Monday, April 24, 2017

“தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்” த.வெள்ளையன் அறிவிப்பு


“முழு அடைப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்” என்றும் த.வெள்ளையன் அறிவித்தார்.
ஏப்ரல் 24, 03:00 AM

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் நோக்கம் எதுவும் இல்லாமல் கடந்த 3-ந்தேதி, விவசாயிகள் நடத்திய பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு எங்களின் பேரவை தார்மீக ஆதரவை தந்தது. எனவே 25-ந்தேதி அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவெடுத்தோம்.

எனினும் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை எண்ணி, பொது நலன் கருதி 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம். இதனை நாங்கள் ஒரு கவுரவ பிரச்சினையாக நினைக்கவில்லை. எங்கள் நோக்கம் விவசாயிகள் நலம் பெறவேண்டும் என்பது தான். ஏனென்றால் எங்கள் பேரவை அரசியலுக்கு அப்பாற்பட்டது.

தீவுத்திடலில் மாநில மாநாடு

முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் எங்கள் பேரவையை சேர்ந்த 60 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். 65 லட்சம் கடைகள் மூடப்பட உள்ளது. அதேநேரம் 25-ந்தேதி மாநிலம் முழுவதும் தலைநகரங்களில் எமது பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெ றும். மே 5-ந்தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதேநேரம் சில்லரை வணிகம், சிறு மற்றும் சுய தொழில்கள் பாதிக்காத வகையிலும் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின்போது வணிகர் சங்கங்களின் பேரவை துணைத்தலைவர் பெருமாள், மாவட்ட தலைவர் சவுந்தரராஜன், இளைஞரணி செயலாளர் பி.எல்.ஆல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...