Monday, August 28, 2017

செம்மலை அதிருப்தி : முதல்வரை புறக்கணித்தார்
பதிவு செய்த நாள்28ஆக
2017
01:20

சேலம்: சென்னையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின், தன் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.

அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது, பழனிசாமிக்கு எதிராகவும், பன்னீர் செல்வத்துக்கு ஆதர வாகவும், செம்மலை செயல்பட்டு வந்தார். நேற்று சேலம் வந்த முதல்வர் பழனிசாமியை, உள்ளூரில் இருந்த போதும், செம்மலை சந்திக்கவில்லை.

இது குறித்து செம்மலை ஆதரவாளர்கள் கூறியதாவது:
இரு அணிகளின் இணைப்பின் போது, முதல்வர் பழனிசாமியின் தலையீட்டால், செம் மலைக்கு முக்கியத் துவம் அளிக்கப்படவில்லை.
தொகுதி நலப்பணிகளை கூட, செம்மலையால் மேற்கொள்ள முடியவில்லை. எதிர்கால நலன் கருதி, முக்கிய முடிவு மேற்கொள்ளவே, செம்மலை அமைதி காக்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
செம்மலை கூறியதாவது:
எப்போதும் தலைமைக்கு கட்டுப்படுபவன். சென்னையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, வரும், 30ல் சேலம் திரும்புவேன். அப்போது, என் நிலை குறித்து தெளிவுபடுத்துவேன்.
இவ்வாறு செம்மலை கூறினார்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...