Tuesday, March 7, 2017


தகிக்கும் தமிழகம்... தாகத்தில் தவிக்கும் மக்கள்...! நிலவரம் புரிகிறதா தமிழக முதல்வரே..?!




தமிழகத்தில் குடிநீர், விவசாயம் இரண்டுக்கும் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள், பராமரிப்பின்றித் தூர்ந்துபோய் இருக்கின்றன. அதே நேரத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழக மக்கள் தவித்து வருகின்றனர். ஆங்காங்கே பல தொண்டு நிறுவனங்களும், மக்கள் பிரதிநிதிகளும் நீர்நிலைகளை தூர்வாரிப் பராமரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நீர்நிலைகளைப் பராமரிக்க 'குடிமராமத்து' என்ற பழங்கால முறையினை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் சிறிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. குடிமராமத்து எவ்வளவு தூரத்துக்குப் பயன் அளிக்கும்?

365 நாட்களும் பராமரிப்பு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் 1837-ம் ஆண்டு வரை குடிமராமத்து முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கால்வாய் மணியம் என்ற பெயரில் ஒரு வாய்க்காலுக்கு ஒரு மணியக்காரர் இருப்பார். ஒரு குடும்பத்துக்கு இருவர் வீதம் குடிமராமத்துப் பணிகளில் மக்கள் ஈடுபடுவார்கள். ஏரி மட்டுமின்றி வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்வார்கள். இதனால் ஏரியில் தண்ணீர், இருந்தாலும் இல்லாவிட்டாலும் 365 நாட்களும் பராமரிப்பு இருக்கும். குடிமராமத்து மூலம், ஏரிகள் கிராமத்தின் உயிர்நாடியாகவே இருந்தன. அரசின் திட்டம் பலன் அளிக்குமா?

தனியாரிடம் விடக்கூடாது

பண்டைய காலத்தில் மக்கள் பங்களிப்புடன் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகளில் அரசின் ஆதிக்கம் தொடங்கியபோதுதான் குடிமராமத்து முற்றிலும் தடைபட்டுப்போனது. இப்போது 10 லட்சம் ரூபாய்க்கு உள்பட்ட பணிகளை மட்டுமே மக்களைக் கொண்டு குடிமராமத்து செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது. இதுகுறித்து தஞ்சை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசியபோது, "குடிமராமத்துப் பணிகள் என்பது 1963-ம் ஆண்டுவரை செம்மையாக நடந்தது. நீர்நிலைகள் பராமரிப்பு என்பதில் அரசியல் நுழைந்த பிறகு, ஒப்பந்தக்காரர்கள் கையில் போனபிறகு குடிமராமத்து முறை இல்லாமல் போய்விட்டது.

நீர்நிலைகளை பராமரிக்கிறோம் என்ற பெயரில் எந்த ஒரு தனியாரிடமும் ஒப்பந்தம் இல்லாமல், மக்களைக் கொண்டு செம்மையாக செய்தால் நீர்நிலைகளில் மிகக் குறைந்த அளவிலான நீரைக் கூட சேமிக்க முடியும். இப்போது குடிமராமத்து பணிகளைச் செய்ய வேண்டும் எனில், 1950 ஆண்டுக்கு முன்பு உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி உள்ள நீர்நிலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

தன்னார்வ முயற்சிகள்

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கனமழை பெய்தபோதும் அப்போது கிடைத்த மழை நீர் சேமிக்கப்படவே இல்லை. காரணம் சென்னையைச் சுற்றி இருக்கும் நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததும், பராமரிக்கப்படாததும்தான். இதை உணர்ந்த தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை தாங்களாகவே தூர்வாரி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் பேசினோம். "பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளைப் பாதுகாக்க களம் இறங்கி உள்ளன. விகடன் குழுமத்தின் சார்பில் படப்பை அருகில் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. குடிமராமத்துப் பணிகளின்போது ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளும்படி விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கலாம். அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளை அனுமதிக்கக் கூடாது. அதே போல 100 நாள் வேலைத் திட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் செய்யக்கூடாது" என்றார்.



ஆக்கிரமிப்புகளை என்ன செய்வீர்கள்

நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது நல்ல விஷயம்தான். ஆனால், இப்போது நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர், ஜனகராஜனிடம் பேசினோம். "நீர்நிலைகளைப் பராமரிப்பதில் அரசுக்கு திடீரென ஞானோதயம் வந்திருக்கிறது. இப்போது ஏரியில் பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்பேட்டைகள் இவையெல்லாம்தான் இருக்கின்றன. குடிமராமத்து செய்யப்போகும் அரசு இதையெல்லாம் என்ன செய்யப்போகிறது. குடிமராமத்தின்போது ஏரியின் வரத்துக்கால்வாய், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மற்றபடி குடிமராமத்து என்பது ஒரு மாற்றத்துக்கான விஷயம்தான்" என்றார்.

தமிழகம் தண்ணீர் இன்றி தவிப்பதற்கு நீர் நிலைகள் பராமரிப்பு மோசமான நிலையில் இருப்பதுதான் காரணம். தமிழகம் தகிப்பது ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், மக்களைத் தவிக்க விட்டுவிட்டு அரசு மெளனமாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

- கே.பாலசுப்பிரமணி

ஃபேமிலி டாக்டர் சரி. .. ஃபினான்ஷியல் டாக்டர் தெரியுமா? #NeedToKnow

நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரைப் பார்க்கிறோம். அதேமாதிரி நிதி சார்ந்த விஷயத்திலும் ஃபினான்ஷியல் டாக்டரை அணுகுகிறோமோ என்றால் 100-க்கு 99% இல்லை. எப்படி நமது உடல் நலன் மீது நாம் அக்கறை காட்டுகிறோமோ, அதைப்போல நம் வாழ்க்கையை வளமாக்க நிதி சார்ந்த விஷயத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுவது வாழ்க்கைக்கு நல்லது.



நிதி சார்ந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாமாகப் பல விஷயங்களைக் கற்றறிந்து முதலீடுகளை மேற்கொண்டு அதன் மூலம் வருமானம் சம்பாதிப்பது அல்லது வருமான வரியை மிச்சப்படுத்துவது என்பது கடினமான காரியம். ஆனால், நிதி ஆலோசகருக்கு அந்தத் துறை சார்ந்த அறிவு அதிகம். ஆனால், நம்மில் பலபேர் `அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு' எனச் சொல்லியே தவறான மற்றும் மோசடி முதலீட்டுத் திட்டங்களில் பணத்தைக் கொட்டுகின்றனர். இறுதியில் முழு பணத்தையுமே இழக்கின்றனர். பங்குச்சந்தையில் ஆத்திச்சூடி கூடத் தெரியாதவர்கள் கூட `தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம். 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தைகளுக்கு ஏமாந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழக்கிறார்கள். ஆகையால் பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமில்லை, பணத்தை இழக்காமல் மற்றும் மிச்சப்படுத்தவும் நிதி ஆலோசகர்கள் அவசியம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

குழந்தைகளின் கல்வி, மகளின் திருமணம், வீடு கட்டுதல், ஓய்வுக் காலம், வருமான வரி, வரி சேமிப்பு என நம் வாழ்க்கையில் ஆறு முதல் அறுபது வரை பல நிதி சார்ந்த விஷயங்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. நம்மிடம் கட்டுக் கட்டாக பணம் இருந்தாலும், கையில் சுத்தமாக பணமே இல்லை என்றாலும் நிதி சார்ந்த தேவைகள் உருவாகித்தான் வருகிறது. ஆனால், நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து அதன்பின் ஆலோசனைகளைக் கேட்பதே சிறந்தது. ஆகையால் சிறந்த நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க ஒரு சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம். உங்களுக்காக...

நிதி ஆலோசகர் தகுதி!

நல்ல நிதி ஆலோசகரைக் கண்டுபிடிப்பது சற்று கடினமான விஷயம். எப்போதும் நமக்குத் தெரிந்த, நம்பத் தகுந்த யாராவது ஒருவர், நிதி ஆலோசகரைச் சிபாரிசு செய்தால், அவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. இல்லையெனில் நிதி ஆலோசகரின் கல்வி, அனுபவம் மற்றும் எந்த மாதிரியான முதலீட்டுச் சாதனங்களை வழங்கி வருகிறார் போன்றவற்றை விசாரித்து நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், வருமான வரி என நிதி சார்ந்த எந்தச் சந்தேகமாக இருந்தாலும், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பவராக இருக்க வேண்டும். நமக்குத் தெரியாத பல கேள்விகளைக் கேட்போம். அந்தக் கேள்விகளை, நமது நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனை வழங்க வேண்டும். மொத்தத்தில் எப்போது போன் செய்தாலும், போனை எடுப்பவராக இருக்க வேண்டும்.

அனுபவம்?

நிதி ஆலோசனை வழங்கும் நபருக்கு அனுபவம் இருக்கிறதா என்பதை அலசி ஆராய வேண்டியது அவசியம். அவர் என்ன படித்து இருக்கிறார்? எத்தனைப் பேருக்கு நிதி ஆலோசனை வழங்கி வருகிறார்? யார் யாருக்கு ஆலோசனை வழங்குகிறார் என்பதோடு மட்டுமில்லாமல், அவரிடம் ஆலோசனை கேட்பவருடைய முகவரி அல்லது போன் நம்பர் கேட்டு வாங்கி, அவருடைய கருத்துகளையும் கேட்டறிந்து அதன் பிறகு அவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

நிதி ஆலோசகரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாச்சு, அவ்வளவு தான் கடமை முடிந்தது என நினைக்கக்கூடாது. அவர் என்ன செய்கிறார்? எந்தெந்த திட்டங்களில் முதலீட்டினை மேற்கொள்கிறார்? அவர் மேற்கொண்டுள்ள முதலீட்டின் வருமானம் வருகிறதா அல்லது நஷ்டம் வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறுகிய காலத்தில் நஷ்டம் என்றால் கவலையடையத் தேவையில்லை. ஆனால், நீண்ட காலத்தில் அது தொடரக் கூடாது. மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவரை நேரில் சந்தித்து கலந்தலோசிக்க வேண்டும்.

கட்டணம்!

நிதி ஆலோசனையைப் பொறுத்தவரை கமிஷன் மற்றும் நிரந்தரக் கட்டணம் என பல்வேறு வழிமுறைகளில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பொதுவாக ஆலோசனைகள் என்றாலே மக்கள் அதை இலவசமாக எதிர்பார்க்கிறார்கள். வெறும் ஆலோசனைக்குப் பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் என்றால் பெரும்பாலும் யாரும் தர முன்வருவதில்லை. ஆனால், நீண்ட கால அடிப்படையில் 10%, 12%-க்கு மேல் வருமானம் வரும்போது ஒரு சதவிகிதம் என்பது எல்லாம் பெரிய தொகையும் இல்லை, பெரிய பாதிப்பும் இல்லை.

ஆனால், நிதி ஆலோசகர் நிர்ணயிக்கும் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும். உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் ஒரு சதவிகிதம் வசூலிக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் 1% கட்டணம் என வசூலிக்கப்படும். சில பேர், ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 என ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தரமாக நிதி ஆலோசனையாகக் கேட்டு பெறுவார்கள். இந்த கட்டணத்தைப் பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 3,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வசூலிப்பவர்களும் இருக்கிறார்கள்.

நல்ல ஃபினான்ஷியல் டாக்டர்!

நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதைப் பொறுத்தவரை, செபி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலோசகர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஆலோசகருடைய பெயர் மற்றும் மற்ற விவரங்கள் அடங்கி இருக்கும். அவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் அவரிடம் நிதி ஆலோசனையைத் தொடரலாம். இல்லையெனில் உங்களுக்கு நம்பகமானவரிடம் நிதி ஆலோசனையைத் தொடரலாம். எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோம் என்பதைவிட, சரியான முதலீட்டுச் சாதனங்களில் முதலீடு செய்கிறோமா என்பதே முக்கியம். எப்படி உங்கள் ஃபேமிலி டாக்டரை நம்பிக்கையாக அணுகுகிறீர்களோ, அதைப்போல நல்ல ஃபினான்ஷியல் டாக்டரைத் தேர்ந்தெடுத்துப் பயனடையலாமே.

2g...3g...4g...5g தெரியும்? அதன் வித்தியாசங்கள் என்ன தெரியுமா?..

உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில் வெளிவந்தபோது இருந்த பரபரப்பைவிட, ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களின் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்தியபோது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம். இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 4G என்பது மிக விரைவான நெட்வொர்க் சேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்கு முந்தைய 3G அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G நெட்வொர்க்குகளுக்கும், 4G நெட்வொர்க்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா? G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன. அதனைப் பற்றிய அலசலே இந்த தொகுப்பு.



1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது. அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :



பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான். இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில்தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. 3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது. வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகுதான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :



3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது. அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை. ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை. இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

- ம. சக்கர ராஜன்
.

ஃபேஸ்புக்கில் முதன்முறையாக 'Dislike' ஆப்ஷன்...!

FB


வெகு நாட்களாக ஃபேஸ்புக் பயனர்கள் எதிர்பார்க்கும் அப்டேட் என்றால் அது 'Dislike' ஆப்ஷன்தான். ஃபேஸ்புக்கில் சமூக வலைதளங்களில் போடப்படும் ஒரு போஸ்டுக்கு 'டிஸ்லைக்' கொடுப்பதற்கான அப்டேட் வராதா என்று பலர் நினைத்திருக்கலாம். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இது தெரியாமல் இல்லை. எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று இதுநாள் வரை அதற்கான அப்டேட் கொடுக்காமல் இருந்தார்கள். தற்போது, 'மெஸன்ஜர்' அப்பில் மட்டும் இந்த வசதியை அறிமுகம் செய்யவுள்ளது ஃபேஸ்புக்.

உலக அளவில் கிட்டத்தட்ட 100 கோடி பேர் மெஸன்ஜர் பயன்படுத்துகிறார்கள். மெஸன்ஜரில் இந்த 'டிஸ்லைக்' அப்டேட் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் அந்த அப்டேட்டை கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்புதான், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்ட்டுக்கு, பல வகை 'எமோஜி' ரியாக்‌ஷன் கொடுக்கும் வண்ணம் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 'டிஸ்லைக்' ரியாக்‌ஷன் அப்டேட் கொடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ஃபேஸ்புக் நிறுவனம், 'நாங்கள் மெஸன்ஜரை பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த புது அப்டேட்டும் அதைப் போன்ற ஒன்றுதான்.' என்று தெரிவித்துள்ளது.

விரைவில், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்டுக்கு 'டிஸ்லைக்' கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
hyderabad international airport

ஐதராபாத் விமானநிலையம் உலகளவில் முதலிடம்!


சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் சர்வதேச விமான நிலையம். 9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம் வருடத்திற்கு 12 மில்லியன் பயணிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. பிறகு 2016-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு வளர்ந்தது. இந்நிலையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய சிறந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் விமான நிலையங்களின் தரப்பட்டியலில் அந்த ஐதராபாத் விமான நிலையமானது 5-க்கு 4.9 அளவீடு பெற்று உலகிலேயே முதலிடத்தை தட்டிச் சென்றிருக்கிறது.

Saturday, March 4, 2017

Mar 04 2017 : The Times of India (Chennai)
SC: No upper age limit for admission in law courses
New Delhi


Students aspiring to pursue law in the coming academic session will be able to apply for admission irrespective of their age as the Supreme Court stayed on Friday the Bar Council of India's decision to fix upper age limit of 22 years for the five-year LLB programme and 45 years for the three-year course .

A bench of Justices S A Bobde and L N Rao said the age restriction fixed by BCI prima facie seemed unreasonable and would prevent students from pursuing law education.
Initially, BCI had fixed upper age limit at 20 years for the five-year course and 30 years for the three-year course but it revised the age limit and made it 22 years and 45 years respectively for the two courses after the apex court asked it to reconsider its decision in larger public interest.

Advocate A K Prasad, appearing for BCI, told the bench it had increased the upper age limit on the suggestion given by the apex court but the bench was not satisfied and stayed the notification, paving the way for the students to ap pear in the law entrance examination irrespective of age.

Questioning BCI's decision, the bench said that the council was on one hand promoting law education in the country , but on the other trying to restrict students from pursuing law education. The court said that it would adjudicate constitutional validity of the decision and stayed its implementation till it decided the case.

“It will not serve any purpose. What is big deal about fixing the age limitation. There is a demand from society (for doing away with age restriction) and you have to consider it.You go around promoting legal education and here BCI puts restrictions. We stay the decision,“ the bench said. “We appreciate the intent of BCI to catch the best talent at right age and we will examine the issue. We stay the notification of September 17, 2016 and all consequential acts taken thereof,“ the court said.

Normally in cases when admission is allowed while case is pending in judicial forums, the court directs that the admission would be subject to the final outcome of the case. But in order to remove any uncertainty over the fate of students who will clear law entrance tests and take admission, the court said that there admission would not be disturbed even if the BCI's decision was declared valid The BCI, the apex body to regulate legal education and profession in the country , had in September last year restored Clause 28 of its Legal Education Rules, 2008, that fixed upper age limit of 20 years for admission to fiveyear integrated law course and 30 years for three-year law course.


பார்லி... கருஞ்சீரகம்... கோதுமை... சர்க்கரைநோயைக் குணப்படுத்துமா? #HealthTips
இன்று வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியாகும் ஆரோக்கியம் தொடர்பான செய்திகளைப் படித்துவிட்டு, அதை உண்மையென்று நம்பிப் பின்பற்றுபவர்கள் அநேகம் பேர். `இதை நம்பலாமா... வேண்டாமா... நம் உடல் தன்மைக்கு இது ஒப்புக்கொள்ளுமா’ என்பதையெல்லாம் இவர்கள் யோசிப்பது இல்லை; மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிப்பதும் இல்லை. இதனால் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் சில நேரத்தில் மிக மோசமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு. அப்படி சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தி இது... `சர்க்கரைநோயை இரண்டு மாதத்தில் குறைக்கலாம்; இன்சுலின் தேவையில்லை; பார்லி, கருஞ்சீரகம், கோதுமையை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை குடித்தால் போதும்.’



இது சாத்தியம்தானா? சித்த மருத்துவ ஆலோசகர் உலகநாதனிடம் கேட்டோம். பதிலளித்த அவர், நம் ஆரோக்கியம் காக்கும் முக்கியக் கஷாயம் ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறார் இங்கே...

கருஞ்சீரகம், பார்லி, கோதுமை இவை அனைத்தும் உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கக்கூடியவை. குறிப்பாக பார்லி, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். உடல் வீக்கத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் நார்ச்சத்தின் அளவு அதிகம். கருஞ்சீரகம், உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். இதயத்துக்கும் ரத்தநாளங்களுக்கும் தூய்மையான ரத்தத்தை எடுத்துச்செல்லும். கோதுமையிலும் நார்ச்சத்து அதிகம். அத்துடன் இது, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலைத் தரவல்லது.

இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரைநோய் வராது என்று உறுதியாகக் கூற முடியாது. சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்கள் பல... அவரவரின் வாழ்வியல் முறைகள், உணவுப் பழக்கங்கள், உடலுழைப்புக் குறைவது, இவற்றைத் தாண்டி தலைமுறை தலைமுறையாகக்கூட சர்க்கரைநோய் இருக்கலாம். ஆகவே, இதையெல்லாம் முதலில் நன்கு ஆராய்ந்து, உடலின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரைநோய்க்கு சிகிச்சைகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொள்வதுதான் நல்லது.



ரத்தத்தைச் சுத்திகரிக்கக் கஷாயம்

உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்துவிட்டாலே நம்மால் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். நோய்கள் அண்டாமல் பாதுகாக்கவும் முடியும். அதற்கு உதவுகிறது இந்தக் கஷாயம்...

தேவையானவை:

வெந்தயம் (அ) ஆவாரம்பூ (அ) நாவல்பழக் கொட்டை (அ) சீரகம் (அ) கருஞ்சீரகம் (அ) மிளகு (அ) பார்லி (அ) மிளகு (அ) சீரகம் (அ) சோம்பு (அ) பட்டை (அ) லவங்கம் (அ) இஞ்சி (அ) பூண்டு.

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் ஏதாவது ஒன்றை மட்டும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இந்த மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இதனுடன் சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் நன்கு கொதிக்கவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டிக் குடிக்கவும்.



சில டிப்ஸ்...

* காலையில் முதலில் வெறும் வயிற்றில் இளம்சூடான நீரை ஒரு கிளாஸ் பருக வேண்டும். இது உடம்பின் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.

* 20 நிமிடங்கள் கழித்து இந்தக் கஷாயத்தைப் பருக வேண்டும். கஷாயம் குடித்த 45 நிமிடங்கள் கழித்துத்தான் காலை உணவைச் சாப்பிட வேண்டும். காலை உணவை எந்தக் காரணத்தைக்கொண்டும் தவிர்க்கக் கூடாது.

* இந்தக் கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

* ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளைக்கொண்டு கஷாயத்தைச் செய்து பார்க்கவும்.

பலன்கள்...

* நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

* ஒற்றைத் தலைவலி குணமாகும்.

* கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

* சர்க்கரைநோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

* தொப்பையைக் குறைக்கும்.

* செரிமான மண்டலப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

* ரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும்.

* ரத்தத்திலுள்ள எச்.பி அளவை அதிகரிக்கும்.



குறிப்பு:

* மிளகு, இஞ்சி உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் என்பதால், உடல் சூடு உடையவர்கள் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கஷாயத்தைப் பருகலாம்.

* தொடர்ந்து 48 நாட்கள் கஷாயத்தை எடுத்துக்கொள்ள இயலாதவர்கள், ஒரு வாரரத்துக்கு எடுத்துக்கொண்டு மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு பின்னர் இதைத் தொடரலாம்.

* ஒரு மண்டலம் இந்தக் காஷாயத்தை எடுத்துக்கொண்டவர்கள், சிறிது காலம் கழித்து மறுபடியும் தொடரலாம்.

* கஷாயம் சாப்பிடுபவர்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது பருகவேண்டும்.

* ஆறு முதல் எட்டு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும்.

- கி.சிந்தூரி

NEWS TODAY 31.01.2026