Monday, July 3, 2017

Police transfer

கடமையைச் செய்ததற்காகப் பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

னது பணியை நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் செய்ததற்காக மக்களிடம் பாராட்டுப் பெற்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் மாவட்டத்தில், சயன்னா பகுதியைச் சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர். போலீஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன் வாகனப் போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு அபராதம் விதித்ததோடு, வழக்கும் பதிவுசெய்தார். ஒருகட்டத்தில், அந்த வாகன ஓட்டி, அபராத்தைச் செலுத்தாமல், பெண் போலீஸ் அதிகாரியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால், கைது செய்யப்பட்ட அந்த வாகன ஓட்டிக்கு ஆதரவாகத் திரண்ட பி.ஜே.பி-யினர் சிரேஷ்ட தாகூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பி.ஜே.பி அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம்செய்துள்ளது. அதில், சிரேஷ்ட தாகூரும் ஒருவர். இதுகுறித்து அவர், "இது வழக்கமான இடமாற்றமா அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பதுகுறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய பேட்ஜைச் சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து அதிக தொலைவான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும், இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இங்கே, கடமையைச் செய்தவருக்கு இடமாற்றம் என்றால், தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரிக்கு, பதவியுடன் கூடிய இடமாற்றம்?

Dailyhunt

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...