Wednesday, August 2, 2017

ஆன்மிகம்

சாப–பாவங்கள் போக்கும் வரலட்சுமி நோன்பு





லட்சுமி தேவியை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் ‘வரலட்சுமி நோன்பு’. இந்த விரதத்தை ‘வரம் தரும் விரதம்’ என்றும் அழைப்பார்கள்.

ஆகஸ்ட் 01, 2017, 08:00 AM 4–8–2017 அன்று வரலட்சுமி விரதம்

லட்சுமி தேவியை நினைத்து வழிபடும் முக்கியமான விரதம் ‘வரலட்சுமி நோன்பு’. இந்த விரதத்தை ‘வரம் தரும் விரதம்’ என்றும் அழைப்பார்கள். அஷ்ட லட்சுமிகளும் ஒரே உருவாக இருந்து, செல்வம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி உள்ளிட்டவற்றை அருளும் சிறப்பு மிக்க விரதம் இதுவாகும். அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்தபோது, கடலில் இருந்து தோன்றியவர் லட்சுமி. இவர் மகாவிஷ்ணுவை மணந்தார். லட்சுமியின் கையில் எப்போதும் பூரண கும்பம் இருக்கும். திருமால் பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தபோது, லட்சுமியும் சீதாதேவி, பத்மாவதி, துளசி என பல வடிவங்களில் வந்து நித்ய சுமங்கலியாக இருந்தவர். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளமும், பொறுமையை கொண்ட லட்சுமிதேவி, செல்வத்துக்கு அதிபதியாக இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வங்களை வாரி வழங்குகிறார்.

லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும். மாங்கல்ய பாக்கியம் பெறலாம். திருமணத் தடை விலகி, பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சுமங்கலி பெண்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழவும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், லட்சுமிதேவியை நினைத்து வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.

முன் காலத்தில் சாருமதி என்ற பெண், தன் கணவனையும், மாமனார், மாமியாரையும் கடவுளர்களாகவே நினைத்து பணிவிடை களைச் செய்து வந்தாள். அவளின் அன்பு மிகுந்த மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சி கொண்டாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, ‘என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள்.

சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி ‘வரலட்சுமி விரதம்’ இருந்து பல நன்மை களைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப் பிடிக்கத் தொடங்கினர். அதன் காரணமாக அந்த நாடே சுபீட்சம் அடைந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

விரதம் இருக்கும் முறை

ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அலங்கரிக்க வேண்டும். மண்ட பத்தின் இரு பக்கங்களிலும் வாழை மரக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும்.

லட்சுமிதேவியின் முன்பாக ஒரு வாழை இலை போட்டு, அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை மற்றும் பழங்கள் வைக்க வேண்டும். லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தில் மஞ்சள் கயிறு கட்டி, அதன் மேல் தேங்காய் வைக்க வேண்டும். தேங்காயிலும், கலசத்திலும் குங்குமம் இட வேண்டும். பின்னர் கலசத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.

தொடர்ந்து முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்னர் லட்சுமியை அர்ச்சித்து, தூப– தீபங்கள் காட்ட வேண்டும். அன்னம், பாயசம், பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள், குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

சாபம் நீங்கியது..

சித்திரநேமி என்பவர் தேவதைகளின் நடுவர். ஒரு முறை கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அவர்களுக்கு நடுவராக சித்திரநேமி இருந்தார். ஆட்டத்தின் முடிவில் சித்திரநேமி, பாரபட்சமாக ஈசன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி, சித்திரநேமிக்கு தொழுநோய் ஏற்படும்படி சாபம் கொடுத்தார்.

இதையடுத்து ஈசன், பார்வதியிடம், ‘சித்திரநேமி என் மீதுள்ள பாசத்தால் அப்படி நடந்து கொண்டு விட்டான். நீ அவனது சாபத்தை போக்கி அருள் செய்ய வேண்டும்’ என்றார். அதே நேரத்தில் சித்திரநேமியும், சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தார்.

இதையடுத்து, ‘எப்போது தடாகத்தில் தேவ கன்னிகைகள், வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பார்களோ.. அப்போது உன் நோய் நீங்கும்’ என அருள் செய்தார் பார்வதி.

சித்திரநேமி பூலோகம் வந்து ஒரு குளக்கரையில் வசித்து வந்தார். ஒரு நாள் அங்கே வந்த தேவப் பெண்கள், துங்கபுத்ரா நதிக்கரையில் வரலட்சுமி பூஜையை செய்தனர். இதைப் பார்த்த சித்திர நேமியின் தொழு நோய் நீங்கியது. பின்னர் அவரும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தார்.

லட்சுமி அருள் கிடைக்க..

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கும் கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

மேலும் பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை, துளசி மற்றும் செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பாயசம், கற்கண்டு, பழ வகைகளை நைவேத்தியமாக படைத்து, இரவில் உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு சீராக கொடுக்கப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை, தான் வாழும் காலத்தில் விற்கவோ, பிறருக்கு அன்பளிப்பாகவோ கொடுக்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும். வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி தேவி விரும்பிய வரங்களை அளித்து அருள்புரிவார்.

செல்வம் கிடைத்தது..

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவனது மனைவி சுரசந்திரிகா. இவர் களுக்கு சியாமபாலா என்ற மகள் இருந்தாள். அவளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஒரு நாள் மகாலட்சுமி தேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள். சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தை விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். ஆனால் மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள்.

விரட்டப்பட்ட லட்சுமி தேவியை, சியாமபாலா சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு உபதேசம் பெற்றாள். பக்தியுடன் விரதத்தை கடைப் பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள். ஆனால் லட்சுமி தேவியை அவமானப்படுத்தியதால், அவளது பெற்றோர் தங்கள் செல்வங்களை இழந்து நாடோடிகளாயினர்.

இதுபற்றி அறிந்த சியாமபாலா, ஒரு குடம் நிறைய தங்கத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அவர்கள் செய்த தீவினையால் அது கரியாகி விட்டது. பின்னர் சியாமபாலா தன் தாயிடம் வரலட்சுமி விரதத்தைப்பற்றி சொல்லி பூஜை செய்யும் படி கூறினாள். அவளும் மகள் சொன்னபடி வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தாள். இதையடுத்து அவர்கள் இழந்த செல்வம் மீண்டும் வந்து சேர்ந்தது.
தேசிய செய்திகள்

சசிகலாவின் மறுஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை உடனே முடிவு தெரிய வாய்ப்பு




சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.

ஆகஸ்ட் 02, 2017, 04:30 AM

புதுடெல்லி,

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறு ஆய்வு மனு

இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “ சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும். அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

சசிகலா உள்ளிட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், அமிதவராய் ஆகியோர் விசாரிக்கின்றனர்.

மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த நீதிமன்ற அமர்வில் நடைபெறாது. இது நீதிபதிகளின் அறையில் நடைபெறுவதுதான் வழக்கம். இந்த விசாரணையில் வக்கீல்கள், வழக்குதாரர்கள் பார்வையாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வழக்கம்தான், சசிகலா உள்ளிட்டவர்களின் மறு ஆய்வு மனு விசாரணைக்கும் பின்பற்றப்படுகிறது.

உடனே முடிவு

எனவே விசாரணை முடிந்து உடனே இன்று மாலை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் இந்த விசாரணை மீதான முடிவை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்

நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசின் அவசர சட்ட நகல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது




 ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட நகலை மத்திய அரசிடம் தமிழக அரசு நேற்று வழங்கியது.

ஆகஸ்ட் 02, 2017, 04:15 AM

புதுடெல்லி,

தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு (நீட்) விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்பட தமிழக அமைச்சர்கள் குழு டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினார்.

அமைச்சர் முகாம்

அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் கடந்த ஜூலை 31-ந் தேதியன்று முதல் டெல்லிக்குச் சென்று அங்கு முகாமிட்டு, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிரதம மந்திரி அலுவலகத்திற்கான இணை மந்திரி (தனி பொறுப்பு) ஜிதேந்திர சிங்-கையும் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், 1-ந் தேதியன்று (நேற்று) டெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் வீட்டுக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்பின்போது டெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி அவசர சட்டத்திற்கான நகல் மத்திய அரசுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அவசர சட்டம் குறித்து மனிதவள மேம்பாட்டு துறையிடமும், சுகாதாரத்துறையிடமும் மத்திய அரசு கருத்து கேட்கும். அவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அவசர சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவசர சட்டத்திற்கான உத்தரவை பிறப்பிப்பார்.

அதே நேரத்தில், கடந்த 2 முறை தமிழகத்தின் சார்பில் மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது மனிதவள மேம்பாட்டு துறையும், சுகாதாரத்துறையும் அந்த மசோதாக்களை நிராகரித்து விட்டது.

தமிழகத்திற்கு விலக்கு கொடுக்கப்பட்டால் மற்ற மாநிலங்களும் தமிழகத்தை முன் உதாரணம் காட்டி விலக்கு கேட்டால் என்ன செய்வது என்பது தான் இதற்கு காரணமாக பேசப்படுகிறது. எனவே தற்போது அனுப்பப்பட்டு இருக்கிற அவசர சட்ட நகலுக்கு இந்த துறைகள் ஒப்புதல் அளிக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடியை இன்று (புதன்கிழமை) காலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த இருக்கிறார்.

பிரதமர் தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கும் பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தாம்பரம்-முடிச்சூர் சாலையில் ரூ.10 கோடி செலவில் நடைபெறும் வெள்ளதடுப்பு பணிகள்



சென்னையை அடுத்த தாம்பரம்-முடிச்சூர் சாலையில் ரூ.10 கோடி செலவில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2017, 03:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம்-முடிச்சூர் சாலையையொட்டி உள்ள கிருஷ்ணா நகர், சக்தி நகர், கண்ணன் அவென்யூ, சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாததே இதற்கு காரணம்.


இனி வரும் காலங்களில் வெள்ளபாதிப்புகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு வெள்ள தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.10 கோடி

அந்த வகையில், தாம்பரம்-முடிச்சூர் சாலை குளக்கரை பகுதியில் இருந்து முடிச்சூரில் உள்ள வெளிவட்ட சாலை பகுதி வரை ரூ.10 கோடி செலவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை தமிழக நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த பணிகள் விரைவாக நடைபெறவில்லை என அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.

அதன் பேரில் நேற்று காலை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தராஜ், உதவி பொறியாளர் நரேஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோருடன் வந்து முடிச்சூர் சாலையில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

வாக்குவாதம்

அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் வெளி பகுதியில் இருந்து வெள்ள நீர் வந்து தேங்குவதாகவும், எனவே மழைநீர் கால்வாயை அகலப்படுத்தி, மழைநீர் விரைவாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கேட்டு கொண்டார். அதன்பின்னர் பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

விரைவுபடுத்த...

இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வெள்ளநீரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறையினர் திட்டம் வகுத்து உள்ளனர். முடிச்சூர் சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைத்து, வெள்ள நீர் சர்வீஸ் சாலைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதன்படி அங்கு சிறு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் மழைநீர் கால்வாய் உயரமாக்கப்பட்டு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாத இடங்களில் முதல் கட்டமாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பணிகளை விரைவாக முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, August 1, 2017

Centre recommends two members for the fee fixation committee


By Express News Service  |   Published: 01st August 2017 08:40 AM  |     
CHENNAI: The Madras High Court was informed on Monday that Dr Sanjay Srivatsava, retired professor of ophthalmology and Dr B Srinivasan, ADG (ME), DTE, GHs, Ministry of Health and Family Welfare, were recommended to be the members of the Fee Fixation Committee and an order to that effect was communicated by the Department of Health and Family Welfare on July 21 last.
The fee committee constituted might also look into the fees for MBBS courses in deemed universities and the exercise in terms of the order of the Supreme Court was required to be done by the DGHS, the Court’s First Bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar said on Monday.DGHS had informed the fees as determined by deemed universities and colleges. Hence, it was not for this court to go into that aspect, as the matter was before the apex court, the Bench added and posted the matter for further hearing on August 18.
The Bench was passing further interim orders on a PIL from Jawaharlal Shanmugham of Tiruvanmiyur to fix fees for medical courses offered by deemed universities.The petitioner submitted that the tuition fees fixed by the deemed universities was not correlated with the actual income/earning of the medical college and its teaching hospital. “The huge profit-making teaching hospital is not taken into account while calculating fee. Only the expenses incurred by the university and the hospital are considered. Giving posh atmosphere inside the campus cannot be the criteria to fix exorbitant fees,” he added.
காஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு விளக்கம்

பதிவு செய்த நாள்01ஆக
2017
12:50




காஸ் மானியம் ரத்து இல்லை: அரசு விளக்கம்

புதுடில்லி: காஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

அமளி:

வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

ஆதாரமற்றது:

இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் மனைவி கொலை : சிறப்பு எஸ்.ஐ., கைது

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:01

திருவாரூர்: மன்னார்குடியில், டாக்டர் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு, எஸ்.ஐ., உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவன் இளஞ்சேரன், 32; டாக்டர். இவனது மனைவி திவ்யா, 26. இவர், கடந்த 17ம் தேதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி, கணவர் இளஞ்சேரன் ஆகிய மூவரும், வரதட்சணை கேட்டு திவ்யாவை கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேல் விசாரணையில், ராணியின் சகோதரரான, நாகை மாவட்டம், குத்தாலத்தில் சிறப்பு சப் -- இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சிவக்குமார் மற்றும் செந்தில் ஆகிய இருவரும், முத்தழகனின் துாண்டுதால், திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததும், திவ்யா அணிந்திருந்த நகைகளை செந்தில் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், செந்தில் எடுத்துச் சென்ற ஏழரை சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

NEWS TODAY 25.01.2026