Wednesday, August 30, 2017

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சலிங் செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டிப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

2017-08-30@ 01:26:03




புதுடெல்லி : நீட் தேர்வு அடிப்படையில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடந்து வருகிறது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இறுதிக்கட்ட கவுன்சலிங்கை நாளையுடன் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 5,500 இடங்கள் காலியாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சுகாதார சேவைகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘இறுதிக்கட்ட கவுன்சலிங் நடத்துவதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இது நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதே போன்ற காலக்கெடுவை இதர மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் கேட்டால் அது பரிசீலிக்கப்படாது’’ என்றனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...