Thursday, February 9, 2017

சசிகலாவின் பதவி ஆசையால் அரசு பணிகள் எல்லாம் முடக்கம்

சசிகலாவின் பதவி ஆசையால், தமிழக அரசின் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. பட்ஜெட் தயாரிப்பு, வறட்சி நிவாரண பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரண்டு முறை முதல்வராக இருந்த அனுபவம் காரணமாக, மூன்றாவது முறை முதல்வராக பொறுப்பேற்றதும், பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படத் துவங்கினார்.

முதல்வராக முடியாது : தினமும் காலை, தலைமைச் செயலகம் வந்து, கோப்புகளை பார்த்தார். தன்னை சந்திக்க விரும்புவோரை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டார்; இரவு வரை பணி செய்தார். விடுமுறை நாளிலும் பணி செய்தார். இதே நிலை நீடித்தால், தன்னால் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்த சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வத்திடம், பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினார். 5ம் தேதி, அவரை போயஸ் தோட்டத்துக்கு அழைத்து, பதவியை ராஜினாமா செய்ய வைத்தார். பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சசிகலாவை, சட்டசபை கட்சி தலைவராக, தேர்வு செய்தனர். 

தற்போது, அவர் மீதுள்ள வழக்கு காரணமாகவும், பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு காரணமாகவும், அவர் முதல்வராக பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த, முதல்வர் பன்னீர்செல்வத்தை, தன் சுயநலத்திற்காக, திடீரென ராஜினாமா செய்ய வைத்ததால், அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. 

அதிகாரிகள் அமைதி : பதவியை துறந்த பன்னீர்செல்வம், தலைமைச் செயலகம் வருவதில்லை; அமைச்சர்களும் வரவில்லை. எனவே, கோப்புகள் தேக்கமடைந்துள்ளன. மேலும், சசிகலா தலைமையிலான புதிய அமைச்சரவையில், யாருக்கு எந்த துறை வழங்கப்படும் என்பது தெரியாததால், அதிகாரிகள் அமைதியாகி விட்டனர். மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில், தமிழக பட்ஜெட் தயாரிக்க வேண்டும். ஆனால், அரசு நிர்வாகம் முடங்கியதால், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகம், வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டாலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே, தடுப்பணைகளை கட்டி வருகிறது. அதை தடுக்க, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட, அரசு கட்டடங்கள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளன. அடுத்த முதல்வர் எப்போது பதவியேற்பார்; அரசு எப்போது செயல்படத் துவங்கும் என்பது தெரியாமல், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வா வா முருகா! வடிவேல் அழகா!

தைப்பூச நன்னாளான இன்று முருகனை தியானித்து இந்த வழிபாட்டை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* குன்று தோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே!பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சந்நிதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.

* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.

* வேதம் போற்றும் வித்தகனே! குகப் பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள்
உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.

ஆறுமுகனின் அடியவர்கள்

ஆறுமுகப்பெருமானாகிய முருகனருள் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர் என்று எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருளையும், முருகப்பெருமானின் திருவருளையும் தந்தருள்கின்றனர்.

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ்நாடான இப்பகுதியை அகத்தியமுனிவரே முருகப்பெருமானிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர்.
முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்தபோது, முருகனே காப்பாற்றி அருள்செய்தார். முருகனின் ஆறுபடைவீடு
களையும் சிறப்பித்துப் போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான் இவரிடம், “பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்துார் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.

தேவராய சுவாமிகள்: பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நுாலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நுால் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுால், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.

ராமலிங்க வள்ளலார்: 'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றிய அருளாளர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்: யாழ்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமர
குருதாச சுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகில் உள்ள
பாம்பனில் வாழ்ந்ததால், 'பாம்பன் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களை முருகனருளால் செய்த இவர், அண்மைக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நுாலாகத்திகழ்கிறது. தமிழ் உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாககக் கொண்டு அமைந்த நுால் இது. பஞ்சா
மிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தவர் இவர்.

சிவசக்தி பாலன்

முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தை ஒருவரால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வித்தியாசமான வரத்தை பெற்றிருந்தான். அவன், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார்.

பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை 'சிவசக்திபாலன்' என்றும் அழைப்பார்.

கதிர்காமம் கதிரேசன்

முருகனின் திருத்தலங்களில் கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான் 'கதிரேசன்' என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறான். இத்தலம் இலங்கையில், கொழும்பிலிருந்து 230 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. சந்நிதியின் திருக்கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் தரையில் மயில் மீது இருதேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சந்நிதி திறந்து வைக்கப்படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிமாத உற்சவம் மிகவும் பிரபல
மானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும்.
நாள்தோறும் யானைமீது ஊர்வலமாக ஒருபெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த பெட்டிக்குள் முருகனுக்குரிய யந்திரம் இருக்கிறது. இக்கோயிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர் கள் வழிபடுகிறார்கள். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.

முருகனுக்கு முக்கியத்துவம்

தாய், தந்தையரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்ததால் தன் தந்தை சிவனிடம்,
மாங்கனியை (புராணங்களில் மாதுளை என்றும் சொல்லப்பட்டுள்ளது) பெற்றார் விநாயகர்.
தனக்கு கனி கிடைக்காததால் கோபம் கொண்டு பெற்றோரை பிரிந்தார் முருகன். முருகனுக்கென தனி வழிபாடும், முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் இருந்து அவரைப் பிரித்து இந்த விளையாடல்களை நிகழ்த்தினார். சிவன். சிவனின் நெற்றிகண்ணில் இருந்து தோன்றிய முருகனுக்கு, பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியும் போது, அவரைப் படைத்த சிவனுக்கு மந்திரம் தெரியாமல் இருக்க முடியுமா?. மக்கள் அவரை வணங்கி, அவரோடு ஐக்கியமாவதற்காக தானே முன்னோடியாக இருந்து அவரிடம் பிரணவ மந்திரத்தை
கற்றவர் போல் நடித்தார் சிவன்.


ஓம் முருகா

ஒரு முறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து செருக்குடன் வணங்க மறுத்தார்.
ஆணவத்துடன் சென்ற பிரம்மனை அழைத்து 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் கேட்டார் முருகப்பெருமான். பிரம்மன் விளக்கம் தெரியாது விழித்தார். அவரை தலையில் குட்டி சிறையிலடைத்தார் முருகன். படைக்கும் தொழிலையும் தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். பிரம்மனை விடுவித்து அருளும்படி திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் பிரித்து உணர்கின்றவர்கள் இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே முருகன் பிரம்மனைச் சிறையிலடைத்தான்.

தன்னை வணங்கவில்லை என்பதற்காக அல்ல' என்றார் சிவபெருமான். முருகனிடம் பிரம்மனை விடுவித்த சிவபெருமான், 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும் தன் மழலை முருகனிடமே உபதேசம் பெற்றார்.

குழந்தைகள் சொல்வது நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும் எனக்கத் தெரியாத விஷயமாடா? என்று அவர்களைத் தடுத்து நிறுத்தாமல், பொறுமையுடன் கேட்டால், அவர்களின் கல்வி ஞானம் பெருகும் என்பதை எடுத்துக்காட்டவும் இவ்வாறு சிவன் விளையாடல் செய்ததாகவும் சொல்வதுண்டு. சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்தால் 'சுவாமிநாதன்' என்று பெயர் பெற்றார் முருகன்.

Governor should swear in Sasikala as Tamil Nadu chief minister, Subramanian Swamy says

CHENNAI: BJP Rajya Sabha member Subramanian Swamyon Wednesday said it is the duty of Tamil Nadu Governor Ch Vidyasagar Rao to swear in AIADMK general secretary VK Sasikala as chief minister as she had the support of MLAs.

Swamy was speaking to a news channel on the latest developments in Tamil Nadu where caretaker chief minister O Panneerselvam has come out in open rebellion against Sasikala.

"Governor cannot sit in Maharashtra when such a political crisis is happening in Tamil Nadu," Swamy told CNN-News18 in an interview.

Swamy also said Sasikala was close to Jayalalithaa and the latter had taken many decisions to please Sasikala.

"In the many years I've known Jayalalithaa as friend and enemy, I know that she thought of OPS as a rubber stamp," he said.

Former chief secretary K Gnanadesikan reinstated

CHENNAI: Perhaps the last file that caretaker chief minister O Panneerselvam cleared before his outburst against AIADMKgeneral secretary V K Sasikala on Tuesday night was for revoking the suspension of former chief secretary K Gnanadesikan.

The senior bureaucrat, along with geology and mines commissioner Atul Anand and six government officials in mining department and pollution control board, were suspended in August last year, on charges of alleged links in "beach sand mining" in the state. "Gnanadesikan has been appointed as director of Anna Institute of Management Studies, Greenways Road," said a government source. The officer could not be reached for comment.

The suspension of Gnanadesikan triggered widespread condemnation from the bureaucrats, who even sought an appointment with former chief minister Jayalalithaa then. Tamil Nadu IAS Officers' Association convened an extraordinary meeting a few days later to express their displeasure over the action against the senior officer. Some 20 IAS officials met the then chief secretary P Rama Mohana Rao and adviser Sheela Balakrishnan and requested them to revoke the suspension. The suspension was, however, extended up to February.

How O Panneerselvam became a hero overnight

CHENNAI: In less than a day, O Panneerselvam has gone from being a compliant deputy to a man who's seized the moment. There may still be questions about who is pulling the strings this time, but there's no doubt that the caretaker chief minister has emerged from the shadows and become a hero of sorts.

On Tuesday night, an hour after his outburst, around 300 people gathered at his residence on Greenways Road. They rallied behind Panneerselvam as they felt he was 'Amma's' rightful heir. All of them found a voice in Panneerselvam - of dissent and hope.

"I saw OPS speak on television and came here to see him," said S Maheshwari. Policemen, who tried to contain the crowd, gave in and let them inside the bungalow. As the crowd in front of Panneerselvam's bungalow swelled, he stepped out at intervals to greet them. It seemed to work: "Dei, I am at the chief minister's house. He is right next to me!" a boy shouted on his mobile.

Panneerselvam started trending as a hero on social media. While on the ground the public seemed to back him, up the echelons he garnered support that cut across party lines. DMK legislator from Chepauk-Triplicane J Anbazhagan tweeted in favour of the chief minister, congratulating him for his bold speech, while joint secretary of the AIADMK I-T wing Hari Prabhakaran tweeted in support of him.

Political observer Sathyamurthy said the sentiment in favour of Panneerselvam wasn't unexpected. "Stories around Sasikala are negative, while the little about Panneerselvam has been positive," he said.

Then, there were those who didn't know which side to choose. They poured into the MGR memorial. Emotions ran high as people, including AIADMK party workers, prostrated and stood with their hands folded and heads bowed. Several cried out asking why Jayalalithaa had left them "orphaned", why she hadn't chosen a political heir and how her two aides were "tarnishing her legacy".

"Tell us what to do?" asked a woman, clutching a handful of flowers. "It is over. The state is doomed," said a man next to her.

Wednesday, February 8, 2017

NEW INDIAN EXPRESS

clip
அதிமுகவிலிருந்து இன்று நீக்கப்படுகிறார் ஓ.பன்னீர் செல்வம்!

சென்னை: அதிமுகவிலிருந்து இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி அதிமுக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இன்று கார்டனையே அசைத்துப் பார்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் இப்படி மாறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் மிரண்டு போயுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவே ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து விட்டார் சசிகலா. ஆனால் அது எனக்கு ஜெயலலிதா கொடுத்த பதவி. அதைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக தீர்மானம் போடப்படும் என்றும், அவரை கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தி தீர்மானம் போடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஓ.பி.எஸ். கட்சியை விட்டு நீக்கப்பட்டால் அதிமுக முறைப்படி உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாக பல முக்கிய நிர்வாகிகள் திரண்டு வருகின்றனர். கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டால் மேலும் பலர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர் என்பது முக்கியமானது.
source: oneindia.com

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...