Tuesday, August 1, 2017

டாக்டர் மனைவி கொலை : சிறப்பு எஸ்.ஐ., கைது

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:01

திருவாரூர்: மன்னார்குடியில், டாக்டர் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு, எஸ்.ஐ., உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவன் இளஞ்சேரன், 32; டாக்டர். இவனது மனைவி திவ்யா, 26. இவர், கடந்த 17ம் தேதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி, கணவர் இளஞ்சேரன் ஆகிய மூவரும், வரதட்சணை கேட்டு திவ்யாவை கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.மேல் விசாரணையில், ராணியின் சகோதரரான, நாகை மாவட்டம், குத்தாலத்தில் சிறப்பு சப் -- இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சிவக்குமார் மற்றும் செந்தில் ஆகிய இருவரும், முத்தழகனின் துாண்டுதால், திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததும், திவ்யா அணிந்திருந்த நகைகளை செந்தில் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், செந்தில் எடுத்துச் சென்ற ஏழரை சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026