Monday, July 3, 2017

Police transfer

கடமையைச் செய்ததற்காகப் பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

னது பணியை நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் செய்ததற்காக மக்களிடம் பாராட்டுப் பெற்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் மாவட்டத்தில், சயன்னா பகுதியைச் சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர். போலீஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன் வாகனப் போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு அபராதம் விதித்ததோடு, வழக்கும் பதிவுசெய்தார். ஒருகட்டத்தில், அந்த வாகன ஓட்டி, அபராத்தைச் செலுத்தாமல், பெண் போலீஸ் அதிகாரியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால், கைது செய்யப்பட்ட அந்த வாகன ஓட்டிக்கு ஆதரவாகத் திரண்ட பி.ஜே.பி-யினர் சிரேஷ்ட தாகூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பி.ஜே.பி அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம்செய்துள்ளது. அதில், சிரேஷ்ட தாகூரும் ஒருவர். இதுகுறித்து அவர், "இது வழக்கமான இடமாற்றமா அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பதுகுறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய பேட்ஜைச் சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து அதிக தொலைவான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும், இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இங்கே, கடமையைச் செய்தவருக்கு இடமாற்றம் என்றால், தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரிக்கு, பதவியுடன் கூடிய இடமாற்றம்?

Dailyhunt

Sabarimala

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயிலில் இருந்த தங்கக் கொடிமரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, புதிய கொடிமரத்தை, கடந்த மாதம் 25-ம் தேதி, சபரிமலையில் பிரதிஷ்டை செய்துவைத்தனர். அதன்பின், ஆராட்டுத் திருவிழாவுக்காக புதிய தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, 10 நாள்கள் திருவிழாவும் நடந்துவருகிறது.

புதிய தங்கக் கொடிமரத்தைத் தரிசிப்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துவருகின்றனர். தற்போது, கேரளாவில் தென் மேற்குப் பருவமழை கடுமையாகப் பெய்துவருகிறது. சபரிமலையிலும் கனமழை பெய்ந்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள், பம்பை ஆற்றில் குளிக்க போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கிவிடாதபடி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

தற்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழக பக்தர்கள் பெருமளவு சபரிமலையில் குவிந்துள்ளனர். அவர்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி அய்யப்பனையும் புதிய தங்கக்கொடி மரத்தையும் தரிசிக்க காத்துக்கிடக்கின்றனர். சபரிமலையின் சீசன் காலங்களான மகரவிளக்கு, மண்டல விளக்குப் பூஜை போன்று இப்போதும் கணிசமான பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போலீஸார் அதிக அளவு பாதுகாப்புப் பணியில் உள்ளனர். வழக்கமாக, சபரிமலை கோயில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இப்போது 11 மணிக்கு அடைக்கப்படுகிறது. நேற்று மாலை, சபரிமலையில் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. பூஜையின்போது, சுவாமி அய்யப்பன் யானையின் மீது பவனியாக எடுத்து வரப்பட்டார். அதை சபரிமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

Dailyhunt

Court news

கர்ணன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்! உச்ச நீதிமன்றம் கறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் அல்லது பரேல் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை முழுவதுமாக அனுபவித்தே ஆக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இறுதியாக, நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்தவர், சில நாள்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றார்.

சமீபத்தில், கோவையில் கைதுசெய்யப்பட்ட கர்ணன், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, உடல்நலக் குறைவால் சிகிச்சைபெற்றுவரும் கர்ணன், தனக்களிக்கப்பட்ட தண்டனையில் குறைபாடுகள் உள்ளதென்றும், அவற்றை நிவர்த்திசெய்யும் வரை தனக்கு பரோல் அல்லது ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கொல்கத்தா ஆளுநரிடமும் நீதிமன்றத்திடமும் கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி கர்ணனின் மனுவை நிராகரித்தது.

Dailyhunt

Nursing Recruitment

சவூதியில் செவிலியர்களுக்கு வேலை! தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.54,000 மாத ஊதியமும், அதிகபட்ச ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப வேலையளிப்போரால் நிர்ணயிக்கப்படுவதுடன் இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக் காப்பீடு முதலியவை வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னை மற்றும் பெங்களூரில் வேலையளிப்போரால் நடைபெறவுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் 9.7.2017-க்குள் ovemcleq074@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886/22502267/22500417/8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Sunday, July 2, 2017

கலக்கலாய் வருது காரைக்கால் 'சரக்கு': தள்ளாடி நிற்குது தமிழகத்து எல்லை




படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்து வோம் என்கிறது தமிழக அரசு. ஆனால், முழு மது விலக்கே வந்தாலும் காரைக்கால் சாராயமும், மதுவும் தமிழகத்துக்குள் கரைபுரண்டு வருவதை தடுக்கவே முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு எல்லையில் நிலைமை ‘தள்ளாடி’க் கொண்டிருக்கிறது.

புதுச்சேரி என்றாலே..

புதுச்சேரி பயணம் என்றாலே மதுப் பிரியர்கள் ஜில்லிட்டுப் போவார்கள். காரணம் கேட்டால், வெரைட்டி கிடைக்கும்; விலை கம்மி என்பார்கள். இதைச் சொல்லியே, புதுச்சேரி ‘சரக்கை’ தமிழகத்துக்குள் கடத்தி வந்து காசு பார்ப்பவர்களும் உண்டு. முன்பு, உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மதுவகைகள் மட்டும் அரசல்புரசலாகக் கடத்தப்பட்டன. ஆனால், இப்போது புதுச்சேரியிலிருந்து சாராயம், ஸ்பிரிட் உள்ளிட்ட சகல பானங்களும் தமிழகத்துக்குள் தங்கு தடையின்றி கடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள் எல்லையில் இருப்பவர்கள்.

புதுச்சேரியின் ஒரு அங்கம் காரைக்கால் மாவட்டம். இங்கிருந்து தாறுமாறாக பாயும் உள்நாட்டு வெளிநாட்டு சாராயமானது நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்காலத்தை தவணை முறையில் முடமாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் முகம்காட்ட விரும்பாத மயிலாடு துறையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர்.

இது தொடர்பாக அவர் சொன்ன தகவல்கள் நம்மை உலுக்கிப் போட்டது.

“புதுச்சேரியிலும் காரைக்காலிலும் திரும்பிய பக்கமெல்லாம் மதுபானக் கடைகளும் சாராயக் கடைகளும் இருந்தாலும் உள்ளூர்வாசிகள் பெரிய அள வுக்கு இவைகளை நாடமாட்டார்கள். வெளி யூர்க்காரர்களாலும் இங்கிருந்து ‘சரக்கை’ கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கடத்து கிறவர்களாலும் தான் இந்தக் கடைகள் கணிசமாக கல்லாக்கட்டுகின்றன.

பத்து வழிகள் மூலமாக நாகையிலிருந்து காரைக்காலுக்குள் நுழைந்துவிட முடியும். இவற்றில் பிரதானமான ஆறு இடங்களில் மட்டும் தமிழக போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். ஆனாலும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள், ஸ்பிரிட் மற்றும் சாராய பாக்கெட்டுகள் சரளமாக தமிழகத்துக்குள் கடத்தப்படுகின்றன. காரைக்காலில் இதற்கென இருக்கும் மொத்த வியாபாரிகள் சிலர், மது விலக்கு பிரிவு, உள்ளூர் போலீஸ் என அனைவரை யும் ‘முறையாக’ கண்ணைக் கட்டி விட்டு, கல்லாக் கட்டுகிறார்கள்.’’ என்கிறார் அந்த சமூக ஆர்வலர்.

குவாட்டர் 300 ரூபாய்

அவரே தொடர்ந்தும் பேசுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவால் மயிலாடுதுறையிலும், கும்பகோணத்திலும் கிட்டத்தட்ட மதுக்கடைகளே இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கடத்தல் புள்ளிகள், ‘சரக்கு’களை இந்தப் பகுதிகளுக்கு கடத்தி வந்து குவாட்டர் 300 ரூபாய் வரை விற்கிறார்கள். இதில் பெரும்பகுதியானவை, வியாபாரிகளே ஸ்பிரிட்டை கலந்து தயார் செய்யும் ஆபத்து மிகுந்த ‘அட்டுச் சரக்கு’ என்பது குடிமகன்களுக்கே தெரியாது.

இதுதவிர, காரைக்கால் சாராயக் கடைகளில் மொத்தமாக சாராயத்தை வாங்கி அவற்றை ஐஸ் பாக்கெட்டுகளில் 200 மில்லி அளவுக்கு அடைத்து தமிழகத்தின் எல்லையோர கிராமங் களில் சப்ளை செய்கிறார்கள். விலை மலிவு என்பதால் இதற்கும் ஏக கிராக்கி. பெரும்பாலும் இருபதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இப்படி சாராயம், மது கடத்தலில் ‘குருவி’களாகப் பறக்கிறார்கள்.

குருவிக்கு கூலி 2,000 ரூபாய்

ஐநூறு குவாட்டர் பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கச்சிதமாக கடத்திக் கொடுத்தால் 2,000 ரூபாய் கூலி தருகிறார்கள். இதுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் இப்போது இந்த வேலையில் இறங்கி இருக்கிறார்கள். நெடுங்காடு, நல்லாடை, பருத்திக்குடி, குரும்ப கரம், குளக்குடி, பொன்பேத்தி, சுரக்குடி உள் ளிட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இப்போது இதுதான் முழுநேர தொழிலே.’’ என்று சொன்னார்.

காசுக்காக இப்படி கடத்தலுக்குத் துணிந்தவர் களில் சிலர், வாகனங்களில் பதற்றத்துடன் வேகமாக பறக்கும்போது விபத்துக்களை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் கை, கால் முடமாகிப் போகிறவர்களும் உண்டு. மதுக்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கைமீறிய வருமானம் கிடைப் பதால் அவர்களும் போதைக்கு அடிமையாகிறார்கள். இவர்கள் மிதமிஞ்சிய போதையில் தங்களது மனைவியை துன்புறுத்துவதும் அவர்களையும் குடி நோயாளிகளாக்கும் அவலங்களும் நடக்கின்றன.

நல்லாடை என்ற கிராமத்தில், தினமும் மது வாங்கித் தரும் கணவன் தொடர்ந்து இரண்டு நாள்கள் வாங்கித் தரவில்லை என்பதால் விஷம் அருந்தி தற்கொலைக்கு துணிந்தி ருக்கிறார் ஒரு பெண்மணி. இன்னொரு கிராமத்தில், தான் வீட்டில் இல்லாதபோது தனது மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாக மரத்த டிப் பஞ்சாயத்தைக் கூட்டி இருக்கிறார் ஒரு ‘குடிமகன்.’

பெண்களும் கடத்துகிறார்கள்

மதுக்கடத்தலில் கிடைக்கும் வருமானத்தைப் பார்த்துவிட்டு தற்போது ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் இந்தத் தொழிலில் குதித்திருக்கிறார்கள். போலீஸ் காவல் இருக்கும் வேலங்குடி சோதனைச்சாவடி வழியாக தினமும் இரு சக்கர வாகனத்தில் ஊடுருவும் ‘டிப் டாப்’ நங்கையர் இருவர், கட்டைப் பைகளில் சர்வ சாதாரணமாக சரக்குகளை அள்ளிக்கொண்டு பறப்பதாய் சொல்கிறார்கள். இப்படி, ஆம்னி பேருந்தில் சரக்குக் கடத்திய இளம் பெண்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள்.



நடமாடும் மதுக்கடைகள்

மதுக்கடைகள் அகற்றப்பட்ட தமிழக பகுதிகளில் பலர் நடமாடும் மதுக்கடைகளையும் நடத்துகிறார்கள். இந்த நேரத்துக்கு, இந்த இடத்துக்குப் போனால் இன்னாரிடம் ‘சரக்கு’ வாங்கலாம் என்று பட்டியலே வைத்திருக் கிறார்கள் ‘சரக்கு’ச் சக்கரவர்த்திகள். இவர்கள் தங்களுக்கு பிசின்ஸ் கொடுக்கிறார்கள் என்ப தால் பார்டரில் இருக்கும் புதுச்சேரி மதுக்கடைக் காரர்கள் சிலர், இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க போலீஸுக்கும் ‘படியளப்பதாக’ சொல்கிறார்கள். அதேசமயம், சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடத்தல் நபர்களை பிடித்ததாகவும் அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கணக்குக் காட்டுகிறார்கள். இவைகளில் பெரும்பாலான வழக்குகள் பக்கா ‘செட்-அப்’ என்கிறார்கள்.

மொத்தத்தில், தங்குதடை இல்லாமல் ஜரூராய் நடக்கும் புதுச்சேரி - தமிழக ‘சரக்கு’ப் போக்குவரத்தால் ‘தள்ளாடி’க் கொண்டிருக்கின்றன தமிழகத்தின் எல்லையோர கிராமங்கள்!
திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்
திருமணம் முடிந்து 5 மாதங் களுக்கு பின்னரும் அதை பதிவு செய்யும் வகையில், திருமண பதிவுத் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

சட்டப்பேரவையில் திருமண பதிவு திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அறிமுகம் செய் தார். இதற்கான நோக்க காரண விளக்க உரையில் கூறியிருப்ப தாவது:

2009-ம் ஆண்டு சட்டம்

தமிழகத்தில் அனைத்து திரு மணங்களையும் கட்டாயமாக பதிவு செய்வதற்காக கடந்த 2009-ம் ஆண்டு திருமணங்களை பதிவு செய்தல் சட்டம் கொண்டுவரப் பட்டது. இச்சட்டத்தின்படி திரு மணம் செய்துகொண்ட தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் அல்லது அதற்குமேல் 60 நாட்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி, திருமணம் செய்தவர்கள் தங்கள் விவரக்குறிப்பை பதிவாளரிடம் அளிக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்

இந்நிலையில், 150 நாட்கள் அதாவது 5 மாதங்களுக்குமேல், கூடுதல் கட்டணம் செலுத்தி திருமணத்தை பதிவு செய்வதற் கான வழிமுறைகளை செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதேபோல, சிறப்பு நிகழ்வுகள் தவிர பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள், நேரடி யாக வராமல் சட்ட அடிப்படையில் திருமண பதிவு செய்யக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. திருமண பதிவுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மதகுரு என்னும் சொல் அனைத்து மதங்களின் நபர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில், சரியான வகையில் திருமண பதிவுச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதாவை அறிமுக நிலை யிலேயே எதிர்ப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில், சரியான வகையில் திருமண பதிவுச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.

ஒளிரும் நட்சத்திரம்: ஸ்ரீதேவி

ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர்*
 இந்தியத் திரையுலகம் எத்தனையோ கனவு தேவதைகளை உருவாக்கி அளித்திருக்கிறது. அவர்களில் ஸ்ரீதேவியின் சாதனைகளை முறியடிக்க யாருமில்லை. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. 54 வயதில் அடிவைக்கக் காத்திருக்கும் ஸ்ரீதேவிக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு தர விரும்பிய அவருடைய கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் 300-வது படத்தைத் (மாம்) தயாரித்து, அதை ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்கிறார்.

* கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது ‘துணைவன்’ (1969) படத்தில். ‘சாண்டோ’ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் எம்.ஏ. திருமுகம் எனும் சாதனை இயக்குநரால் கண்டறியப்பட்டு, இசையருவி கே.பி.எஸ், சௌஹார் ஜானகி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன் போன்ற சாதனைக் கலைஞர்களுடன் முதல் படத்திலேயே நடிக்கும் பேறுபெற்றார். குழந்தை முதலே கொள்ளை அழகாக விளங்கிய ஸ்ரீதேவிக்கு மீண்டும் பல படங்களில் முருகன் வேடம் கிடைத்தாலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் விதவிதமாகக் குழந்தை கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றில் 1971-ல் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘பூம்பட்டா’ என்ற படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின் கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் வென்றார்.

* குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்றுவிட்டாலும் குமரியானதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற உந்துதல் சாவித்திரியைப் பார்த்தே உருவானது எனக் கூறும் ஸ்ரீதேவி, தனது 12 வயதில், சேதுமாதவன் இந்தியில் இயக்கிய ‘ஜூலி’படத்தில் அறிமுகமாகி, கதாநாயகியின் தங்கையாக நடித்தார். அதன்பிறகு ஸ்ரீதேவியை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது ‘மூன்று முடிச்சு’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். அந்தப் படத்தில் கமல், ரஜினியுடன் தொடங்கிய பயணம்... ‘16 வயதினிலே’ மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அன்று ரசிகர்கள் நேசித்த பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் தேர்வாக மாறினார்.

* ‘காதல் இளவரசன்’ எனக் கொண்டாடப்பட்ட 80-களின் கமலுக்குக் கச்சிதமான ஜோடி என ரசிகர்களால் பிரகடனம் செய்யப்பட ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மீண்டும் கோகிலா’, ‘வாழ்வே மாயம்’, ‘குரு’ போன்ற பல படங்கள் காரணமாக அமைந்தன. இந்த இணையின் முத்தாய்ப்பாக அமைந்தது ‘மூன்றாம் பிறை’. குழந்தைமை நினைவுகள் கொண்ட குமரிப்பெண்ணாக ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டும் அவருக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்க வேண்டிய நடிப்புக்கான தேசிய விருதை, கமலின் நடிப்பு வென்று நின்றது. எனினும் என்னைவிடச் சிறந்த நடிப்பை ஸ்ரீதேவியே வழங்கியிருந்தார் என்று கமலைக் கூற வைத்தது ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு ஆளுமை.

* கமல், ரஜினியோடுதான் ஸ்ரீதேவி நடிப்பார் என்ற முத்திரைக்குள் சிக்கிவிடாமல், சிவகுமார், விஜயகுமார் என அனைத்து முக்கிய நடிகர்களையும் மதிக்கும் நாயகியாக மிளிர்ந்தார். அவ்வளவு ஏன் தலைமுறைகளைக் கடந்து கதாநாயகியாகவே மிளிந்த சாதனை ஸ்ரீதேவிக்கு மட்டுமே உரியது. தெலுங்குப் படவுலகம் கொண்டாடிய நாகேஸ்வர ராவுக்கு ஜோடியான ஸ்ரீதேவி, அவருடைய மகன் நாகார்ஜுன் ஜோடியாகவும் நடித்தார். இந்திப் படவுலகிலோ தர்மேந்திராவுடன் ஜோடி சேர்ந்தவர் , அவருடைய மகன் சன்னி தியோலுக்கும் ஜோடியாகி அசத்தினார்.
* நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் முக்கிய நட்சத்திரமாக மாறிய ஸ்ரீதேவி, தமிழைத் தாண்டி தென்னிந்திய மொழிகளைக் கடந்து, இந்திப் படவுலகில் தனித் தடம் பதித்தது முன்மாதிரி இல்லாத வெற்றிக்கதை. அவர் இந்தியில் அறிமுகமான ‘சோல்வா சாவன்' தோல்வி அடைய, துவண்டுவிடாமல் ‘ஹிம்மத்வாலா'வில் ஹிட் அடித்தார். அதன் பிறகு போனி கபூரை மணந்துகொள்ளும் வரை அவருக்கு வாய்ப்புகள் குவிந்துகொண்டேயிருந்தன.
* திருமண வாழ்க்கையில் சிறந்த மனைவியாக, இரு பெண் குழந்தைகளின் அர்ப்பணிப்பு மிக்க தாயாக, திரை நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் திரையிலிருந்து விலகிய 15 ஆண்டுகளுக்குப் பின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் வசீகரம் குறையாத தோற்றத்துடன் தோன்றி நடித்தார். ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டு சாதிக்கும் சசி கதாபாத்திரம் ஏற்றுத் தன்னம்பிக்கை காட்டினார். “சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இன்னும் நிறையவே காலம் நேரம் இருக்கிறது” என்கிறார் தாய்மையை ஹீரோவாகக் காட்டும் அடுத்த கதாபாத்திரத்தை எதிர்பார்த்தபடி.

* திரை நடிப்பிலிருந்து வெளியேறியபோது எப்படி இருந்தாரோ, அதைப் போலவே இன்றும் தன் தோற்றத்தை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்று கேட்டால் “ எதிர்மறையான எண்ணங்கள் எதுவும் மனதில் நுழைய அனுமதிக்கக் கூடாது. முடிந்தவரை சந்தோஷமாக இருக்கக் பழகிக்கொள்ள வேண்டும். உள்ளத்தில் சந்தோஷம் இருந்தால் முகத்தில் இளமை இருக்கும். இதுவே என் இளமையின் ரகசியம்” என்பது ஸ்ரீதேவியின் பதில்.

* “நடிக்கும்போது நடிகையாக இருந்ததில் கிடைத்த மகிழ்ச்சியைவிட எனது குழந்தைகளுக்கு அம்மாவாக நான் இருப்பதிலும் அன்பான கணவரின் மனைவியாக இருப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறும் ஸ்ரீதேவி “எல்லா அம்மாக்களையும் போல “வெளியே சென்ற மகள்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்ற கவலையுடன் வயிற்றில் நெருப்பைக், கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன்” என்று கூறி சாமானிய அம்மாவாகவும் மாறிவிடுகிறார்.

* “இன்று பெண்கள் சாதிக்க யாரும் அறிவுரை கூற வேண்டியதில்லை” என்பவர், “திருமணம் ஆனதும் பெண்கள் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் கணவருக்காக, குழந்தைகளுக்காக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று அனுபவப் பாடம் சொல்லித் தருகிறார். தினசரி 1 மணிநேரம் ப்ளோர் உடற்பயிற்சி செய்பவர். அதில் முக்கியமானது 250 முறை ஸ்கிப்பிங் செய்வது. வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி. பொரித்த உணவுகளை ஸ்ரீதேவி சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஸ்ரீதேவி இதுவரை கோபப்பட்டு யாரிடமும் பொரிந்ததில்லை என்பது கணவர் போனி கபூரின் சாட்சியம்.
தொகுப்பு: ஆர்.சி.ஜெ.

NEWS TODAY 14.06.2026