Wednesday, July 5, 2017

1,224 டாக்டர்கள், 1,010 நர்ஸ்கள் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:28

சென்னை: ''தமிழகத்தில், 1,224 டாக்டர்கள், 1,010 செவிலியர்கள் உட்பட, 4,717 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக, 1,224 டாக்டர்கள், 600 சிறப்பு உதவி டாக்டர்கள், 1,010 செவிலியர்கள், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைகளில், 137 உதவி மருத்துவ அலுவலர்கள்.

மேலும், 33௩ மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வக உதவியாளர்கள், ௧௭௯ இதய வரைபட டெக்னிசியன்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழி ஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 26 கோடி ரூபாயில், 'டிஜிட்டல்' நுாலகம் அமைக்கப்படும். காசநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், 141.14 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். மேலும், '108' ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, ஐந்து கோடி ரூபாயில், 50 வாகனங்கள் வாங்கப்படும்.
அனைத்து, மாவட்டங்களிலும், 5.12 கோடி ரூபாயில், நவீன கண் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில், மருத்துவத் துறையில் முதன்முறையாக, 24 மணி நேர பேரிடர் மேலாண்மை மையம், 2.1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

வேலுார், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மனநல சிறப்புப் பிரிவுகள், 3.34 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

சிகலா, சிறை,தண்டனை,ரத்தாக,வாய்ப்பில்லை
 DINAMALAR

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தள்ளுபடியாகும் என்பதால், அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை.



அவர் நான்காண்டு, 'உள்ளே' இருப்பது உறுதி யாகும் என,சட்ட நிபுணர்கள் கருத்து தெரி வித்து உள்ளனர். அவர் வெளியே வந்தால், கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் என்ப தால், அ.தி.மு.க.,வினரும் பீதியுடன், தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில்,ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சிறையில் அடைப்பு:

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்ட னையை உறுதி செய்து, பிப்., 14ல் உத்தர விட்ட னர். ஜெ., மறைந்து விட்டதால், அவருக்கு எதிரான அப்பீல் வழக்கு கைவிடப்பட்டது.சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.கர்நாடக அரசுசார்பில், ஜெ.,க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, அவரது சொத்து களை விற்று வசூலிக்க வேண்டும் என, தாக்கல் செய்யப் பட்ட மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,சிறைத்தண்டனையை எதிர்த்து, சசிகலா சார்பில், சீராய்வு மனு, உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், எங்களை தண்டிப்பதற்கு, நாங்கள் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல. அந்த சட்டமானது, அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்; எங்க ளுக்கு பொருந்தாது. 'எனவே, இந்த வழக்கில், எங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள,

நான்கு ஆண்டுகள் சிறை தண்ட னையை ரத்து செய்து, எங்களை விடுவிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இம்மனு மீதான விசாரணை, நாளை நடக்கிறது. இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா, நிராகரிக்கப் படுமா; விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும்,

சசிகலாவிடுவிக்கப்படுவாரா என, கேள்விகள் எழுந்துள்ளன.

எதிர்பார்ப்பு:

'மனு நிராகரிக்கப்படவே வாய்ப்பு .அதிகம். விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும், இறுதி யில் தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்பு அதிகம்' என, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த தீர்ப்பை, அ.தி.மு.க., வினர் பீதியுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

ஏனெனில், சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி, அவரை சந்திக்கச் செல்லவில்லை. அவரால், அ.தி.மு.க., துணை பொதுச் செயல ராக நியமிக்கப்பட்ட, தினகரன் ஒதுக்கிவைக்கப் பட்டு உள்ளார்.இந்த சூழலில், சசிகலா வந் தால், மீண்டும் கட்சிக்குள் குழப்பமும், ஆட்சிக்கு சிக்கலும் ஏற்படும். அவரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டால், முதல்வர் பழனிசாமி அணியினர், துணிந்து தனித்து செயல்படத் துவங்குவர்.

எனவே, நாளைய தீர்ப்பை, அவர்கள் ஆவ லோடு எதிர்பார்க்கின்றனர். அவர் விடுதலை யானால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கட்டுப் பாட்டிற்குள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை யில், அவரது விடுதலையை, சசிகலா குடும்பத் தினரும், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும் எதிர்பார்க்கின்றனர்.சீராய்வு மனு தீர்ப்பை, பன்னீர் அணியினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

- நமது நிருபர் -
செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:49

ஊட்டி : பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை' துவக்க அஞ்சல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கை:பெண் குழந்தைகளின் நலனையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி, அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக 'செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்' துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் படி, பெண் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து, 10 வயது அடையும் வரை இக்கணக்குகளை துவக்கலாம்; குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக, 1.50 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும், 100 ரூபாய் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு துவங்கியதில் இருந்து, 14 வருடங்கள் பணம் செலுத்தலாம். விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது. மேலும், பெண் குழந்தைகளின், 18 வயதில் இருந்து, 50 சதவீதம் வைப்பு தொகையினை குழந்தைகளின் உயர் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் கணக்கில் இருந்து பெற்று கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின், கணக்கு முதிர்வு பெறும் திருமணம் முடிந்த பின்பும் கணக்கை எவ்வித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.மேற்படி 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தில்' தங்களின் பெண் குழந்தைகளையும் சேர்த்து, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக.19 முதல் 31 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:46

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர்., ஸ்டேடியத்தில் ஆக., 19 முதல் 31 வரை கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த கல்வி, உடல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், தொழில்நுட்பம் தேர்வாளர், செவிலியர் உதவியாளர், குமாஸ்தா, ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் சிப்பாய் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதிகளை சேர்ந்த ஏற்கனவே ஹவில்தார் பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in இணையதளத்தில் ஜூலை 5 முதல் ஆக., 3 வரை விண்ணப்பிக்கலாம். ஆக., 3க்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். முகாமிற்கு வரும்போது இந்த அனுமதி சீட்டை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மதுரை முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகத்தை 0452 --230 8216 ல் தொடர்பு கொள்ளலாம்.
விரைவு தபால் சேவை: 18 சதவீத ஜி.எஸ்.டி.,

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:20

கோவை: தபால் போக்குவரத்து மற்றும் பார்சல் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தபால் துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்பீடு போஸ்ட், எக்ஸ்பிரஸ் பார்சல், பிசினஸ் பார்சல், கேஷ் ஆன் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் போஸ்ட், பிசினஸ் போஸ்ட், பில் மெயில் சர்வீஸ், டைரக்ட் போஸ்ட், மீடியா போஸ்ட் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், 18 சதவீத வரியை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

கோவை முதுநிலை, தலைமை தபால் அதிகாரி சக்திவேல் முருகன் கூறியதாவது:

முன்பு, ஒரு ஸ்பீடு போஸ்ட் அனுப்ப, கட்டணம், 35 ரூபாய், சேவை வரி, ஐந்து ரூபாய் சேர்த்து, 40 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, 18 சதவீத, ஜி.எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சேவை வரி, ஆறு ரூபாய் சேர்த்து, 41 ரூபாய் வசூலிக்கப்படும். அதே சமயம், தபால் துறையின் முக்கிய சேவைகளான, பதிவு தபால், பார்சல், இ - மணியார்டர், இ - போஸ்ட் மற்றும் சாதாரண மணியார்டர் சேவைக்கு இவ்வரி பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து விபரங்களும் 'கரெக்ட்' : இ - சேவையில் 'ஸ்மார்ட்' கார்டு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:03

அனைத்து விபரங்களும் சரியாக வழங்கியும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைக்காதவர்கள், அதை, அரசு இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளும் வசதியை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், 'ஆதார்' விபரங்களின் அடிப்படையில், உணவு வழங்கல் துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. பலரின் ஆதார் அட்டையில் பிழைகள் இருந்ததுடன், குடும்ப தலைவரின் புகைப்படமும் தெளிவாக இல்லை. இதனால், பிழை திருத்தங்களை சரிசெய்யும் பணிகள், ரேஷன் கடைகளில் நடந்து வருகின்றன. அதில், சரியான விபரங்களை வழங்கிய பலருக்கு, இதுவரை, ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிழை திருத்தம் உள்ள கார்டுதாரர்களின் பட்டியல், ரேஷன் ஊழியர்களிடம் வழங்கப்பட்டன. அவர்கள், சம்பந்தப்பட்ட நபரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, திருத்த பணிகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும், பலர் சரியான விபரங்களை வழங்காமல் அலட்சியமாக உள்ளனர்.
தற்போது, 1.10 கோடி பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. பிழை திருத்த பணி முடிந்ததும், எஞ்சிய அனைவருக்கும், இம்மாத இறுதிக்குள் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அனைத்து விபரங்களும் சரியாக வழங்கியவர்கள், தங்களுக்கு உடனே ஸ்மார்ட் கார்டு தேவைப்பட்டால், அரசு இ - சேவை மையங்களில், 30 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்காக, அங்கு கேட்கப்படும் கேள்விக்கு சரியான விபரங்களை, கார்டுதாரர்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு, ரேஷன் கடையில், அந்த கார்டு வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மெட்ரோ ரயில் பயணியர் காரிலும் பயணிக்க வசதி


பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:03

பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம், 'ஓலா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயணியர், ஓலா காரிலும் செல்லலாம்.

சென்னை மெட்ரோ ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயணியர், ரயில் நிலையத்தில் இருந்து அலுவலகம் சென்று வர, ஏற்கனவே சைக்கிள் வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது, கார் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, சின்னமலை, கிண்டி, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், நேரு பூங்கா, ஆலந்துார், பரங்கிமலை ரயில் நிலையங்களில், ஓலா கார் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரயிலில் இருந்து இறங்கும் பயணியர், இம்மையத்தில் உடனடியாக முன்பதிவு செய்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு, தாமதமின்றி செல்லலாம். இதனால், மெட்ரோ ரயிலில் பயணிப்போர்எண்ணிக்கை அதிகரிக்கும் என, மெட்ரோ ரயில் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 25.07.2026