Wednesday, August 30, 2017

புளுவேல்' விளையாட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் !

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:34

சென்னை:''உயிர் பலி வாங்கி வரும், 'புளூவேல்' ஆன் - லைன் விளையாட்டில், குழந்தைகள் சிக்கி விடாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர், செந்தில்குமார் கூறியதாவது:ரஷ்யாவில், 2013ல், அறிமுகப்படுத்தப்பட்ட, 'புளூ வேல்' எனப்படும், ஆன் - லைன் விளையாட்டு, உலகம் முழுவதும் பரவி உள்ளது. தற்போது, இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு, அதிகாலை, 4:20 மணிக்கு எழுந்து நடக்க வேண்டும்; உயரமான மொட்டை மாடியில் நிற்க வேண்டும்.கத்தி மற்றும் பிளேடால், திமிலங்கம் போன்று கை, கால்களில் வரைய வேண்டும் என, 50 விதமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இறுதியாக, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த விளையாட்டில் சிக்கி, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், பலியாகி வருகின்றனர். சென்னையில், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், புளூவேல் ஆன் - லைன் விளையாட்டில், குழந்தைகள் சிக்கி கொள்ளாமல் இருக்க, பெற்றோர் மற்றும் பள்ளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுகி, அவர்களுடன் மனம் விட்டு பேசினால், இந்த விபரீத விளையாட்டில் இருந்து மீட்டு விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...