Wednesday, April 12, 2017

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை,
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வேலூர், கரூர், நெல்லை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களில் 90 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. சென்னையிலும் பிற மாவட்டங்களுக்கு நிகராக வெயில் கொளுத்தி வருகிறது. சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி செல்வதை காணமுடிகிறது.

கானல் நீர் வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றுகிறது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைகின்றனர். சென்னையில் ‘வார்தா’ புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதால் நிழலை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் வியாபாரம் களைகட்டி வருகிறது.

ஓய்வில்லாத மின்விசிறிகள் பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடி நடந்து செல்வதை காணமுடிகிறது. மேலும் சிலர் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்குகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., ‘ஏர்கூலர்’களை ஓய்வு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Link accounts to Aadhaar by April 30, says I-T dept
New Delhi
TIMES NEWS NETWORK 
 


Lack Of Info May Lead To Blocking Of Accounts 
 
Accounts opened from July 2014 to August 2015 will have to submit know your customer (KYC) details and their Aadhaar number to banks and financial institutions by April 30 and self-certify them to comply with FATCA regulations (Foreign Tax Compliance Act), the tax department said on Tuesday .
 
In case the account holders are unable to furnish details and provide self-certification by the new deadline, banks and financial institutions have the option of blocking the accounts. Once the details are furnished they can operate the accounts. The provision applies to accounts which come under the ambit of FATCA regulations.

Banks and financial institutions were asked to obtain self-certification and carry out due diligence for all individual and entity accounts opened from July 1, 2014 to August 31, 2015 to comply with the Foreign Account Tax Compliance Act (FATCA) pact signed by India and the United States.
In July 2015, India and the US signed a tax information sharing agreement under a new US law, FATCA, aimed at bolstering efforts for automatic exchange of financial information between the two nations about tax evaders. The agreement covers automatic sharing of information on bank accounts as well as financial products such as equities, mutual funds and insurance and is aimed at fighting the menace of black money stashed abroad.

“In case self-certifications are not provided till April 30, 2017, the accounts would be blocked, which would mean that the financial institution would prohibit the account holder from effecting any transaction with respect to such accounts,“ the tax department said in a statement.
“The transactions by the account holder in such blocked accounts may , thereafter, be permitted once the self-certification is obtained and due diligence completed,“ it said.
Tax officials said that the accounts would include banks, insurance, stocks.Account holders will also have to mention their Aadhaar numbers.

“Such self-certification and documentation was required to be obtained by the financial institutions by August 31, 2016, otherwise they were required to close the accounts and report the same if found to be a “reportable account“ as per prescribed due diligence procedure for preexisting account,“ the tax department said in a statement.
Don't try to evade tax inquiry: HC to MGR Univ VC
Chennai:
TIMES NEWS NETWORK 
 


“Don't try to escape the clutches of tax inquiry. You are occupying a responsible position and a public office. Income tax summons has not come from heaven, it has come after searches of your premises.“ That was a quote by the Madras high court, which on Tuesday refused to stay or quash I-T summons to Tamil Nadu Dr MGR Medical University vice-chancellor S Geethalakshmi.
 
After Justice K Ravichandrababu made it clear that he would neither stay the summons nor even extend the date for her appearance before the taxmen, the writ petition was dismissed as withdrawn.
Income tax officials on April 7 raided Dr Geethalakshmi's house and office.The officials had also searched the properties of health minister C Vijayabaskar and actor-politician R Sarathkumar.
After summoning all of them to appear before tax authorities on Monday , the date was changed to Wednesday (April 12) in the case of Geethalakshmi alone. While the minister and the actor obliged and answered queries for several hours, Geethalakshmi moved the high court, saying officials had not followed mandatory provisions of the Income Tax Act.Since she faced no investiga tion, summons ought not to have been issued to her, she said.

However, Justi ce Ravichandraba bu rejected the ar guments advanced by senior counsel S Gomathinayagam and said no intervention was possible in the matter.
Making it clear that the petition could not be entertained at all, the judge said if tax officials had issued summons, it was the responsibility of the recipient to appear and offer explanations to their satisfaction.

When the senior advocate sought the court to permit Geethalakshmi to appear before I-T officials on Monday in view of the intervening weekend, the judge said that the plea could not be entertained at all. Facing dismissal, counsel sought permission to withdraw the petition. It was then dismissed as withdrawn.

Tuesday, April 11, 2017

ஓய்வூதியம் என்றால் என்ன???

நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.

செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.

‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.

நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.

ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்

1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.

இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .

ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.

நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது.

10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல்‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.

ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.

அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?

புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.

-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.

இப்படி பட்ட cps காகத்தான் போராடுகிறோம் என்பதை cps  தோழர்களுக்கும் பொதுமக்களுக்கு ம் தெரியப்படுதுங்கள்.

Sri Ramakrishna Hospital gets quality certification

Sri Ramakrishna Hospital recently received certification from the U.S. based Medical Travel Quality Alliance (MTQuA).

Julie W. Munro, president and founder of MTQuA, and Janet M. Geddes, finance and governance senior advisor from the U.S., visited the hospital for three days and assessed the facilities for certifying the hospital.

The certificate was handed over to Swathy Rohit, chief business officer, SNR Sons charitable Trust, in the presence of C. V. Ramkumar, chief executive officer, SNR Sons charitable Trust, in the presence of dean P. Sukumaran, and medical director Issac Moses.

Medical Travel Quality Alliance offers cross-services medical tourism certification for hospitals, clinics, agencies, speciality treatment centres, resorts, including training and workshops to support and enhance certification standards and protocols.

காயமடைந்த சிறுமி மேல் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு:சிவகங்கை அரசு மருத்துவமனையில் அலட்சியம்

சிவகங்கை; விபத்தில் மூக்கில் காயமடைந்த சிறுமி, சிவகங்கை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறமுடியால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை காமராஜர் தெரு கருப்பு. இவரது மகள் சுவேதா, 14. இவர் கடந்த ஏப்.,6ல் பழைய கோர்ட் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த ஒரு டூவீலர் மோதியதில் கீழே விழுந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களுடன், 'ஏ.ஆர்.,' ரிப்போர்ட் எனப்படும் விபத்து அறிக்கை (ஆக்ஸிடென்ட் ரெஜிஸ்டர்) இணைத்து அனுப்பப்பட வேண்டும். ஆனால், சிவகங்கை அரசு மருத்துவமனை வார்டு நர்ஸ்களின் அலட்சியத்தால்,'ஏ.ஆர். ரிப்போர்ட்' இல்லாமல் மதுரைக்கு அனுப்பப்பட்ட சிறுமி சுவேதாவை வார்டில் அனுமதிக்காமல் புறநோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
'ஏ.ஆர். ரிப்போர்ட்' வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தியதால், சிறுமி பெற்றோர், அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வந்து கேட்டுள்ளனர்.

ஆனால், நர்சுகள் அலட்சியமாக இருந்ததுடன் 4 நாட்களாக சிறுமியின் பெற்றோரை அலைய விட்டுள்ளனர். நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த சிறுமியின் பெற்றோர், கதறியழுதும் 'ஏ.ஆர். ரிப்போர்ட்' வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.நடந்த விபரங்களை அறிந்த பேராசிரியர் மகேஸ்வரி, நேரில் வார்டுக்கு சென்று 'ஏ.ஆர். ரிப்போர்ட்'டை கண்டுபிடித்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

கொளுத்தும் வெயிலால் கருகும் மக்கள்... சதம் அடித்து வதம்! வரும் நாளில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கோடை மழை ஏமாற்றி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று, இதுவரை இல்லாத அளவாக, 105 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டியது.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.நடப்பு ஆண்டும், போதிய மழை பெய்யவில்லை. குளிர் காலமான, ஜன., மாதத்தில், திருப்பூரில், 21 மி.மீ.,; காங்கயத்தில், 14.4 மி.மீ.,; அவிநாசி,6 மி.மீ.,; உடுமலை, 4.1 மி.மீ.,; பல்லடம், ஒரு மி.மீ., என, 6.64 மி.மீ.,மழை மட்டுமே பெய்தது. பிப்., மாதம் மழை பெய்யவில்லை. குளிர் கால மழை ஆண்டு சராசரி, 9.02 மி.மீ., ஆக உள்ள நிலையில், இந்தாண்டு குறைந்தது.வறட்சிக்கு கோடை மழை கைகொடுக்கும் என்ற நிலையில், கடந்த மாதம் ஓரளவு மழை பெய்தது. தாராபுரத்தில், 74.5 மி.மீ.,; காங்கயம், 47.6 மி.மீ.,; பல்லடம், 14 மி.மீ.,; மூலனூர், 14 மி.மீ.,; அவிநாசி, 6.7 மி.மீ.,; திருப்பூர், 4 மி.மீ.,; உடுமலை, 3.6 மி.மீ., என, மாவட்டத்தில் சராசரியாக, 23.49 மி.மீ.,மழை பெய்தது.

மார்ச் மாத, சராசரி மழை பொழிவு, 21.32 ஆக உள்ள நிலையில், இரண்டு மி.மீ., கூடுதலாக பெய்தது. ஆனாலும், கடும் வறட்சி மற்றும் பாசனம், குடிநீர், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், போதிய மழை பெய்யவில்லை. நடப்பு ஏப்.,மாதத்திலும் போதிய மழை பெய்யவில்லை. 6ம் தேதி இரவு, அவிநாசியில் மட்டும், 18 மி.மீ.,மழை பெய்தது.மழை பெய்யாததால், கடுமையான வறட்சி நிலவி வருவதோடு, வெயிலின் தாக்கமும் முன்னதாவே துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக வெயிலின் கடுமை அதிகரித்த நிலையில், நேற்று, வெப்ப நிலை உச்சத்தை தொட்டுள்ளது.நேற்று <<<உச்ச அளவாக 105 டிகிரி பாரன்ஹீட் ( 41 டிகிரி செல்சியஸ்) வெயில் அடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி நட்சத்திர வெயில் போல், வெப்பத்தின் தாக்கம் அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சூழல் நிலவுகிறது.

 திருப்பூரிலுள்ள பெரும்பாலான ரோடுகளில், நேற்று "கானல்நீர்' தென்பட்டது.ஏற்கனவே, வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என பாதிப்பை சந்தித்து வரும் திருப்பூரை, வெயிலும் சேர்ந்து கொண்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்., மாதத்திலேயே "சதம்' தாண்டி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டு கோடை காலத்தை சமாளிப்பது என்பது மிகப்பெரிய சவாலே

.இது குறித்து கோவை வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், ""திருப்பூரில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, 41 டிகிரி செல்சியல் (105 பாரன்ஹீட்) என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில், வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு கோடை மழைக்கு வாய்ப்பில்லை. 14ம் தேதி பொங்கலூர் பகுதியில், வானம் மேக மூட்டத்துடனும், சிறிய அளவில் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது,'' என்றார்.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...