Saturday, April 22, 2017

எப்போது தீரும் சோமாலியாவின் சோகம்?
அஷ்வினி சிவலிங்கம்

சோமாலியாவில் நிலவி வரும் வரலாறு காணாத பஞ்சத்தால், அங்கு உள்ள மக்களுக்கு சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு உயிரிழந்து வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.




கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று கடந்த பிப்ரவரி மாதம் யூனிசெஃப் எச்சரித்திருந்தது. யூனிசெஃப் எச்சரித்தப்படி தற்போது அங்கு சூழல் மோசமாகி வருகிறது. அங்குள்ள குழந்தைகள் ஊட்டசத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி மோசமான சுகாதாரம் காரணமாக குழந்தைகளுக்கு காலரா உள்ளிட்ட நோய்கள் தாக்கி உள்ளன.

கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 48 மணி நேரத்தில் 110 பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் அது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக சோமாலியாவில் உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சோமாலிய அதிபர் முகமத் அப்துல்லாஹி முகமது பஞ்சத்தை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறார். வறட்சி, சுகாதார சீர்க்கேடு மட்டுமில்லை தற்போது இருப் பிரிவினர் இடையே கலவரங்கள் ஏற்பட்டு மேலும் மேலும் அங்குள்ள மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.
உங்கள் மொபைல் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்? #MobileTips
கார்க்கிபவா





மொபைல்போன் மலிவாகிவிட்டது. ஆனால், அதன் உதிரிபாகங்கள் விலை குறைவதே இல்லை. டச் ஸ்க்ரீன் மாற்ற நேர்ந்தால், மொபைல் விலையில் பாதியை கேட்கிறார்கள். போலவே, பேட்டரியை மாற்றுவதென்றாலும் அதிக பணத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும், என்ன காரணங்களால் பேட்டரி செயலிழக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

1) அடிப்படையான விஷயத்தில் இருந்தே தொடங்குவோம். நீண்ட நேரம் சார்ஜில் இருந்த பின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரி கதை முடிந்தது என அர்த்தம். புது பேட்டரி மாற்றுவதற்கு முன் அதே மாடல் பேட்டரி கிடைத்தால் போட்டு செக் செய்யலாம். விலை மலிவு என்பதற்காக போலி பேட்டரிகளை வாங்க வேண்டாம். அது நன்றாக இருக்கும் மொபைலையும் சேர்த்து கெடுத்துவிடும்.

2) சில பேட்டரிகள் வலுவிழுந்த யானையை போன்றது. தனக்குள் சக்தியை ஸ்டோர் செய்து, அதிலிருந்து மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மொபைல் இயங்கும். சார்ஜில் இருந்து எடுத்த உடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும். ஆபத்துக்கு உதவுவதாக எப்போதும் சார்ஜிலே போட்டு பயன்படுத்தினால், அது மொபைலையே வீணடித்துவிடும்.

3) அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். ஆனால், அந்த சூடு வெளியே தெரியாத அளவுக்கு தயாரிக்கப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது எனப் பொருள். அதே சமயம், எப்போது சூடாகிறது என்பதை கவனிக்கவும். நீங்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றினால், அதனால் கூட மொபைல் சூடாகலாம். காரில் சென்றால் கூட வெயில் படும் இடத்தில் மொபைல் நீண்ட நேரம் இருந்தால் சூடாகும்.

4) பேட்டரி குண்டாகும். நோக்கியா 3310 காலங்களில் இது அதிகம் நடந்தது. காரணம், இரவு முழுவதும் சார்ஜில் போட்டு வைத்ததே. இப்போது வரும் சார்ஜர்கள், மொபைல் 100% சார்ஜ் ஆனதும் தானாக ஆஃப் ஆகிவிடும் என்பதால், பேட்டரிக்கு அந்தப் பிரச்னை இருப்பதில்லை. ஆனாலும், வேறு சில காரணங்களால் பேட்டரி குண்டாகலாம். இப்போது பெரும்பாலான மொபைல்களில் பேட்டரியை தனியே எடுக்க முடியாது. அதனால் பேட்டரி உருமாறியிருக்கிறதா என்பதை ஸ்பின் டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்பின் டெஸ்ட் என்றதும் பெரிய விஷயம் என நினைக்க வேண்டாம். சமதளத்தில், பேட்டரி இருக்கும் திசை கீழிருக்கும் படி மொபைலை வைக்கவும். இப்போது மொபைலை பம்பரம் போல சுற்றிவிட்டால், குண்டான பேட்டரி சுற்றும்.



5) ஆண்ட்ராய்டு யூஸர்கள் *#*#4636#*# என்ற எண்ணை டயல் செய்யலாம். உங்கள் பேட்டரியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்டை அது சொல்லிவிடும்.

6) சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும், 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன் பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து மொபைல் ஆஃப் ஆகிவிடும். இதுவும், பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால் அந்த பேட்டரியையும் மாற்றி விடுவது நல்லது.

பேட்டரியை மாற்றும்போது முடிந்தவரை அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது. ஏனெனில், சில சமயம் மொபைல் பிரச்னையை நாம் பேட்டரி பிரச்னை என எண்ணி விடலாம். சர்வீஸ் சென்டரில் அதை சோதித்து சொல்லிவிடுவார்கள்.

விடுமுறைகளை விலக்குவோம்

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 22nd April 2017 01:31 AM  | 
அண்மையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 'நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும், உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது சிறிதும் தேவையற்றது.
ஏனெனில், பல மாணவர்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஏன் என்பதுகூட தெரியவில்லை. எனவே, தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அத்தலைவர்களைப் பற்றி மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அதனால், இனி தலைவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாள்கள் ஆகியவற்றுக்கு இனி உத்தரப் பிரதேசத்தில் விடுமுறைகள் கிடையாது' என அதிரடியாக அறிவித்துள்ளார்.
பொதுவாக நம் நாட்டு பள்ளிக்கூடங்களில் வருஷத்திற்கு 220 நாட்களாவது வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பல பள்ளிகள் இந்த விதிமுறையைப் பின்பற்றுவது கிடையாது.
சமீபக் காலமாக பள்ளிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, பல சந்தர்ப்பங்களில் அரசியல் காரணங்களாக விடுமுறைகளை அறிவித்து விடுகின்றன.
இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி பொழுதைக் கழிக்கிறார்கள்? பெரும்பாலான மாணவர்கள் இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் வீட்டில் தங்குவதில்லை.
வெளியே நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலும், தொலைக்காட்சியிலும், கணினியிலும், செல்லிடப்பேசியிலும் திரைப்படங்களைக் கண்டு களிப்பதிலும் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த நண்பர்களுடனான சந்திப்பு பல நேரங்களில் சண்டைச் சச்சரவுகளில் தான் முடிகிறது.
இதனால், வீட்டிலும் பிரச்னை, வெளியிலும் பிரச்னை. மேலும், இந்நாட்களில் திரை அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விடுமுறை எந்த நோக்கத்திற்கான விடப்படுகிறது என்று மாணவர்களுக்குத் தெரியவில்லை.
எனவே, எந்தவித பயனுமில்லாமல் மாணவர்கள் தேவையற்ற வகையில் பொழுதைக் கழிப்பதற்காகவே விடப்படும் இத்தகைய விடுமுறைகள் தேவைதானா?
பள்ளி மாணவர்கள், இனி முக்கியத் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களை பற்றிய நல்ல விவரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தொடர்பான விடுமுறை நாட்களின் போது சுதந்திரப் போராட்ட தியாகிகள் இந்திய விடுதலைக்காகவும், சமூக நீதிக்ககாவும், தீண்டாமை, ஜாதி ஒழிப்பு போன்றவற்றிக்காக போராடி வென்றதையும், அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, வறுமையில் உழன்று, தூக்கு மேடையையும் துச்சமென மதித்து நம் நாட்டிற்கு எவ்வாறு சுதந்திரம் வாங்கித் தந்தார்கள் என்பதையும் எடுத்துக் கூறி மாணவர்கள் ஊக்கம் பெறும் வகையில் அன்றைய தினம் பள்ளியில் வகுப்பு எடுக்க வேண்டும்.
சுயநலமில்லாமல் பொது நலத்துடன் போராடிய அந்தத் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும். இதனால், அவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகரித்து, அத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்த உதவும்.
அதுபோல சமயத் தலைவர்களின் விடுமுறை நாள்களின் போது அவர்கள் எடுத்துரைத்த அரிய உண்மைகளையும், அவர்கள் வாழ்வில் நடந்த சீரிய நிகழ்ச்சிகளையும், சிறந்த கொள்கைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பாடங்களை போதிக்க வேண்டும்.
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று இந்து மதம் கூறியுள்ளவதையும், அரசனாகப் பிறந்த சித்தார்த்தன் எவ்வாறு புத்தன் ஆனார் என்பது குறித்தும், அவரது போதனைகளில் தலையாயதான ஆசையே எல்லா துயரத்திற்கும் காரணம் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
பல பேரரசுகளை வென்று மாவீரரான அலெக்ஸாண்டர், நான் என்ற அகந்தையை கைவிட்டது, வர்த்தமானர் எவ்வாறு மகாவீரரானவர் என்பது, மனிதர்களில் ஜாதி மத பேதமில்லை என்றுரைத்த குருநானக் சிந்தனைகளையும் போதிக்க வேண்டும்.
உன்னைப் போல் பிறரையும் நேசி என்று கிறிஸ்தவ மதமும் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் என்ற நபிகள் நாயகம் போதனைகளை அருளிய இஸ்லாம் மதமும் மக்களிடையே இணக்கமான அன்பையே போதிக்கின்றன.
இவற்றை விடுமுறை நாட்களில் மாணவர்களிடம் எடுத்துரைத்தால் இளமையிலே மாணவர்களிடையே சமய நல்லிணக்கம் வளர்வதுடன், வேற்றுமையில் ஒற்றுமையுடன் விளங்கி ஒற்றுமையுடன் பழகுவார்கள்.
இதனால் மாணவர்களிடையே கல்வி அறிவுடன், ஒழுக்க சிந்தனையும் ஒருங்கே வளர்வதனால் எதிர்காலத்தில் சாதி, சமய பேதமற்ற சமுதாயத்தை நம்மால் உருவாக்கவும் முடியும்.
விடுமுறை நாட்களில் மாணவர்களின் எண்ணங்கள் நல்வழி காண மடை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி பள்ளிகளில் அவ்வப்போது விடப்படும் தேவையற்ற விடுமுறைகளை விலக்குவதுதான்.
காலத்தை வீணாக்குவது என்பது வாழ்வையே வீணடிப்பது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. உலகில் உள்ள அரியவற்றிலெல்லாம் தலையாது நேரம்தான். அதனை விலை கொடுத்து வாங்க முடியாது. எனவே மாணவர்கள் விடுமுறை நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் வம்பு

2017-04-20@ 14:17:10




நன்றி குங்குமம் டாக்டர்

விரல்கள் பத்திரம்

தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆமாம்... வாட்ஸ்-அப் அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு WhatsAppitis என்ற பிரச்னை ஏற்படுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லட்சுமிநாதனிடம்இந்தப் புதிய பிரச்னை பற்றி கேட்டோம்...

‘‘வாட்ஸ்-அப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் கைகளில் ஏற்படும் அழற்சியையே வாட்ஸப்பைட்டிஸ் என்கிறார்கள். அதாவது, வாட்ஸ்-அப் தொடர்ந்து பயன்படுத்தும்போது விரல் எலும்புகள் மற்றும் சவ்வு பகுதியில் வலி, வீக்கம், எலும்பு தேய்மானம், விரல்களை இணைக்கிற இணைப்பில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் வாட்ஸப்பைட்டிஸ் என்பது அதிகரித்து வருகிற பிரச்னையாகவும் உருவாகி இருக்கிறது.

உடலின் ஒரே பகுதியில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் உண்டாகும் வலியை Repetitive strain injury என்கிறோம். வாட்ஸப்பைட்டிஸ் அந்த வகைகளில் ஒன்றுதான்.தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் டைப் செய்துகொண்டே இருக்கும்போது கையில் உள்ள Interphalangeal joint, metacarpophalangeal joint, Wrist joint போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் கட்டைவிரல் நரம்பு மற்றும் சவ்வு பலவீனமாகி வீக்கம் அடைந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

அதனால், அதிக நேரம் வாட்ஸ் -அப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள், வயதானவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் வாட்ஸ்-அப்பில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு எளிதில் விரல் வீக்கம், தேய்மானம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.
கம்ப்யூட்டரில் பணிபுரிகிறவர்களுக்கும் இதேபோல் அதிக உடல் சோர்வு ஏற்பட்டு கை, கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடைந்து வலி உண்டாகிறது. இவர்களும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நேரத்தை அளவோடு பயன்படுத்தி, தேவையான ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கைகள் மற்றும் விரல்களில் வலி இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை, ஒத்தடம் அல்ட்ரோ தெரபி, மாத்திரைகள், கை உறை, பெல்ட் அணிவது போன்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன என்பதால் கவலை வேண்டியதில்லை.பொதுவாக, தொழில்நுட்பம் வளர்வதற்கேற்ப வேலை செய்யப் பழகிக் கொள்வதுபோல் அதற்கேற்ப நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில்லை. அதுதான் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு காரணம். அளவோடு பயன்படுத்தி, ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாண்டால் இதுபோன்ற தொந்தரவுகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்
பேரு பழசு... மேட்டர் புதுசு...

2017-04-21@ 12:14:07




நன்றி குங்குமம் டாக்டர்

உணவே மருந்து

‘‘பழைய சோறு என்றால் இரவில் மீந்து போன சோறு என்று மட்டுமே அர்த்தம் இல்லை. நம் முன்னோர்கள் அதன் பெருமைகளை உணர்ந்தே சாதத்தினை இரவுமுழுக்க நீரில் ஊற வைத்து காலையில் உணவாக உண்டு வந்திருக்கின்றனர். ஆமாம்... பேரு பழசாக இருந்தாலும் அதில் இருக்கும் சத்துக்கள் எல்லாமே புதுசு’’ என்கிறார் சித்தமருத்துவர் சத்திய ராஜேஷ்வரன்.

அப்படி என்ன பழைய சோற்றில் இருக்கிறது?

‘‘ஒரு நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத் தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய சாதம் சரியான தேர்வு என்று சொல்லலாம். கோடை காலத்துக்கு மிகவும் உகந்தது பழைய சோறு.பழைய சோற்று தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் குளர்ச்சி அடைந்து பசியைத் தூண்டும். இரவில் நீர் ஊறிய சோற்றை அந்த நீரோடு அருந்தினால் ஆண்மை பெருகும், தேகத்தில் ஒளி உண்டாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், பிரம்மை நோய்கள் நீங்கும்.

செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக பழைய சோற்றினை எடுத்துக்கொள்வது நல்லது. செரிமான சக்தி கூடுவதற்கு இது உதவும். பழைய சோறு 12 மணி நேரம் ஊறியதாக இருக்க வேண்டும்.அப்போதுதான் முறையான நொதித்தல் ஏற்பட்டு உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாகத் தோன்றும். பழையசோற்றுக்கு சின்ன வெங்காயம்தான் சரியான ஜோடி. சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது பித்த, வாத நோய்கள் நீங்கும்.

எனவே, பழைய சோற்றினை4 வயது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். காலையில் பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதால் வேலைக்குச் செல்பவர்கள் தயிர்/மோர் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பழைய சோற்றை சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் சமயத்திலும், உடலுக்கு குளிர்ச்சி தேவையில்லை என்கிற சமயத்திலும் தவிர்த்துவிடலாம்.பழைய சோற்றுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய அரிசி இயற்கை விவசாயத்தின் மூலம் விளைந்ததாக இருப்பது நல்லது. கைகுத்தல் அரிசியாக இருப்பது இன்னும் நல்லது. அப்போதுதான் பழைய சோறு எல்லா நன்மைகளையும் தரக்கூடியஉணவாக இருக்கும். வடித்த சோற்றினை கொண்டுதான் பழைய சோறு செய்ய வேண்டும்.

குக்கரில் சமைத்த சாதத்தில் இருந்து பழைய சோறு தயார் செய்யக்கூடாது. பழைய சோற்றினை பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடக் கூடாது. இயற்கையான தட்பவெட்ப நிலையில்தான் பழையசோறு ஊட்டச்சத்துமிக்க உணவாக மாறும். சோற்றினை ஊற வைக்கும்போது மண் பானையில் ஊற வைப்பதும் நல்லது.மண்பானையில் இயற்கையாகவே உணவின் சத்துக்களைப் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது. வெப்பம் பாதிக்காமல் உணவை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கிறது’’ என்கிறார் சத்திய ராஜேஷ்வரன்.பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் பற்றி உணவியல் நிபுணர் உத்ராவிடம் கேட்டோம்.

‘‘ஒரு நாள் உணவுப்பழக்கத்தில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அந்த முக்கியமான உணவுக்கு உகந்தது என்று பழைய சாதத்தைச் சொல்லலாம். ஒரு கப் பழைய சாதத்தில் 160 கலோரிகள் அடங்கியிருக்கிறது. இத்துடன் சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்கள், கனிமப் பொருட்கள் அடங்கியுள்ளன. பி 6 மற்றும் பி 12 வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இரவு முழுவதும் சாதத்தை ஊறவிடும்போது லாக்டிக் அமில பாக்டீரியா, நன்மை பயக்கக்கூடிய உயிர்ச்சத்துக்கள் ஆகியவை உருவாகின்றன.

பழைய சோற்றுடன் மோர்,வெங்காயம் மட்டும் எடுத்துக்கொள்ளாமல் காய்கறி அவியல், தேங்காய் துவையல், கறிவேப்பில்லை, புதினா, கொத்துமல்லி துவையல் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். இதனால் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும்.பழைய சோற்றை நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், வயிற்று கோளாறு உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதனால், நீண்ட நேரமானதைத் தவிர்த்துவிடலாம். அதேபோல் அரிசியின் தரம், சாதம் ஊற வைக்கிற தண்ணீர், உடல்நிலையைப் பொறுத்தும் பழைய சோறு பயன்படுத்த வேண்டும். தினமும் பழைய சோறு சாப்பிட விரும்புகிறவர்கள் புழுங்கல் அரிசி, பிரௌன் அரிசி, கைக்குத்தல் அரிசியில் சாதம் வடித்து பழையதாக்கி சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்
படங்கள்: ஆர்.கோபால்
மாடல்: சுதா செல்வகுமார்

மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2017-04-22@ 00:48:46




சென்னை : தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல் அதிமுக அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. கடிதம் எழுதி விட்டால் தன் கடமை முடிந்து விட்டது என்று கருதி, முதல்வரும் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி பாராமுகமாக இருக்கிறார். அதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் தேர்விலி ருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாவிற்கு இதுவரை அதிமுக அரசால் சட்ட அந்தஸ்தை பெற முடிய வில்லை.

தமிழக சட்டமன்ற மசோதாவிற்கு உரிய அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை பெறவில்லை என்பதால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டிய அரசு மருத்துவர் கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் சேர்ந்து படிக் கும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகி விட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை அதிமுக அரசு குறித்த காலத்தில் பெற்றிருந்தால் இப்படியொரு அவல நிலைமை ஏற்பட்டிருக்காது.

அனைவருக்கும் தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டிய அரசு இப்படி அலட்சிய மனப்பான்மையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டு, அரசு மருத்துவர்களின் நலனைக் காக்கத் தவறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் சென்றடையாத வண்ணம் செய்து விட்டது. அதிமுக அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகள் இதில் மிக முக்கியம் என்பதால் அரசு மருத்து வர்களின் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடை க்க அதிமுக அரசு அதி வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏப்ரல் 24ம் தேதி முதல் 339க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அடுத்த அதிரடி

2017-04-22@ 00:02:36




சென்னை: பிஎஸ்என்எல் செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் 339 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி இணைய டேட்டா பெறலாம். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம். அதேபோல் தனியார் நிறுவன எண்களுக்கு பேசும் போது தினமும் 25 நிமிடங்கள் இலவச அழைப்புகளை வழங்கி வருகிறது. ஜியோவுக்கு நேரடி போட்டியாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 339 ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3ஜிபி டேட்டா கட்டணமின்றி வழங்கும் புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளிஅழைப்புகளுக்கும் இலவசம், அதேபோல் வேறு நிறுவன எண்களுக்கு பேசும்போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம் என்பதில் மாற்றமில்லை.
இது மட்டுமின்றி மேலும் 3 அதிரடி சலுகைகளை திட்டங்களை பிஎஸ்என்எல் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி முதல் திட்டத்தில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் உள்வட்டத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் இலவசம். இது தவிர 2வது திட்டத்தில் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா இலவசம்.

மேலும் 3வது திட்டத்தில் 395 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா இலவசம். இது தவிர பிஎஸ்என்எல் எண்களுக்கு 3000 நிமிடங்களும், தனியார் நிறுவன எண்களுக்கு 1800 நிமிடங்களும் இலவசமாக பேசலாம். இந்த திட்டத்தின் பயன்பாட்டுக் காலம் 71 நாட்கள். அனுமதிக்கப்பட்ட இலவச அழைப்புகள் தீர்ந்து விட்டால் அதற்கு பிறகு பேசும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 20 காசுகள் கட்டணம் இந்த அதிரடி சலுகைகள் அனைத்தும் வரும் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...