Friday, February 3, 2017

மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர், இதனை எதிர்த்து 2ஜி ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணையைத் தொடங்கின. ஊழல் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து சிபிஐ அமைப்பும் பண மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகளின் விசாரணையும் நடைபெற்றது.

இரு வழக்குகளிலும் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.

பலமுறை தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்ட நிலையில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தீர்ப்பு வழங்கி னார். அவர் கூறியபோது, “2 வழக்கு களிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர், இதேபோல வழக்கு களில் தொடர்புடைய நிறுவனங் களும் விடுவிக்கப்படுகின்றன’’ என்று தீர்ப்பளித்தார்.

அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அனந்த கிருஷ்ணன் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சன் குழும நிறுவனங்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன, மேலும் அமலாக்க இயக்குனரகம் முடக்கிய ரூ.742 கோடி சொத்துகளையும் விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில், சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை பிணைப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடவில்லை.

குற்ற நடைமுறை சட்டம் 437 ஏ பிரிவின் படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் 6 மாதகால பிணைப்பத்திரத்திற்கு மனு செய்திருக்க வேண்டும். இது விசாரணை நீதிமன்றத்தினால் வலியுறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரண்டாவதாக முடக்கப்பட்ட சொத்துகளையும் திருப்பி அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் தனது சட்ட எல்லையைத் தாண்டி உத்தரவிட்டுள்ளது என்றும் ஆனந்த் குரோவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான குழு குரோவரிடம் கேட்ட போது, “ஏன் தனிநபராக இதனை எதிர்த்து மனு செய்கிறீர்கள்?” என்றனர், அதற்கு குரோவர், ‘இது என்னுடைய கடமை’ பதிலளித்தார். 

அமலாக்கப்பிரிவும் மாறன்கள் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக தெரிகிறது

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...