Friday, April 28, 2017

முதுகலை மருத்துவ படிப்பில் சேர்க்கை : 'சிறப்பு பெஞ்ச்' அமைக்க அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017
00:18 சென்னை: முதுகலை மருத்துவப் படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, 'சிறப்பு பெஞ்ச்' அமைக்க அல்லது விடுமுறை கால நீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

'முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசு பணியில் உள்ள டாக்டர்களை சேர்க்கும் போது, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே, ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அரசு டாக்டர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். மாநில அரசின் விதிமுறைகள், மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு வெளியிட்ட விளக்க குறிப்பின்படி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த, அனுமதிக்கும்படி கோரப்பட்டது.

இம்மனுக்கள், நீதிபதிகள், எச்.ஜி.ரமேஷ், டீக்காராமன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பின், டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை குறிப்பிட்டு, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தாலும், உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவு, எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.அதில், 50 சதவீத இடங்களில், மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு, மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்த வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில், வாதங்கள் இன்னும் முடிவடையவில்லை. இப்போதே வழக்கை பைசல் செய்வது, முறையாக இருக்காது.

எனவே, விடுமுறை காலத்தின் போது, இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு பெஞ்ச் ஏற்படுத்தும்படி, தலைமை நீதிபதியை வழக்கறிஞர்கள் கேட்டு கொள்ளலாம் அல்லது விடுமுறை கால நீதிமன்றத்தை அணுகலாம்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...