Friday, March 3, 2017

கும்பகோணம் மாசி மக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தஞ்சாவூர்: - கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று, மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகா மக விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, 2016ல் மகா மகம் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று மகா மகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் நேற்று விழா துவங்கியது. முதலாவதாக ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலில் கொடியேற்றப்பட்டது.
வைணவத் தலங்கள் : வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், இன்று காலை, 9:30 மணிக்கு, 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.உயரமான புதிய கொடி மரம்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு, 70 அடி உயரத்திற்கு, புதிய கொடி மரம், மலேஷியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் கொடி மரம், 100 ஆண்டுகள் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அங்கு புதிய கொடி மரம் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

உபயதாரர் மூலம், இக்கோவிலுக்கு மலேசியாவிலிருந்து வேங்கை மரம், துாத்துக்குடிக்கு கப்பல் மூலம் எடுத்து வரப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த வேங்கை மரம், 70 அடி நீளம், 2 அடி அகலம் உடையது. சித்திரை திருவிழாவிற்குள் புதிய கொடி மரத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவிலுக்கு வந்த கொடி மரத்திற்கு, பட்டாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
ரயில் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

புதுடில்லி: இடைத்தரகர்களை ஒழிக்கும் வகையிலும், ஒருவர் பெயரில் வேறொருவர் பயணம் செய்வதை தடுக்கும் வகையிலும், 'ஆன்லைன்' முன்பதிவுக்கு, ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.வரும், 2017 - 18 நிதியாண்டுக்கான, ரயில்வேயின் திட்டங்களை, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு, நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:வரும், ஏப்., 1 முதல், மூத்த குடிமக்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், இடைத்தரகர்கள் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தடுக்கவும், போலியான பெயர்களில் முன்பதிவு செய்வதை தடுக்கவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி, ரயில்வேயின் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு, ஆதாரை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 6,000, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் கருவிகள் வழங்கப்படும். இதைத் தவிர, ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்படும். ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்காகவும், மற்ற சேவைகளை பெறுவதற்காகவும், வரும் மே மாதத்தில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்படும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிலைபோல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார்ச் 02, 11:51 AM

விழுப்புரம், 

சிரிப்பு இல்லை, கை குலுக்கவில்லை சிலைபோல் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர், விழுப் புரம் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது மற்ற அரசியல் தலைவர்கள் போல் அல்லாமல் வித்தியாச மான முறையில் நடந்து கொண்டார்.

பிறந்த நாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிக்களில் தொண்டர்கள் வரிசையில் நின்று வாழ்த்து சொல்வது, தலைவர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் விஜயகாந்த் நிகழ்ச்சி மேடையில் அமர்ந்து தொண்டர்களின் குடும் பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது ருசிகரமான வகையில் இருந்தது.

நிகழ்ச்சி மேடையில் விஜயகாந்த் நாற்காலி போட்டு சிலை போல் அமர்ந்து கையை கட்டியவாறு இருந்தார். அவருக்கு இருபுறமும் இரு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. அதில் தே.மு.தி.க. தொண்டர்கள் குடும்பத்துடன் வந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

விஜயகாந்த்துடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொண்டர்கள் குடும்பத்துடன் நின்று இருந்தனர். ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வேக வேகமாக வரவழைக்கப்பட்டு இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். 5 வினாடிகள் மட்டுமே விஜயகாந்த் அருகில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். வந்த வேகத்தில் வேக வேகமாக மேடையில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.

தன்னுடன் போட்டோ எடுக்க வந்தவர்களை விஜயகாந்த் கவனிக்காமல் அமர்ந்து இருந்தார். அவர்களைப் பார்க்கவோ, புன் சிரிப்போ இல்லாமல் சிலை போல் அமர்ந்து இருந்தது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி தே.மு.தி.க. தொண்டர் ஒருவர் கூறும் போது, ‘‘நான் விஜயகாந்துடன் போட்டோ எடுப்பதற்காக மனைவி குழந்தைகளை அழைத்து வந்தேன். எல்லோரும் வரிசையில் நின்று இருந்தோம். எனது முறைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. எங்களை மேடையில் ஏற்றி நாற்காலியில் விஜயகாந்த் அருகில் உட்கார வைத்தார்கள். 2 வினாடிகளில் இழுத்து கீழே இறக்கி விட்டனர். விஜயகாந்த் யாரையும் பார்க்காமல் அமர்ந்து இருந்தார். ஒரு புன் சிரிப்பு கூட இல்லை, அவருடன் பேச முடியவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது’’ என்றார்.

ஆனால் இது அங்கு வேடிக்கை பார்க்க வந்த தொண்டர்களுக்கு ருசிகர காட்சியாக இருந்தது. இது பற்றி விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி மிகப்பிரபலம் ஆகிவிட்டது. இது மிகப்பெரிய வெற்றி’’ விஜயகாந்த்துடன் போட்டோ எடுத்து திரும்பிய குடும்பத்தினர் மிகவும் திருப்தியாக இருக்கிறார்கள்’’ என்றார்.

சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் தொண்டர் ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் அறைவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
‘‘ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்’’, என்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

மார்ச் 03, 05:53 AM


‘‘ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்’’; முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்


சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் அணியின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் சென்னை அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தள்ளிவிடப்பட்டார்

‘ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி வீட்டிலேயே கீழே தள்ளிவிடப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்’, என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியின் ‘டிஸ்சார்ஜ்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை நான் சொல்லவில்லை. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியை ‘1066’ என்ற எண்ணில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவர் தொடர்புகொண்டு ‘ஆம்புலன்சு அனுப்புங்கள்’ என்று கேட்டு இருக்கிறார்.

கண்காணிப்பு கேமராக்கள் அகற்றம்

இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும். போயஸ் கார்டனிலேயே கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அங்கே இருந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வரையிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வெளியிடவேண்டும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டால்தான் ஜெயலலிதா எப்படி கொண்டு செல்லப்பட்டார்?, எந்த வேனில் அவர் சென்றார்? என்ற முழுமையான உண்மைகளை தெரிந்துகொள்ளமுடியும்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த 27 கண்காணிப்பு கேமராக்கள் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு அகற்றப்படுகிறது. இந்த கேமராக்களை அகற்றுவதற்கு உத்தரவு போட சொன்ன அதிகாரி யார்? யார் இந்த உத்தரவு போட்டது? என்பதையும் தெரிவிக்கவேண்டும்.

இயற்கையாக உயிரை நிறுத்த...

2016–ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் பிரபல டாக்டர் சாந்தாராம். அவர், துணை வேந்தராக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு கருத்தை சொன்னார். அப்போது, ‘‘நீங்கள் போயஸ் கார்டனில் பெறுகின்ற சிகிச்சைகள் ஒரு ‘ஸ்ட்ரோக்’ (பக்கவாதத்தை) உங்களுக்கு வரவழைக்கும்’’, என்று கூறினார்.

ஆனால் மறுநாளில் இருந்து அந்த டாக்டரை போயஸ் கார்டனில் நுழைய விடவில்லை. அவரை வெளியேற்றிவிட்டனர். இதற்கும் பதில் வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் போடப்பட்ட வழக்கில் அப்பல்லோ ஆஸ்பத்திரி ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறது. அதில், ‘கடந்த 5–ந்தேதி ஜெயலலிதாவுக்கு இயற்கையாக உயிரை நிறுத்துவதற்கு மருத்துவ முடிவு எடுக்கப்பட்டது’, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கியது யார்? இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார்? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

சிங்கப்பூர் ஆஸ்பத்திரிக்கு செல்லாதது ஏன்?

2015–ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மத்திய அரசு ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்புகிறது. அதில், ‘ஜெயலலிதாவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செயின்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் பாரா ஆம்புலன்சு ஹெலிகாப்டர் வந்து இறங்கியிருக்கிறது’, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா சிங்கப்பூர் செயின்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படவில்லை. இதை தடுத்தது யார்? இந்த முடிவை எடுத்தது யார்? எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவ அறிக்கை மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் எய்ம்ஸ் அறிக்கை இதுவரை வரவில்லை.

குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்

ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, இசட் பிரிவு பாதுகாப்பு படையினரை ஆஸ்பத்திரிக்கு உள்ளே வரவிடாமல் யார் தடுத்தது என்பது தெரியவேண்டும்.

நாங்கள் கூறுவது வதந்திகளோ, சந்தேகங்களோ இல்லை. உண்மை. ஜெயலலிதா மரண விவகாரத்தில் நாங்கள் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். இதைத்தவிர வேறு எதையும் இப்போது சொல்லமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி கொடுத்தது யார்?

முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது, பல விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த எல்லா சிகிச்சைகளையும் மேற்கொள்ள அனுமதியை கொடுத்தது யார்?

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார்’ என்றெல்லாம் கூறினார்கள். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதா அதுவும் முதல்–அமைச்சராக இருக்கக்கூடிய சூழ்நிலையில், அவருக்கு கொடுக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் ‘பாரன்சிக் லேப்’புக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்து, அதற்கு பின்பு தான் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்.

கன்னத்தில் 4 ஓட்டைகள்

ஜெயலலிதாவின் கன்னத்தில் 4 ஓட்டைகள் இருந்தன. அந்த ஓட்டைகளுக்கு ஆஸ்பத்திரி கொடுத்த விளக்கம், ‘பிளாஸ்டர்’ ஒட்டப்பட்டதால் அதன் காரணமாக ‘ஸ்கின் பீலிங்’ ஏற்பட்டிருக்கிறது, என்பது ஆகும்.

ஆனால் ‘எம்பாமிங்’ செய்த டாக்டரோ அதை நான் பார்க்கவே இல்லையே என்று கூறியிருக்கிறார். அந்தவகையில் ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த 4 ஓட்டைகளுக்கு காரணம் என்ன? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? என்பதை யாரும் வெளிக்கொண்டு வரவில்லை.

என்னென்ன கையெழுத்துகள் வாங்கப்பட்டன?

கடந்த ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்திருக்கிறார். அதன் பிறகு இரவு 9.30 மணியில் இருந்து மறுநாள் இரவு 9.30 மணி வரை அவருக்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த பதிலும் இல்லை. அதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அதற்குரிய படிவம்–ஏ மற்றும் படிவம்–பி ஆகிய அங்கீகார சான்றிதழ்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த டாக்டர் பாலாஜி என்பவர் விசாரிக்கப்பட வேண்டும். அப்படி அவர் விசாரிக்கப்பட்டால் தான் மேற்கொண்டு என்னென்ன கையெழுத்துகள் அங்கு வாங்கப்பட்டது? என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

மர்ம முடிச்சுகள்

‘பிசியோதெரபிஸ்ட்’ என்பதை பொறுத்தவரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி உலக தரமான ஆஸ்பத்திரி ஆகும். அப்படி இருக்கும் போது எதற்காக சிங்கப்பூரில் இருந்து ‘பிசியோதெரபிஸ்ட்’ வரவழைக்கப்பட வேண்டும்? அதற்கு அனுமதி அளித்தது யார்? எதற்காக இவையெல்லாம் நடந்தது? போன்ற சந்தேகங்கள் உள்ளன. இந்த மர்ம முடிச்சுகளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 03, 02:00 AM
மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இல்லை


தமிழ்நாட்டில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியுள்ளது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். மருத்துவக் கல்லூரிகளில் சேரவிரும்பும் மாணவர்கள் இப்போது ‘நீட்’ நுழைவுத்தேர்வு சர்ச்சையால் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். தனியார் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டு முதலே ‘தேசிய அளவிலான தகுதிகாண் நுழைவுத்தேர்வு’ என்று கூறப்படும் ‘நீட்’ மூலமே நடக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த ஆண்டும் தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக கவர்னரின் கையெழுத்தைப் பெற்று, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால், ஜனாதிபதி ஒப்புதல் கொடுப்பார் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல், முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அப்படியே கொடுத்தாலும், உச்சநீதிமன்றம் அதற்கு என்ன சொல்லப்போகிறது? என்பதும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தநிலையில், ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பும் கடைசிநாள் கடந்த 1–ந்தேதியோடு முடிவடைந்து விட்டது. ஒரு வேளை ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்தத்தேர்வில் கலந்துகொள்ள முடியுமே தவிர, மற்றவர்களால் நிச்சயமாக முடியாது. தமிழ்நாட்டிலுள்ள கல்வித்தரத்தில் விண்ணப்பித்த எல்லோருமே ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ‘நீட்’ தேர்வில் கலந்து கொண்டவர்கள் 41.9 சதவீதம் பேர்தான் தேர்வு ஆகியிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. எனும் மத்திய கல்வித்திட்டத்திலுள்ள 11–வது, 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில்தான் கேள்விகளை கொண்டதாக இருக்கும்.

தமிழக அரசின் மாநில கல்வித் திட்ட மாணவர்களின் கல்வித்தரம் அந்தளவுக்கு நிச்சயமாக இருக்காது. அப்படியென்றால், தமிழக மாணவர்களுக்கு கண்டிப்பாக சிறப்பு பயிற்சி வேண்டும். பள்ளிக்கல்வி அமைச்சராக மாபா.பாண்டியராஜன் இருந்தபோது இணையதளம் மூலம் சிறப்புபயிற்சி நடத்தப்படும் என்று சொல்லியிருந்தார். ஆனால், அப்படி எந்தவகுப்பும் நடத்தப்படவில்லை என்று அதிகாரிகள் இப்போது கூறுகிறார்கள். ஆக, ‘நீட்’ தேர்வுபற்றி எந்தவிதமான ஏற்பாடும் இல்லாதநிலையில், மாணவர்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது, இப்போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் செங்கோட்டையனிடம், ‘நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்கும் என்று பரவலாக பேசப்படுகிறதே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘மாணவர்கள் எல்லோருமே இதற்கு தயார்நிலையில்தான் இருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வு தொடர்பாக எந்த முடிவு வந்தாலும் அதற்காக தங்களை தயார் படுத்தியுள்ளனர்’ என்று கூறியிருக்கிறார். இது, மாணவர்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் பயின்ற எந்தமாணவர்களும் இப்போது ‘நீட்’ தேர்வுக்கு தயாராக அதற்குரிய தரத்துடன் இல்லை. இதற்காக தனியார் நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கட்டணம் செலுத்தி படிக்கும்நிலையிலும் மாணவர்கள் இல்லை. எனவே, அரசு இப்போது செய்ய வேண்டியது மத்திய அரசாங்கம் ஒப்புதல் தருமா?, தராதா? என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சந்தேகமிருந்தால், பிளஸ்–2 தேர்வு முடிந்தவுடன் அந்தந்த பள்ளிக்கூடங்களிலிருந்து ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் செலுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும். ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியையும் தமிழக மாணவர்களுக்கு நீட்டிப்புச் செய்ய கோரிக்கை விடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வு நடந்து, அதில் கலந்து கொள்ள தகுதியில்லாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல.

Thursday, March 2, 2017


பலே பலன்கள்... இல்லை பக்க விளைவுகள்.. வீட்டிலேயே வளர்க்கலாம் கொசு விரட்டும் செடிகள்..!vikatan.com

நம் அன்றாடங்களைத் தொல்லையில்லாமல் கழிக்க மிக அவசியமானது நல்ல தூக்கம். அந்த நல்ல தூக்கத்துக்கு இன்றைய காலகட்டத்தில் எது அவசியமோ இல்லையோ, நல்ல வேப்பரைசர் (Vaporizer - கொசுவிரட்டி) அவசியமாகிவிட்டது. தினம் தினம் மாறுகிற சூழலுக்கு நாம் பழகிவிட்டதைப்போல், நம்மைக் கடித்து உயிர்வாழ்கிற கொசுவும் பழகிவிடுகிறது. விளைவு, விதவிதமாக, கலர்க் கலராக சாயம் பூசப்பட்ட ரசாயனங்களின் அணிவகுப்பு! நம்மை திருப்திப்படுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கும் பலவிதமான கொசுவிரட்டிகள்... ஆனால், எதிலும் பலனில்லை என சலித்துக்கொள்பவர்கள்தான் இங்கே ஏராளம்! இவற்றை விரட்டும் குட்டிக் குட்டிச் செடி வகைகள் உண்டு. அவற்றை எளிதாக நம் வீட்டு குறைந்த இடத்தில், பால்கனியிலேயே வளர்க்கலாம். பக்க விளைவுகள் இல்லை... பலன்கள் ஏராளம்... வீட்டிலேயே வளர்க்கக்கூடிய கொசுவிரட்டும் செடிகள் இங்கே...



காட்டுத்துளசி

நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசு அண்டவே அண்டாது.



ஓமம் (Basil)

ஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டி நமக்கு நல்ல தூக்கத்தைத் தரும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும். கொசு அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே வரவே வராது.

புதினா

பெயரைக் கேட்டதுமே புத்துணர்ச்சிதான், எல்லோருக்கும் பிடித்த பிரியாணியின் பெயரை ஞாபகப்படுத்துவது தவிர்க்க முடியாதது. அதேபோல்தான் இதன் வாசனையால் அவை நம் அருகே வராமல் இருப்பதும் தவிர்க்க முடியாதது. சின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். கொசுக்கள் உள்ளே வராது.



மாரிகோல்டு

கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது. `என் தங்கம்’ என்று இந்தச் செடியை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம்.

லாவெண்டர் (Lavender)

பெயரைக் கேட்டதுமே மனதில் ஒட்டிக்கொள்வது இதன் நிறம் மட்டுமல்ல... லாவெண்டரின் மணமும்தான். லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.

சிட்ரோசம்

ஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது. இந்த சிட்ரோசம் வணீகரீதியாகவும் பயன்படுகிறது.



கற்பூரவல்லி

சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது. நிறைய இடமோ, பொருள் செலவோ பிடிக்காத இந்த செடியின் வாசமும், இலைச் சாறும் கொசுவுக்குப் பிடிக்காது. 10 அடி தூரம் தாண்டியும் இந்தச் செடியின் மணம் மணக்கக்கூடியது.

ரோஸ்மேரி

அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், தெய்விக உணர்வைத் தருகிற ஒன்று. அதோடு, நம்மிடம் இருந்து கொசுவைத் தள்ளியே வைத்திருக்கும்; குழந்தைகளுக்கு கொசுக்கள் தாக்காமல் நல்ல பாதுகாப்பு அரணாகவும் செயல்படும்.

செவ்வந்தி

சிறந்த பூச்சிவிரட்டியாக இருக்கும். பயிர்கள் போன்றவை தாக்காமல் இருக்க, செவ்வந்தி ஓரங்களில் நட்டு வைத்தால் பூச்சிகள் இந்த செடியை தாக்கும். பயிர்கள் பாதுகாக்கப்படும்.செவ்வந்தி, மற்றச் செடிகளுக்குப் பாதுகாவலனாக இருக்கும்; கொசுக்களையும் விரட்டும்.



வீனஸ் ஃப்லைட்ராப் (Venus Flytrap)

இது, பூச்சிகளை உண்ணும் தாவரம்; கொசுக்களையும் உண்டு செரிக்கும். ஆனால், குழந்தைகள் இருக்கிற வீட்டில் இந்தச் செடியை வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.

வீட்டில் இருக்கிற கொஞ்சமே கொஞ்ச இடத்திலும் இந்தச் செடிகளை வளர்த்து கொசுவை விரட்ட முடியும் என்கிறபோது அதையும் செய்து பார்ப்பதில் தவறில்லை. இயற்கையை நோக்கி நம் பார்வை திரும்பி இருக்கும் இந்த நேரத்தில், செடி வளர்ப்பும் பயனுள்ளதே. டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பயமுறுத்தும் நோய்கள் பல இவற்றில் இருந்து பரவுகிறவைதான். நினைவில் இருக்கட்டும்!

- கோ.ப.இலக்கியா (மாணவப் பத்திரிகையாளர்)

கோடை வெப்பம் கடுமையாக இருக்கும்: பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு

ச.கார்த்திகேயன்

வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

வரும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந் திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ள தாக வருவாய் நிர்வாக ஆணை யர் கொ.சத்யகோபால் தெரி வித்துள்ளார்.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “தமிழகத்தை பொறுத்தவரை, வரும் கோடை யில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும். உள் மாவட்டங்களான திருச்சி, தருமபுரி, வேலூர் போன்ற இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது” என்றார்.

இதுதொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபாலிடம் கேட்ட போது, “அந்தந்த மாவட்டங்களில், நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப, மக்கள் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த இரு ஆண்டுகளாக கோடை காலத்தில், வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மக்கள்தொகை பெருக்கத் தால், வளர்ச்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பசுமை அழிக்கப் படுகிறது. வானளாவிய கட்டிடங் கள் கட்டப்படுகின்றன. சூரியனிட மிருந்து வரும் வெப்பக் கதிர்களை மரங்கள் உள்வாங்கிக்கொண்டு, பிரதிபலிக்காது. ஆனால் கட்டிடங்கள் பிரதிபலிக்கும். இதனால் வெப்பம், வழக்கத்தை விட 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது. பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிப்பது உண்மை. வெப்பம் அதிகரிப்பதால், வெப்பக் காற்று வீசுதல், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைவு, நீர்நிலைகள் வற்றி நிலம் வறண்டு போதல், குடிநீர் தட்டுப்பாடு போன்ற அபாயங்ள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

என்ன செய்ய வேண்டும்?

வெப்பம் அதிகரித்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழக அரசு வழங்கிய அறிவுரைகள் வருமாறு: வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள, அவசிய தேவைகள் இன்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். அந்த நேரத்தில் அதிக அளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம். நன்கு தண்ணீர் பருக வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளியே செல்ல நேரும்போது, உடன் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்லலாம். டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்து மோர், கஞ்சி மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம். கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைத்து, தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...