Saturday, April 22, 2017


ஏப்ரல் 24ம் தேதி முதல் 339க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அடுத்த அதிரடி

2017-04-22@ 00:02:36




சென்னை: பிஎஸ்என்எல் செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் 339 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி இணைய டேட்டா பெறலாம். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம். அதேபோல் தனியார் நிறுவன எண்களுக்கு பேசும் போது தினமும் 25 நிமிடங்கள் இலவச அழைப்புகளை வழங்கி வருகிறது. ஜியோவுக்கு நேரடி போட்டியாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 339 ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3ஜிபி டேட்டா கட்டணமின்றி வழங்கும் புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளிஅழைப்புகளுக்கும் இலவசம், அதேபோல் வேறு நிறுவன எண்களுக்கு பேசும்போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம் என்பதில் மாற்றமில்லை.
இது மட்டுமின்றி மேலும் 3 அதிரடி சலுகைகளை திட்டங்களை பிஎஸ்என்எல் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி முதல் திட்டத்தில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் உள்வட்டத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் இலவசம். இது தவிர 2வது திட்டத்தில் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா இலவசம்.

மேலும் 3வது திட்டத்தில் 395 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா இலவசம். இது தவிர பிஎஸ்என்எல் எண்களுக்கு 3000 நிமிடங்களும், தனியார் நிறுவன எண்களுக்கு 1800 நிமிடங்களும் இலவசமாக பேசலாம். இந்த திட்டத்தின் பயன்பாட்டுக் காலம் 71 நாட்கள். அனுமதிக்கப்பட்ட இலவச அழைப்புகள் தீர்ந்து விட்டால் அதற்கு பிறகு பேசும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 20 காசுகள் கட்டணம் இந்த அதிரடி சலுகைகள் அனைத்தும் வரும் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...