Monday, August 21, 2017


இந்திய வம்சாவளியினர் தேர்தலில் பிரசாரம் செய்யலாமா?
பதிவு செய்த நாள்21ஆக
2017
01:00

புதுடில்லி: 'வெளிநாடுகளில் வாழும், இந்திய வம்சாவளியினர், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், பிரசாரம் செய்வது, 'விசா' விதிகளை மீறும் செயலா' என, வெளியுறவு அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது.

சமீபத்தில், பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினர், பிரசாரத்தில் ஈடுபட்டனர்; இது, விசா விதிகளை மீறும் செயலா என, தலைமை தேர்தல் கமிஷனுக்கு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட அமைச்சகத்திடம், தலைமை தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலக உயரதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில், வெளிநாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பிரசாரம் செய்தனர். அது பற்றி, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், அது, விசா விதிமீறல் ஆகாதா என, விளக்கம் கேட்டு, மாநில தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விஷயத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அல்லது தேர்தல் விதிகளில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சட்ட அமைச்சகத்திடம், வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. சட்ட அமைச்சகம், தக்க பதிலை இன்னும் அளிக்கவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
நாளை அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பூட்டு::போராட்டத்தை முடக்க அதிகாரிகள் முடிவு

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:16


மதுரை:மதுரை மாவட்டத்தில், 'குறைந்தபட்சம் 80 சதவீதம் அரசு பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,' என ஆசிரியர் சங்கங்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பள்ளிகளை பூட்டும் திட்டத்தை முறியடிக்க கல்வி அதிகாரிகளும் களத்தில் றங்கியுள்ளனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் நாளை (ஆக.,22) வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

'போராட்டத்தில் பங்கேற்றால் ஒரு நாள் சம்பளப் பிடித்தம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என அரசு எச்சரித்துள்ளது. இதற்கிடையே 'இப்போது இல்லை; இனி எப்போதும் இல்லை' என்ற புதிய கோஷத்துடன் அனைத்து 'ஆசிரியர்களும் கட்டாயம் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்,' என எப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய மற்றும் வட்டார அளவில் ஆசிரியர் சங்கங்கள் (ஜாக்டோ) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறது.இதற்கிடையே நேற்று நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், 'பள்ளி சாவி தலைமையாசிரியரிடம் தான் உள்ளன. அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலை தலைமையாசிரியர்கள் யாரும் பள்ளியை திறக்க வேண்டாம்,' என முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஜாக்டோ ஜியோ' போராட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் நாளை நடக்கும் போராட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் என மொத்தம் 22 சங்கங்கள் பங்கேற்கின்றன. சில சங்கங்கள் தார்மீக ஆதரவு மட்டும் தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்காத முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். அதனால் பாதிப்பு ஏற்படாது. மாவட்டத்தில் குறைந்தபட்சம் 80 சதவீதம் பள்ளிகளை பூட்டுப் போட்டு பூட்டி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதி காண் பருவம் முடிக்காத சில ஆசிரியர்கள் பணிக்கு செல்லலாம். அதை தவிர்த்து ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர், என்றார்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "போராட்டங்களில் பங்கேற்கும் ஆசிரியர் விபரங்களை முதல் நாளே தெரிவிக்க வலியுறுத்தியுள்ளோம். பள்ளிக்கு தலைமையாசிரியர்கள் வராதபட்சத்தில் அடுத்த நிலையில் உள்ள ஆசிரியரிடம் அவர்கள் சாவியை ஒப்படைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தால் ஒரு பள்ளி கூட மூடப்படும் சூழ்நிலை ஏற்படாது. உரிய மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.




Advertisement
10 நாட்களில் மாணவர் சேர்க்கைமருத்துவ கவுன்சில் கெடுபிடி

'நீட்' தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், 'கெடு' விதித்து உள்ளது.





மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும், இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.'நீட்' தேர்விலில்இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர, உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. அதனால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசு புதிய அவசர சட்டம் நிறைவேற்றி, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில்,மருத்துவ மாணவர் சேர்க்கையை தாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில், புதிய வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில்,மத்திய - மாநில அரசுகள் பதில் தர, உச்சநீதிமன்றம் .

இதற்கிடையில், வரும், 31க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கும்படி,தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உத்தர விட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன், அனைத்து மாநிலங்களிலும், மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், தமிழகத்திலும்,மாணவர் சேர்க்கையை உரியகாலக்கெடுவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதனால், இன்னும், 10 நாட்களில் மாணவர்சேர்க்கையை முடிக்க வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'நீட்' தேர்வு வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில், கூடுதல்அவகாசம் கேட்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். - நமது நிருபர் -
சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி
இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஓட்டம் பிடித்துள்ளதால், தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.





சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம் என, தினகரன் கருதினார்.

நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 12 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.இரண்டாவது நாளாக, நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,

எம்.எல்.ஏ.,க் களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேலுாரில், அரசுநடத்தும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, நேற்று நடந் தது. இதில், தினகரன் அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். இதனால், தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பறிபோகிறது தினகரன் ஆதரவு மந்திரிகளின் பதவி

அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணியும் பன்னீர் அணியும் மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்தில் இன்று மாலை இணையவுள்ளன. அப்போது ஒற்று மைக்கான உறுதிமொழியும் எடுக்கப்படுகிறது. கட்சியை வழிநடத்த நியமிக்கப்பட உள்ள, வழி காட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோரும் இடம் பெற உள்ளனர்.

பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமியும், சண்முகநாதனும் இடம்பெறுகின்ற னர்.முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலாகாக்கள் வழங்கப்பட உள்ளன. அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு,

முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது. பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக்கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவு அமைச்சர்களின் இலாக்காக் களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர்மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக் களை மாற்றவும் முடிவாகி உள்ளது.

இரு அணிகளிலும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும், எம்.எல்.ஏ.,க் களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரிய தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது.நீண்ட இழு பறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன் ஆதரவாளர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - நமது நிருபர் -

AIDMK MERGER

இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சில், சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளதால், அமாவாசை தின மான இன்று, முதல்வர் பழனிசாமி திட்டப்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைகின் றன. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில் முக்கிய இலாகா தர திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்காக, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களை பறிக்க, பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.




இணைப்பிற்கு முன், கட்சியின் மாநில நிர்வாகி கள் கூடி, சசிகலாவை பொதுச்செயலர் பதவி யில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறை வேற்ற உள்ளனர்.ஜெ., மறைவுக்குப் பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட் டது. இரு அணிகளையும், இணைக்கும் முயற்சிகள் பல மாதங்களாக தொடர்ந்தன.

ஆனாலும், பன்னீர் தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளால், இணைப்பில் இழுபறி நீடித் தது. சமீபத்தில், பன்னீர் விதித்த நிபந்தனை களை நிறைவேற்ற, முதல்வர் பழனிசாமி தரப்பு சம்மதித்தது; அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.இதையடுத்து, 18ம் தேதி, இரு அணியினரும் முக்கிய ஆலோசனை நடத்தி னர்.சென்னை, மெரினாவில் உள்ள, ஜெ., நினை விடத்தில், இரண்டு அணிகளின் இணைப்பு நடக்கும் என்ற, தகவலும் பரவியது.ஆனால்,


அணிகள் இணைப்புக்கு பின், கட்சியை வழி நடத்தும் குழுவுக்கு யார் தலைவர் என்ப தில், அதிகார போட்டி நிலவி யதால், இணைப்பு தடைபட்டது.

இருப்பினும், இரண்டு தரப்பிலும் ரகசிய பேச்சு நீடித்தது. இதில், 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், ஜெயலலிதாவால் நியமிக் கப்பட்ட ஐவர் குழு போல, கட்சியை வழி நடந்த, இரண்டு அணிகள் சார்பிலும், ஏழு பேர் குழு அமைப்பது என்றும், குழுவின் தலைவர் பொறுப்பை, பன்னீ ர் செல்வத்துக்கு தருவது என்றும் தீர் மானிக்கப் பட்டது. அத்துடன், பன்னீர் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில், முக்கிய இலாகாக்கள் தரவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் ஒன்றுபட்டு, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததும், உட் கட்சி தேர்தலை நடத்தி, பொதுச்செயலர் உள் ளிட்ட நிர்வாகி களை தேர்ந்தெடுக்கவும் திட்ட மிடப்பட்டது. இப்படி பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட்டதால், அமாவாசை தினமான இன்று, 'கிளைமாக்ஸ்' காட்சியாக, பழனிசாமி திட்டப் படி, இரு அணிகளும் இணைகின்றன.

சசிகலாவுக்கு 'கல்தா'

அதற்கு முன், இன்று காலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள்கூட்டம் நடக்கிறது. அதில், தற்காலிக பொதுச் செயலர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந் தும், சசிகலாவை நீக்கும் தீர்மானம் நிறை வேற் றப்படுகிறது.அதன்பின், மாலையில், மெரினா வில் உள்ள, ஜெ., நினைவிடத்தில், இரு அணி களின் இணைப்பு நடக்கிறது. அப்போது,ஒற்று மைக்கான உறுதி மொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன.கட்சியை வழிநடத்த நியமிக்கப்பட உள்ள, வழிகாட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டை யன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோ ரும் இடம் பெற உள்ளனர். பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமி யும், சண்முக நாதனும் இடம் பெறுகின்றனர்.

முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலா காக்கள் வழங்கப்பட உள்ளன.அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது.

இலாகா பறிப்பு

பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக் கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவுஅமைச்சர்களின் இலாக்காக்களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதா கிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர் மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக்களை மாற்றவும் முடிவாகி உள்ளது.இரு அணிகளிலும், அமைச் சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடை யும், எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரியத் தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது.

நீண்ட இழுபறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன்ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். தினகரனுக்கும், இது பெரும் பின்னடை வதாக அமையும் என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -

Sunday, August 20, 2017

Lost a low-end mobile phone? No one will probably go looking for it

Cost of probe is often many times the cost of phone

If your mobile phone is stolen, chances are unless it is a high-end device, the police are not going to be in a hurry to catch the thief. Tracking down low-priced mobile phones is the last priority for the police, for two reasons.
More often than not, the cost incurred and manpower diverted to recover the phone — especially if it’s found operational several hundred kilometres away from the city — is often 10 times the actual price of the device in the market. Secondly, police officers say, most of the victims usually just want an acknowledgement on the lost phone so that they can get a duplicate SIM.
“At the jurisdictional level, we work on priority basis. With limited resources, it comes down to prioritising crime and focussing on serious cases. More often than not, tracking down a mobile phone needs as many men as a murder or house break-in case,” a police officer said.
Rise in thefts
And while ignoring such complaints has reduced the workload on the police, it has resulted in a rise in mobile phone thefts in the city. The lethargic attitude of the police is giving a carte blanche to thieves who find that they are getting away with stealing inexpensive phones that can easily be disposed of later.
“With technological advancement, it is not that we can’t track down a stolen phone. It is just a matter of feasibility,” another police officer said. A lot also depends on whether the complainant pursues the case actively with the police.
However, the police feel service providers should have technology in place to deactivate a handset if it is stolen or being misused.
Only Allopaths can prescribe Modern Medicines – Allahabad High Court  “Medical Practitioners enrolled in one branch, not allowed to practice in other Branch..

” A Decision that may be welcomed by Allopathic Practitioners, but not by Homeopaths… The Division Bench of Allahabad high Court in its recently reported judgment in AIR 2017 ALL 105, while dismissing the Petition filed by Homeopathic Surgeon Associ...

Read more at Medical Dialogues: Only Allopaths can prescribe Modern Medicines – Allahabad High Court http://medicaldialogues.in/only-allopaths-can-prescribe-modern-medicines-allahabad-high-court/
Copyright 2017@ Medical Dialogues

NEWS TODAY 29.01.2026