Saturday, April 1, 2017

வங்கிக் கணக்கு முதல் ரயில் பயணம் வரை... இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்!’


2017-18-ம் ஆண்டிற்கான நிதி ஆண்டின் பல்வேறு கட்டண மாற்றங்கள், வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. புதிதாக வாகனத்தைப் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம் தொகை 41 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச் சாவடிகளில் நுழைவுக்கட்டணம் இன்று முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. மேலும், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை வங்கி இருப்பாக வைத்திருப்பது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் உத்தரவுகளும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி மாநகரப் பகுதிகளில் இருக்கும் வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையை 5,000 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 3,000 ரூபாயும், சிறு நகரப் பகுதிகளில் 2,000 ஆயிரம் ரூபாயும், கிராமப் பகுதிகளில் 1,000 ரூபாயும் குறைந்தபட்சத் தொகை வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வருமான வரி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கை உறுதியாகவில்லை என்றால் அவர்களுடைய முன்பதிவு ரத்து செய்யப்பட்டு பணம் திரும்ப அளிக்கும் வழக்கம் அமலில் இருந்தது. தற்போது, ரயில் புறப்படும் வரை இருக்கை உறுதியாகாத பட்சத்தில் அவர்கள் அடுத்த ரயிலில் பயணிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பதவியில் அமர்ந்த ராமமோகன ராவ்! - டெல்லி லாபியை வளைத்த பின்னணி 
VIKATAN 


தலைமைச் செயலகத்தில் வைத்தே ரெய்டு நடவடிக்கைக்கு ஆளான பெருமைக்குரியவர் ராமமோகன ராவ் ஐ.ஏ.எஸ். 100 நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர், நேற்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணி அமர்த்தப்பட்டிருக்கிறார். ‘அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. சசிகலா தரப்பை வளைப்பதற்காக, அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். தற்போது டெல்லி லாபி மூலம் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்’ என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவராக இருந்த ராமமோகன ராவ், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் கட்டளைகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவே அவருக்குப் பதவி வழங்கப்பட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் பேசி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் ஜெயலலிதா. அடுத்த ஒரே வாரத்தில் வேலூரைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியை வளைத்தது மத்திய அமலாக்கத்துறை. அவருடைய சென்னை அலுவலகம் உள்பட அனைத்து இடங்களையும் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் ஆராய்ந்தது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தின. சேகர் ரெட்டி, பிரேம் குமார், சீனிவாசலு என ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அனைவரும் வளைக்கப்பட்டனர். இதன் நீட்சியாக சேகர் ரெட்டியின் வர்த்தகத் தொடர்புகளுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இதன்பின்னர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் உதவியோடு, தலைமைச் செயலகத்திலும் அதிகாரிகள் ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், 'என்ன ஆவணங்கள்?' என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ராமமோகன ராவ் மகனின் வர்த்தக நிறுவனங்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

“வருமான வரித்துறையின் நடவடிக்கைகளில் ராமமோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆவணங்களைக் காட்ட முடியவில்லை. ஆனால், சேகர் ரெட்டியைக் காரணமாக வைத்துக் கொண்டு, 'தன்னைக் கைது செய்து விடுவார்கள்' என அஞ்சியவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கிவிட்டார். அப்போது அவரைச் சந்தித்த ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள், சில ஆலோசனைகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் ராமமோகன ராவ். இந்த சந்திப்பில், ‘ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்தில் இப்படியொரு ரெய்டு நடந்திருக்குமா? என் வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. இன்னமும் நான் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன். என்னை யாரும் பதவியை விட்டு நீக்க முடியாது. ரெய்டு நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான மிரட்டலுக்கு ஆளானேன்' என பகிரங்கமாகப் பேட்டியளித்தார். அவரது துணிச்சலை வருமான வரித்துறை அதிகாரிகளோ, அமலாக்கத்துறை அதிகாரிகளோ எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு அவர் மீதான நடவடிக்கைகளை வேகப்படுத்தவில்லை. அவரது மகனை மட்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவழைத்தனர்.



மாநில அரசும் அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் மட்டும் வைக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். ‘என் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என்னைத் தேடி வந்து சஸ்பெண்ட் ஆர்டரைக் கொடுக்கச் சொல்லுங்கள்' என தன்னை சந்திக்க வருகின்றவர்களிடம் கொந்தளிப்பைக் காட்டி வந்தார் ராமமோகன ராவ். இதன்பிறகு, தனக்கு நெருக்கமான டெல்லி வட்டார அதிகாரிகள் மூலம், மத்திய அரசின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றார். ‘அவர் பதவிக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை' என கிரீன் சிக்னல் கிடைத்ததும், அவருக்கான உத்தரவு வேகமாகத் தயாராகியது. அவருக்கான டெல்லி உதவிகளைச் செய்ததில், முன்னாள் மாண்புமிகுவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த தகவல், தலைமைச் செயலகத்தில் வலம் வருகிறது. 'புதிய பதவிக்கு வரப் போகும் ஐ.ஏ.எஸ்கள் யார்?' என்ற விவாதமும் நடந்து வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காமல் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்" என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

ராமமோகன ராவ் பதவிக்கு வந்தது குறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோவிடம் பேசினோம். “பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டவர்கள் செய்த தவறுகளை முழுமையாக அறிந்தவர் ராமமோகன ராவ். அந்த தைரியத்தில்தான், 'நான் இன்னமும் தலைமைச் செயலாளர்' எனப் பேட்டி அளித்தார். இவ்வளவு ஊழல்களைச் செய்துவிட்டு, துணிச்சலாக பேசுகிறார் என்றால், ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பதுதான் காரணம். 'நான் சிக்கினால், உங்களையும் சேர்த்தே நான் சிக்க வைப்பேன்' என்பதுதான் அவருடைய வாதம். பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் வழிக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்தது. இதற்காக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு வழிநடத்தியது.

தலைமைச் செயலாளர் தவறு செய்திருந்தாலும், ரெய்டு நடவடிக்கையில் இறங்குவது குறித்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் சொல்லியிருக்க வேண்டும். அப்படி எந்தத் தகவலையும் அவர்கள் சொல்லவில்லை. அரசின் ஊழல்களை விரிவாக அறிந்தவர் ராமமோகன ராவ். அரசுக்கு எதிராக அவர் கருத்துக்களைப் பேசியபோதே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகளின்படியே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். 'ஏன் இவ்வளவு நாட்கள் இவர்கள் அமைதியாக இருந்தார்கள்?' என்பதே ரகசியம்தான். அவர் மீது அம்பு எய்தால், நம்மை நோக்கியே அந்த அம்பு பாயும் என்ற பயம்தான், அவருக்குப் பதவி கொடுக்கக் காரணம். மத்திய அரசின் ஒத்துழைப்பு இருப்பதால்தான் மீண்டும் பதவிக்கு வந்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகளைப் பணிய வைத்துப் பதவிக்கு வருவது என்பது சரியான வழிமுறை அல்ல" என்றார் நிதானமாக.

-ஆ.விஜயானந்த்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு, மற்ற நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் இதன் இலவச ஆஃபர் முடிவதாக இருந்தது. இதையடுத்து மார்ச் 31-ம் தேதி வரை (இன்று) இதன் இலவச ஆஃபர் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இலவச ஆஃபர் முடிந்த பிறகு, ரூ. 99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் ஆஃபர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறி இருந்தது.



இதனையடுத்து, ஜியோ இலவச ஆஃபர் இன்றுடன் முடியும் நிலையில், ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராவதற்கும் இன்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது. இந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. மேலும், ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) + ரூ.303 செலுத்தினால் (15-ம் தேதிக்குள்), அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜியோ முற்றிலும் இலவசம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது.

மேலும், தற்போது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள், ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆஃபர் அறிவிப்பு... ஜியோ யூஸர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?




மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தங்கள் உத்தரவுகளில் ரொம்ப ஸ்டிரிக்ட். ஒரு தேதி சொன்னால், அதற்கு மேல் நேரம் கொடுப்பதில்லை. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ அப்படி அல்ல. டிசம்பர் 31 அன்று வரை இலவச டேட்டா, கால்கள் என்றார்கள். அடுத்து அதை மார்ச் 31 வரை நீட்டித்தார்கள். பின் 99ரூபாய் கட்டணம் செலுத்தினால் பிரைம் மெம்பர் ஆகலாம் என்றார்கள். இதோ, அடுத்த சலுகையையும் அறிவித்துவிட்டார்கள். ஏப்ரல் 15 வரை பிரைம் மெம்பர் ஆவதற்கான காலக்கெடுவை தளர்த்தியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல… ஏப்ரல் 15க்குள் பிரைம் மெம்பர் ஆகி, 303ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் இலவச சேவை தொடரும் என்கிறது ஜியோ.

இன்னும் பிரைம் மெம்பர் ஆகாதவரா நீங்கள்?

ஜியோவின் சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? ஆம் என்றால், ஏப்ரல் 15க்குள் 99 ரூபாய் பிரைம் கட்டணத்துடன், 303 ருபாய் ரீசார்ஜ் செய்துவிடுங்கள். அதன்படி, அடுத்த மூன்று மாதங்கள் ஜியோ சேவைகள் இலவசமாக கிடைக்கும். பிரைம் கட்டணம் 99 உடன், 303 ரூபாய் சேர்த்து கட்டினால் மூன்று மாதங்கள் இணையச்சேவைகள் கிடைக்கும். மாதம் 133ரூபாய்க்கு தினம் 1ஜிபி டேட்டாவும், இலவச கால்களும் கிடைக்கும். இந்த மூன்று மாதங்களில் டேட்டா வேகம் குறைந்தாலோ, சேவையில் பிரச்னை இருந்தாலோ நீங்கள் ஜியோவில் இருந்து வெளியேறலாம்.

303 ரூபாய் கட்ட நான் தயாரில்லை… பிரைம் உறுப்பினராகவும் ஆக மாட்டேன் என்பவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இலவச சேவைகள் தொடரும். அதன் பின் கிடையாது.



நீங்கள் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிட்டீர்களா?

ஆம் என்றால், ஏப்ரல் 15க்குள் 303 ரூபாய் ரீசார்ஜ் செய்யுங்கள். ரீசார்ஜ் செய்தால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் இதுவரைக்கும் நீங்கள் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். அதன்பின் நீங்கள் கட்டியிருக்கும் 303 ரூபாய்க்கான பீரியட் தொடங்கும். ஆக, ஏப்ரல் 10 ஆம் தேதி நீங்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஜூலை 10 ஆம் தேதிதான் உங்கள் பெய்ட் பீரியட் தொடங்கும். அதன் பின் 28 நாட்களில் உங்கள் வேலிடிட்டி முடியும். மீண்டும் 303 ரூபாய் கட்ட 28 நாட்களுக்கு சேவைகளை பெறலாம்.

இது தவிர கீழ்கண்ட பிளான்கள் பிரைம் யூஸருக்கு உண்டு.

Rs 19 plan: ஒரு நாள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், 20 எம்.பி 4ஜி டேட்டா

Rs 49 plan: 3 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 600 எம்.பி 4ஜி டேட்டா

Rs 96 plan: 7 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 7 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே…

Rs 149 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 2 ஜிபி 4ஜி டேட்டா

Rs 303 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 28 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே…

Rs 499 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 56 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை மட்டுமே…

ஜியோவின் இலவச காலம் முடிவுக்கு வந்தால் தான் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் பிளான்களோடு ஒப்பிட முடியும். மார்க்கெட்டும் ஒரு கட்டுக்குள் வரும். ஆனால், அடுத்தடுத்து ஜியோ இலவச காலத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மற்ற நிறுவனங்கள் செய்வதறியாமல் இருக்கிறார்கள். ஜியோவின் அறிக்கை படி ஏற்கெனவே 7.2 கோடி பேர் ஜியோவின் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள். இந்த 15 நாட்களில் அந்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.


-கார்க்கிபவா

ஆர்.கே நகரில் 8,000 ரூபாய்க்கு கணக்கு சொல்லி சுண்டல் சாப்பிட்ட அ.தி.மு.க. பணிக்குழு! #MustReadFun



ஆர்.கே.நகரில், டி.டி.வி.தினகரனின் தேர்தல் பணிக்குழு, சுண்டல்காரருக்கு 8,000 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில், தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவல் நிகழ்ந்துவருகிறது. அதில், தண்டடையார்பேட்டையில் உள்ள வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் நடந்த ‘சுண்டல் கதை’ ரொம்பவே ருசிகரமானது!
தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்தான் வேட்பாளர்கள் டி.டி.வி.தினகரன், மருது கணேஷ், தீபா ஆகியோரின் தேர்தல் அலுவலகங்கள் உள்ளன. அதில், டி.டி.வி.தினகரனின் தேர்தல் அலுவலகத்தின் அருகில் சென்றாலே, சுண்டல் வாசனை மூக்கைத்துளைக்கும். காலையிலும் மாலையிலும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு சுண்டல் பொட்டலங்கள் சப்ளை செய்யப்படும். இதற்காக, சுண்டல்கடைக்காரரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர்.

சுண்டல் இலவசம் என்பதால், மாலையில் ருசியான சுண்டலைச் சாப்பிடுவதற்கென்றே கட்சியினர் அதிகளவில் அங்கு கூடுவார்களாம். இதனால், சில நாட்களாக சுண்டல் கணக்கு எகிறியுள்ளது. இது, சம்பந்தப்பட்ட முன்னாள் பெண் அமைச்சர் தரப்பினருக்கு கையைக்கடித்துள்ளதாம். இதனால், சுண்டல் கணக்கை தினமும் முடிக்காமல், வாரத்தில் ஒருநாள் முடிப்பதாக சுண்டல் கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் பெண் அமைச்சர். ஆனால், சுண்டலுக்கு ஒழுங்காக பணம் கொடுக்கவில்லையாம். எப்படியும் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சுண்டல் பொட்டலங்களைக் கொடுத்துவந்தார் சுண்டல்கடைக்காரர். சில தினங்களுக்கு முன்பு, சுண்டல்காரர் பணத்தைக் கேட்டபோது, அமைச்சர் தரப்புக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டதாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'சி.எம். வரப்போகிறார். நாளைக்கு கொடுக்கிறேன், அந்தப்பக்கம் ஒதுங்கி நில்லு...' என்று ஒருமையில் பேசியிருக்கிறார், முன்னாள் பெண் அமைச்சர். வேறு வழியின்றி சுண்டல்காரரும், 'தின்ன சுண்டலுக்கு காசு கேட்டா... இப்படி கோவம் வருது, சி.எம். வாராரு... வேட்பாளர் வாராருன்னு சொல்லி துரத்திவிடுறாங்க..'என்று புலம்பியபடியே கிளம்பிச் சென்றிருக்கிறார். தற்போது வரை 8,000 ரூபாய் கணக்கு வருகிறதாம். சுண்டல்காரர், தேர்தல் அலுவலகத்துக்கே வருவதில்லையாம். புதிதாக சுண்டல்காரர் ஒருவர் மூலம் தேர்தல் அலுவலகத்தில் சுண்டல் பொட்டலங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இவருக்கு எவ்வளவு பாக்கி விழப்போகிறதோ... எனத் தெரியவில்லை. இந்த நிலையில் பழைய சுண்டல்காரர், வெறுப்பில், எங்கு சென்று இதைப் புகார்செய்வது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறாராம்!


- எஸ்.மகேஷ்

எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம்?’ - மார்க்சிஸ்ட்டுகளை மிரள வைத்த தினகரன்
 #VikatanExclusive



ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் அடிதடி காட்சிகளை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. தினகரன் ஆட்களும் பன்னீர்செல்வம் ஆட்களும் மோதிக் கொண்டிருக்க, ‘எங்கிருந்துதான் வருகிறது இவ்வளவு பணம்? ஆளும்கட்சி அதிகாரிகளே தேர்தல் பணியில் இருப்பதால், யாரும் எதையும் கண்டுகொள்வதில்லை' என ஆதங்கப்படுகின்றனர் சி.பி.எம் கட்சியினர்.

அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் தினகரனும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டாலும், அவர்களின் சின்னங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தினகரனுக்காக முப்பது அமைச்சர்களும் அ.தி.மு.க எம்.பிக்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பண விநியோகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது' என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குத் தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப, அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு வேண்டப்பட்ட தேர்தல் பதிவு அலுவலர் விஜயகுமார், உதவி தேர்தல் அலுவலர் சேகர் ஆகியோரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இதை தினகரன் ஆட்கள் எதிர்பார்க்கவில்லை. தொகுதியின் பல பகுதிகளில் மதுசூதனன் ஆட்களோடு நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும்கட்சியினரின் மோதலைப் பொருட்படுத்தாமல் தொகுதிக்குள் வலம் வருகிறார் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன். இன்று மாலை சி.பி.எம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறார் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

‘தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்வியை சி.பி.எம் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். “தொகுதிக்குள் ஏராளமான பணத்தை செலவு செய்கிறது தினகரன் அணி. பண விநியோகம் குறித்து தி.மு.க புகார் கூறினாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து அவர்களும் பேசி வருகின்றனர். வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார் தினகரன். அவையெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கீழ்மட்ட அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூத் வாரியாக மிகத் துல்லியமாக கணக்கெடுத்து விநியோகிக்கின்றனர். நேற்று பண விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கருணாமூர்த்தி என்பவரைக் கைது செய்துள்ளனர். இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில்தான் பணத்தை விநியோகித்து வந்தார்கள். அரசியல் கட்சிகள் புகார் கூறிய பிறகு, கோவில்களில் இருந்து இடத்தை மாற்றிவிட்டார்கள்.

மாநகராட்சி அதிகாரிகளே தேர்தல் அலுவலர்களாக இருப்பதால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகன தணிக்கைளையும் வேகப்படுத்தவில்லை. நேற்று மேட்டுத்தெருவில் உள்ள மாதாகோவில் பகுதிக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரித்தேன். 'தினசரி ஆளும்கட்சியின் அமர்ந்துள்ள பூத்துகளுக்குச் சென்று அமர்ந்தாலே, தினசரி தலைக்கு 300 ரூபாய் கொடுக்கின்றனர்' என்கின்றனர். 256 பூத்துக்கும் தலா 300 ரூபாய் என்றால், தொகையின் எண்ணிக்கையை அளவிடவே முடியாது. எங்கிருந்துதான் இவர்களுக்கு இவ்வளவு பணம் வருகிறது? இங்குள்ள பெரும்பாலான மக்கள், அன்றாட சாப்பாட்டுக்கே கடுமையாக உழைக்கின்றனர். தொகுதிக்குள் எங்கள் கட்சிக்கென்று பொதுவான மரியாதை இருக்கிறது. இந்தப் பகுதியின் செயலாளராக இருந்த லோகநாதன், வேட்பாளராகியிருக்கிறார். மக்கள் பிரச்னைகளை ஏராளமாக முன்னெடுத்திருந்ததால், அவருக்கு இங்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. எளிய மக்களைப் பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்கிவிட முடியும் என ஆளும்கட்சியினர் கணக்குப் போடுகின்றனர். அவர்களின் கணக்குகள் எல்லாம் தேர்தல் நாளில் தவிடு பொடியாகும்" என்றார் நிதானமாக.

சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். "ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வாகனங்கள் செல்வது மிகச் சிரமம். குறுக்குத் தெருக்கள் மிக அதிகம். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தி.மு.கவும் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கியுள்ளனர். நாங்கள் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். தொகுதிக்குள் டோக்கன் கொடுத்துவிட்டு, தொகுதிக்கு வெளியில் பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதற்கொண்டு தங்கக்காசு வரையில் விநியோகம் நடக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி வருகிறோம். 'பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தி.மு.கவும் ஊழல் கட்சிகள் என்பதை மக்கள் அறிவார்கள். இவர்களுக்கு எதிரான எங்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்றார் உறுதியாக.


-ஆ.விஜயானந்த்

KUHS exam norms arbitrary, says High Court 

LAST YEAR NEWS 1.4.2016 

A REMINDER

Special Correspondent KOCHI: April 01, 2016 00:00 I
 The Kerala High Court on Thursday declared unreasonable and arbitrary a clause in the regulation of the Kerala University of Health Sciences (KUHS) to the extent that candidates who failed in one subject, either in theory or practical, should appear for all papers including theory and practical.
Justice V. Chitambaresh passed the verdict while disposing of a batch of writ petitions filed by S. Geethu, Thiruvananthapuram, and other postgraduate students in various medical colleges in the State challenging the clause 3.16 of the regulation.

MCI stipulations
 
The court observed that the Medical Council of India (MCI) regulations did not explicitly state that a candidate should secure a minimum of 50 per cent marks in theory and practical simultaneously in order to be successful. The MCI regulation did not forfeit the marks obtained in theory or practical in case of shortcoming in one subject, compelling the student to re-do the exercise all over again. However, the regulation of KUHS was not consistent with or in conformity with the MCI regulations.

NEWS TODAY 14.02.2026