Thursday, August 31, 2017

96 MBBS seats remain vacant in 3 private medical colleges in Puducherry

TNN | Aug 31, 2017, 00:13 IST

Puducherry: As many as 96 MBBS seats remained vacant in three private medical colleges and hospitals in Puducherry after the mop-up counselling conducted by the centralized admission committee (Centac).

Sri Manakula Vinayagar medical college and Sri Venkateswaraa medical college reported vacancy of 37 seats each, while 22 seats remained vacant in Pondicherry institute of medical sciences.

The committee allotted 247 seats under management quota (52 seats were converted from non-resident Indian quota) and 17 seats under NRI quota (including six seats in Indira Gandhi medical college and research institute, IGMC & RI). The committee reserved six seats(three in IGMC & RI and one each in Pims, SMVMC and SVMC). Four students surrendered their seats.

The committee received 148 demand drafts towards fees from the students and handed them over to the colleges concerned. It sought the colleges to submit the vacancy details so that it can send the merit list of students in the ratio of 1:10 to the colleges.
'அரசு ,மீது, நம்பிக்கை, ஓட்டெடுப்பை ,நடத்த, கவர்னர், மறுப்பு
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட முடியாது' என,கவர்னர் வித்யாசாகர் ராவ், திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ஏமாற்றமடைந்த எதிர்க் கட்சிகள், இன்று டில்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளன.





முன்னாள் முதல்வர், ஜெ., இறப்புக்குப் பின், மூன்றணிகளாக இருந்த, அ.தி.மு.க., இப்போது, பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக உள்ளது. ஆட்சியைப் பிடிக்க, தினகரன், தீவிரமாக முயன்று வருகிறார்.

'முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல். ஏ.,க்கள், சமீபத்தில், கவர்னரிடம் கடிதம் அளித்தனர்.அதையடுத்து, 'சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., காங்., முஸ்லிம் லீக் தலைவர்கள், கவர்னர் வித்யசாகர் ராவை சந்தித்து வலியுறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை, ராஜ்பவனில், கவர்னர் வித்யாசாகர் ராவை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். 'சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு,

முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என்று அவர்களும், கவர்னரிடம் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க, கவர்னர் மறுத்து விட்டதாக, அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

திருமாவளவன்: தினகரன் ஆதரவு, எம்.எல். ஏ.,க்கள், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரி வித்துள்ளனர். எனவே,'சட்டசபையை, உடனே கூட்ட வேண்டும்' என, வலியுறுத்தினோம்.

அதற்கு கவர்னர், 'தற்போதைய சூழலில், சட்டப்படி நடவடிக்கைஎடுக்க முடியாது. அ.தி. மு.க., இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. 19 எம்.எல்.ஏ.,க்களும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள னரே தவிர, கட்சித் தாவலில் ஈடுபடவில்லை. 'எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை நீக்குவதாக, கட்சி யும் அறிவிக்கவில்லை. எனவே அவர்களும், அ.தி.மு.க.,வினர் என்றே கருத வேண்டியது உள்ளது என்பதால், இதில் நான் தலையிட முடியாது' என, கூறி விட்டார்.

முத்தரசன்: இங்கே நடந்தது போல் ஒரு பிரச்னை, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி யில் நடந்திருந்தால், அங்குள்ள கவர்னர்கள், வேறு விதமாக கையாண்டிருப்பர். தமிழகத் தில், ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டி ருக்கிறது. இதை, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஜவாஹிருல்லா: 'இதில், நான் தலையிட முடியாது' என, கவர்னர் கூறினார். 'நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாங்கள் கூறினோம். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டியது, கவர்னரின் கடமை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவர்னரின் நடவடிக்கை, அ.தி.மு.க.,வுக்கு ,தண்டனை அளிப்பது போல் இருக்கும் என்றும் அவர்களுக்குள் பிளவு வலுப்படும் என்றும் கருதி இருந்த, எதிர்க்கட்சியினர், நேற்றைய அரசியல் நகர்வால், அதிருப்தி அடைந்தன. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், எம்.பி.,க்கள், இன்று டில்லி யில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து முறையிட முடிவு செய்து உள்ளனர்.

எம்.எல்.ஏ.,க்களுக்குபழனிசாமி திடீர் அழைப்பு!

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், முதல்வர் பழனிசாமி, திடீர் அழைப்பு விடுத்து உள்ளார்.அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனி சாமி, பன்னீர்செல்வம் அணிகள், ஒன்றாக இணைந்தன. இதற்கு, தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு அளித்துள்ளனர். குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை; 80 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே பங்கேற்றனர். அதனால், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரையும் அழைத்து, அவர்களிடம் பேச, முதல்வர் திட்டமிட்டுள் ளார். அதற்காக, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் இன்று சென்னை வரும்படி தகவல் அனுப்பப் பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட அமைச்சர் முன் னிலையில், எம்.எல்.ஏ.,க்களிடம் ஆலோசனை நடத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், முதல்வர் முடிவுசெய்துள்ள தாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
அர்ச்சகர் இன்றி சன்னதிகள் மூடல் : ராமேஸ்வரம் பக்தர்கள் அதிருப்தி
பதிவு செய்த நாள்30ஆக
2017
21:10




ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அர்ச்சகர் இன்றி, பல சன்னதிகள் மூடிக் கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். புனித தலமான ராமேஸ்வரம் கோவிலில், அக்னி தீர்த்தம், 22 தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி, இக்கோவிலுக்கு தினமும் நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கோவிலில் அர்ச்சகர்கள், மணியம், காவலர் உள்ளிட்ட, 80 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது, 30 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், பல சன்னதிகளில் அர்ச்சகர் இன்றி நிரந்தரமாக மூடியே உள்ளது. மேலும், பள்ளி கொண்ட பெருமாள், காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி சன்னதி திறந்திருந்தாலும், உயர் அதிகாரிகள் வந்து சென்றதும், நடை மூடுவதற்கு முன், இச்சன்னதிகளை அர்ச்சகர்கள் மூடி செல்கின்றனர். 

இதே போல், கோவில் காவலர்கள், பாதுகாப்பில் ஈடுபடாமல் சொந்த அலுவல்களை கவனிப்பதாக புகார் உள்ளது. இதனால், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர்.

ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்,''அர்ச்சகர், மணியம் உள்ளிட்ட, 32 பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலைய ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ''விரைவில், ஊழியர்கள்நியமித்து சன்னதிகள் திறந்து பூஜைகள் நடத்தப்படும். சன்னதியில் பணி நேரத்தில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பாலியல் பலாத்காரம் : ஆசிரியருக்கு சிறை
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:06

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலஉரப்பனுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தவர் பவுன்ராஜ்,41. அப்பள்ளியில் படித்த ஒரு மாணவி, 2008ல் அங்குள்ள நுாலக அறையை சுத்தம் செய்தார். பவுன்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததில், அம்மாணவி கர்ப்பமுற்றார். பெண் குழந்தை பிறந்தது. திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பவுன்ராஜிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கோமதி ஜெயம் உத்தரவிட்டார்.
நோயால் இறந்த ஆடுகளின் இறைச்சி: 'ஆந்த்ராக்ஸ்' தாக்கும் அபாயம்
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:19

விருதுநகர்: நோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவதால், 'ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்கும் அபாயம் உள்ளது. செப்டம்பரில் ஆடுகளை பொதுவாக அடைப்பான் எனும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கும். இந்நோயால் இறந்த ஆட்டின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறையாமல் இருக்கும். இந்த ரத்தத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கும். காயம் ஏற்பட்ட மனிதர் களின் காயப்பகுதியில் உறையாத ரத்தம் தெரித்தால், அவர்களையும் கிருமி தாக்கும். மேலும், இந்நோயால் இறந்த ஆட்டுஇறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அதிகம்.
விருதுநகர் உட்பட சில மாவட்டங்களில் ஆடு வதைக்கூடம் செயல்படாமல் உள்ளன. பாதுகாப்பு, மருத்துவ சோதனை, கண்காணிப்பு போன்றவை இல்லாமல் நினைத்த இடத்தில் ஆடுகளை வெட்டி, இறைச்சி விற்பனை நடக்கிறது. இதில், நோயால் இறந்த ஆடுகளை விற்கும் அபாயம் இருப்பதால் அசைவ பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி யில் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அடைப்பான் நோய் பாதிப்பு இருந்தது. அதற்கான ஊசிகள் போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தாண்டு இப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரு மாதம் முன்னரே தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.அடைப்பான் நோய் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். கழுத்தில் கட்டி இருக்கும். மூக்கு, ஆசன வாயில் ரத்தம் வெளியேறும். இந்த ரத்தம் உறையாமலும் இருக்கும். இது போன்ற அறிகுறிகள் இருந்து, இறந்த ஆடுகளின் உடலை கால்நடை டாக்டர்கள் ஆலோசனைப்படி புதைக்க வேண்டும். இதுபோன்ற நோய் தாக்கி இறந்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்டால், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
ரேஷன் கார்டு வகை மாற்றம் : இணையதளத்தில் குழப்பம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:01


ரேஷன் கார்டுகள், வகை மாற்றம் செய்த நிலையில், பொது வினியோக திட்ட இணையதளத்தில், பழைய விபரங்களே இருப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத கார்டு என, பல வகைகளில், ரேஷன் கார்டுகள் இருந்தன. உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது, ரேஷன் கார்டுகள், 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை' என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப, வழக்கம் போல உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. ஆனால், பொது வினியோக திட்டத்தின் இணையதளத்தில், ரேஷன் கார்டுகளின் புதிய வகையை வெளியிடாமல், அரிசி, சர்க்கரை கார்டு என, பழைய விபரங்களே உள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு வகைகள், எதற்காக அந்த பெயர் வந்தது உள்ளிட்ட விபரங்கள், மென்பொருள் வடிவில் தயாராக உள்ளன. அவை, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிந்த பின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்' என்றார்.

- நமது நிருபர் -
மாணவருக்கு கல்வி கடன் தந்த வங்கிகள் : ஆபீசுக்கு போன் செய்து மிரட்டும் அவலம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:00

கல்விக் கடன் பெற்றவர்களின் அலுவலகத்திற்கு போன் செய்து, கடனை திருப்பிச் செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிப்பு முடிந்து, ஒன்றரை ஆண்டு வரை, தவணை செலுத்த அவகாசம் தரப்படுகிறது. பலருக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைப்பதில்லை.

சொற்ப ஊதியம் : சிலருக்கு வேலை கிடைத்தாலும், சொற்ப ஊதியம் தான் கிடைக்கிறது. அதனால், குறித்த காலத்தில், அவர்களால் கடன் தவணை செலுத்த முடிவதில்லை.

இதற்கிடையே, மாணவர்களிடம் கடனை வசூலிக்க, ஒரு தனியார் நிறுவனத்தை, பாரத ஸ்டேட் வங்கி நியமித்துள்ளது. அவர்கள், கந்து வட்டிக்காரர்கள் போல் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில், அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்து, கடனை செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது: அரியலுார், ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, சென்னையில், 2011 - 2014 வரை, எம்.சி.ஏ., படித்தேன். சில மாதங்களாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

தொல்லை : நான் பணிபுரியும் அலுவலக தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த, அந்த தனியார் நிறுவன ஊழியர்கள், என் அதிகாரிகளிடம், நான் கடன்பட்டிருப்பதை கூறி, தொல்லை தருகின்றனர்.சில தினங்களுக்கு முன், என் நிறுவன மேலாண் இயக்குனரின் மொபைல் போனில் பேசி, நான் கடன் வாங்கிய விபரத்தை கூறியுள்ளனர். 'அடுத்த முறை அழைப்பு வந்தால், வேலையை விட்டு நீக்கி விடுவோம்' என, அலுவலகத்தில் கூறிவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கடன் கேட்டு நச்சரித்த, கடன் வசூல் தனியார் நிறுவன அலுவலர், நெடுஞ்செழியன் கூறுகையில், ''அந்த இளைஞர், ஒரு தவணை கூட செலுத்தவில்லை. மொபைல் போனை எடுக்காததால், அலுவலகம் வழியாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என்றார்.

- நமது நிருபர் -

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...