Sunday, April 2, 2017

கல்யாண வரம் தருவார்.மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர்!

வழக்கம்போலவே அன்றைக்கும் அந்தப் பசு பால் கறக்கவில்லை. மடி வற்றிக் கிடந்தது கண்டு அதன் எஜமானனுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கோபத்தில், அருகில் இருந்த ஒரு கழியை எடுத்துப் பசுவின் மடியிலேயே அடித்தான். வலி பொறுக்காத பசு ஓடத் துவங்கியது. ஓரிடத்தில் அதன் கால் குளம்பு எதன் மீதோ பட்டு இடற, அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பசு ஒரு முனிவராக உருமாறி நின்றது.

பசுவின் கால் குளம்பை இடறச் செய்தது ஒரு சிறிய சிவலிங்கம்தான். இருகரம் கூப்பி அந்தச் சிவ லிங்கத்தை வணங்கி நின்றார் அந்த மகரிஷி. முன்னொரு காலத்தில் சிவபூஜை செய்துகொண்டிருந்த கபில முனிவர், தன்னையும் அறியாமல் ஏதோ யோசனையில் இடக்கையால் ஈஸ்வரனுக்கு தீபாராதனை செய்துவிட, சிவநிந்தை செய்த தோஷத்துக்கு ஆளானார்.
அதன் விளைவாக, பசுவாகப் பிறப்பெடுத்தார். அந்தப் பசு, மேய்ச்சல் நிலத்துக்கு அருகில் சுயம்புவாகத் தோன்றியிருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டு வந்தது. அதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் வற்றிய மடியுடன் வீடு திரும்பியது. சிவலிங்கத்தை வழிபட்டதற்கான பலன் இப்போது கிடைத்துவிட்டது. பாவ விமோசனம் பெற்று மீண்டும் தன் சுய உருவை அடைந்தார் கபில மகரிஷி.
பின்னாளில், இறை அனுக்கிரகத்தால் இந்த அற்புதச் சம்பவங்களை எல்லாம் கனவின் மூலம் கண்டு உணர்ந்தான் சோழ மன்னன் ஒருவன். அற்புதமான அந்தச் சிவலிங்கம் ஏரிக்குள் இருப்பதை அறிந்து, லிங்கத் திருமேனியை வெளியில் எடுத்து, ஆலயம் அமைத்தான். அதுவே மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்.

கபில ரிஷி மட்டுமல்ல, அகத்தியரால் சபிக்கப்பட்ட தேவேந்திரனும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகச் சொல்கிறது தலபுராணம்.

சென்னை தாம்பரம்- வேளச்சேரி செல்லும் சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது மாடம்பாக்கம். இங்கே சோழர் காலக் கட்டுமானத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயம்.

தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம். இந்த ஆலயத்தில், சிறிய அளவில் பசுவின் கொம்பு வடிவில் திகழும் லிங்கத் திருமேனி போன்று வேறெங்கும் காண்பதரிது என்கிறார்கள். இந்தச் சிவாலயத்தில் பங்குனி உத்திர விழா விசேஷம்! இந்த விழாவின் போது நிகழும் திருக்கல்யாணம் மற்றும் தெப்போத்ஸவத்தைக் காணப் பெருங்கூட்டம் கூடும். திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு இதயச் சுத்தியோடு ஸ்வாமி- அம்பாளைத் தரிசித்து வழிபட, விரைவில் இல்லத்தில் கெட்டிமேளம் கொட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Dailyhunt

 JSS University to invest Rs. 2,000 crore on new campus

This is said to be the single largest chunk of investment in any field in Mysuru in recent decades

The JSS University will invest Rs. 2,000 crore in Mysuru for its new campus and establish state-of-the-art facilities to draw both domestic and international students.
This is reckoned to be the single largest chunk of investment in any field in Mysuru in the recent decades.

The last time when the city received a big chunk of funds was when IT major Infosys invested around Rs. 1,500 crore to establish its global education centre and the world’s largest corporate training centre to put the city on the IT map of the world, besides propping up Mysuru’s brand image as a knowledge city.

The ground breaking ceremony for the new campus project will be held on April 29 at Varuna on the outskirts of the city, where it has 102 acres of land. The project envisages not only a digital and smart campus, but also a cricket stadium modern enough to stage international tournaments.
University Vice-Chancellor B. Suresh said here on Saturday that eminent architects had already submitted blueprint of designs and the JSS Varsity Board was in the process of finalising it. He said the first phase is expected to be completed by December 2018 while the full-fledged international campus will be operational by 2025. The university, which already has collaborations with institutions in U.S. and Europe to sharpen its expertise, will explore tie-ups with universities in the non-English speaking countries to enhance its capabilities.

Concern over adoption of UGC regulations

 A key point of contention was reduction in the number of Ph. D and M. Phil scholars a guide can have 

 

The Madurai Kamaraj University Senate meeting on Friday witnessed dramatic scenes over the resolution to adopt University Grants Commission’s (UGC) revised regulations of 2016 that define minimum standards to be followed for the award of M.Phil and Ph.D degrees.

A key point of contention was the reduction in the permissible number of Ph. D and M. Phil scholars a research guide can have at any given point. While the 2009 regulations allowed a research guide to have eight Ph. D candidates irrespective of their position, the new regulations allow eight Ph. D candidates only to research guides who are in ‘Professor’ rank. Those in Associate Professor and Assistant Professor ranks have been allowed only 6 and 4 Ph. D scholars respectively. Similar restrictions have also been placed for M. Phil scholars as well.

A group of students stormed into the hall, where Senate meeting was in progress, and raised slogans against adoption of the revised regulations by claiming that it will indirectly deny opportunities to large number of students to pursue research.
 
S. Nehru, Principal, Mannar Thirumalai Naicker College, said that the revised regulations will considerably affect the possibility of research work in affiliated colleges. “The National Assessment and Accreditation Council demands that colleges give adequate focus on research. However, the revised regulations will affect the scope of research in colleges,” he said. He also questioned the decision to retrospectively adopt the regulations from 05 May 2016, when UGC notified the revised regulations, since it will affect the students who had registered after that date. “For instance, a student who registered for M. Phil on 10 May 2016 would have thought that his research duration will be 2 years. The revised regulations, however, say that M. Phil duration will be at least three years,” he said.

V. Venkatraman, Principal, Rajapalayam Rajus’ College, pointed out that M. Phil admissions in the upcoming academic year will be severely affected with MKU choosing to adopt the regulations now with only a couple of months left for the commencement of the next academic year.
V. Chinniah, Chairperson, School of Management Studies, urged that the decision should be postponed until the university gets a new Vice-Chancellor.

K. Ravichandran, Special Officer, MKU, however defended the resolution by stating that any further delay will adversely affect the Ph. D and M. Phil students since UGC had made made it mandatory for all the students who register after 05 May 2016 to follow the revised regulations. The resolution was passed in the Senate amidst opposition.

பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் இந்திய பெண்ணிடம் அத்துமீறல்

பிராங்பர்ட்: ஜெர்மனியின் பிராங்க்பர்ட்விமானநிலையத்தில் இந்திய பெண்ணிடம் சோதனை என்ற பெயரில் அத்துமீறல் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஷருதி பசப்பா, 30 என்ற பெண் கடந்த மார்ச் 29-ம் தேதி பிராங்க்பர்ட் விமான நிலையத்திற்கு தனது கணவர், மகளுடன் சென்றுள்ளார். அப்போது விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அப்பெண்ணை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை என்ற பெயரில் ஆடைகளை களையச்சொல்லி கட்டாயப்படுத்தினர். இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும். இனவெறி காரணமாக நடந்ததுள்ளதாகவும், சமூக வலைதளமான பேஸ்புக்கில் கூறியுள்ளார்.
Dailyhunt

சிதம்பரம் நகருக்கு விடிவு காலம் எப்போது? அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் நிலையம்

சிதம்பரம்: ரயில்வே வரை படத்தில் சிதம்பரம் என்ற இடத்தில் புனித ஸ்தலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த புனித ஸ்தலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயிலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளது. சிதம்பரம் அருகே சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் சதுப்பு நிலக்காடுகள் கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன.

இதனால் சிதம்பரம் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால் இந்த ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பயணிகளின் பெருங்குறையாக உள்ளது. சிதம்பரம் ரயில் நிலைய நடைபாதையில் இருபுறங்களிலும் புதிதாக கட்டண கழிவறைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் சேதமடைந்து வருகிறது. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்துள்ளதால் போதிய குடிநீர் இன்றி பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இருந்தது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் எடுக்கப்பட்டுவிட்டது.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இல்லாததால் மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் ரயில் நிலையம் வெளியே இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்கனவே இருந்தது. அங்கு மேற்கூரை இல்லாததால் வாகனங்கள் கடும் வெயில் மற்றும் மழையில் போதிய பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் தற்போது மூடப்பட்டுவிட்டது. இதனால் தினமும் ரயில் மூலம் வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதியுறுகின்றனர். சிலர் ரயில் நிலைய வாயில் பகுதியில் பாதுகாப்பின்றி விட்டு செல்கின்றனர்.

ரயில் வரும் போது முதியவர்கள், பெண்கள் தண்டவாளத்தை கடந்து அடுத்த நடைமேடைக்கு செல்கின்றனர். முதியவர்கள், பெண்களின் நலன் கருதி எக்ஸ்லேட்டர் அமைக்க வேண்டும். மேலும் சிதம்பரம் ரயில் நிலையம் கும்பகோணம் ரயில் நிலையம் போன்று அடிக்கடி பெருக்கி, சுத்தம் செய்து சுகாதாரம் பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தென்னக ரயில்வே அதிகாரிகள் சிதம்பரம் ரயில் நிலையத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும்'

சிதம்பரம் ரயில் நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் தில்லை சீனு கூறுகையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். திருச்சிசென்னை இடையே செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பயணிகள் பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. எனவே, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மயிலாடுதுறை-விழுப்புரம் பாசஞ்சர் ரயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் பழைய ரயில் நிலைய கட்டிடத்தில் மரங்கள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும், என்றார்.

கண்டு கொள்ளாத எம்பி.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. முக்கியமாக புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரத்தில் நிற்காமல் செல்கிறது. சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்னைகள் மீது சிதம்பரம் எம்.பி சந்திரகாசி கண்டுகொள்ளாததால் சிதம்பரம் தொகுதி மக்கள் எம்பி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் எம்பி சந்திரகாசி சிதம்பரத்திற்கு வந்தால்தானே தொகுதி மக்களின் பிரச்னை தெரியும் என்றும் கூறுகின்றனர்.

'பெங்களூரூக்கு ரயில் விட வேண்டும்'

அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், கட்டுமான பொறியாளர் சங்க சாசன தலைவருமான ரவிச்சந்திரன் கூறுகையில், புவனேஸ்வர்ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. சிதம்பரத்தை விட சிறிய ஊரான சீர்காழியில் அந்த ரயில் நிறுத்தப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக வெளி மாநில மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம், கடலூர் வழியாக புதிய விரைவு ரயில் பெங்களூரூக்கு விட வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடைக்கு செல்ல இணைப்பு பாலத்தை நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால் பல்கலைக்கழக மாணவர்கள் தண்டவாளத்தை கடக்காமல் எளிதில் பல்கலைக்கழகத்திற்கு செல்லலாம், என்றார்.

தமிழகத்தை வாட்டும் வெயில்.. சேலம், மதுரை, திருச்சி உள்பட 7 இடங்களில் சதம் அடித்தது

சென்னை: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் நகரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் துவக்க மாதமான மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோவை, தருமபுரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் 90 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 96 டிகிரி வெப்பம் பதிவானது. கடலூரில் 92 டிகிரி, கன்னியாகுமரியில் 95, நாகையில் 93 டிகிரி வெப்பம் பதிவானது. தஞ்சாவூரில் 82 டிகிரி, தூத்துக்குடியில் 92 டிகிரி, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 68 டிகிரி வெப்பம் பதிவானது.

நேற்றைய அளவை விட இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. வெயில் தாக்கத்தின் காரணமாக இளநீர், பதனீர், பழ ஜூஸ் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Source: tamil.oneindia.com
source: oneindia.com
பழைய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு! 




குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது கைப்பேசியில் SMS மூலம் தகவல் வந்ததற்குப் பின்னால், குடும்ப அட்டைதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளைப் பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி பேசுகையில், "எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் 'ஏழைகள் மகிழ வேண்டுமென்றால், ஏழைகளின் வயிறு நிறைய வேண்டும், அதற்கான திட்டம்தான் மற்ற எல்லா திட்டங்களைவிட நாட்டுக்கு மிக மிக அவசியமான திட்டம்' என்றார்கள். தங்கள் ஆட்சிக்காலங்களில் பாமர அடித்தட்டு மக்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்களை மகிழ்விக்கும் திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தினார்கள். எம்.ஜி.ஆர். ஏழைக் குழந்தைகள் பசியாற சத்துணவுத் திட்டத்தையும், ஜெயலலிதா ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகத்தையும் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்து பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், வெளிநாட்டினரையும் வியக்க வைத்தார்கள்.

உணவு உற்பத்தியில் மிகை மாநிலங்களான ஆந்திரா, சத்தீஷ்கர், பஞ்சாப், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில்கூட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலைக்குதான் அரிசி வழங்கப்படுகிறது. அதேசமயம் நமது தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.6.2011 முதல் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவுத்துறைக்கு ஆண்டு ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 840 நியாயவிலைக் கடைகள் வாயிலாக, அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு தற்போது தாளில் அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

2012-2013 மற்றும் 2013-2014 ஆகிய ஆண்டுகளில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேட்டு விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு 330 கோடி ரூபாய் செலவில் பொதுவிநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கவும், அதனை ஐந்தாண்டுக்காலம் பராமரிக்கவும், ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கணினிமயமாக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2015-ம் ஆண்டு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் நிறுவப்பட்டு பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் அனைத்தும் இணையவழியே கண்காணிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.



தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பொருட்டு, விற்பனை முனைய இயந்திரங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, புதிய தரவுத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 6 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 5 கோடியே 85 லட்சம் உறுப்பினர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகளில் ஒரு கோடியே 17 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு முழுமையான ஆதார் விவரங்களும், 70 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆதார் எண் விவரங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தக் குடும்ப அட்டைகளில், 99 சதவிகித குடும்ப அட்டைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் விவரங்களாவது சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு தற்போது வழங்கப்படவுள்ளது. இந்த மின்னணு குடும்ப அட்டைகளின் விலையை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுடைய குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விவரங்களை அவ்வப்போது குறுஞ்செய்தி வாயிலாக அறியும் வகையில் இதுவரை ஒரு கோடியே 67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் கைப்பேசி எண்களும் சேகரிக்கப்பட்டு விவரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்பட்ட விவரத்தினை குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அவர்களின் கைப்பேசிக்கு அனுப்பப்படுவதன் மூலம் போலிப் பட்டியலிடுதல் தவிர்க்கப்படும். பொதுவிநியோகத் திட்டம் முழுமையாகக்ஜ் கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால், நியாய விலைக்கடைகளுக்கான அத்தியாவசியப் பொருள்களின் மாதாந்திர ஒதுக்கீடுகள் இணையவழி மூலம் மேற்கொள்ளவும், கிடங்குகள் முதல் நியாயவிலைக் கடைகள் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் நகர்வினை உடனுக்குடன் கண்காணிக்கவும் இயலும். மேலும் ஒரு நபர், ஒன்றிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் அவரின் பெயர் இடம்பெறுவது தவிர்க்கப்படுவதால், போலிக் குடும்ப அட்டைகள் மற்றும் போலிப் பட்டியலிடுதல் போன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டம் சார்ந்த குறைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்டம் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைகள் குறித்த மனுக்கள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் குறித்த மனுக்கள் ஆகியவற்றை இணையவழி மூலமாக சமர்ப்பிக்கலாம். இத்தகைய மனுக்களை துறை அதிகாரிகள் இணையவழியாக ஆய்வு செய்து, தகுதியுள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகள் தொடர்பான சேவைகள் விரைவில் கிடைத்திட வழி ஏற்படும். மேலும், இத்தகைய சேவைகளை பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் இன்று தொடங்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதத்துக்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை பெறுகிறவரை தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகள் மூலம் ரேஷன் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது கைக்பேசியில் SMS மூலம் தகவல் வந்ததற்குப் பின்னால், குடும்ப அட்டைதாரர்கள் அங்காடிகளுக்கு நேரில் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஜெயலலிதா விட்டுச்சென்ற மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என்று கூறினார்.

Dailyhunt

NEWS TODAY 14.02.2026