Saturday, June 3, 2017

NEET

NEET results unlikely on June 8, says CBSE

TNN | Jun 3, 2017, 12.06 AM IST

CHENNAI: Results of National Eligibility Cum Entrance Test is unlikely to be declared on June 8, CBSE officials said.

Last week, the Madras high court had stayed all further proceedings with regard to the examination held on May 7 based on petitions praying for cancellation of NEET-2017. The judge asked the Union health and family welfare secretary, director-general health services, New Delhi, Medical Council of India (MCI), Central Board of Secondary Education (CBSE) and Tamil Nadu health and family welfare secretary to file replies by June 7.

Till date none of the agencies have sought for an early hearing. "It's unlikely for the results to be announced on June 8," a senior official told TOI. However, CBSE is yet to clarify a revised date for it.

More than 11.35 lakh students wrote the test across the country on May 7. In Tamil Nadu, 88,000 candidates had registered for NEET while 84,000 plus students appeared for the test. With the court order, CBSE had to stop evaluation of answer sheets. It also did not declare the answer keys as per schedule on May 30.

Tamil Nadu has 24 government run colleges and an equal number of private colleges. Even if the results are declared in mid-June, counselling sessions will begin only by the month-end. By then admission in many colleges would have closed. "The first concern for many of us is whether students will first secure the required mark to make it to the colleges. Without knowing that, we have had to apply for other colleges to keep options open. But even colleges have a deadline and will not reserve seats. Only when we get clarity on results can we move ahead," said R Geeta, a parent.

Officials also fear that seats may go waste if counselling schedules are pushed behind. Usually there are three phases of counselling in each category. If we delay, seats may go waste," said a senior official in the directorate of medical education.

In April 2016, the Supreme court made NEET mandatory for all medical and dental admissions. On May 7, CBSE conducted the examination across the country on behalf of the medical and dental councils of India.

Medical Council of India

Things back to square one at MCI as oversight committee's 'term' ends

TNN | Jun 3, 2017, 03.13 AM IST

A year after the Supreme Court constituted a three-member committee to oversee the running of the Medical Council of India (MCI) because it felt the body was failing to discharge its duties and needed an overhaul, things are back to square one, at least temporarily.
The oversight committee (OC), after completing one year, has started winding up its functioning in the absence of any extension of its tenure. The apex court had in its order of May 2 last year said the OC would "function till the Central Government puts in place any other appropriate mechanism", but had gone on to add that it would "function for a period of one year, unless suitable mechanism is brought in place earlier".

The OC itself reads this as a one-year tenure unless extended. Justice Lodha told TOI that in his view this was not in dispute. He said it was the health ministry's duty to have brought this to the SC's notice before the year ran out and sought an extension. The health ministry, however, seems to believe the OC's tenure is still on. "The matter is still under consideration and we are waiting for the Supreme Court vacation to get over," said a senior health ministry official, refusing to comment further.

The May 2, 2016 order of a five-judge bench of the Supreme Court came close on the heels of a parliamentary committee severely castigating the functioning of MCI as a regulator of medical education and of the profession and suggesting a complete redoing of the regulatory body and the Act governing it.

The SC appointed Justice RM Lodha, former chief justice of India, Vinod Rai, former Comptroller and Auditor General of India and Dr SK Sarin, director of the Institute of Liver and Biliary Sciences, as members of the OC. The order stated that the OC would function till the government put in place a new regulatory mechanism after "due consideration" of the Ranjit Roy Chaudhury committee report. This committee studied the Indian Medical Council Act, 1956 and suggested reforms in the regulatory oversight of the medical profession by the MCI .

On May 16, 2016, the health ministry notified the OC. The matter was to be listed after one year "for further directions as may become necessary". However, the Supreme Court summer vacation started on May 11 this year. The court will resume sitting only on July 3.

Though the Supreme Court had said that the OC will be "free to issue appropriate remedial directions", the OC's directions on how assessment of medical colleges were to be conducted and on the approval or recognition of colleges were not complied with by the MCI.

Friday, June 2, 2017

Posted Date : 15:45 (02/06/2017)

2 மயக்க ஊசி போட்டு யானையைப் பிடித்தனர்! 8 மணி நேரப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தி.விஜய்

சகாயராஜ் மு






நான்கு பேரை மிதித்துக்கொன்ற காட்டு யானைக்கு இரண்டு மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். எட்டு மணி நேரமாக நடந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமத்தில் இன்று அதிகாலை, காட்டு யானை புகுந்தது. இந்த யானை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகிய நான்கு பேரை மிதித்துக் கொன்றது. மூன்று பேர் காயமடைந்தனர்.



இந்தநிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினர் கும்கி யானையை வரவழைத்தனர். இருந்தாலும் யானையைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். பின்னர் மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க முயன்றனர். யானை அங்கும் இங்கும் ஓடியதால் மீண்டும் யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. இதையடுத்து கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றினர். இந்த யானை டாப்சிலிப்பில் உள்ள வரகழி முகாமுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.

காட்டு யானையைப் பிடித்ததன் மூலம் 8 மணி நேரப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
மயில்கள் இனப்பெருக்கம் பற்றி நீதிபதி சொன்ன கண்ணீர்க் கதை... எது உண்மை?
பழனிச்சாமி





“மயில்கள் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. ஆண் மயில் விடும் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில்கள் முட்டையிடுகின்றன. பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்கும் தெய்வீகப்பறவை அது. இந்துக்களின் புனித நூலில் ஒன்றான பகவத் புராணத்தில் இந்தத் தகவல் உள்ளது. மேலும், இது குறித்து ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை.”

இப்படி ஒரு அதிரடித் தகவலைக் கூறியிருப்பவர்.. யாரோ பாமரன் அல்ல. ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த நீதிபதி மகேஷ் சந்திரா சர்மா என்பவர். இவரது இந்தக் கண்ணீர்க் கதை உலக அளவில் வைரல் ஆகியுள்ளது.

சரி.. இதில் எந்த அளவு உண்மையுள்ளது என்பதை அறிந்துகொள்ளும் விதமாக நாம் சந்தித்த நபர், மயில்களைப்பற்றி நீண்டகாலமாக ஆய்வு மேற்கொண்டு வருபவரும், ‘மயிலு’ என்னும் 40 நிமிட ஆவணப்படத்தின் இயக்குநரும், ஊர்ப்புறத்துப் பறவைகள் என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான கோவை சதாசிவம்.

“நீதிபதி சர்மாவின் பேச்சு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. சட்டம் படித்த ஒரு மனிதர் இப்படியெல்லாம் பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர் சொல்லும் கண்ணீர்க் கதையில் கடுகளவும் உண்மையில்லை. கண்ணீரில் உயிரணுக்கள் எப்படி இருக்கமுடியும்? கோழி இனத்தைச் சேர்ந்த பெரிய பறவைதான் மயில். கோழி எதையெல்லாம் உண்ணுகிறதோ அதையெல்லாம் மயில்களும் உண்ணும். சேவல் கோழி, பெட்டைக்கோழிமீது ஏறி மிதித்து இனப்பெருக்கம் செய்வது போலத்தான் ஆண் மயில் தோகை விரித்து ஆடி பெண்மயிலைக் கவர்ந்து இழுத்து அருகில் வர வைத்து பெண்மயில்மீதி ஏறி உடலுறவு கொள்ளும். இது பல முறை நான் நேரில் பார்த்த நிகழ்வு.



பெண்மயில்கள் ஒரு தடவையில் அதிக பட்சம் 9 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகளை, கரடுமுரடான புதர்ப் பகுதியில் மண்ணைக்கிளறிப் போட்டுவைத்து கோழிகள் செய்வது போலவே அடைகாக்கும். இதுதான் நிதர்சனம்.
கண்ணீரைக்குடித்து கர்ப்பம் தரிக்கின்றன மயில்கள் என்பது வெறும் கேலிக்கூத்து” என்றார் சதாசிவம்.

“பறவைகள் எப்போதும் அழுவதில்லை....” என்பதாக கவிஞர் வைரமுத்துவின் பாடல்வரி ஒன்று உண்டு. அது நீதிபதிக்குத் தெரியவில்லை போலும், தெரிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டார்.

மயில்கள் பற்றிய சில தகவல்கள்:

ஆங்கிலத்தில் மயிலின் பொதுப் பெயர் Peafowl. ஆண் மயிலின் பெயர் Peacock. பெண் மயிலின் பெயர் Peahen.

இந்திய மயிலின் அறிவியல் பெயர், பாவோ க்ரிஸ்டாடஸ் (Pavo Cristatus).

ஆண் மயிலுக்குத் தமிழ் மொழியில், சேவல் என்ற பெயரும் உண்டு.

1972-ஆம் ஆண்டு இயற்றிய இந்தியச் சட்டப்படி, மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதிக ஒலியெழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. சாதாரண நாள்களைவிட, மழைக்காலங்களில் அதிகமுறை ஒலியெழுப்பும். காடுகளில் கேட்கும் மயிலின் குரல் மூலம், புலி போன்ற ஆபத்தான விலங்குகளின் இருப்பைத் தெரிந்துகொள்ளலாம்.
பிறந்து ஒரு நாளே ஆன மயில் குஞ்சுகள், தாயின் உதவியின்றித் தானாகவே நடக்க ஆரம்பிக்கும். உணவு உண்ணவும், நீர் அருந்தவும் செய்யும்.

ஆண் மயிலின் வண்ணமயமான தோகை, பெண் மயில்களை ஈர்க்கவும், பிற விலங்குகள் தாக்க வரும்போது, தனது தோகையை விரித்துக் காட்டி பயமுறுத்தவும் பயன்படுத்தும்.

மயிலின் தோகை, நாம் பார்க்கும் கோணத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களை எதிரொளிக்கும்.

அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.

மயில் தோகையின் வேறு பெயர்கள்... சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, பீலி, தொங்கல் மற்றும் தூவி.

1963-இல் மயில், இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.
“தினமும் சிரிச்சு பேசிட்டு இருந்த இடம் இப்படியா போகும்!” - கலங்கும் சென்னை சில்க்ஸ் ஊழியர்கள்
vikatan news

மு.பார்த்தசாரதி

சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலில் எண்ணெய்யை ஊற்றியதுபோல, தி.நகர் வெப்பத்தில் கொதிக்கிறது. நேற்று, சென்னை சில்க்ஸில் பற்றிக்கொண்ட தீயின் வேகம் கட்டற்றது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியர்வை வழிய தீயணைப்பு வீரர்களும் காவல் துறை அதிகாரிகளும் தீயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இருநாள்களுக்கு முன் பிரகாசமான விளக்குகள், கவர்ந்து இழுக்கும் விளம்பரப் பலகைகளால் சாலையில் செல்வோரைக்கூட திரும்பிப் பார்க்க வைத்த கடை இப்போது கருகிக் கிடக்கிறது. அதன் அருகில் இருக்கும் கட்டடங்களுக்கும் இதனால் கடும்பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை சில்க்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தேடினோம். அந்தப் பகுதியில் ஒருவரையும் பார்க்க முடியவில்லை.



கட்டடத்தின் பின்புறமுள்ள பார்க்கிங் வழியாக சென்றால் ஆண் ஊழியர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் பேச முயன்றபோது, தீ விபத்து தொடர்பாக ஊழியர்கள் யாரும் ஊடகத்தினரிடம் பேசக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவு போட்டுவிட்டார்களாம். அதனால், யாரும் நம்மிடம் பேசத் தயாராக இல்லை.

நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்த களைப்பில் ஓரமாய் அமர்ந்திருந்தோம். அருகே இருந்த ஊழியர் ஒருவர், “இங்க இருக்குற யாரும் எதுவும் பேச மாட்டாங்க. வேளச்சேரியில இருக்குற கடைக்கு போங்க... இந்தக் கடையில இருந்தவங்க எல்லாரையும் அங்கதான் மாத்தி விட்டுருக்காங்க” என்று சொன்னார். வேளச்சேரிக்குப் புறப்பட்டோம். வேளச்சேரி கடையிலிருந்து வெளியே வந்த ஒரு பெண் ஊழியர் பேசியபோது, "கடை எரிஞ்சதுல மனசே சரியில்லை" எனத் தயக்கத்தோடு பேசினார்.

“பேரு, போட்டோ எல்லாம் வேணாங்க. நான் சென்னை வந்து நாலு வருசமாகுது. என்னோட சொந்த ஊரு திருநெல்வேலி. ரெண்டு வேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக்கிட்டு இருந்தோம். இங்க வேலைக்கு வந்தப்பறம் பரவாயில்லை. சிக்கனமா இருந்து வீட்டுக்குப் பணம் அனுப்பி வைச்சிட்டு இருக்கேன். நகையில் இத்தனை டிஸைன் இருக்குனு இங்கே பார்த்தப்பதான் தெரிஞ்சுது. சில நகைகள் விலை அதிகமா இருக்கும், அதெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். அந்த நகை நல்லா இருக்கு, இது நல்லா இல்ல, இந்த டிரெஸ் சூப்பரா இருக்குனு என்கூட வேலைப் பார்க்கிற ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட பேசிட்டு இருப்போம்.

நேத்து காலைல நாலு மணிக்கெல்லாம் கடையில தீப்புடிச்சிடுச்சுன்னு எங்களுக்கு மெசேஜ் வந்துடுச்சு. சரி, ஏதோ சின்னதா இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும், மதியத்துக்கு மேல வேலைக்குப் போயிடலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா, அடுத்தடுத்து வந்த மெசேஜ்லாம் பார்த்தப்ப நெஞ்சு பதற ஆரம்பிச்சுடுச்சு. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. வேலை ஒரு பக்கம் இருந்தாலும்கூட எல்லோரோடும் சந்தோஷமா பேசி, சிரிச்சிட்டு இருந்த இடம். இன்னைக்கு கருகிக் கெடக்குது" என்று கண் கலங்கினார்.

அவரைத் தேடி வந்த சக பெண் ஊழியர், "நான் போன வருசம்தான் இங்க வேலைக்கு வந்தேன். பிரமாண்டமா பார்த்த கடை, இப்போ உருக்குலைஞ்சு கிடக்குது. டிவியில நியூஸைப் பார்த்துட்டு ஊருலேருந்து அம்மா, அப்பாலாம் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க பத்திரமா இருக்கோம்னு சொன்னப்பறம்தான் நிம்மதியானங்க. எங்க கூட வேலைப் பார்க்குறவங்க சில பேர், நம்மள வேலைய விட்டு அனுப்பிடுவாங்கன்னு பயமுறுத்துனாங்க. ஆனா, எங்களை வேற வேற ஊர்கள்ல இருக்குற கடைகளுக்கு மாத்தி விட்டுருக்காங்க" என்றார்.

சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது?

சிறப்புச் செய்தியாளர்
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத்

இடிபாடுகளுக்குள் புதைந்துகிடக்கும் கன்டெய்னர்களில் சிக்கியுள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாகத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 31-ம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பிடித்தது. தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி 7 மாடி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது.
தீவிபத்தில் பலத்த சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ள கன்டெய்னர்களில் உள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தரைத் தளத்தில் உள்ள தங்க நகைக்கடையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகள் உள்ளன. தங்கநகை வியாபாரிகள் பலரும் பொதுவாக நகைக்கடைகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் பேழைகள் கடுமையான தீ போன்ற எத்தகைய இயற்கை பேரழிவையும் தாங்கக் கூடியது எனத் தெரிவிக்கின்றனர்" என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர முதற்கட்ட மதிப்பீட்டின்படி சென்னை சில்க்ஸ் கடையில் ரூ.80 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன எனத் தெரிகிறது.

இழப்பு சென்னை சில்க்ஸுக்கு மட்டுமில்லை: ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கருத்து

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே. ஆர். நாகராஜன்

தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பு சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமில்லை இந்த நாட்டிற்கும், இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஆகும் என்பதை உணர்வோம் என்று ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் கே. ஆர். நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் புதன்கிழமையன்று தீவிபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட மிக அதிகமான பொருட்சேதமும், அந்தப் பகுதியில் விளைந்த பதற்றமும் ஊடகங்கள் வழியே பலரையும் சென்றடைந்தன. பல மணிநேர போராட்டத்துக்குப் பின் நிலையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சமூக வலைதளங்களில் தீ விபத்து குறித்து கேலி, கிண்டல் தொனிக்கும் பல பதிவுகள் வலம் வருகின்றன.
இதுகுறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் கே. ஆர். நாகராஜன் தெரிவித்துள்ள கருத்து, வாட்ஸ் அப் குழுக்களிடையே பரவி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''சென்னை சில்க்ஸில் தீ… இந்த செய்தியை வைத்து எவ்வளவோ விமர்சனங்கள் தொலைக்காட்சியில், செய்தித்தாள்களில், வாட்ஸ் அப்பில் வந்தவண்ணமே உள்ளன. மனம் வலிக்கிறது.
இந்த விபத்தால் எவ்வளவு பாதிப்புகள்.. இதனால் நஷ்டம் என்பது கடை உரிமையாளருக்கு மட்டும் இல்லை.
முதலில் 7 தளங்களில் வேலை செய்பவர்களுக்கு - தோராயமாக 800 பேருக்கு - வேலை போய்விடும் நிலைமை. அவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படும். அவர்கள் வேலை செய்யும் சான்றிதழ்கள், ஆவணங்கள் அனைத்தும் போன நிலைமையில் அவர்களின் துன்பத்தினை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு கடை உருவாக எத்தனை பேரின் உழைப்பு தேவைப்படுகிறது. ஆர்க்கிடெக்ட், கொத்தனார்கள்.அது மட்டுமில்லாமல் பொருட்சேதம், அப்பொருட்களை உருவாக்கிய நேரத்தின் மதிப்பு, கடைதனில் வைத்திருந்த சரக்குகளின் பின் உள்ள மூலதனம், ஒரு பட்டுப் புடவை தயார் செய்ய ஆகும் நேரம், செலவு.ஒரு நகை செய்ய எவ்வளவு முயற்சி?
நேற்று அங்கே இருந்த கடைகள் பலவும் மூடப்பட்டன. நடைபாதை கடை வியாபாரிகள் பலர் அன்றாடம். வருமானத்திலிருந்து கடன் கட்டி மீதி உள்ள வருமானத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களின் நிலைமையை யோசியுங்கள். நேற்று ஒரு நாள் கடைகள் மூடப்பட்டதால் நமது அரசாங்கத்திற்கு எத்தனை வரி இழப்பு? உணவகங்கள், தங்க நகை வியாபாரிகளுக்கு நேற்று ஒரு நாளின் நஷ்டம்தான் எத்தனை..
கடைக்கு சரக்குகளை இந்தியா முழுவதிலிருந்தும் சப்ளை செய்தவர்கள் அனைவரும் தங்கள் பணத்தினை பெற அதற்குண்டான ஆவணங்களை மீண்டும் தர வேண்டும். அது எத்தனை பெரிய முயற்சி. சென்னை சில்க்ஸ் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருப்பினும், அதன் உரிமையாளர்கள் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் அவர்களின் மனம் என்ன பாடுபடும். பணம் நிறைய இருந்தால் மன உளைச்சல் குறைந்து விடுமா என்ன? மீண்டும் இதனை சீர் செய்ய எவ்வளவு முயற்சி, பணம், உழைப்பு, மனிதர்கள் வேண்டும்!
நமக்கென்ன.. எளிதாக கமென்ட் அடித்து, அடுத்தவர்களின் கஷ்டத்தை, துன்பத்தை விளையாட்டாக எண்ணி விடுகின்றோம். ஒரு வாரத்தில் அதனை மறந்து அடுத்ததாக எதைப் பற்றி எழுதி கலாய்க்கலாம், விமர்சிக்கலாம், வியாபாரமாக்கலாம் என்று கடந்து விடுகின்றோம்.
ஜப்பான் போன்ற நாடுகளில் இத்தகைய ஓர் இழப்பினை மனிதர்களின் உழைப்பின் இழப்பாக, விரயமாக கருதுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் உழைப்பை மதிக்கின்றார்கள். யாருடைய நஷ்டத்தினையும் நாட்டின் பொருளாக, தமது இழப்பாக கருதுகிறார்கள். நம்மால், நம்மில் பலரால் ஏன் இவ்வாறு நினைக்க முடிவதில்லை?
இதில் மனதை நிம்மதியுறச் செய்யும் ஒன்று, உயிர் பலியாகவில்லை என்பது தான் ஒரே ஆறுதலான விஷயம். பதிவுகளையும் விமர்சனங்களையும் தவிர்த்து கொஞ்சம் சிந்தித்து இந்த இழப்பு சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமில்லை இந்த நாட்டிற்கும், இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஆகும் என்பதை உணர்வோம்.
இந்த பேரிழப்பிலிருந்து சென்னை சில்க்ஸ் குடும்பத்தார் மீண்டு வர அவர்களுக்கு தேவையான மனவலிமையையும், அனைத்தையும் சமாளித்து புதுப்பொலிவுடன் வெளியில் வர மிகப்பெரும் ஆற்றலையும் அளிக்க ஆண்டவனை வேண்டி என்றும் நாம் உடன் துணையிருப்போம்'' என்று நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...