Monday, August 21, 2017

AIDMK MERGER

இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சில், சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளதால், அமாவாசை தின மான இன்று, முதல்வர் பழனிசாமி திட்டப்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைகின் றன. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில் முக்கிய இலாகா தர திட்ட மிடப்பட்டுள்ளது. அதற்காக, தினகரன் ஆதரவு அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களை பறிக்க, பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.




இணைப்பிற்கு முன், கட்சியின் மாநில நிர்வாகி கள் கூடி, சசிகலாவை பொதுச்செயலர் பதவி யில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறை வேற்ற உள்ளனர்.ஜெ., மறைவுக்குப் பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட் டது. இரு அணிகளையும், இணைக்கும் முயற்சிகள் பல மாதங்களாக தொடர்ந்தன.

ஆனாலும், பன்னீர் தரப்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளால், இணைப்பில் இழுபறி நீடித் தது. சமீபத்தில், பன்னீர் விதித்த நிபந்தனை களை நிறைவேற்ற, முதல்வர் பழனிசாமி தரப்பு சம்மதித்தது; அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.இதையடுத்து, 18ம் தேதி, இரு அணியினரும் முக்கிய ஆலோசனை நடத்தி னர்.சென்னை, மெரினாவில் உள்ள, ஜெ., நினை விடத்தில், இரண்டு அணிகளின் இணைப்பு நடக்கும் என்ற, தகவலும் பரவியது.ஆனால்,


அணிகள் இணைப்புக்கு பின், கட்சியை வழி நடத்தும் குழுவுக்கு யார் தலைவர் என்ப தில், அதிகார போட்டி நிலவி யதால், இணைப்பு தடைபட்டது.

இருப்பினும், இரண்டு தரப்பிலும் ரகசிய பேச்சு நீடித்தது. இதில், 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், ஜெயலலிதாவால் நியமிக் கப்பட்ட ஐவர் குழு போல, கட்சியை வழி நடந்த, இரண்டு அணிகள் சார்பிலும், ஏழு பேர் குழு அமைப்பது என்றும், குழுவின் தலைவர் பொறுப்பை, பன்னீ ர் செல்வத்துக்கு தருவது என்றும் தீர் மானிக்கப் பட்டது. அத்துடன், பன்னீர் ஆதரவாளர்களுக்கு, அமைச்சரவையில், முக்கிய இலாகாக்கள் தரவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இரு அணிகளும் ஒன்றுபட்டு, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததும், உட் கட்சி தேர்தலை நடத்தி, பொதுச்செயலர் உள் ளிட்ட நிர்வாகி களை தேர்ந்தெடுக்கவும் திட்ட மிடப்பட்டது. இப்படி பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட்டதால், அமாவாசை தினமான இன்று, 'கிளைமாக்ஸ்' காட்சியாக, பழனிசாமி திட்டப் படி, இரு அணிகளும் இணைகின்றன.

சசிகலாவுக்கு 'கல்தா'

அதற்கு முன், இன்று காலை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள்கூட்டம் நடக்கிறது. அதில், தற்காலிக பொதுச் செயலர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந் தும், சசிகலாவை நீக்கும் தீர்மானம் நிறை வேற் றப்படுகிறது.அதன்பின், மாலையில், மெரினா வில் உள்ள, ஜெ., நினைவிடத்தில், இரு அணி களின் இணைப்பு நடக்கிறது. அப்போது,ஒற்று மைக்கான உறுதி மொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன.கட்சியை வழிநடத்த நியமிக்கப்பட உள்ள, வழிகாட்டும் குழுவில், முதல்வர் பழனிசாமி அணி தரப் பில், அவரும், அமைச்சர்கள் செங்கோட்டை யன், சீனிவாசன், சி.வி.சண்முகம் ஆகியோ ரும் இடம் பெற உள்ளனர். பன்னீர் தரப்பில், அவரும், முன்னாள் அமைச்சர்கள், முனுசாமி யும், சண்முக நாதனும் இடம் பெறுகின்றனர்.

முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர உள்ள தால், பன்னீர் செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவியுடன் நிதி, பொதுப்பணித்துறை இலா காக்கள் வழங்கப்பட உள்ளன.அவரது அணியை சேர்ந்த செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு, முக்கிய இலாகாக்களுடன் கூடிய, அமைச்சர் பதவி தரப்படுகிறது.

இலாகா பறிப்பு

பன்னீர் அணியினருக்கு, முக்கிய இலாக்காக் கள் தர வேண்டியுள்ளதால், தினகரன் ஆதரவுஅமைச்சர்களின் இலாக்காக்களை பறிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன்படி, ராதா கிருஷ்ணன், விஜயபாஸ்கர், சரோஜா, வளர் மதி ஆகியோர் மீது உள்ள அதிருப்தியால், அவர்களிடம் உள்ள இலாகாக்களை மாற்றவும் முடிவாகி உள்ளது.இரு அணிகளிலும், அமைச் சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடை யும், எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்த, தலா, 10 பேருக்கு, வாரியத் தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளது.

நீண்ட இழுபறிக்குப்பின், இரு அணிகளின் இணைப்பு உறுதியாகி விட்டதால், தினகரன்ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். தினகரனுக்கும், இது பெரும் பின்னடை வதாக அமையும் என, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...