Thursday, April 27, 2017

250 நாட்களுக்கு மேல் ஆகியும் ஓடும் ரெயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு கிடைக்கவில்லை


ஓடும் ரெயிலில் துவாரம்போட்டு ரூ.5¾ கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 250 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
ஏப்ரல் 27, 04:17 AM

சென்னை,

செல்லாத நோட்டு என்பதால் இந்த வழக்கும் செல்லாக்காசு ஆகி விட்டதாக கருதப்படுகிறது.ஓடும் ரெயிலில் கொள்ளை

சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 9–ந்தேதி சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.342.75 கோடி கொண்டு வரப்பட்டது. சேலம் மண்டலத்திற்குட்பட்ட 5 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து இந்த ரூபாய் நோட்டுகள் 226 மரப்பெட்டிகளில் ‘சீல்’ வைக்கப்பட்டு ரெயிலில் கொண்டு வரப்பட்டது.

சேலத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்ட அந்த ரெயில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு வந்தது. ஓடும் ரெயிலில் பணம் கொண்டு வந்த ரெயில் பெட்டியின் மேற்கூரையை வெட்டி துவாரம் போட்டு அதன் வழியாக புகுந்த கொள்ளையர்கள் 3 மரப்பெட்டிகளை உடைத்து ரூ.5¾ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

இந்த கொள்ளை வழக்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கியது. நூதனமாக நடந்த இந்த கொள்ளை சம்பவம் போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும், சென்னை நகர போலீஸ் துணையோடு விசாரணை மேற்கொண்டனர்.

ரெயில் புறப்பட்ட சேலம் ரெயில் நிலையம் தொடங்கி, ரெயில் வந்தடைந்த எழும்பூர் ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையை ஆய்வு செய்து போலீசார் தடயங்களை சேகரித்தனர். ரெயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களிலும் முகாமிட்டு போலீசார் விசாரித்தனர்.சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வாலின் நேரடி மேற்பார்வையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. ரெயில் கொள்ளை சம்பவம் நடந்து 250 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை இச்சம்பவத்தில் குற்றவாளிகள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதுவரை சந்தேக நபர்கள் 5 ஆயிரம் பேரை பிடித்து விசாரித்தனர். மும்பைக்கு தனிப்படையினர் சென்று சுமார் 200–க்கும் மேற்பட்ட வடமாநில கொள்ளையர்கள் பற்றியும் விசாரணை மேற்கொண்டனர். வடமாநிலங்களில் ரெயில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் பற்றியும் விசாரித்து விட்டனர். ஆனால் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.செல்லாத நோட்டுகள்

கொள்ளையடிக்கப்பட்ட பணம் பெரும்பாலும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாகும். மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. எனவே அந்த பணம் செல்லாது என்பதால் இந்த வழக்கும் செல்லாக்காசாக ஆகிவிட்டது போன்ற தோற்றத்தில் தற்போது காணப்படுகிறது.

இந்த வழக்கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் எப்போது கேட்டாலும், ‘விசாரணை நடத்துகிறோம், கொள்ளையர்களை பிடித்த உடன் தகவல் சொல்கிறோம்’ என்று ஒரே பதிலை திரும்ப திரும்ப கூறுகின்றனர். அநேகமாக இந்த வழக்கு புதைகுழிக்கு போய்விட்டதாகவே போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னையில் பல இடங்களில் இரவில் திடீர் மின் தடை



சென்னையில் பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது.
ஏப்ரல் 27, 05:15 AM
சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்து வருகிறது. வெயில் தாக்கம் காரணமாக இரவிலும் அனல் காற்றே வீசி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இருந்து சென்னையில் பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. வேப்பேரி, அண்ணாசாலை, புதுப்பேட்டை, அண்ணாநகர், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்பட பல இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டதால், இருளில் மூழ்கியது. தெரு விளக்குகளும் எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இரவு 10 மணியாகியும் பல இடங்களில் மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளார்கள். மின்சாரம் எப்போது வரும் என்று மின்சாரவாரியத்திற்கு அவர்கள் தொலைபேசி வாயிலாக கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இது குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு இருக்கிறது. பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் மின் வினியோகம் கொடுக்கப்படும்’ என்றார்.
தேசிய செய்திகள்
டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் இன்று சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

டெல்லியில் கைதான டி.டி.வி.தினகரன் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து, விசாரணைக்காக அவர் இன்று சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

ஏப்ரல் 27, 06:00 AM

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

விசாரணை

இந்த வழக்கில் முதலில் கடந்த 16–ந் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அ.தி.மு.க. வக்கீல் பி.குமாரிடம் நேற்று முன்தினம் ஒரு நாள் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்

4–வது நாள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரனை போலீசார் கைது செய்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது பற்றி சுகேஷ் சந்திரசேகருடன் டி.டி.வி.தினகரன் தொலைபேசியில் பேசியதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனுடன் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் டெல்லி லஞ்ச ஒழிப்பு தனி கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று பிற்பகல் 3 மணிக்கு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதற்காக அவர்களை டெல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் தனது காரிலேயே அழைத்து வந்தார்.

போலீஸ் தரப்பில் மனு

அவர்கள் இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் வக்கீல் பல்பீர் சிங் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமான உரையாடல் பதிவுகள் மற்றும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி பூனம் சவுத்ரி,
ரூ.50 கோடி கைமாறியதாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.1 கோடியே 30 லட்சம்தானே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த தொகையை மட்டும்தானே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

ஹவாலா மூலம் பண பரிமாற்றம்

அதற்கு வக்கீல் பல்பீர் சிங், ‘‘டெல்லிக்கு ஹவாலா மூலம் முதலில் ரூ.10 கோடி வந்து சேர்ந்துள்ளது. இதில்
ரூ.1 கோடியே 30 லட்சம் முதலில் கைதான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள ரூ.8 கோடியே 70 லட்சம் எங்கே என்று தெரியவில்லை. மேலும் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரிக்க வேண்டி இருக்கிறது’’ என்றார்.

விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகர், ஜனார்த்தனன் ஆகியோர் பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், மேலும் 16 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

செல்போன்கள்

சுகேஷ் சந்திரசேகரை தொடர்பு கொண்டு பேச பல செல்போன்களை டி.டி.வி.தினகரன் பயன்படுத்தி இருப்பதாகவும், அவற்றை போலீசார் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்காக அவரையும், சுகேஷ் சந்திரசேகரையும் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும் பல்பீர் சிங் தனது வாதத்தின் போது தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்தல் முறையின் புனிதத்தன்மையை குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும், இவர்கள் தங்கள் விருப்பத்துக்காக எதையும் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

வக்கீல் எதிர்ப்பு

ஆனால் டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் பவா, அவரை கைது செய்ததற்கும், போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில் கூறியதாவது:–


கடந்த 22–ந் தேதி முதல் டி.டி.வி.தினகரனின் செல்போனை போலீசார் பறித்து வைத்துக்கொண்டு அவரிடம் ஏற்கனவே 4 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கினார். எனவே அவரை போலீசார் கைது செய்தது தவறு. அவரை கைது செய்ததற்கு சரியான காரணத்தையோ, உறுதியான காரணத்தையோ போலீசார் தெரிவிக்கவில்லை.

டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களை எல்லா வழக்குகளிலும் கைது செய்ய முடியாது. மிகவும் அபூர்வமாகத்தான் கைது செய்யவேண்டும். எனவே டி.டி.வி.தினகரனை மேலும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

5 நாள் போலீஸ் காவல்

அதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி, 4 நாட்கள் டி.டி.வி.தினகரனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம் என கூறினார்.

அப்போது உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத், ‘‘இந்த விவகாரத்தில் ஹவாலா பணம் பரிமாறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரையும் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இப்படி இருதரப்பினரும் மாறி மாறி வற்புறுத்தியதால் கோர்ட்டு நடவடிக்கைகளை சிறிது நேரம் ஒத்திவைத்த நீதிபதி பூனம் சவுத்ரி, அதன்பிறகு 5 நாட்கள் டி.டி.வி.தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின்படி, போலீஸ் காவல் விசாரணையின்போது டி.டி.வி.தினகரனுடன் அவருடைய வக்கீல் ஒருவரும் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உதவியாளர் ஜனார்த்தனன்

இந்த விசாரணை 45 நிமிடம் நடைபெற்றது. அப்போது கோர்ட்டு அறைக்குள் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் டி.டி.வி.தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் விசாரணைக்கு பின்னர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.

ஜனார்த்தனன் நேற்று கோர்ட்டு வளாகத்துக்கு வந்திருந்தார். அங்கு நின்று கொண்டிருந்த நிருபர்களிடம் அவர் பேசுகையில், டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்றார்.

சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

விசாரணை முடிந்ததும் டி.டி.வி.தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் இருவரையும் விசாரணைக்காக டெல்லி போலீசார் விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) மதியம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்.

இதேபோல் கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக போலீசார் மேற்கண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்கள்.

மேலும் சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர். இதேபோல் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

7 அதிகாரிகள் மீது சந்தேகம்

டெல்லிக்கு ஹவாலா மூலம் வந்து சேர்ந்த ரூ.10 கோடியில் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 30 லட்சம் போக, மீதமுள்ள ரூ.8 கோடியே 70 லட்சம் யார்–யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது? என்ற கேள்விக்கு போலீசார் பதில் அளிக்க வேண்டி உள்ளது.

இந்த பணம் தேர்தல் கமி‌ஷனுடன் தொடர்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வகையில் 7 அதிகாரிகள் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். அவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு போலீஸ் காவல் விசாரணை முடியும் போது, அந்த அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவி–மகள் சந்திப்பு

முன்னதாக நேற்று டெல்லி குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த டி.டி.வி.தினகரனை அவரது மனைவி அனுராதா மற்றும் மகள் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது டி.டி.வி.தினகரன் தான் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், கைக்கெடிகாரம் ஆகியவற்றை கழற்றி தனது மனைவியிடம் கொடுத்தார்.

இதேபோல் மல்லிகார்ஜூனாவை அவரது மகன் சந்தித்து பேசினார்.
மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அடைக்கலம் : டாக்டர்களுக்கு ரூ.1.4 கோடி அபராதம்
பதிவு செய்த நாள்27ஏப்
2017
00:59

புதுடில்லி : ஜாமினில் வரமுடியாத, 'வாரன்ட்' உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, ஹரியானா மாநில முன்னாள், எம்.எல்.ஏ.,வை, தங்கள் மருத்துவமனையில், சிகிச்சை என்ற பெயரில், 527 நாட்கள் தங்க வைத்த இரண்டு டாக்டர்களுக்கு, சுப்ரீம் கோர்ட், தலா, 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஹரியானாவில், ஐ.என்.எல்.டி., கட்சியை சேர்ந்த முன்னாள், எம்.எல்.ஏ., பல்பீர் சிங்கிற்கு எதிராக, ஒரு கொலை வழக்கில், ஜாமினில் வர முடியாத, 'வாரன்ட்' உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்தன. ஆனால், குருகிராம் நகரை சேர்ந்த தனியார் மருத்துவமனையின் இயக்குனர்கள் முனிஷ் பிரபாகர், கே.எஸ்.சச்தேவ் ஆகியோர், பல்பீர் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதாக பொய் காரணம் கூறி, தங்கள் மருத்துவமனையில், 527 நாட்கள் தங்க வைத்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய அமர்வு, மருத்துவமனை இயக்குனர்கள் இருவருக்கும், தலா, 70 லட்சம் ரூபாய் வீதம், 1.4 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
அட்சய திரிதியைக்கு தங்கம் : முன்பதிவுக்கு குவியும் கூட்டம்
பதிவு செய்த நாள்27ஏப்
2017
00:15

அட்சய திரிதியை தினத்தில், தங்க ஆபரணங்கள் வாங்க முன்பதிவு செய்வதற்காக, நகை கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அட்சய திரிதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் வாங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதனால், அன்றைய தினங்களில், தங்கம் விற்பனை, வழக்கத்தை விட, 20 - 30 சதவீதம் அதிகரிக்கும்.கடந்த, 2016ல், அட்சய திரிதியை மே மாதம் வந்தது. அப்போது, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கமிஷன் கெடுபிடிகள், கடுமையாக இருந்தன. இருப்பினும், 1,500 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின.
இந்நிலையில், நாளை, அட்சய திரிதியை வருகிறது. அன்று, தங்கம் வாங்க, நகை கடைகளில், தற்போது மக்கள் பணம் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், நகை கடைகளில், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''ஏப்., 28ல் துவங்கும் அட்சய திரிதியை, 29ல் முடிகிறது. ௨௦௧௬யை ஒப்பிடும் போது, தற்போது, தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், அட்சய திரிதியைக்கு, தங்க நகைகள் விற்பனை அதிகமாக இருக்கும்,'' என்றார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலை படி உயர்வு

பதிவு செய்த நாள்26ஏப்
2017
23:37

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஜனவரி, ௧ம் தேதி முதல், அகவிலைப் படியை, 4 சதவீதம் உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை: மத்திய அரசு அலுவலர்களுக்கு, 2017 ஜன., 1 முதல், அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி, ஜன., 1 முதல், நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு, 244 முதல், 3,080 ரூபாய் வரை, ஊதிய உயர்வு; ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 122 முதல், 1,540 ரூபாய் வரை, ஓய்வூதிய உயர்வு கிடைக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கு, அகவிலைப்படி உயர்வு நிலுவையாக, மே மாதம் சம்பளத்துடன் வழங்கப்படும். இதன் மூலம், 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். அரசுக்கு, ஆண்டுக்கு, 987 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


சொத்து விபரங்களை சமர்ப்பிக்கஉ.பி., முதல்வர் கடைசி கெடு
லக்னோ: உ.பி.,யில், சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, அரசு அதிகாரிகள், ஊழியர் களுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மே, 3க்குள், விபரங்களை சமர்ப்பிக்காதோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.





உ.பி.,யில், மார்ச், 19ல், முதல்வர் பொறுப் பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

அதிரடி

இதையடுத்து, 'அரசு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், 15 நாட்களுக்குள், தங்கள் வருமானம், சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் அதிரடியாக கூறினார். இதன்பின், அரசு ஊழியர்களும், தங்கள் சொத்து விபரங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது.

முதல்வர் ஆதித்யநாத்தின் இந்த அதிரடி உத்தரவுகளால், அமைச்சர்கள், அதிகாரிகள் பீதியடைந்தனர். இதையடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பலர், அரசு நிர்ணயித்த கெடுவுக்குள், சொத்து விபரங்களை வெளியிடாததால், முதல்வர் கோபமடைந்தார்.

எனினும், அரசு அலுவலகங்களில், ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்பு பணிகள் நடப்பதால், ஏப்., 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்களால், சொத்து விபரங் களை வெளியிட முடியாதென கூறப்பட்டது. இதை அடுத்து, அவர்களுக்கான கெடு, ஏப்., 25க்கு நீட்டிக் கப்பட்டது. எனினும், 'மூத்த அதிகாரிகள் பலர், தங்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை' என, தலைமை செயலர் ராகுல் பட்னாகர், முதல்வரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத, அதிகாரிகள், ஊழியர்களுக்கு, யோகி ஆதித்ய நாத் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, மாநில தலைமை செயலர் ராகுல் பட்னாகர் கூறியதாவது:முதல்வரின் உத்தரவை அடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்து உள்ளனர்.

உத்தரவு

மாநில அரசின் கீழ் செயல்படும், 84 துறைகளில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர் களும் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விபரங்கள், முதலீடுகள், வருமானத்திற்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை, அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுஉள்ளார். எனினும், சில துறைகளைச் சேர்ந்த அதிகாரி கள், இன்னும் தங்கள் சொத்து விபரங் களை வெளியிட வில்லை. அவர்களுக்காக, மே, 3 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடைசி கெடுவையும் மதிக்காத அதிகாரிகள், அரசின் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என, முதல்வர் எச்சரித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

ரோமியோக்களை கைது செய்ய வேண்டாம்!

உ.பி., மாநில, டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றுள்ள சுல்கான் சிங், மாநில சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அதன்பின், போலீசாருக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதில், போலீசார் சிறப்புடன் செயல்பட வேண்டும். ரவுடிகளை ஒடுக்குவதில், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும். பெண்களிடம் அத்து மீறலில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்வதற்கு பதிலாக, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு, அவர் களிடம், பிள்ளைகளின் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து, எச்சரிக்கை விடுக்க வேண்டும். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், வன்முறை யில் ஈடுபடுவோரை கைது செய்து, கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

NEWS TODAY 02.01.2026