Tuesday, February 7, 2017

இந்தியாவில் 60 சதவிகித போலி வக்கீல்கள்!


சட்டக் கல்வியைக் கூட சரியாக முடிக்காத ஏராளமானோர் போலி பட்டங்களைப் பெற்று நாட்டில் பல நீதிமன்றங்களிலும் பணியாற்றி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும் கவலை தெரிவித்து இருந்தது.

இதனால் வக்கீல் சங்கமான இந்திய பார்கவுன்சில், போலி வழக்கறிஞர்களை கண்டறியும் செயலில் இறங்கியது. அதன்படி மாநில அளவில் 60 சதவிகித போலி வழக்கறிஞர்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 20 லட்சம் வழக்கறிஞர்களில், 12 லட்சம் பேர் போலியான நபர்கள் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில்தான் போலியான வழக்கறிஞர்கள் அதிகமாக செயல்படுவதாகவும், இவர்களால் ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எல்லா வழக்கறிஞர்களும் தங்கள் படிப்பு சான்றிதழ், பட்டம் பெற்ற சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தங்கள் மாவட்ட வக்கீல் சங்கத்தில் சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட சங்கத்தினர், தேசிய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைப்பார்கள். இதன் பின்னரே நாட்டிலுள்ள போலி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவரும்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...