, including the postponement of a convocation in December. Currently the VC's duties are being discharged by a three-member convenor committee chaired by the higher education secretary.

VC posts: Govt seeks answers from varsities

CHENNAI: The Tamil Nadu higher education department has demanded answers from all state universities to a number of contentious questions raised in the past few months. These include appointment of vice-chancellors, regular conduct of syndicate meetings, filling of key posts like registrar and controller of examinations (CoE), and details of agitations carried out by students during the jallikattu protests.

The 14-point proforma was sent to all state-run universities last week. Sources in the department said that the state government is on the back foot during the current assembly session and this exercise has been initiated to avoid embarrassment by an aggressive opposition. The one major issue which the government expects to be raised in the assembly is the absence of VCs in universities like Madurai Kamarajar University (MKU), University of Madras (UNOM) and Anna University.

"Recently, corruption allegations were raised regarding professor appointments in Bharatiar University, delay in payment of December salary of teaching and non-teaching staff of Annamalai University and advertisement for appointment of MKU vice-chancellor. Replies to those issues have also been asked for," a government official said.

Issues raised by TOI in two news reports regarding the Tamil Nadu Open University are there in the proforma. TNOU has been asked to respond on the issue of problems faced by assistant professors which have remained unresolved. The University has also been asked to respond on the cancellation of the Memorandum of Understanding (MOU) with an Ethiopian college, where norms were flouted leading to an e-mail from the Indian embassy in Ethiopia.

All state-run universities also face a challenge with respect to running the Institute of Distance Education (IDE), as the University Grants Commission (UGC) in a circular in September has disallowed courses for all but four institutes in the state. Universities have been asked to respond on what measures have been taken in this regard. "University of Madras has replied that we have obtained a stay order on the circular from Madras high court for the next two academic years," a senior UNOM official said.

The proforma has also asked universities to respond on whether syndicate meetings were being convened at regular intervals and if there were vacancies in syndicate posts. A top official of a Chennai-based university said that syndicate meetings were not being convened at regular intervals in almost every university except Anna University, because of which issues were piling up.

மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர், இதனை எதிர்த்து 2ஜி ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணையைத் தொடங்கின. ஊழல் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து சிபிஐ அமைப்பும் பண மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகளின் விசாரணையும் நடைபெற்றது.

இரு வழக்குகளிலும் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

பலமுறை தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்ட நிலையில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தீர்ப்பு வழங்கி னார். அவர் கூறியபோது, “2 வழக்கு களிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர், இதேபோல வழக்கு களில் தொடர்புடைய நிறுவனங் களும் விடுவிக்கப்படுகின்றன’’ என்று தீர்ப்பளித்தார்.

அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அனந்த கிருஷ்ணன் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சன் குழும நிறுவனங்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன, மேலும் அமலாக்க இயக்குனரகம் முடக்கிய ரூ.742 கோடி சொத்துகளையும் விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில், சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை பிணைப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடவில்லை.

குற்ற நடைமுறை சட்டம் 437 ஏ பிரிவின் படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் 6 மாதகால பிணைப்பத்திரத்திற்கு மனு செய்திருக்க வேண்டும். இது விசாரணை நீதிமன்றத்தினால் வலியுறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டாவதாக முடக்கப்பட்ட சொத்துகளையும் திருப்பி அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் தனது சட்ட எல்லையைத் தாண்டி உத்தரவிட்டுள்ளது என்றும் ஆனந்த் குரோவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான குழு குரோவரிடம் கேட்ட போது, “ஏன் தனிநபராக இதனை எதிர்த்து மனு செய்கிறீர்கள்?” என்றனர், அதற்கு குரோவர், ‘இது என்னுடைய கடமை’ பதிலளித்தார். 

அமலாக்கப்பிரிவும் மாறன்கள் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக தெரிகிறது

இதற்கெல்லாம் எப்போது போராட்டம்?

கே.பாலசுப்பிரமணி

மெரினா புரட்சி ஓய்ந்துவிட்டது. ஆனால், அது நம் இளைஞர்களின் மனதில் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. நாட்டு மாடுகளைக் காப்பதற்காகக் களம் இறங்கிய இளைஞர் படைக்கு, இன்னும் நிறைய வேலைகள் மிச்சம் இருக்கின்றன; தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகள் ஏராளம் உள்ளன. தமிழ்நாட்டைச் சூறையாடிக்கொண்டிருக்கும் டாப் 10 பிரச்னைகள் இவை...



விவசாய நிலங்கள்

அதீத விளைச்சல் என்ற பெயரில் மண்ணை மலடாக்கி, மனிதர்களிடம் நோயை உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதுதான் விவசாயம் என்ற கருத்தியல், மெள்ள மெள்ள அடிபட்டுவருகிறது. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், விவசாய நிலங்களின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்துவருகிறது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3.25 கோடி ஏக்கர். கடந்த 35 ஆண்டுகளில் சராசரியாக 20 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காகவும், இதர பயன்பாடுகளுக்காகவும் மாற்றப்பட்டுவிட்டன. விளைநிலங்களைப் பாதுகாக்க, கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்திய போராட்டமே இன்றைய தேவை. கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் விளைநிலங்களை மனைகளாக மாற்ற, தொழிற்சாலைகளுக்குக் கடும் விதிமுறைகளை தமிழ்நாட்டிலும் உருவாக்க வேண்டும்.

இயற்கை வளங்கள்

தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்துவதற்கும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கும், நீர்நிலைகளில் இருந்த மணல் கொள்ளையடிக்கப்படுவதுதான் பிரதானமான காரணம். தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்டங்களின் வழியாகப் பாயும் கொள்ளிடம், கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி ஆற்றுப்படுகை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குண்டாறு ஆற்றுப்படுகை ஆகிய இடங்களில் மட்டும்தான் இப்போது மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகையில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்பது பொதுப்பணித்துறையின் விதிமுறை. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மீட்டர் அளவுக்கு மணல் அள்ளப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் ஓடும்போது நிலத்தடிக்குள் நீர் இறங்கும் தன்மை குறைந்துவிட்டது. ஏரிகளிலும் ஒரு மீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி உண்டு. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு நீர்நிலைகளின் இயல்புதன்மையை மொத்தமாகக் காலி செய்துவிட்டனர்.

கிரானைட் முறைகேட்டின் காரணமாக, 1,06,145 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சகாயம் பரிந்துரை செய்தார். இவற்றை எல்லாம் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள வேண்டும். மணல், கிரானைட் விற்பனையில் அரசே ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இயற்கை வளக் கொள்ளையர்களைத் தடுக்க, சிறப்புச் சட்டத்தை உருவாக்கவும் தொடர்ச்சியான முன்னெடுப்பு அவசியம்.

நதி நீர் உரிமைகள்

தமிழ்நாட்டின் நதி நீர் உரிமைகளைத் தருவதற்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் தொடர்ந்து மறுத்துவருகின்றன. காவிரி வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, மத்திய அரசும் கர்நாடகா அரசும் செயல்பட்டுவருகின்றன. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் கேரள அரசு தீவிரம் காட்டுகிறது. பாலாறு ஆற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பு அணை கட்டுகிறது. உணவுக்கான அடிப்படை ஆதாரத்தோடு தொடர்புடைய தண்ணீர் உரிமையில் கர்நாடகா அரசு மக்களை வன்முறைப் பாதையில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. வாக்கு வங்கி என்ற பெயரில் மத்திய அரசு அதற்குத் துணைபோகிறது. காவிரி நீர் வராததால், டெல்டா விவசாயம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நதிநீர் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

கல்விக் கொள்ளை

குழந்தைகளை வெறும் ஏ.டி.எம் மெஷின்களாக மாற்றும் இன்றைய கல்வி, சமகாலத்தின் சாபக்கேடு. பிரமாண்டக் கட்டடங்களைக் காட்டி எல்.கே.ஜி வகுப்புக்குக்கூட பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் கொள்ளை நடக்கிறது. எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் சேர ஒரு ரேட், இன்ஜினீயரிங் படிப்புக்கு ஒரு ரேட், கலை மற்றும் அறிவியல் என்றால் ஒரு ரேட் என, கல்வி என்பது ரேட்கார்டுகளுடன்தான் தொடங்குகிறது. கல்விக் கொள்ளை என்ற வார்த்தையை `தரமான கல்வி' என்ற பதத்துக்குள் அழகாக ஒளித்துவைத்து, ஆண்டுதோறும் அமோகமாக வியாபாரம் நடக்கிறது. அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவுடன் செயல்படும் பினாமிகளும் கைகோத்திருக்கும் கல்வி, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வியாபாரமாக மாறிவிட்டது.

நம் குரல்கள், இந்தக் கல்விக் கொள்ளைக்கு எதிராக எப்போது ஒலிக்கப்போகின்றன? குறைந்தபட்சம், கட்டணக் கொள்ளை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்து, அரசுப் பள்ளிகளிலும் அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே படிப்போம் என்ற முடிவுகூட ஒரு புரட்சிதான்.

மதுவிலக்கு

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளிச் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மதுப்பழக்கம் அதிகரித்து இருப்பதாக, பல்வேறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. `மூடு... டாஸ்மாக்கை மூடு...' என, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் கேட்ட கோஷங்களை, இன்று பலரும் மறந்துவிட்டனர். `படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்' என, தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்தார். `ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகள் மூடப்படும்' என்று முதல் கையெழுத்தையும் போட்டார். மதுக்கடைகளுக்கான நேரக் குறைப்பு செய்தும்கூட கள்ளத்தனமாக மது விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. 500 கடைகள் மூடுவதற்கு முன்னரும், நேரக் குறைப்பு செய்வதற்கு முன்னரும் சராசரியாக தினமும் 80 முதல் 90 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் விற்பனை இருந்தது. இப்போதும் அதே அளவுக்கு விற்பனை நடைபெற்றுவருகிறது. மது குடிப்பவர்களால் அவர்கள் சார்ந்த உறவுகள் தினந்தோறும் பொருளாதார இழப்பையும், உடல்நலக் கேடுகளையும் சந்தித்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் தீராத ஒரு சமூக நோயாக மதுப்பழக்கம் இருக்கிறது. மது விற்பனைக்குத் தடை கோரி, தீர்க்கமான ஒரு போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தால், மாநில அரசு பணிவதைத் தவிர வேறு வழி இல்லை.

மதவாதம்

தென் மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் மதவாதம் வெகு வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மதவாதம் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இப்போதுதான் வேர் ஊன்ற ஆரம்பித்துள்ளது. இப்போது கோயில் திருவிழா ஊர்வலங்களிலும் மதவாதத்தைப் புகுத்தி, கிராமங்கள் முதல் மெட்ரோ சிட்டி வரை அனைத்து மட்டங்களிலும் மக்கள் மனங்களைப் பிரித்து மதவாதிகள் கூறுபோடுகின்றனர். தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் மதசார்பின்மையை வலியுறுத்துபவர்கள் மீது மதவாதிகள் ஆபாச அர்ச்சனைகளைப் பொழிவதும் தொடர்கிறது; பல்வேறு தளங்களில் தாக்குவதும் நடக்கிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சில கொலைகளுக்கு மதச்சாயம் பூசுவதும், மதவாதத் தாக்குதலை மேற்கொள்வதும் அதிகரிக்கிறது. கோவையில் நடைபெற்ற மதவாத அமைப்பின் பிரமுகர் ஒருவரின் கொலையும், அதைத் தொடர்ந்த கலவரங்களுமே இதற்குச் சாட்சி. மதவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மதவாதத்தைப் புகுத்தும் சட்டங்கள், கல்விக் கொள்கை போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் எழுச்சியே இப்போதைய தேவை.

சாதிய வன்கொடுமைகள்

தமிழ்நாடு முழுக்க சாதிரீதியாக நடத்தப்படும் வன்கொடுமைகள், மிக அதிக அளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி 6-ம் தேதி சென்னை வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தலித்களுக்கு எதிராக 1,766 வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன'' எனக் கூறினார். தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல், பாலியல் வன்முறை அதிகமாக நடைபெறும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. குஜராத்தின் உனா மாவட்டத்தில் இறந்துபோன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, தலித் ஆண்கள் ஏழு பேரை, பசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோ வைரல் ஆனது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், ரோஹித் வெமுலா என்கிற தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த அளவுக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமலில் இருக்கத்தான் செய்கிறது. சட்டங்கள் இருந்தபோதும் அமல்படுத்தும் களத்தில் இருப்பவர்கள் அதற்கு எதிராக இருந்தால், கொடுமைகள் தொடரத்தானே செய்யும். தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகவும் இளைஞர்கள் எழுச்சி தேவை.

ஆணவக்கொலைகள்

தர்மபுரி இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர் உள்ளிட்ட வெளியே தெரிந்த ஆணவக்கொலைகள் தவிர, வெளியே தெரியாமல் செல்வாக்குமிக்கக் குடும்பங்களில் போலீஸ் துணையுடன் நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகள் ஏராளம். ஆணவக்கொலைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த விவாத்தின்போது இதற்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், `தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைகள் நடப்பது இல்லை. தனிநபர் குடும்பப் பிரச்னைதான் அந்தக் கொலைகளுக்குக் காரணம்' என்று கூறினார். மாநில அரசின் ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்போது, ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு அளித்த பதில், `தனிச்சட்டம் கொண்டுவருவது பற்றி மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது' எனக் கூறப்பட்டது. இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. `கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 279 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன' என, கடந்த டிசம்பர் மாதம் லோக் சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார். ஆணவக்கொலைகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர்கள் ஒன்றுசேர வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்கள், பல்வேறு தளங்களில் வன்முறைக்குப் பலியாகின்றனர். சுவாதி படுகொலை, சேலம் வினுப்பிரியா தற்கொலை, காரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீச்சு... என ஒருதலைக் காதல் விபரீதத்துக்குப் பலியானவர்கள் இவர்கள். அரசின் துறைகளில் அதிகாரிகளின் ஆதிக்கத்துக்குப் பலியானவர் டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா. குடும்ப வன்முறைகள் காரணமாக விவாகரத்து கேட்டு, திருமணம் ஆன பெண்கள் நீதிமன்றங்களை நாடுவது அதிகரித்துவருகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி `2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் 5,847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு மட்டும் 421 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்' என இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது. பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைவுதான். பதிவுசெய்யப்படாமல் தமிழ்நாட்டில் தினந்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க, இப்போது இருக்கும் சட்டங்களை வலுவாக்கவேண்டிய போராட்டங்களை நடத்துவது அவசியம்.

ஊழல்

`அரசாங்க சேவை முழுவதும், வெளிப்படைத் தன்மையோடு நடக்கிறது' எனச் சொல்லிக் கொண்டுதான் கோடிகளைப் பதுக்குகிறார்கள். மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே வலுவான சட்டங்கள் இயற்றுவதில் சுணக்கம் காட்டுகின்றனர். அப்படித்தான், ஊழல் ஒழியும் என்ற கோஷத்தில் முன்னெடுக்கப்பட்ட லோக்பால் மசோதா சிக்கித் தவிக்கிறது. இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றுவிட்டது. ஆனால், அதை அமல்படுத்தாமல், லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது மோடி அரசு. அதே போல மாநிலங்களில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு, நாகலாந்து மாநிலங்களில் மட்டும்தான் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், `விரைவில் லோக் ஆயுக்தா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உறுதி அளித்தது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில்கூட, `லோக் ஆயுக்தா உருவாக்கப்படும்' எனக் கூறியது. ஆனால், தேர்தல் முடிவடைந்து ஏழு மாதங்களுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா மசோதா கொண்டுவரப்படவில்லை. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளது. அந்தத் துறையின் கமிஷனராக இருப்பவர் தலைமைச் செயலாளர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவும் லஞ்ச ஒழிப்புத் துறை கமிஷனராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார் என்பதில் இருந்தே அந்தத் துறையின் லட்சணத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சூழலில்தான் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றவும் அமல்படுத்தவும் வேண்டும்.

H1B விசா கெடுபிடிகள் - என்ன ஆகும் அமெரிக்க கனவு? -

 #h1bvisa


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் "குடியேற்றத்தில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவேன்" என வாக்குறுதி அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் பதவியேற்றவுடன் எச்1பி விசாவில் சீர்திருத்தம் வரும் என்ற சூழலில் இந்திய கணினித்துறையே ஆட்டம் கண்டு போயிருக்கிறது. இதன் பின்புலம், H1B விசாவின் எதிர்காலம் ஆகியவற்றை இக்கட்டுரையில் ஆராயலாம்.



எச்1பி விசா என்பது 90களில் பில் கிளிண்டன் காலத்தில் அமெரிக்கத் தகவல்தொழில்நுட்பதுறைக்கு உலகளாவிய அளவில் தொழிலாளிகளைத் தேடித்தரும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுக்கு 85,000 எச்1பி விசாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆள் பற்றாக்குறை உள்ள அமெரிக்க கம்பனிகள் இந்தியா, சீனா மாதிரி நாடுகளில் ஆட்களை நேர்முகத்தேர்வு செய்து பணிக்குத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் அதன்பின் எச்1பி விசாவுக்கு அப்ளை செய்து விசா கிடைத்தபின் அமெரிக்கா வருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் 85,000 விசாக்களுக்கு சுமார் இரு மடங்காக விண்ணப்பங்கள் குவியும். சென்ற ஆண்டு 85,000 விசாக்களுக்கு 175,000 பேருக்கும் மேல் விண்ணப்பித்தார்கள். அந்தச் சூழலில் லாட்டரி முறைமூலம் அந்த 85,000 விசாக்களுக்கு உரியவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த எச்1பி விசா ஃபேஸ்புக், கூகிள் போன்ற அமெரிக்க கம்பெனிகளுக்கும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்திய கம்பெனிகளுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இக்கம்பெனிகளில் இந்தியாவில் இருந்து சென்ற பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றினார்கள். எச்1பி விசாக்களில் பெரும்பங்கு இந்தியருக்கே சென்றது. ஆனால் அதே சமயம் 2008ல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலை உருவானவுடன் வெள்ளைகாலர் வேலைகள் வெளிநாட்டவருக்குச் செல்வதைக் கண்டு அமெரிக்கரிடையே எதிர்ப்புணர்வு எழத் துவங்கியது.

எச்1பி விசா பெற குறைந்தபட்ச சம்பளம் 60,000 டாலர் ஆக இருந்தால் போதும் என்ற நிலையில் அதிக சம்பளம் கொடுத்து அமெரிக்கரைப் பணிக்கு அமர்த்துவதை விடக் குறைந்த சம்பளத்தில் பிறநாட்டவரைப் பணிக்கு எடுக்கலாம் எனப் பல நிறுவனங்கள் செயல்படத் துவங்கின. பெரிய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்ற ஆண்டு டிஸ்னி நிறுவனம் தன் அமெரிக்கத் தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்குவதாக நோட்டீஸ் கொடுத்து, அவர்களுக்குப் பதில் இந்தியர்களைப் பணிக்கு எடுத்தது. அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேலை நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொண்டது.

இதனால் மிகுந்த கோபமடைந்த அமெரிக்கத் தொழிலாளிகள் டிஸ்னி மேல் வழக்குத் தொடர்ந்ததுடன் டொனால்டு ட்ரம்புக்கும் இத்தகவலைத் தெரியப்படுத்தினர். ட்ரம்ப் அதன்பின் டிஸ்னியை மிகக் கடுமையாக சாடினார். எச்1பி விசாவில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளை நீக்கப்போவதாகக் கூறினார்.

அவர் தேர்தலில் வென்றதும் இப்போது கீழ்க்காணும் சீர்திருத்தங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1) லாட்டரி முறையை ஒழித்து அதிக சம்பளம் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு விசா கொடுப்பது. இதன்மூலம் அதிக சம்பளம் பெறும் நிர்வாகி அளவிலான, திறமையானவர்களுக்கு மட்டுமே விசா கிடைக்கும்.

2) எச்1பி விசா பெற குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 60,000 டாலர் ஆக இருப்பதை 1,30,000 டாலர் ஆக உயர்த்துவது

3) கூகிள், ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே எச்1பி விசாவைக் கொடுப்பது.

லாட்டரி முறையைப் பெரிதும் நம்பியிருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்திய கம்பெனிகளான டி.சி,எஸ், விப்ரோ போன்றவை கூகிள், ஃபேஸ்புக், ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு அதிக சம்பளம் தர முடியாது. 1,30,000 டாலர் எனும் வரைமுறை அமல்படுத்தப்பட்டால் இந்திய மென்பொருள் தொழிலாளிகளில் நூற்றுக்கு 99% பேருக்கு விசா கிடைப்பது நின்றுவிடும்.

இதனால் இந்திய மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சி காணப்படுகிறது. இந்தியத் தொழிலாளிகள் பலரும் அமெரிக்க கனவு பகல் கனவாகிவிடும் என்ற அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

அதுபோக ஏற்கெனவே எச்1பி விசா வாங்கி ஆண்டுக்கணக்கில் பணியாற்றி நிரந்தரப் பணியுரிமை வழங்கும் பச்சை அட்டைக்குக் காத்திருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் பலரும் தம் எச்1பி விசாவைப் புதுப்பிக்க நேர்கையில் அது தள்ளுபடி செய்யப்படுமோ என்ற கவலையில் மூழ்கியுள்ளனர். எச்1பி விசாவில் உள்ளே வந்தாலும் அதன் ஆயுள் 3 ஆண்டுகள்தான். அதன்பின் மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். எச்1பி விசாவில் கணவன் வந்தால் மனைவி எச்4 விசாவில் வரலாம். அப்படி வந்தால் எச்4 விசாவில் இருக்கையில் வேலைக்குப் போக முடியாது. படிக்கப் போனால் வெளிநாட்டு மாணவருக்கான அதிகபட்ச கட்டணத்தைச் செலுத்தவேண்டும். வீடு வாங்குவது, வரிகள் உள்ளிட்ட பலவற்றில் சிக்கல் உண்டு.

எனவே இந்தியர்களின் அமெரிக்கக் கனவு பகல் கனவாகிவிடும் சாத்தியங்கள் நிறைய.

- நியாண்டர் செல்வன்

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...