Saturday, August 5, 2017

வருமான வரி கணக்கு; இன்று கடைசி நாள்
பதிவு செய்த நாள்05ஆக
2017
06:14




சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், இன்றுடன்(ஆக., 5) நிறைவடைகிறது.

மாத ஊதியம் பெறுவோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு, 2016 - 17க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், வருமான வரி செலுத்துவோர், ஆதார் எண்ணுடன் - பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம். அதற்காக, ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்ததால் சர்வர் முடங்கியது. அதனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, இன்று(ஆக.,5) வரை நீட்டிக்கப்பட்டது.

அதேபோல, ஆதார் - பான் எண்களை இணைப்பதற்கான தேதியும், வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், வருமான வரி தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணையோ அல்லது அதற்கு மனு செய்ததற்கான அத்தாட்சி ரசீதையோ இணைத்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர், ஆன்லைனில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கும், இன்றுடன் கெடு முடிகிறது.
அகில இந்திய மருத்துவ இடங்கள்; இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்05ஆக
2017
06:27




அகில இந்திய மருத்துவ இடங்கள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று(ஆக.,5) துவங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன.

இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 13, 14ம் தேதிகளில் நடந்தது. இதில், ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள, 2,660 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதே போல, நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 9,661 இடங்களில், முதற்கட்ட கவுன்சிலிங்கில், 8,801 பேர் இடங்கள் பெற்றுள்ளனர். இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி களில், இ.எஸ்.ஐ., தொழிலாளர் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில், 354 இடங்கள் உள்ளன. இதில், முதற்கட்ட கவுன்சிலிங்கில், 326 பேர் இடங்கள் பெற்றனர்.

மீதமுள்ள இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 'ஆன்லைன்' மூலம் இன்று துவங்கி, வரும், 7 வரை நடக்கிறது. இந்த கவுன்சிலிங்கில் இடம் பெறுவோர், வரும், 9ல் இருந்து, 16க்குள் மருத்துவக் கல்லுாரிகளில் சேர வேண்டும். மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுடன் சேர்க்கப்படும்.
-- -நமது நிருபர் -

Friday, August 4, 2017

SC Allows 10 Overseas MBBS Aspirants To Participate In Counseling For Admission [Read Order] | Live Law

SC Allows 10 Overseas MBBS Aspirants To Participate In Counseling For Admission [Read Order] | Live Law: The Supreme Court has allowed 10 MBBS aspirants, who are Overseas Citizens [OCI card-holders] and have passed NEET, to participate in the second counseling to MBBS/BDS course to be held this August 17. The Karnataka High Court had held that Overseas Citizens of India (OCI) cardholders, who are NEET UG 2017 qualified, shall be entitled to be …

Thursday, August 3, 2017

குறையும் எம்.பி.ஏ. ஆர்வம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.ஏ. படிப்புக்கான இடங்களில் 65
சதவிகிதம் வரை காலியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

எம்.பி.ஏ. எனப்படும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக வரவேற்பு இருந்தது. எம்.பி.ஏ. படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதுடன் அதிக சம்பளமும் வழங்கப்படுவதே இதற்குக் காரணம். பொது நுழைவுத் தேர்வு (டென்சேட்) நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. போன்ற முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக அளவு விண்ணப்பிப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பெரிதாக வேலைவாய்ப்பு கிடைக்காததால் எம்.பி.ஏ படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைய தொடங்கியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 1) இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதில், பெரும்பான்மையானவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 13,710 ஆக உள்ளது. இதற்கு வெறும் 4700 பேரே விண்ணப்பித்துள்ளனர். இதனால் கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 9 ஆயிரம் அல்லது 65 சதவிகித இடங்கள் காலியாக இருக்கப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 317 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 13,710 எம்.பி.ஏ. இடங்கள் உள்ளன. முதல் நாள் கலந்தாய்வில் மட்டும் 101 பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எம்.சி.ஏ. படிப்புக்கும் மாணவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 12 ஆயிரம் இடங்களில் 784 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டாலும் டென்செட் தேர்வுவை பெரும்பான்மை மாணவர்கள் எழுதுவதில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது. இந்தத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் பலர் எழுதுவதைத் தவிர்த்தனர். இதையடுத்து தேர்வு முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. எனினும் 120 நிமிடங்களில் 100 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதால் பலர் இத்தேர்வைப் புறக்கணிக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் அரசு ஊழியர்கள் ஆண் பணியாளர்களுக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டுமாம்.. - ரக் ஷாபந்தன் கட்டாயமாக்கிய மத்திய அரசு

மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் டாமன், டையு யூனியன்பிரேதசங்களில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்கள், தங்களுடன் பணி புரியும் ஆண் பணியாளர்களுக்கு கண்டிப்பாக ராக்கி கயிறு கட்டி ‘ரக்‌ஷாபந்தன்’ பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

சகோதரத்துவத்தை விளக்கம் பண்டிகையாக, ரக்‌ஷாபந்தன் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, பெண்கள் தங்களின் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டு ஆசிபெறுவார்கள், ஆண்கள் அவர்களுக்கு பரிசுகள் அளிப்பார்கள்.

இந்துக்கள் மட்டுமல்லாது, சகோதரத்துவத்தை உணர்த்தும் அனைவரும் இதை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யூனியன் பிரதேசமான டாம், டையுவில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள், தங்களுடன் பணியாற்றும் ஆண்களின் கைகளில் கண்டிப்பாக ராக்கி கயிறு கட்டி அவர்களை சகோதரர்களாக ஏற்க வேண்டும் என்று பணியாளர்துறை செயலாளர் குருபிரீத் சிங் கடந்த 1-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாமன் டையு நிர்வாக அதிகாரி பிரபுல் கோதாபாய் படேல் உத்தரவின் பெயரில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் பெண், ஆண் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் அலுவலகங்களுக்கு வர வேண்டும், வருகை பதிவேடு அறிக்கை மறுநாள் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், “ அரசின் சுற்றறிக்கை முட்டாள்தனமானது. பலரின் உணர்வுகள் அடங்கிய விஷயம் இது. ஒருவருக்கு ராக்கி கட்டலாம் , கட்ட வேண்டாம் என்பதை அரசு எப்படி முடிவு செய்ய முடியும்?. வேலை செய்யும் இடங்களில் நாங்கள் வேலைக்கான சூழலைத்தான் கடைபிடிக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, இந்த உத்தரவு பின்னர் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ். கட்சியின் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், “ ரக்‌ஷாபந்தன் பண்டிக்கைக்கு தேசிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்து கலாச்சாரமான இதை பாதுகாக்க நாடுமுழுவதும் கொண்டாடப்பட வேண்டும்’’ என்றார்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் இருக்கும் பெண் அமைச்சர்கள் எல்லைப்பகுதிக்கு சென்று ரக்‌ஷாபந்தன் கொண்டாடவும், அதற்கு முந்தைய ஆண்டு, தங்கள் தொகுதியில் சென்றுகொண்டாடவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

Heavy rain in Vellore, Tiruvannamalai


Parts of Vellore and Tiruvannamalai districts experienced heavy rain on Tuesday evening. Chengam in Tiruvannamalai district received 130.40 mm rains.

In Vellore, the downpour that started close to 9.30 a.m. continued till late night.
During the 24-hour period ending 8 a.m. on Wednesday, Vellore district received an average rainfall of 32.16 mm.

Vellore recorded the highest rainfall with 74.4 mm followed by Kaveripakkam (53.2 mm) and Ambur (51.6 mm). Arcot received 38 mm rains, while Melalathur recorded 36.6 mm rainfall and Gudiyatham received 33 mm rains. Parts of Vaniyambadi, Alangayam, Walajah and Tirupattur also received rains.

Tiruvannamalai district received an average rainfall of 65 mm.
Chengam recorded 130.40 mm rains, while Polur recorded 87.80 mm rains and Vandavasi received 84.30 mm rains.

Arni received 81.60 mm rains. Cheyyar recorded 47.50 mm rainfall, while Tiruvannamalai and Sathanur Dam also received rains.

With no end to NEET impasse, many opt for Siddha medicine


Students waiting to get applications at Government Siddha Medical College in Palayamkottai on Wednesday.Photo: A. Shaikmohideen  
Even as the medical admission process hangs in balance in the State, sale of applications for joining siddha medical colleges began at Government Siddha Medical College in Palayamkottai on Wednesday.

As many as 219 students, including 10 candidates under special category, bought the applications after Dr. Thiruthani, principal (in-charge) and professor of toxicology of the college, inaugurated the sale.

Following the confusion and uncertainty that prevails in medical admissions in the State this year following the introduction of National Entrance and Eligibility Test (NEET), some of the students who had dreamt of joining MBBS have now decided to join Siddha medicine.

“Though my daughter’s cut-off marks for medicine is 199, NEET has played spoilsport, as she studied under the State Board’s ‘samacheer kalvi’ syllabus. Hence, she decided to join Siddha medicine, which is gradually winning the people’s trust and confidence,” said the father of a student waiting in the long queue to buy the application.

Sale of applications also started at Government Ayurveda College in Nagercoil in Kanniyakumari district on Wednesday.

NEWS TODAY 25.01.2026