Saturday, April 29, 2017

முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கை மாநில இட ஒதுக்கீடு பின்பற்ற வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் 29 ஏப்
2017
00:01

மதுரை: முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், பூர்த்தி செய்ய நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் கார்த்திக் ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவைச் சிகிச்சை டாக்டராக பணிபுரிகிறேன். 2017 --18 முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் (நீட்) தேர்வில் பங்கேற்றேன். எனக்கு அகில இந்திய அளவில் 2180 வது இடம் கிடைத்தது. தமிழகத்தில் முதுகலை மருதுவப் படிப்பிற்கான மொத்த இடங்கள் 1350. மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்களை மருத்துவக் கவுன்சில் குழு, 50 சதவீதத்தை இட ஒதுக்கீடு அடிப்படையில் மாநில அரசும் நிரப்பும்.

இதில் 25 சதவீத இடங்கள் தொலைதுார மற்றும் மலைப்பகுதியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்படி பணிபுரியும் பகுதிக்கேற்ப 10 முதல் 30 சதவீதம் கூடுதல் மதிப்பெண் சலுகை கிடைக்கும். இதனால் பல டாக்டர்கள் தொலைதுார கிராமங்கள், மலைப்பகுதிகளில் பணிபுரிகின்றனர்.

இச்சூழ்நிலையில் முதுகலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகளில், சில திருத்தங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் செய்துள்ளது. இதனால், அகில இந்திய தகுதி அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். தொலைதுார கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் பணிபுரிய டாக்டர்கள் முன் வர மாட்டார்கள்.

முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறை (2017) மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகள் திருத்தத்திற்கு டைக்காலத் தடை விதிக்க   வேண்டும்.

முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கார்த்திக் ராஜன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலர்கள்,
மாநில மருத்துவக் கல்வி இயக்குனர், இந்திய மருத்துவக்
கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூன் 15 க்கு ஒத்தி
வைத்தது.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...