Monday, August 28, 2017

பார்மசி கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா

பதிவு செய்த நாள்27ஆக
2017
23:01

ஊட்டி : ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியர், சிறப்பு பூஜை செய்தனர்.ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி மாணவ, மாணவியர், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, 11 நாட்களுக்கு, தினசரி, காலை மற்றும் மாலையில், சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்குவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விழா முடிவில், விநாயகர் சிலையை கல்லுாரியில் உள்ள கிணற்று நீரில் கரைப்பர்.
தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கி யுள்ள நிலையில், தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





.தி.மு.க., தலைமையகத்தில், இன்று நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறிக்க, முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபை உரிமை குழு கூடி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கிறது.

இந்த இரு கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்ப லாம் என்பதால், ஆளும் கட்சி தொண்டர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும், முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தில், தற்போது குழப்பமான அரசியல் சூழல் நிலவு கிறது. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அவர்களால் ஒதுக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட துவங்கி உள்ளார்.

அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவ தாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.



சந்திப்பு


எனவே, 'சட்டசபையை கூட்டி, பெரும்பான் மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தர விட வேண்டும்' என, கவர்னருக்கு எதிர்க்கட்சி கள் கடிதம் அனுப்பி உள்ளன. சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவர், துரைமுருகன் தலைமையில், எதிர்க்கட்சி பிரதிநிதிகள், கவர்னரை நேற்று சந்தித்து, இது தொடர்பாக கடிதம் அளித்தனர்.

அதனால், கவர்னர் என்ன முடிவெடுக்கப் போகி றார் என, அனைத்து கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.அதே நேரத்தில் பழனிசாமிக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்களில்


சிலர், 'ஆட்சியை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்கலாம்' என, வலியுறுத்த துவங்கி உள்ளனர்.



முக்கிய முடிவு


இந்த சூழ்நிலையில், இன்று காலை, 9:30 மணிக்கு, அ.தி.மு.க., - எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இதில், தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்பரா என, தெரியவில்லை.

இக்கூட்டத்தில், கட்சி பொதுக்குழுவை கூட்டு வது; மன்னார்குடி கும்பலை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும்வகையில், சசிகலாவின் கட்சி பதவியை பறிப்பது; கட்சியிலிருந்து அவரை நீக்குவது உட்பட, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.பின், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்; இரட்டை இலையை மீட்க, தேர்தல் கமிஷனில் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் போன்றவை குறித்தும் முடிவெடுக்கப்படுகிறது.இதில், எடுக்கப்படும் முடிவை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தினகரன் மற்றும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல, சட்டசபை உரிமைக்குழு கூட்டமும், இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தடை செய்யப்பட்ட, போதை பாக்குகளை, தி.மு.க.,வினர் சட்ட சபைக்கு எடுத்து வந்த விவகாரம், விவாதிக்கப் பட உள்ளது. இதில், எடுக்கப் போகும் முடிவும், அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு கூட்டங்களிலும், எடுக்க உள்ள முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளுங்கட்சி யினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், கூட்ட முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.



தினகரன் வலையில் 5 மந்திரிகள்


இன்று நடக்கும், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட் டத்தில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து


Advertisement

நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதை அறிந்த தினகரன், முதல்வர் பழனிசாமி வகித்த, சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியை நேற்று பறித்துள்ளார். மேலும், தினகரன் விரித்த வலையில், ஐந்து அமைச்சர்கள் சிக்கி உள்ளனர்.

'சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி னால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என, அவர் கள், தினகரன் ஆதரவாளர்களிடம் கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



மோதல் ஏற்படும் அபாயம்


'பழனிசாமியை நீக்கிவிட்டு, சபாநாயகருக்கு, முதல்வர் பதவி வழங்கினால், சமரசத்திற்கு தயார்' என, திவாகரன் தரப்பினர் அறிவித்தி ருந்தனர். ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க் களும், இந்த கோரிக்கையை வலியுறுத்தவும், சசிகலாவை நீக்கினால், எதிர்ப்பு தெரிவிக்கவும், திட்ட மிட்டுள்ளனர்.இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில்,மோதல் சம்பவங்கள் நடக்குமோ என்ற அச்சம், கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



தாவும் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி அதிர்ச்சி


அ.தி.மு.க.,வின் அணிகளும் இணைந்த பின், தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தாவி வருவதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தினகரன் அணியில், 19 எம்.எல். ஏ.,க்கள் மட்டுமே, முதலில், புதுச்சேரிக்கு சென்று தங்கினர். பின், அறந்தாங்கி ரத்ன சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும், தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். நேற்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ், தேனியில் தினகரனை சந்தித்து ஆதரவு அளித்தார். பின், 'நான் முதல்வர் பழனிசாமி அணியில்தான் இருக்கிறேன்' என, பல்டி அடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, தினகரன் அணியிலிருந்து, பழனிசாமி அணிக்கு தாவினார். தற்போது, மீண்டும் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி, எந்த நேரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் பிடித்து விடுவரோ என்ற குழப்பம் நீடிப்பதால், முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Sunday, August 27, 2017

உயிர் வளர்த்தேனே 40: சமச்சீர் சாம்பார்

Published : 17 Jun 2017 12:13 IST



சாம்பாரில் பருப்பின் வாயிலாகப் புரதச் சத்தும், அதில் சேர்க்கும் வெங்காயம், மிளகாய், தக்காளி, காய்கள் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் மூலமாக உயிர்ச் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் கிடைக்கின்றன. தாளிதத்திற்கும், பருப்பு அவிப்பதற்கும் சேர்க்கும் எண்ணையும், சுவைக்குச் சேர்க்கும் தேங்காய்ப்பூவும் கொழுப்புச் சத்தை அளிக்கிறது. சாம்பாருக்கு ஆதாரமாக உணவாகிய சோறு அல்லது இட்லி, தோசை போன்றவை நமக்கு எரிமச் சத்தை அளிக்கின்றன.

ஆக, சாம்பாருடன் கூடிய உணவை நாம் உண்டால் போதும் நமக்கு அவசியமான சத்துக்கள் அனைத்தும் கிடைத்து விடுகிறது. ஆனால் பொதுவாக இன்று மத்தியதர உணவு ஒரு சாம்பார், இட்லி – தோசை, சோற்றுடன் முடிவதில்லை.

உண்ணும் முறை சரியா?

இட்லி என்றால் ஒன்று அல்லது அதற்கு மேலான சட்னி வகைகள், பொடி. சோறு என்றால் சாம்பாருக்குக் கூடுதலாக ஒரு பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய், ரசம், தயிர் அல்லது மோர் அல்லது இரண்டும் என்று சேர்த்துக் கொள்கிறோம். விசேஷ சாப்பாடு என்றால் கேட்கவே வேண்டாம் முதலில் ஒரு கலந்த சாதம் பின் மேற்படி வகையறாக்களுடன் காரக்குழம்பு, வடை, பாயாசம் என்று நம்மை ஆயாசப்படுத்தும் வகைகளைச் சேர்த்துக் கொண்டே போகிறோம்.

சாம்பாருடன் சட்னியைக் கலக்கி உண்போரும் உண்டு. கெட்டித் தயிரைச் சோற்றுடன் பிசைந்து அதில் மண்டிச் சாம்பார் ஊற்றிச் சுவைப்போரும் உண்டு. ஒரு சாம்பார், சோறு அல்லது இட்லி என்று ஒரு சிற்றுரையோடு முடித்துக் கொண்டால் நிறைவு ஆவதில்லை. சரி, திருப்தியாக ஃபுல்கட்டு கட்டலாம் என்று இறங்கினால் அன்று முழுவதும் உடல் நவம்பர் மாதத்து வானம் போல மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.

சிலருக்குப் புயல் சின்னம் கரையைக் கடந்து காற்று வீச்சும், அதி மழைப் பொழிவும் நிகழ்வதுண்டு. சிலருக்குக் கரையிலேயே நின்று ஒரு காட்டு காட்டி விடுவதும் (வாந்தி) உண்டு.

இவையிரண்டும் நடக்காத போது நல்லது… தொந்தரவில்லை என்று இருந்து விட முடிகிறதா என்றால் இல்லை. காற்றழுத்த உயர்வு மண்டலம் உடலின் பல பாகங்களில் சுற்றிச் சுற்றி வந்து `கடமுடா’வென்று இடி முழக்கம் செய்கிறது. உட்கார்ந்து எழுந்தால் கண்ணுக்குள் மின்னல் வெட்டுகிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் நமது மிகையான உண்ணும் முறை, குறைவான உடலுழைப்பு முறை. சரி, உடலுக்கு நலம் பயக்கும் விதமாக எப்படி உண்பது என்பதை தொடரின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம். இப்போது நாம் சாம்பாருக்கு வருவோம்.

ஒருநேர முழுமையான உணவுக்கு, அனைத்து சத்துக்களும் நிரம்பிய சம்பிரதாயமான சாம்பார் சோறு அல்லது இட்லி – தோசை போதும். அதிலும் சோறு என்றால் சுமார் நூறுகிராம். இட்லி என்றால் மூன்று போனால் போகிறது உங்களுக்காக நான்கு. இதுதான் நாம் சாம்பாருக்கு மரியாதை செய்வதாக இருக்கும்.

மேலும் இதுவோர் முழுமையான உணவு என்று நம்பினால் நிறைவு கிடைக்கும். அடுத்த வேளை முழுமையாகப் பசிக்கும் வரை இடைப்பலகாரம் எதுவும் உண்ணாமல் இருந்தால் “வாயு பக்வான்” தொல்லை ஒன்றும் கொடுக்கமாட்டார்.

உணவுக்கு மரியாதை இருக்கிறதா?

இன்றைக்கு நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களில் சமைக்கும் அவசரச் சாம்பாரில் பருப்புக்கும் மரியாதையில்லை, உடலுக்கும் மரியாதை இல்லை, சமையலுக்கும் மரியாதை இல்லை. “வேறென்ன செய்யிறது இந்த அவசர உலகத்துல” என்று ஒருசேர `மைண்ட் வாய்ஸ்’ எழுவதைக் கேட்க முடிகிறது.

அவசர உலகத்தில் ஓடிஓடி சம்பாதிப்பதில் கை நிறைய வருவது போலத் தோன்றுகிறது. ஆனால் விரலின் நக நுனி கூட நனைவதில்லை. வந்த திசை தெரிகிறது. போகிற கோணங்கள் தெரிவதே இல்லை. “உள போல இல்லாகிக் கெடுகிறது” ஒரு சாம்பாரை நிதானித்துச் சுவைக்க முடியவில்லை என்றால் நாம் என்ன பெரிதாக வாழ்ந்து விட்டோம்! சாம்பாரில் நிறைவு கொள்ள முடியாமல்தான் அதில் பொரியலைத் துவட்டிப் பார்க்கிறோம். அப்பளத்தைக் கடித்துப் பார்க்கிறோம். ரசத்தில் மசித்துக் குடித்துப் பார்க்கிறோம். இறுதியாகத் தயிரோடு மோர் மிளகாயைக் கடித்தாலும் வயிற்றில் தான் சுள்ளென்று இறங்குகிறதே ஒழிய நா நிறைவு கொள்வதில்லை. உடல், மந்தமடைகிறது ஆனந்தமடைவதில்லை.

இங்கே பரிந்துரைக்கும் இருவகைச் சாம்பார்கள் உடலுக்கு நலம் தருவது மட்டுமல்லாமல் நாவிற்குச் சுவையாகவும், வேலை விரைவில் முடிவதாகவும் இருக்கும்.

தொண்டருக்கும் மயக்கம் தராத சாம்பார்

மண் சட்டியை அடுப்பில் ஏற்றி ஒரு ஸ்பூன் கடுகை லேசாக வெடிக்கும் பதத்திற்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். நாம் போடப் போகும் பருப்பிற்கு ஏற்ப நீர் வைத்துக் கொள்ளவும். மேற்படி மண் சட்டி ஏற்கெனவே சூடேறியதால் விரைவில் கொதித்து விடும். இப்போது பருப்பைப் போட்டு உடன் இரண்டு ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணை எனப்படும் ஆமணக்கு எண்ணையை ஊற்றி விடவும். ஐந்து பருப்பு அளவிற்கான இஞ்சியை நன்றாகத் தட்டி உலையில் போடவும். ஐந்தாறு பல் பூண்டையும் உடன் சேர்க்கவும்.

நாம் சேர்த்துள்ள எண்ணை, இஞ்சி, பூண்டு யாவும் பொங்கும் பருப்பு நுரையைத் தணிக்கும். பருப்பு வேகும் போதே பருப்பின் வாயுச் சீற்றத்தைத் தணிப்பதோடு நாம் உண்ட பின்னரும் உடலில் வாயு, மிக விடுவதில்லை. பருப்பு விரைந்து வேகவும் துணை புரிகிறது.

அடுத்து வெங்காயத்தை வெட்டிப் போட்டு, தொடர்ந்து நீர்த் தன்மை மிகுந்த சுரை, வெண் பூசணி, பீர்க்கன் காய்களில் எவற்றேனும் ஒன்றையோ அனைத்தையுமோ சிறிய அளவில் வெட்டிப் போடவும்.

அவை வெந்து கொண்டிருக்கும் போதே மூன்று நான்கு காய்ந்த மிளகாய்களைப் பொடியாகக் கிள்ளிப்போட்டு உடன் மல்லித் தழையையும் தரித்துப் போட வேண்டியது. தக்காளியைப் பிசைந்து ஊற்ற வேண்டியது. இறுதியாகப் பொடித்து வைத்த கடுகை சப்பாத்திக் கட்டை கொண்டு நோவாமல் உருட்டி கொதிக்கும் கலவை மீது தூவவும்.

அனைத்தும் இதே வரிசையில் போட்ட பிறகு சுமார் இரண்டு நிமிடம் மூடி வைத்திருந்தால் போதும். இறுதியாக கல்லுப்பு போட்டுக் கலக்கி இறக்கி விட வேண்டியது. இது நமது வழக்கமான சாம்பாரைப் போல் தொரத் தொரவென இருக்காது. பருப்பு, காய்கள் அனைத்தும் மலர வெந்திருக்கும் ஆனால் குலைந்து அடையாளம் திரிந்து போயிருக்காது. சற்றே நீர்த் தன்மையுடன் இருக்கும்.

குக்கரில் வைப்பதைக் காட்டிலும் விரைவாக முடியும். இந்த சாம்பாரில் எந்தச் சத்தும் சிதையாமல் இருப்பதால் தனித்துவமான சுவையுடன் இருக்கும். சாதத்துடன் ஊற்றிப் பிசைந்து, மென்று உண்கிற போது நாவெங்கும் சுவை தழுவும். வயிற்றில் இதமாக இறங்கும். இந்த சாம்பாரும், சோறும் மட்டுமே போதும், உண்ட நிறைவு முழுமையாகக் கிடைக்கும்.

நம்முடைய வழக்கமான சாம்பார் ஒன்றோடு ஒன்றை குழையச் செய்வதாக இருப்பதால் அதன் உயிர்ப் பண்பு கெட்டு வாயு மிரட்டலாக, வயிற்று உப்பலாக, தொண்டை எரிச்சலாக இருக்கிறது. மேற்படி முறையில் சமைக்கும் சாம்பாரை உண்போருக்கு தொண்டரின் மயக்கம் இருக்காது. நாள் முழுதும் சுறு சுறுப்பு துரத்தும்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
உயிர் வளர்த்தேனே 42: சாம்பார் காதல் ஏன் குறைவதில்லை?





நம்முடைய பருப்புப் பயன்பாட்டில் அறுதிப் பெரும்பான்மைக்கும் மேலான இடங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்திவருவது துவரம் பருப்புதான். காரணம், தானியத்தில் கோதுமை அதிக பசைத்தன்மையைக் கொண்டிருப்பதைப் போல பருப்பில் துவரம் பருப்பு மிகுந்த பசைத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

சுமார் நூறு, நூற்றைம்பது கிராம் எடுத்துப் போட்டால் போதும். மொத்தக் குடும்பத்துக்கும் இரண்டு வேளைக்கும் பாத்திக் கட்டிப் பிசைந்தடிக்க சாம்பார் தயாரித்து விடலாம். எனவே, பொருளாதாரரீதியாகவும் கைக்கு அடக்கமாகத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு துவரம் பருப்பு விலை 300 ரூபாய்வரை உச்சத்துக்குப் போனது. அதற்கான பின்னணி அரசியல் - வியாபாரக் காரணத்தை ஆராய்ந்து எழுதினால், அந்த எழுத்தே பொசுங்கிப் போகும் அளவுக்கு வெப்பமானது.

துவரைக்கு அடிமையாவது ஏன்?

நம்மவர்கள் சாம்பாருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். பலருக்கும் குறிப்பிட்ட ஒரு உணவை மீண்டும் மீண்டும் சாப்பிட நேர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த உணவு ஒரு நேரம் கிடைக்கவில்லை என்றாலும், உடல் முரண்டு பிடிக்கத் தொடங்கிவிடும். அதாவது அச்சுவைக்குரிய அம்சம் உடலிலிருந்து தீர ஆரம்பிக்கிறபோது, அதை மீண்டும் நாடத் தூண்டும்.

சிகரெட் பிடிக்கிறவர் எத்தனையோ கோயிலில் சத்தியம் செய்து, ஆயிரம் மனச் சங்கல்பம் எடுத்துக்கொண்டு ஒருவேளை, இரண்டு வேளை பிடிக்காமல் இருப்பார்கள். அப்போது, திசுக்கள் எங்கும் படிந்திருக்கிற நிக்கோட்டின் தீரத் தொடங்கியதும் அவை தீர்ந்துபோவதைப் பொறுக்க முடியாத திசுக்கள் அரற்றி அடம் பிடித்து, மீண்டும் `ஒன்னே ஒன்னு’ என்று சமாதானம் சொல்லிப் பிடிக்க வைத்துவிடுகிறது. இதேபோலத்தான் நம்மில் பலர் குறிப்பிட்ட உணவுக்கு அடிமையாக இருக்கிறோம்.

சாம்பார் அடிமைகள்

டெல்லியில் உணவகம் நடத்திக்கொண்டிருந்த தம்பியும் நானும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தோம். சட்டென்று ஒரு இடத்தில் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தி, `அண்ணே இதப் பாரு..’ என்று சாலையோரத்தில் கிடந்த மஞ்சள் பொட்டலம் போலக் கிடந்த ஒன்றைக் காட்டினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

‘தெரியல, நல்லாப் பாரு’ என்று திருவிளையாடல் சிவாஜிபோல அழுத்தமாகச் சொன்னான். கொஞ்சம் நெருங்கிச் சென்று பார்த்தேன். நன்றாக மஞ்சள் தேய்த்துக் குளித்ததுபோல, மஞ்சள் நிறத்தில் உப்பி செத்துக் கிடந்தது ஒரு பெருச்சாளி. குத்திட்டு நிற்கும் கம்பி போன்ற முடியில்கூட மஞ்சள் முலாம் படிந்திருந்தது.

என்ன என்று தெரிந்ததும் எனக்குக் குமட்டுவது போலாயிற்று. ‘இதையேண்டா எனக்குக் காட்டிட்டு இருக்கிற… எடு வண்டிய’ என்றேன். சிரித்தவாறு வண்டியை ஓட்டியபடி கூறினான்.

‘அது சாம்பார் வட்டையில் விழுந்து இறந்த எலி. அதுக்காக வட்டைச் சாம்பாரைத் தூக்கி `டிச்சுல’ ஊத்திருப்பாங்கன்னு நினைக்கிறியா? அதெல்லாம் கெடையாது. இங்கே கஸ்டமர் முன்னாடியே எடுத்துப் போட்டுட்டு, அதே சாம்பாரை ஊத்தினாக்கூட இட்லியைக் கரைச்சு விட்டுக் குடிச்சிட்டுப் போவாங்க. அந்த அளவுக்கு நம்ப மதராஸிவாலா சாம்பார் மேல மோகம்’ என்றான்.

உண்ணத் தூண்டும் சுவை

துவரம் பருப்பின் பசைத்தன்மை மட்டுமல்ல, அதன் மஞ்சள் நிறமும், அதன் சுவையும் மீண்டும் மீண்டும் நம்மை உண்ணத் தூண்டுவதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பயறும் நம்முடைய ஒவ்வொரு உள்ளுறுப்புக்கும் ஆற்றலை வழங்கக் கூடியது. அந்த வகையில் துவரம் பருப்பு மண்ணீரலுக்கு ஆற்றல் தரக்கூடியது. இயற்கை உடலியலின்படியும், துவரையின் துவர்ப்பு மண்ணீரலுக்கான சுவையாகும். ‘துவர்’ என்ற சுவையைக் காரணப் பெயராகக் கொண்டது துவரை.

துவரம் பருப்பின் இயற்கைப் பண்பு சிதையாமல் சமைத்து உண்டால் நம் உடலின் தசையை இறுக்கம் கெடாத நெகிழ்வுத்தன்மையுடன் கட்டுச் செட்டாக வைத்திருக்கும். அதுவே அளவு கூடுகிறபோது சதை இறுக்கம் விட்டு துவளத் தொடங்கிவிடும்.

அதே துவரம் பருப்பை தோலுடன் முழுமையாகவோ அல்லது உடைத்துப் பாதியாகத் தோலுடனோ பயன்படுத்தும்போது மருத்துவப் பண்புமிக்கதாக மாறி விடுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முழுத் துவரையை அவித்து வடித்த நீரை, வாத நோய்க்கு மருந்தாகக் குடிக்கச் சொல்கிறார்கள்.

இரண்டும் சேர்ந்த கலவை

பசைத்தன்மையை சமனப்படுத்தும் நார்த்தன்மை உடைய தோலுடன்தான் துவரையை இயற்கை நமக்கு அளிக்கிறது. பசைத்தன்மை என்பது அமிலக் கூறு, நார்த்தன்மை என்பது காரக் கூறு. ஒன்றை ஒன்று தணிக்கும் கூறுகளை பயறுகள் இயல்பாகவே தம்மிடம் கொண்டுள்ளன. ஆக, இயற்கைப் பண்பு சிதையாமல் உண்கிறபோது மருந்தாகப் பயன்படும் துவரை, இயற்கைப் பண்பைச் சிதைத்து உண்கிறபோது நமக்கு நோய்க் காரணியாகி விடுகிறது.

இன்றும்கூட பெரிய சந்தைகளில் உள்ள மளிகைக் கடைகளில் பயறு வகைகளை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து, பருப்பின் சந்தை விலையில் பாதி விலைக்கு விற்கிறார்கள். ஒரு பொருள் பல கைகள் சுற்றாமல் வந்தடைகிறபோது நமக்கும் குறைந்த விலைக்குக் கிடைக்கும். அதை உற்பத்தி செய்தவரும் கூடுதல் பயன் பெறுவார்.

இறைச்சிக்கு இணையான புரதம்

தோல் நீக்காத துவரைப் பயிரை வாங்கி வந்து முன்னிரவில் ஊற வைத்து மண் பாத்திரத்தில் அவித்து, வடித்த நீரைக் கீழே ஊற்ற வேண்டியதில்லை. மேற்படி அவித்த பயறுடன் காய்கள் சேர்க்க வேண்டியதில்லை. வெங்காயம் தக்காளி, மிதமான அளவு மசாலாப் போட்டு, தேங்காய் அரைத்துவிட்டு குழம்பு செய்தால், அது முழுச் சுவையான உணவாக மட்டுமல்ல, முழுமையான நல உணவும் ஆகும்.

உடைக்கப்படாத துவரம் பருப்பு இறைச்சிக்கு இணையான புரதச் சத்தையும், உயிர்ச் சத்துகளையும், தாதுச் சத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதைத் தோலுடன் அவித்து சிறிதளவு உப்பு, மிளகு - சீரகத் தூள் கலந்து தாளிப்புக் கூட்டி உண்டால் உடலில் பலம் பெருகுவதை உணர முடியும். ஆயிரம் வைட்டமின் மாத்திரைகள் போட்ட பிறகு கிடைக்கும் ஆற்றலை, ஒருநாள் துவரைப் பயறுப் பயன்பாட்டின் மூலம் பெறலாம்.

பிரியாணிக்கு இணை

துவரையை அவித்து வடித்த துவர்ப்புச் சுவை மிகுந்த நீருடன் என்னென்ன சேர்த்தால் நாவுக்கு இசைவான சுவை கிடைக்குமோ, அவற்றைச் சேர்த்து குடும்பத்தில் அனைவரும் சூப்புபோலக் குடிக்கலாம். நோயிலிருந்து மீண்டவர்கள், செரிமானத் திறன் குறைந்தவர்கள் துவரைச் சூப்பு குடிக்கும்போது செரிமானமும் எளிதாக நடைபெறும் உடலின் ஆற்றலும் கூடும்.

முழுத் துவரையை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து மேலும் சுமார் பதினெட்டு, இருபது மணி நேரம் வைத்திருந்தால் முளை கட்டும் பக்குவத்துக்கு வரும். அதே அளவுக்கு சிவப்பு அரிசியை ஊறவைத்து இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக ஆட்டிக்கொள்ள வேண்டும்.

அதனுடன் தேங்காய்ப்பூ, சின்ன வெங்காயம், சிறிதளவு காய்ந்த மிளகாய், உடைத்த சீரகம், மிளகு போட்டு மல்லித் தழை கலந்து செக்கிலாட்டிய நல்லெண்ணெய் விட்டு அடை சுட்டுச் சாப்பிட்டால், ஒரு முழு பிரியாணி உண்ட நிறைவை அடையலாம்.

கடின உடலுழைப்பில் ஈடுபடுவோர், ஜிம்முக்குச் செல்லும் இளைஞர்கள், நீண்ட தூரம் ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்கள், போட்டிக்கான விளையாட்டுப் பயிற்சி செய்வோர் மேற்படி துவரைப் பயறு அடையை உண்டால் எரித்த ஆற்றலை உடனே பெறலாம். ஒரு அடையே போதுமானதாக இருக்கும். வயிற்றை நிறைக்கவும் செய்யாது, தொந்தரவும் செய்யாது.

துவரைப் பயறு நமது ராஜ உறுப்புகளில் ஒன்றான மண்ணீரலுக்கு ஆற்றல் தருவதைப் போல, மற்ற பயறுகள் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆற்றலைத் தருகின்றன; அவற்றைச் சமைக்கும் முறை என்ன என்பதை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு:kavipoppu@gmail.com

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: சாத்தியமா? சங்கடமா?


விபத்துக்களை தடுக்க வரும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சாத்தியமாகுமா? என்பது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துப் பேசியதாவது:
சாலை விபத்துகள் அதிகரித்து வருவதும், வாகன திருட்டுகள், குற்றச்செயலில் ஈடுபடுவோர் திருட்டு வாகனங்களை பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது போன்ற நடைமுறை சிக்கல்களை களைய இனி வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் செப்.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. பொதுவாக ஒரு சட்டம் அமல் படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு வருவது இயற்கையே ஆனால் பொதுமக்கள் அச்சத்தையும் சந்தேகத்தையும் போக்குவது அரசுக்கு உள்ள கடமை என்ற அடிப்படை உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சிலரிடம் கருத்துகள் கேட்டோம்.
ஐடி ஊழியர் அருள்: இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று, ஏற்கெனவே போக்குவரத்து போலீஸார் சாலைகளில் மடக்கி மோட்டார் சைக்கிள் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு அலைய விடுகின்றனர். அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த உத்தரவு மேலும் வாகன ஓட்டிகளுக்கு தொல்லையாகத்தான் அமையும்.
கல்லூரி மாணவர் மணி: இரவில் சினிமாவுக்கு சென்றுவிட்டு வந்தால் எல்லா ஆவணங்களும் இருந்தாலும் மடக்கி அதைக் கொடு இதைக்கொடு என்பவர்களுக்கு அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு மூலம் லைசென்ஸை பிடுங்கி வைத்துக் கொண்டு அலைய வைக்கும் நிலைதான் ஏற்படும்.
வாடகை வாகன ஓட்டுநர் நட்ராஜ்: எந்த ஒரு சட்டம் போட்டாலும் அதை நடைமுறைப்படுத்துபவர்கள் அதிகாரிகள்தான். பொதுமக்கள் அரசின் அறிவிப்பை ஏற்று ஒழுங்காக நடக்கும் போது அதிகாரிகள் அவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் நடப்பது அனைத்து ஆவணங்களைக் காட்டிய பின்னரும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தால் எப்படி கடைபிடிக்க முடியும்?
ஆட்டோ ஓட்டுநர் ஜெரோம்: லைசென்ஸ் கொடுத்தால்தான் ஆட்டோவை உரிமையாளர் ஆட்டோவை வாடகைக்கு கொடுப்பார். அப்படி இருக்கும் போது ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்கணும் என்றால் யார் ஆட்டோ தருவார், நான் எப்படி பிழைக்க முடியும்?
காவல்துறை தரப்பில் இது குறித்து விசாரித்த போது அவர்கள் கூறியது சமீபத்தில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு, செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்றவை நடக்கிறது. இவைகளை தடுக்க இது போன்ற அறிவிப்புகள் வரும்போது லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனத்தை இயக்குவது குறைந்துவிடும் என்கின்றனர்.
தற்போதுள்ள நவீன டெக்னாலஜி வரவுகளில் ஒருவரின் லைசென்ஸை போட்டோஷாப் மூலம் வேறு ஒருவர் போட்டோ பெயர் போட்டு மாற்றி ஜெராக்ஸ் போன்று வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் போலி ஆட்கள் வாகனங்களை இயக்குகிறார்கள். இவையெல்லாம் இதன் மூலம் தடுக்க முடியும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்க மாநில நிர்வாகி அ.சவுந்தரராஜன்: இதை நாங்கள் எதிர்க்கிறோம், இது போன்ற அறிவிப்புகள் மக்கள் மீது, தொழில் புரிவோர் மீது மேலும் சுமையைத்தான் ஏற்றும். ஒரிஜினல் லைசென்ஸ் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? தவறு செய்தால் அவருக்கு போலீஸ் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதிக்கப்போகிறார்கள், லைசென்ஸ் வேண்டுமென்றால் நாளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரிஜினல் லைசென்ஸை கொண்டு வந்து காட்டுங்கள் என்றால் மறுக்கவா போகிறார்கள். விபத்து ஏற்படுத்தியவர்களே மறுநாள் தான் லைசென்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்கள்.
ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருக்கும் போது அது தொலைந்து போனால் மீண்டும் லைசென்ஸ் எடுக்கும் வரை அது பிரச்சினை. ஆட்டோ, லாரி, வேன் போன்ற வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் லைசென்ஸை தொலைத்துவிட்டால் அவர்களுக்கு அது பிழைப்புக்கே பிரச்சனையாக மாறும் ஆகவே இது தேவையற்ற ஒன்று என்று தெரிவித்தார்.
மணல் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில நிர்வாகி யுவராஜ்: ஓவர் லோடு அதன் மூலம் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க ஓவர் லோடு ஏற்றினால் லைசென்ஸ் பறிமுதல் என்று அறிவித்தார்கள், அதை நாங்கள் வரவேற்றோம். ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் அதை ஒழுங்காக அமல் படுத்தாமல் வேறு நோக்கத்துடன் செயல்படுவதால் இன்றும் ஓவர்லோடு பிரச்சினை தீரவில்லை.
ஒரிஜினல் லைசென்ஸ் விஷயத்திலும் அதுதான் நடக்கும். இதனால் எந்த பயனும் இல்லை. லாரி உரிமையாளர்கள் டிரைவரிடம் லாரியை ஒப்படைப்பதே லைசென்ஸ் தங்கள் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான். லைசென்ஸை அவர்கள் கையில் வைத்திருக்கவேண்டும் என்றால் விபத்து எதாவது நடந்தால் ஓட்டுநர்கள் தலைமறைவாகிவிடுவார்கள் நாங்கள் எங்கே அவர்களை தேடி கண்டுபிடிப்பது.
ஹெவி லைசென்ஸ் கையில் வைத்திருக்கும் போது தொலைந்தால் மீண்டும் எடுக்க அதிக செலவாகும். மேலும் போலீஸார் லைசென்ஸை பிடுங்கி வைத்துக்கொண்டு அலைக்கழிக்கும் சம்பபவங்களும் நடக்கும் இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளை சந்திக்க உள்ளோம் என்றார்.
இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:
அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம். லைசென்ஸ் ஒரிஜினல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
லைசென்ஸ் ஒரிஜினல் தொலைந்து போனால் அது இன்னொரு பிரச்சினையை கொண்டு வரும் என்று லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே?
அதையெல்லாம் எளிதாக்குகிறோம், முதலில் உள்ளது போல் இருக்காது இதற்காக இரண்டு மூன்று கூட்டங்கள் நடத்தப் போகிறோம். அனைத்தையும் ஆன்லைன் முறையாக்க போகிறோம். இனி எஃப்.ஐ.ஆர் முறை இருக்காது. கூட்டம் முடிந்தவுடன் அது பற்றி சொல்வோம்.
டிஜிலாக்கர் என்ற ஒரு முறை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதே அதில் ஒரிஜினல் ஆவணங்களை இணைக்கும் முறை மூலம் இதை தவிர்க்கலாமே?
லைசென்ஸ்  ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாறப் போகிறது அது வந்துவிட்டால் இவையெல்லாம் எளிதான நடைமுறையாகிவிடும். அது பற்றிய ஆலோசனை நடக்கிறது. அது முடிந்தவுடன் அறிவிக்க உள்ளோம்.
டிஜிலாக்கர் முறை எளிதானது, அதை ஊக்கப்படுத்தும் திட்டம் கொண்டு வரலாமே?
தமிழ்நாட்டின் பயன்பாட்டாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் ஸ்மார்ட் போன் வசதி அனைவருக்கும் இருக்கிறதா என்பது ஒரு நடைமுறை சிக்கல் , ஆனாலும் டிஜிலாக்கர் முறையைப்பற்றியும் பரிசீலிக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
எந்த வளர்ச்சியும் எளிதாக பொதுமக்களுக்கு பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். தமிழக அரசு டிஜிலாக்கர் முறைக்கு மாறினால் தான் மக்களும் மாறுவார்கள் என்பது தகவல் தொழில் நுட்பத்தை அறிந்தவர்கள் கருத்தாக உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்

Published : 26 Aug 2017 19:09 IST



நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்.

சென்னை

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் 1989-ல் அதிமுகவில் இணைந்தார். பணகுடி நகரச் செயலாளார், திருநெல்வேலி மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் 2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துத் துறை அமைச்சரானார்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே சசிகலா, தினகரனை ஆதரித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் கனவுக்கு செயல்வடிவம் கொடுப்பதாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.   
முதுகலை மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக ரூ.2.20 கோடி 

மோசடி: டெல்லியில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published : 26 Aug 2017 20:02 IST

மயிலாப்பூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் பேத்திக்கு முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக ரூ.2.20 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் கலாவாணி(70) மருத்துவர். இவரின் பேத்தியும் மருத்துவர். கடந்த 2013 ம் ஆண்டு இவர் பேத்தியின் முதுகலை பட்டப்படிப்பிற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது டெல்லி ஹரிநகர் ஆஷ்ரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம்(53) , சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன், லாவண்யா ஆகிய மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர்.

மருத்துவப் படிப்பிற்காக இவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கி மூலம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்தை கலாவாணி அளித்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றவர்கள் சொன்னபடி மருத்து இடம் வாங்கித் தராமல் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து தன்னிடம் மூவரும் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கலாவாணி கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகார் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில் கடந்த ஆண்டு வெங்கட்ராமனும், லாவண்யாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த இப்ராஹிமை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 24 ம் தேதி கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வந்தனர்.

இன்று சென்னை அல்லிக்குளம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஷபீர் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி இப்ராஹிமை சிறையில் அடைத்தனர்.

மருத்துவத்தேர்வு, நீட் போன்ற வெளிப்படையான முறைகளில் மருத்துவப் படிப்புகள் தேர்வு நடக்கும்போது இது போன்ற போலி ஆசாமிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்,

IRCTC to launch clutter-free, faster ticket booking website

IRCTC to launch clutter-free, faster ticket booking website  Dipak.Dash@timesofindia.com 11.06.2026 New Delhi : Booking train tickets throug...