Tuesday, April 25, 2017

துணை கருவூலத்தில் முத்திரைத்தாள் திருட்டு
பதிவு செய்த நாள்24ஏப்
2017
23:03



கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு துணை கருவூலத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைத்தாள் மற்றும் நீதிமன்ற ஸ்டாம்புகள் திருடு போயின. கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் துணை கருவூலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை, 10.00 மணிக்கு பணிக்கு வந்த ஊழியர்கள், அலுவலக கதவுகள் திறந்து கிடந்ததையும், முத்திரைத்தாள் வைக்கும் அறைக்குள், இரும்பு பெட்டி, மரப்பெட்டி மற்றும் பீரோக்கள் அனைத்தும் திறந்து கிடந்தன.
பீரோவில் இருந்த முத்திரைத்தாள், நீதிமன்ற ஸ்டாம்புகள் திருடப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

பீரோவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 100 முத்திரைத்தாள்கள், 5.08 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற ஸ்டாம்ப் என மொத்தம், 25 லட்சம் ரூபாய் மதிப்புக்கு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், நேரடி விசாரணை நடத்தினர். துணை கருவூலத்தில் பணம் எதுவும் இருப்பு வைப்பதில்லை. முத்திரைத்தாள்கள் மற்றும் நீதிமன்ற ஸ்டாம்புகள் மட்டுமே இருப்பில் இருந்தன. அவற்றை குறி வைத்தே, மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர திருட்டில், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்; அவர்களிடமும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...