Sunday, July 2, 2017


சொற்ப பயணியருடன் இயங்கும் அரசு பஸ்கள்
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:36

சென்னை, கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், பெரும்பாலும் பயணியர் இல்லாமலேயே செல்கின்றன.
விழுப்புரம், சேலம் கோட்டங்களுக்கு சொந்தமான பஸ்கள், சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், மூன்று அல்லது நான்கு பயணியர் தான், ஒவ்வொரு பஸ்சிலும் ஏறுகின்றனர்.
இது குறித்து, நடத்துனர்கள் கூறியதாவது:
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை, வார இறுதி நாட்களில் தான் அதிகமாக உள்ளது. மற்ற நாட்களில், சொற்ப அளவிலேயே உள்ளது.
முன்பு, அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் புறப்படும். தற்போது, 10 முதல், 20 நிமிடங்களில் அடுத்தடுத்து பஸ்சை இயக்குமாறு, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். அதனால், சொற்ப பயணியரே ஏறுகின்றனர்.
இதனால், போக்குவரத்து கழகத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், வசூல் ஆகாததற்கு, ஓட்டுனர், நடத்துனர்களே காரணம் என்பது போல, புகார் கூறி, 'மெமோ' கொடுக்கின்றனர்.
வார நாட்களில், பகலில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, இரவில் அதிகப்படுத்தினால், வசூலை ஓரளவு பெருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
20:20

சென்னையில், சமையல்காஸ் சிலிண்டர் விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை உடைய,
சமையல் 'காஸ்' சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது.
அதன்படி, சென்னையில் ஜூனில், 559.50 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு சிலிண்டர் விலை, தற்போது, 14.50 ரூபாய் உயர்ந்து, 574 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 71.50 ரூபாய் குறைந்து, 1,103 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டு சிலிண்டருக்கு, கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி கிடையாது; வணிக சிலிண்டருக்கு கலால் வரி, 8 சதவீதம்; மதிப்பு கூட்டு வரி, 14 சதவீதம் என மொத்தம், 22.5 சதவீதம் வரி இருந்தது.
ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரியில் வீட்டு சிலிண்டருக்கு, 5 சதவீதம்; வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்ததால், வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது; வணிக சிலிண்டர் விலை குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Docs demand quota in super-specialty seats
Chennai:
TIMES NEWS NETWORK


TN Has Max Seats Under Govt Quota
Every year, the Tamil Nadu Government Doctors Association organises a celebration on July 1 for Doctors' Day . On Saturday , men in white coats decided to join hands to demand reservation for super specialty seats in state-run medical colleges. They also launched the `Our State, Our Seat,' campaign.In an emergency executive committee meeting, state secretary Dr P Balakrishnan said that with 192 seats, Tamil Nadu has the maximum number of super-specialty seats in the country under the government quota. “After surrendering 50% of the seats, the state was allowed to reserve 50% of the seats for students from its states. Doctors in government service were given incentives.We are now told that counseling to all seats will be done by the Centre,“ he said.
Doctors, particularly super specialty aspirants, from four medical colleges -Madras Medical College, Stanley Medical College, Kilapuk Medical College, Government Medical College, Omandurar -besides doctors from Government Royapettah Hospital, Chengalpet and peripheral hospitals assembled for a meeting. The association has demanded 50% reservation for government doctors from the state quota, who can then be posted to super-specialty hospitals and government colleges, where treatment is free.“We have urged the state government to pass a bill in the Assembly to exempt super specialty courses from NEET, similar to the what it did for un dergraduate and postgraduate courses,' said state headquarters secretary Dr Nedunchezhiyan.
The state is awaiting the President's nod to enforce the two legislations it passed, but health minister C Vijaya Baskar has announced that 85% of the government quota seats will be reserved for state board students. In case of postgraduate courses, the state surrenders only 50% of the seats.
The association has urged the state to move the Supreme Court, as loss of super-speciality seats would directly affect tertiary care services in medical colleges and super-speciality hospitals. “Until an order is passed, the state should ensure counseling does not happen,“ he said.
''தமிழ்நாட்டில் பிறந்த கமல்ஹாசன் மட்டும்தான் ஜி.எஸ்.டி.க்கு எதிராக பேசியுள்ளார்..!'' - டி.ராஜேந்தர்
த.கதிரவன்

பிரியங்கா.ப

லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராகப் பொங்கியெழுந்தவர், 'இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்' என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், 'வாழவைத்த தமிழ்த் திரைத்துறைக்காகக்கூட குரல் கொடுக்காதவர் ரஜினிகாந்த்' என்றும் விமர்சித்தார். அசரடிக்கும் அவரது பேட்டி அப்படியே இங்கே....



''ஈழத் தமிழர்களுக்குக் கடந்தகால மத்திய காங்கிரஸ் அரசு, துரோகம் இழைத்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே, அவர்களோடு (காங்கிரஸ்) கைகோத்திருந்த தி.மு.க-வோடு 'லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம்' கூட்டணி சேராது என்று உறுதியாக நின்றவன் நான். அந்த வகையில், காங்கிரஸுக்கு எதிராக, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி-யின் தாமரையை மலரவைக்க மறைமுக ஆதரவும் கொடுத்தேன். ஆனாலும்கூட, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பி.ஜே.பி அரசு கொண்டுவந்தபோது அதில் உள்ள சில குறைகளையும் தட்டிக் கேட்டேன். இப்போது மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி எனும் 'சரக்கு மற்றும் சேவை வரி' என்பது தமிழ்த் திரையுலகைக் கடுமையாகப் பாதிக்கும், தமிழ்த் திரையுலகத்தையே நசுக்கிவிடும்.

இப்போது காலம் கடந்து தமிழ்த் திரையுலகம் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். மழை வருவதற்கு முன்பே தூர் வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். இப்போது வெள்ளம், வெள்ளம் என்று கத்துவதால் என்ன பிரயோசனம்? ஜூலை 3-ம் தேதி ஸ்ட்ரைக் என்று 30-ம் தேதி அறிவிப்பது சரிதானா?

வட இந்தியாவை வாழவைக்க நினைக்கிறது மத்திய பி.ஜே.பி அரசு. அது அவர்களுக்கு இருக்கும் பாசம். ஆனால், அதற்காக தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பிராந்திய மொழிப் படங்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாநில அரசின் உரிமைகளை மீறி உள்ளே நுழைகிறது மத்திய அரசு.

ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவிகிதம் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது. மாநில அரசு அதே டிக்கெட்டுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கிறது. இதர வரிகளையும் சேர்த்து மொத்தம் 64 சதவிகித வரியை அரசுக்குக் கட்ட வேண்டியிருக்கிறது. மீதம் இருப்பது வெறும் 36 சதவிகிதம். இந்த 36 சதவிகிதத்தில்தான் திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் பங்கு பிரித்துக்கொள்ள வேண்டும். உடம்பில் இருக்கிற ரத்தத்தையெல்லாம் இப்படி உறிஞ்சிவிட்டால் நாங்கள் எப்படி வாழ முடியும்?

'தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு முழு வரிவிலக்கு' என்பது தி.மு.க அரசிடம், லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம் போராடிப் பெற்றது. அதன்பிறகு வந்த அ.தி.மு.க அரசு, இந்த வரிவிலக்கை வேறுவிதத்தில் வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்றைய அரசு இந்த வரிவிதிப்பில் மாறுபடுவது ஏன்? ஒருவேளை இவர்களை ஆட்டிப்படைக்கிறதா மத்திய அரசு? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடப்பது என்ன அ.தி.மு.க அரசா? நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்ட இவர்களால்தான், இப்போது நீட் தேர்வு வந்து கிராமத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.



'அடிக்கிற மாதிரி அடிப்போம்... வலிக்கிற மாதிரி நடியுங்கள்' என்பதுபோல் இருக்கிறது மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். ஏற்கெனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி என்று 28 சதவிகித வரி விதிப்பார்களாம். அடுத்ததாக தமிழக அரசு கேளிக்கை வரி 30 சதவிகிதம் விதிப்பார்களாம். இப்போது இதனை எதிர்த்து வருகிற 3-ம் தேதியிலிருந்து திரைத்துறையினர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை அடுத்து, மாநில அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்துவிடுவார்கள். அப்புறம் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக யாரும் போராட மாட்டார்கள் என்பதுதான் இவர்களது திட்டம்.

சினிமாவை எந்த அரசு வாழவைத்திருக்கிறது? இணையத்தில் படம் வெளியாகிவிடுகிறது. எங்களது காப்பிரைட்ஸுக்கு என்ன உத்தரவாதம்? 70 வருட வரலாற்றில், எந்த மத்திய அரசு கேளிக்கை வரி விதித்திருக்கிறது? என்ன புதிய வரலாறு படைக்கிறீர்களா?
ஆந்திர அரசு குறைந்த அளவில் வரி வசூலிக்கிறது. கர்நாடகம், கேரளவில் கேளிக்கை வரியே கிடையாது. அதாவது கேரள அரசு கேளிக்கை வரியை ரத்து செய்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு மட்டும் தமிழ்த் திரையுலகத்தின் மீது ஏன் காழ்ப்பு உணர்ச்சி காட்டுகிறது? என்ன காரணம்? ஏற்கெனவே சினிமாத் தியேட்டருக்கு வருகிற கூட்டம் குறைஞ்சுப் போச்சு. சின்னப் பட்ஜெட் படங்கள் எல்லாம் செத்துக் கொண்டிருக்கின்றன. திரைத்துறையை அழிக்காதீர்கள். எவ்வளவு பெரிய தலைவர் இறந்தாலும் ஒருவாரத்துக்கு மேல் திரையரங்குகளை மூடமுடியாது. நாடு கொந்தளித்துவிடும். எச்சரிக்கையாகவேச் சொல்கிறேன்... நாட்டில் நடக்கிற கொலை, கொள்ளை, பலாத்காரம் என எல்லாக் குற்றங்களையும் தடுக்கும் சக்தியாக, வடிகாலாக இருக்கிறது சினிமா. எனவே, சினிமாவை அழிக்க நினைக்காதீர்கள்... நாட்டில் சட்டம் ஒழுங்கே கெட்டுவிடும்!

'நம்முடைய பிரதமர் மோடியும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ரொம்பவும் நெருக்கம். அதனால், ஜி.எஸ்.டி பிரச்னையில், ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்' - என்று அம்மா சினி கிரியேஷன்ஸ் சிவா சொன்னார். ஆனால், நேற்று ராத்திரி வரையிலும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை.

என்னை வாழவைத்தது தமிழ்த் திரையுலகம். திரையரங்கம்தான் என்னுடைய கோயில். ரசிகர்கள்தான் என் தெய்வம். நான் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கைச் சோற்றையும் சினிமாதான் எனக்குக் கொடுத்தது. அந்தப் பெத்த தாய்க்காகத்தான் நான் இப்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தன்னை வாழவைத்த திரையுலகுக்காக இதுவரையிலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்துதான், தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுப்பார் என நம்புகிறீர்களா?



ரஜினிகாந்த் நல்ல நடிகர், பெரிய சூப்பர்ஸ்டார் எல்லாம் ஓ.கே. ஆனால், தன்னை வாழவைத்த சினிமாவுக்காகவே குரல் கொடுக்கவில்லையே? இந்த வரிவிதிப்பினால், சின்னப் படங்கள் எல்லாம் அழிந்துபோகுமே.... இதுபோன்ற சின்னப்படங்கள் அழிந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறாரா ரஜினி? தமிழ்நாட்டில் பிறந்த கமல்ஹாசன், ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வாயைத் திறந்திருக்கிறார். உண்மையிலேயே நான் அவரைப் பாராட்டுகிறேன். ஆனால், 'அரசியலுக்கு வருகிறேன்' என்பதைக்கூட ரஜினியால் ஓப்பனாகச் சொல்லமுடியவில்லையே...

இதையெல்லாம் நான் சினிமாக்காரனாகப் பேசவில்லை.... லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். காவிரிப் பிரச்னையிலும் குரல் கொடுத்தவன் நான். இதனால், கர்நாடகத்தில் படம் ஓட்டமுடியாது என்று தெரிந்தும் குரல் கொடுத்தேன். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா வந்தார். அப்போதும் நான் சொன்னேன்... 'நீங்கள் அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பொதுச்செயலாளராகலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக ஆக முடியாது... ஆகக்கூடாது' என்று. இப்படிச் சொல்வதால், என் பையன் நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்துக்கு என்னென்ன சிரமங்கள் வரும் என்று தெரிந்திருந்தும் சொன்னேன். பாதிப்பு வரும் என்று தெரிந்தும் பகிரங்கமாகக் குரல் கொடுத்தேன்.

இந்தியா முழுவதும் ஒரே வரி; சமச்சீரான விலை என்றெல்லாம் சொல்கிறார்களே... நான் கேட்கிறேன்... பாப்கார்ன், கோக் போன்றவை வெளியில் எல்லாம் ஒரே விலையில் விற்கப்படும்போது, தியேட்டருக்குள் மட்டும் ஏன் அதிக விலையில் விற்கப்படுகிறது? அதிகப்பட்ச விலையைத் தாண்டி எப்படி அவர்களால் விற்கமுடிகிறது? இதனைத் தடுக்க மோடி அரசு முயற்சி எடுக்குமா? இதில் காம்போ பேக் என்று சொல்லியும் கொள்ளையடிக்கிறார்கள். இதுமட்டுமா... கார் பார்க்கிங் வசூல் கந்துவட்டியைவிடக் கொடுமையாக இருக்கிறது. இப்படி விலை வைத்தால், ஏழை எளிய மக்கள் எப்படி படம் பார்ப்பார்கள்? தியேட்டருக்கு எப்படிக் கூட்டம் வரும்? 100 ரூபாய் கட்டணம் என்பதே அதிகம். அந்தக் கட்டணத்தைக் குறைத்தால்தான் பாமர மக்களும் படம் பார்க்க வருவார்கள். திரையுலகமும் வாழும்!'' என்று ஆக்ரோஷமாக பேசினார் டி.ஆர்.

36 பேருக்கு எய்ட்ஸ்.. 200 கைதிகளுக்கு சிகிச்சை: பகீர் கிளப்பும் பரப்பன அக்ரஹாரா சிறை!

ராகினி ஆத்ம வெண்டி மு.

பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சமீபத்தில் நடந்து முடிந்த மருத்துவ பரிசோதனை பல அதிர்ச்சிகரத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.



பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில், விதிமுறைப்படி 2,300 கைதிகள் அடைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சிறையில் தற்போது தண்டனைப் பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 4,400. சிறையின் விதிமுறை மீறல் ஒருபுறமிருக்க, சமீபத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்காக மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அந்த சோதனையின் முடிவுகளில் கைதிகளில் 36 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல கைதிகள் காச நோய், வலிப்பு நோய், இதய நோய், நுரையீரல் பிரச்னை, மன நோய் எனப் பலவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,400 கைதிகள் கொண்ட சிறைக்கு வெறும் மூன்று மருத்துவர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மூன்று மருத்துவர்களும் நாள் ஒன்றுக்கு 200 கைதிகள் வரை மருத்துவ பரிசோதன செய்து சிகிச்சை அளித்து வருவதாகக் கூறுகின்றனர். ஆனால், கைதிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி : எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது?
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
16:19



புதுடில்லி : இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி.,யால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது, எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது பற்றிய தெளிவான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரம் இதோ...

விலை குறையும் பொருட்கள் : கார்ன் பிளக்ஸ், டூத்பேஸ்ட், சோப், ஹேர் ஆயில், ஐஸ் க்ரீம், பாலாடை, பேக் செய்யப்பட்ட டீ மற்றும் காபி, பேக் செய்யப்பட்ட பிராண்டெட் ஆட்டா, பேக் செய்யப்பட்ட பன்னீர், மசாலா, ஸ்வீட்ஸ், பேக் செய்யப்பட்ட தயிர், எக்னாமிக் அளவிலான விமான பயண கட்டணம்.
விலை மாற்றமில்லா பொருட்கள் : பால், காய்கறிகள் மற்றும் பழங்கள், பிரெட், பாஸ்மதி அரிசி, ஆட்டா, ஷூஸ் வகைகள், மின்சாரம்.

விலை உயரும் பொருட்கள் : கூல் டிரிங்ஸ், சூயிங்கம், சாக்லேட், ஷாம்பூ, பேஸ் க்ரீம், டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின், நாற்காலிகள், வாட்ச்கள், வங்கி சேவைகள், வாடகை கார்கள், தொழில்துறை சேவைகள், விளம்பர சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், தூய்மை சேவைகள், அழகுநிலைய சேவைகள், ட்ரை க்ளீனிங் சேவைகள், பாதுகாப்பு சேவைகள், பராமரிப்பு சேவைகள், சட்டரீதியிலான சேவைகள், கொரியர் சேவைகள், சமையல் எண்ணெய், மெல்லிய அலுமினிய தகடு, பேக் செய்யப்பட்ட சிக்கன், வெண்ணெய், புஜியா, பேக் செய்யப்பட்ட பருப்பு வகைகள், தங்கம், ரெஸ்டாரென்ட் சேவைகள், ஒரு இரவுக்கு ரூ.1000 க்கு மேல் கட்டணம் கொண்ட ஓட்டல் கட்டணங்கள் .
பிற மாநிலத்தவருக்கு இன்ஜி., பதிவு துவக்கம்
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:52

சென்னை, பிற மாநில மாணவர்களுக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, ௫௮௦க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிக்க, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், தமிழகத்தை
வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். பிற மாநிலத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு, தனி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பிற மாநில மாணவர்கள், www.annauniv.edu என்ற இணையதளத்தில், ஜூலை, ௧௨ வரை விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலையின் பிரிவு மற்றும் வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழிற்நுட்பக் கல்லுாரி, ஆர்க்கிடெக்சர் கல்லுாரியான, 'சேப்' மற்றும் குரோம்பேட்டையிலுள்ள, எம்.ஐ.டி., கல்லுாரி போன்றவற்றில்,
௫௦ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.பி.ஆர்க்., படிப்புக்கு, இரு இடங்கள் 

மட்டும் ஒதுக்கப்படும். காஷ்மீரில் இருந்து இடம்
பெயர்ந்தவருக்கு, ஒரு இடம் உள் ஒதுக்கீடு உண்டு. தென் மண்டல மாநிலங்களுக்கு, ௧௬, மற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல மாநிலங்களுக்கு, மண்டலத்திற்கு தலா, ௧௧ இடம் ஒதுக்கப்படும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 31.01.2026