Tuesday, February 7, 2017

Set up grievance redressal system in all varsities within four months

Observing that all colleges and universities in the country need to have a mechanism to redress grievances of students, the Delhi High Court on Friday directed the University Grants Commission (UGC) to set up such a system in all varsities within four months.
A bench of Chief Justice G Rohini and Justice Sangita Dhingra Sehgal said appointment of an ‘ombudsman’ in every university and a grievance redressal committee (GRC) for every college or group of colleges were “mandatory” and were provided for under the UGC (Grievance Redressal) Regulations of 2012.
The court said failure of the universities to appoint ombudsman or to constitute GRC for colleges “would defeat the very object of grievance redressal mechanism provided under the regulations.”
It also directed Delhi University (DU) to “take necessary steps forthwith and appoint the ombudsman” in terms of provisions of the regulations “as expeditiously as possible preferably within a period of four months from today.”
The court’s ruling came while disposing of a PIL filed by a former law student, who had alleged non-compliance of the UGC regulations with regard to appointment of ombudsman by universities, particularly DU.
As per the regulations, the ombudsman “shall be a part-time officer appointed for a period of three years or until he attains the age of 70 years, whichever is earlier”, the bench noted in its judgment.PTI

HC directs UGC to appoint ombudsman in all universities


The Delhi High Court on Friday directed the University Grants Commission (UGC) to ensure appointment of ombudsman, for redressal of grievances of students, in all the central and state universities within four months.
A division bench of Chief Justice G Rohini and Justice Sangita Dhingra Sehgal also directed Delhi University appoint the ombudsman in terms of provisions of the UGC (Grievance Redressal) Regulation.
"Delhi University shall take necessary steps forthwith and appoint the ombudsman in terms of provisions of the UGC (Grievance Redressal) Regulations, 2012 as expeditiously as possible preferably within a period of four months from today," said the court, in its order while disposing of a PIL filed by a former law student of DU, who had alleged non-compliance of the UGC regulations particularly in respect of the varsity.
The bench noted that UGC is empowered to take action against institutions which "willfully contravenes or repeatedly fail to comply with orders of the ombudsman..." and the universities' failure to appoint ombudsman or to constitute GRC for colleges would "defeat the very object of grievance redressal mechanism provided under the regulations".

குடும்ப அட்டையில் திருத்தப் பணிகள்: இணையத்தில் மேற்கொள்ளுமாறு திடீர் அறிவிப்பு!


குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கல் போன்ற பணிகள் அனைத்தும் ஆன்-லைன் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற சைதாப்பேட்டை மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகம் திடீரென வாய்மொழியாக அறித்துள்ளது. இதனால், நுகர்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைக்குப் பதிலாக பயோ-மெட்ரிக் அடிப்படையிலான அட்டையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அடங்கிய ஆதார் விவரங்கள், தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட தகவல்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 5,64,16,362 பேரின் ஆதார் பதிவுகளும், 1,69,20,195 குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண்களும் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம், பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திடீர் அறிவிப்பால் குழப்பம்: இந்த நிலையில், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆன்-லைனிலேயே
(https:tnpds.com) மேற்கொள்ள வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை மண்டல உணவுப் பொருள் வழங்கல் துறையினர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், சாதாரண மக்களும், இணையதளத்தை கையாளத் தெரியாதவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக நுகர்வோர் விண்ணப்பித்து வந்த நிலையில், அரசு உத்தரவு இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்தோர், தொழிலாளர்கள் இணையவசதி குறித்த விழிப்புணர்வோ- தகவலோ யாரிடம் விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களோ இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்:- கடந்த ஒரு வாரமாக பெயர் மாற்றம் செய்து தரக் கோரி வருகிறேன். ஆனால், ஆன்-லைனிலேயே மேற்கொள்ளும்படி கூறுகிறார்கள் என்றார்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, "ஆன்-லைன் முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்துகிறோம். தமிழக அரசு சுற்றறிக்கையோ அல்லது அரசு உத்தரவையோ தனியாக பிறப்பிக்கவில்லை என்றனர்.

ஜெயலலிதா உடலில் துளைகளா? டாக்டர் சுதா சேஷய்யன் பதில்

By DIN  |   Published on : 07th February 2017 05:15 AM

ஜெயலலிதாவின் உடலைப் பதப்படுத்தும்போது அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஜெயலலிதா உயிரிழந்த விவரத்தையும், அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் இருவரும் கூறினர். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன்.
மருத்துவமனையில்தான் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் திரவம் செலுத்தப்பட்டது. உடல் நிறத்தை அவ்வாறே தக்க வைக்கும் வகையில், திரவத்தின் கலவை அளவு மாற்றப்பட்டது.
காலில் குழாய் செருகி...: பதப்படுத்துவதற்கான திரவமானது ரத்தக் குழாய்களில் நிரப்பப்படும். ஜெயலலிதாவுக்கு வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது.
பதப்படுத்துவதற்கான செய்முறைக்கு முன்பாக உடலை ஆராய்ந்தேன். பொதுவாக, உடலில் திசுக்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அதன் வழியாக பதப்படுத்தும் திரவம் வெளியேறும். ஆனால் அவரின் உடலில் எவ்விதப் பிரச்னையும் இல்லாததால், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அவரது உதடுகளிலும், மூக்கில் மட்டுமே ஓரிரு துளிகள் வெளியேறின. நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. சமூக வலைதளங்களில் வெளியானது போன்று அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை.
உதடுகள் மட்டும்...: "டிரக்யாஸ்டமி' சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும். அவ்வாறே அவரது உதடுகள் தடித்து காணப்பட்டன.
முக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உடலும் இதே வகையில்தான் பதப்படுத்தப்பட்டது என்றார்.

செயற்கை நிறமூட்டிகள்... செழிக்கும் வணிகம்... தொலைந்துபோகும் ஆரோக்கியம்! நலம் நல்லது-66

 #DailyHealthDose


வண்ணக் கனவுகள் மட்டும் இருந்தால் போதாது; ஆரோக்கியத்துக்கு, உணவிலும் அவை இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில நிறங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், உணவில் செயற்கை நிறமூட்டும் வணிகம், ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டாலருக்கு உலக அளவில் நடக்கிறது. இந்த செயற்கை நிறமூட்டிகள் காரணமாக நிச்சயம் செயலிழக்கும் ஆரோக்கியம். இயற்கையாகவே வண்ணம் நிறைந்த காய், கனிகள் நம் உடலுக்கு உரமும் ஊட்டுபவை.



ஹோட்டலில் செக்கச்செவேலென பரிமாறப்படும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை சமையல் பாத்திரத்தைக் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம்விட்டுக் கழுவுவோம். அதற்குப் பிறகும் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட காய்ந்த மிளகாயில் இருந்தோ வந்தது கிடையாது. நம் கண்களைக் கவர அதில் தூவப்பட்டிருக்கும் `ரெட் டை 40’ (Red Dye 40) எனும் ஆசோ டையின் (Azo Dye) எச்சமாக இருக்கலாம்.



பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தான் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களில் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சு மிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பு நிறத்தில் இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை நம் ரத்தத்தை வற்றச் செய்யும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கின்றன இன்றைய ஆய்வுகள். பல நாடுகள் இந்த நிறமிகளைத் தடை செய்திருக்கின்றன. செயற்கையாக இல்லாமல், இப்படி எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப் பார்த்தால் ஆச்சர்யம்!

தாவரம், தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைத்திருக்கும் பொருள்தான் இந்தத் தாவர நிறமிகள். `பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளர்களால் அழைக்கப்படும் சத்துக்களில்தான் இந்த நிறமிகளைத் தரும் சத்துக்கள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. மனிதன் அதைச் சாப்பிடும்போது, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் பெரும் பங்கு செலுத்துபவை.



பாலிபீனால் எதில் கிடைக்கும்?

* பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் 100 - 150 மி.கி உள்ளது. கிரீன் டீயில் பாலிபீனால் சத்து இதைவிடக் கூடுதலாகக் கிடைக்கும்.

* 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ 200 - 300 மி.கி பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்னர், கொஞ்சம் இளம் காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் (Phenolic Acids) சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுக்காத இளம் கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், `வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்’ என சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.

* அதே நேரம், ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமிச் சத்துக்களோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. எனவே, மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவதே சிறந்தது.



* வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன் தரும் அதன் நிறமிச் சத்துக்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். `டெசர்ட்’ என்ற பெயரில் பழத்தைக் கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது தவறு.

* சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால், இந்த பாலிபீனால்களின் பயனை இழக்க நேரிடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, `ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா’ எனும் புளிச்ச கீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான மூலிகைகளிலும் உள்ள `குயிர்செட்டின்’ (Quercetin) எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆகச் சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேகவைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும்.



* பாலிபீனால்கள் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் (Lactobacillus) முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லது. இது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. எனவே, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், வெங்காயத் தயிர் பச்சடியாகவோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சிறந்தது.

* வெங்காய பக்கோடா சுவை தரலாம்; ஆனால், சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவையும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தைச் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.

இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருட்கள் ஏராளமாக இருக்கும்போது அவற்றைச் சாப்பிடுவதே ஆரோக்கியம். அதைவிட்டுவிட்டு செயற்கை நிறமூட்டிகள் பின்னே போவது நம் சுகமான வாழ்க்கையைப் பாழ்படுத்திவிடும். கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கெட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.

தொகுப்பு: பாலு சத்யா

வெற்றி மட்டுமல்ல.. இவைகளிலும் கவனம் இருக்கட்டும்!

 #TransformationTuesday


"வெற்றி"... இந்த நிமிஷம் உலகத்துல பெரும்பாலானவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தை. இந்த நிமிஷம் மட்டுமில்ல வாழ்க்கையோட அனைத்து நிமிடங்களையும் "வெற்றி" என்ற இலக்கை அடையறதுக்காகத்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெற்றிதான் வாழ்வின் ஒரே இலக்கா?, வெற்றி மட்டும்தான் நம் வாழ்க்கையா?. நம் வாழ்க்கையில நம்மை விட முக்கியமான விஷயம் எதுவுமில்லை. ஒரு சின்ன புன்னகையோடு இதைப் படிக்கத தொடங்குங்கள்...



உடல் ஆரோக்கியம்:

உங்க வாழ்க்கைக்கு நீங்கதான் ராஜா. உங்க திறமைய, தகுதிய வேறு யாரும் சொல்லித்தான் நீங்க உணர்ந்துக் கொள்ளணும் என்பதில்லை. ‘நாம ஃபிட்டா இல்லையோ?’ உங்களப் பற்றி நீங்களே தாழ்வா நினைச்சுக்குற உணர்வ முதல்ல விரட்டுங்க. உங்க உடம்பு மேல முதலில் நீங்கதான் அக்கறையா இருக்கணும். அதுக்காக அவசியமான டயட், அத்யாவசிய உடற்பயிற்சினு கொஞ்சம் மெனெக்கெடலாமே. உடல் ஆரோக்கியத்தோட நிறுத்திட்டு, மன ஆரோக்கியத்தை கைவிட்டுடக் கூடாது. இதையெல்லாம் பின்பற்றி உங்களது கனவுகளை நோக்கி ஆரோக்கியமாக பயணியுங்கள். ஏனெனில் உங்களது கனவுகளே அழகான உலகத்தை உங்களுக்கு அளிக்கும்.

உள்ளத்தில் புத்துணர்ச்சி:

நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது இயல்பிற்கேற்ப உங்களை நீங்களே புத்துணர்வு செய்து கொள்ளுங்கள். பாடல் கேட்பது மிகவும் பிடிக்குமெனில், உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேளுங்கள். இல்லை புத்தகப்பிரியர் எனில் அதில் மூழ்குங்கள். இயற்கையை விரும்புபவர் எனில் இயன்ற அளவு இயற்கையை ரசித்துக் கொண்டே நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

நல்லெண்ணங்கள்:

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்னு நாம பள்ளிக்காலத்தில் படித்திருப்போம். உங்களைச் சுற்றி நல்ல பழக்கங்கள் கொண்ட மனிதர்களை வைத்திருங்கள். நல்லெண்ணங்கள் நமக்கு தைரியத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். அது உங்களை உற்சாகமூட்டும். உங்களை சுற்றி நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி, நல்லதை அதிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் சமூகத்தின் மீதான அன்பும், அக்கறையும் ஊற்றெடுக்கும்.



சுயநம்பிக்கை :

மனதிற்குள்ளே ஒரு தோல்வியை எண்ணி நீங்களே உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள். எதிர்மறையாகவும், தரக்குறைவாகவும் உங்களை நீங்களே வரையறுக்காதீர்கள். தெரியாமல் நீங்கள் தவறு இழைக்கும்போது, உங்களை நீங்களே சிறிது கேலி செய்து கொள்ளுங்கள். அது தவறு மீதான குற்றவுணர்ச்சியை குறைக்கும். தன்னம்பிக்கையூட்டும் வாசகங்களை உங்கள் மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே இருங்கள். அவை உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும்.

எதிர்மறை எண்ணங்கள் :

உங்களது முயற்சிக்கு சுற்றியிருப்பவர்கள் பேசும் எதிர்மறையான எண்ணங்களை உங்கள் செவிக்குள் ஏற்றாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையையும் அழித்து விடும். எப்போதும் புன்னகைத்திருங்கள்.

மன்னிப்பு :

‘மன்னிக்குறவன் மனுஷன்... மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன்..." ,"விருமாண்டி" அன்னலட்சுமி சொன்ன இந்த புது மொழி, நிச்சயம் நல்வாழ்க்கைக்கான வழி. மன்னிக்கப் பழகுங்கள், மன்னிப்பு கேட்கவும் பழகிக் கொள்ளுங்கள். இதயம் கனமற்று நிம்மதியாக இருக்கும்.

சுயபரிசோதனை :

உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள். நாம் செய்கின்ற செயல் சரிதானா? இதனால் யாராவது பாதிக்கப்படுகிறார்களா? என அனைத்து கோணங்களையும் ஆராய முயலுங்கள். அப்போது தெளிவாக எந்த முடிவையும் உங்களால் சுயமாக எடுக்க முடியும். இந்த சுயபரிசோதனை பெரிய முடிவுகளுக்கு மட்டுமல்ல, வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பும்போது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டோமா என்பதிலும் இருக்கலாம்.



நானே எனக்கு தோழன் :

உங்களுடைய முதல் நெருங்கிய தோழராக நீங்களே இருங்கள். இது எவ்வித எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டதாக அமையும். எப்போதும் உங்களை பற்றி அதிகமாக தெரிந்தவர் நீங்களே என்பதே மறவாதீர்கள். எனவே உங்களிடமே உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெற்றிக் கணக்குகளை விட்டுத் தள்ளுங்கள். சிரிப்பை அதிகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி நிகழும் ஆச்சர்ய கணங்களைத் தவற விடாதீர்கள். உங்களை நீங்களே காதலிக்கத் தொடங்குங்கள். இதோ... அழகான நாளில் காலடி எடுத்து வைக்கிறீர்களே!!!

- வித்யா காயத்ரி. (மாணவப் பத்திரிகையாளர்

இந்தியாவில் 60 சதவிகித போலி வக்கீல்கள்!


சட்டக் கல்வியைக் கூட சரியாக முடிக்காத ஏராளமானோர் போலி பட்டங்களைப் பெற்று நாட்டில் பல நீதிமன்றங்களிலும் பணியாற்றி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும் கவலை தெரிவித்து இருந்தது.

இதனால் வக்கீல் சங்கமான இந்திய பார்கவுன்சில், போலி வழக்கறிஞர்களை கண்டறியும் செயலில் இறங்கியது. அதன்படி மாநில அளவில் 60 சதவிகித போலி வழக்கறிஞர்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 20 லட்சம் வழக்கறிஞர்களில், 12 லட்சம் பேர் போலியான நபர்கள் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில்தான் போலியான வழக்கறிஞர்கள் அதிகமாக செயல்படுவதாகவும், இவர்களால் ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எல்லா வழக்கறிஞர்களும் தங்கள் படிப்பு சான்றிதழ், பட்டம் பெற்ற சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தங்கள் மாவட்ட வக்கீல் சங்கத்தில் சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட சங்கத்தினர், தேசிய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைப்பார்கள். இதன் பின்னரே நாட்டிலுள்ள போலி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவரும்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...