Monday, September 4, 2017

விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது’ - அனிதா இறுதிசடங்கில் நெகிழ்ந்த மக்கள்!

எம்.திலீபன் கே.குணசீலன்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி. அந்த வகையில் நேற்றுவாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதாக இருந்துள்ளார் கேப்டன். ஆனால் அங்கிருந்து அவர் கிளம்பவே நேரமாகயிருக்கிறது.




சில நிர்வாகிகள் விஜயகாத்திடம், ”இங்கேயே மணி 7 ஆகிவிட்டது இனிமேல் சென்றால் அங்கு செல்லமுடியாது நீங்கள் போவதற்கு அந்திநேரமாகிவிடும். நாளை அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லிகொள்ளமே” என்று சொல்ல, அதற்கு விஜயகாந்த் ”என்ன ஆனாலும் பரவாயில்லை. வண்டியை எடு அனிதாவை பார்த்துவிட்டு வருவோம் எப்படியும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் அரியலூர் வந்த போது பார்த்தசாரதி அரியலூர் மாவட்டசெயலாளர் ராமஜெயவேலிடம் விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதற்கு அவர் ”அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் “ டாக்டர் ஆகமுடியவில்லையே என்று மனவிரக்தியில் இறந்திருக்கும் சிறுமி அனிதாவை பார்க்காமல் சென்றால் நாம் எல்லாம் என்ன தலைவன். ஆயிரகணக்கான அனிதாக்களின் மனகுமுறலை வெளிபடுத்தியிருக்கிறார் இந்த அனிதா. இறுதி ஊர்வலத்திற்கு செல்லாமல் இருந்ததால் எப்படி. அவுங்க தூக்கினா தூக்கிட்டு போகட்டும் சுடுகாட்டிலாவது அஞ்சலி செலுத்திவிட்டு போவோம்” என்று சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

பின்பு அனிதாவின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துவந்து எரிப்பதற்கான வேலைகளும் தொடங்கிகொண்டிருந்த நேரத்தில் சரியாக 10.45 க்கு குழூமுர் வந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் சத்தமிட ”டேய் சும்மா வாங்க எங்க வந்திருக்கோம்னு தெரியாதா” என்று விஜயகாந்த் சொல்ல அந்த இடமே கப்சிப் ஆனது.

பின்பு அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு அனிதாவின் முகத்தையே மூன்று நிமிடம் கண் அசராமல் பார்த்த போது அவரது கண்கள் கலங்கியது. பின்பு அவர் திரும்பிகொண்டு அவரது கண்ணை துடைத்துகொண்டு வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் ”நான் இந்த இடத்தில் பேசவில்லை” என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். அங்கிருந்த மக்கள் விஜயகாந்தின் செய்கையை பார்த்து ”விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது” என்று நெகிழ்ந்துள்ளனர்.

பிஸியாக இருப்பவர்கள்! மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்!
2017-08-31@ 15:25:51




நன்றி குங்குமம் டாக்டர்

‘நான் ரொம்ப பிஸி...’ என்று ‘சூரியன்’ கவுண்டமணி மாதிரி உதார் விடாமல், நிஜமாகவே பிஸியாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. பிஸியாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் குழம்புகிறர்வகளுக்காக, ஆராய்ச்சியை மேற்கொண்ட சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவின் தலைமை ஆய்வாளரான கிரிஸ்டோபர்ஹிசி நான்கு காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அந்தக் காரணங்களைத் தெரிந்துகொண்டால் இனி சும்மா இருக்கவே விரும்ப மாட்டீர்கள் என்பது நிச்சயம்.மன நிறைவு அடிப்படையில் மனிதன் ஒருபோதும் தன் ஆற்றல் வீணாவதை விரும்பாதவன். அதனால், பரபரப்பாக வேலை செய்வது உளவியல் ரீதியாகவே ஒருவருக்கு தன்னிறைவைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்கான தொடர் சிந்தனையில் இருக்கும்போது உங்கள் மூளையும் சுறுசுறுப்படைகிறது. ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பது உளவியல்ரீதியாக மகிழ்ச்சியையே தரும்.

வார இறுதிநாட்களிலும்கூட நீண்ட தூக்கம், சினிமா, பார்ட்டி என்று நேரத்தை வீணடிக்காமல் மளிகைப் பொருட்கள் / காய்கறிகள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்டப்பராமரிப்பு என பயனுள்ள வகையில் அந்த நாளை செலவிடும்போதும், அதன்பிறகு அதை நினைத்துப் பார்க்கும்போதும் உங்களுக்கே பெருமையாக இருக்கும். முன்னேற்றம்‘வியாபார முன்னேற்றத்துக்கான சிந்தனை, வேலை சார்ந்து புதிதாகக் கற்றுக்கொள்வது, சமூக பங்களிப்பு அல்லது உடற்பயிற்சிகள் செய்வது’ என எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றே பொருள்.

இப்படி பிஸியாக இருப்பதன் மூலம் உங்களை அறியாமலேயே உங்கள் மூளையானது, இந்த வேலையை இன்னும் எவ்வளவு வேகமாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும் என்பதற்கான வழிகளை சிந்திக்க தொடங்கிவிடுகிறது. இதனால் உங்கள் செயல்திறன் மேலும் மெருகேறும்.
தன்னம்பிக்கை கற்றலும், முன்னேற்றமும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பதால் கற்றல் மற்றும் செயல் வளர்ச்சி உண்மையிலேயே உயர்ந்த நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.

வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கற்றுக்கொள்ளும் நீங்கள், உங்கள் வேலைகளை மற்றவர்களின் வேலைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து மேலும் எப்படி திறமையாக செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் வளரும். நேர்மறை அணுகுமுறை வேலையில்லாமல் இருக்கும்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். சுறுசுறுப்பாக இருந்தால் மற்றவைகளைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை நல்லவிதமாக செய்வதையே சிந்தியுங்கள். முக்கியமான விஷயம்... எப்போதும் பிஸியாக இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர்மேன்/சூப்பர் உமன் இமேஜ் உருவாகும் என்பது உங்களுக்கு எக்ஸ்ட்ராகிஃப்ட்!

- உஷா நாராயணன்

மீன் குழம்பு, சட்ட புத்தகங்களுடன் சிறைவாசத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன்

Published : 04 Sep 2017 11:48 IST

செளம்யா தாஸ்கொல்கத்தா




நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி, சிறை வாசத்தை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, ''கர்ணன் சக கைதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் மரியாதையாக நடத்தப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவி வருகிறது.

கர்ணன் சட்டக்கல்லூரி மாணவராக இருந்த தன்னுடைய ஆரம்பகட்ட நாட்களுக்குள் சென்றுவிட்டார். தற்போது சட்ட புத்தகங்களையும், தீர்ப்புகளையும் வாசித்து வரும் கர்ணன், விடுதலைக்குப் பிறகு வழக்கறிஞராகத் தொடர்வார்'' என்றார்.

பெங்காலி உணவுகளுக்குப் பழகிவிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், தென்னிந்திய மற்றும் பெங்காலி உணவான சாதம் மற்றும் மீன் குழம்பை ரசித்து உண்கிறார்.

பின்னணி:

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஜூன் 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே போலீஸார் கர்ணனை கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் ஜூன் 20-ம் தேதி அன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் பரவும் புதிய ஆட்கொல்லி: ‘ப்ளூவேல்’ அட்மினை நெருங்க முடியுமா? - தொடரும் புரியாத புதிர்கள்

Published : 02 Sep 2017 11:50 IST

மதுரை

(



உலகின் புதிய ஆட்கொல்லியாக உருவாகியுள்ள ‘ப்ளூவேல்’ சேலஞ்சிங் ஆன்லைன் விளையாட்டு, தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது.

சமீபத்தில் கேரளாவில் ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டை விளையாடிய ஆஷிக் என்ற மாணவர் இறந்தார். மேலும், சில கல்லூரி மாணவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அம்மாநில போலீஸாரால் தற்போது வரை ‘ப்ளூவேல்’ சேலஞ்சிங் விளையாட்டின் அட்மின்களை கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்களை பெற முடியவில்லை. அவர்களை நெருங்கவும் முடியவில்லை.

நடவடிக்கைகளில் வித்தியாசம்

இந்நிலையில், தற்போது மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கலைஞர் நகரில் சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட பேக்கரி மாஸ்டர் ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ்(19) ‘ப்ளூவேல்’ விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மாணவர், சமீப காலமாக நள்ளிரவு நேரத்தில் யாருமே இல்லாதபோது வீட்டு மாடியில் நின்று செல்பி எடுப்பது, ப்ளூவேல் என்று ப்ளேடால் கைகளில் கீறிக் கொள்வது, ரத்தத்தில் எழுதுவது, குடிப்பழக்கத்துக்கு அடிமையானது என்று அவரது நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்துள்ளது.

ஆனால், இந்தளவுக்கு தற்கொலை வரை கொண்டு போய்விடும் என்பது, அவரது பெற்றோருக்கு தெரியவில்லை. இறந்த மாணவன் விக்னேஷூடன் 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுவது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டுக்கு தடை

இதுகுறித்து கணினி தொழிநுட்ப வல்லுநர்களிடம் பேசியபோது, அவர்கள் கூறியது:

உலகளவில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த ‘ப்ளூவேல்’ ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதமாகத்தான் இந்தியாவில் ‘ப்ளூவேல்’ பற்றிய விளையாட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விளையாட்டுக்கான ‘லிங்’ சமூக வலைதளங்களில் வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. இந்த விளையாட்டு கணினி தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் பின்னணியில் உலகளவில் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாக கூறப்படுகிறது.

அழித்துவிட கட்டளைகள்

தற்போது இறந்த விக்னேஷின் ஸ்மார்ட் போனை பறிமுதல் செய்த போலீஸார், அதில் ‘ப்ளூவேல்’ விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்களை பெற முடியவில்லை. விக்னேஷ் இறப்பதற்கு முன் போனில் உள்ள எல்லா தகவல்களையும் அழித்துவிட கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.

மீண்டும் வர வாய்ப்புள்ளது

இணையத்தில் குறிப்பிட்ட சினிமா படங்களையோ, வெப்சைட்டுகளையோ பதிவிறக்கம் செய்வதை தடை செய்திருந்தாலும், அதில் சிறு மாற்றங்களை செய்து கட்டுப்பாடுகளை உடைத்து, அடுத்த லெவலுக்கு சென்று பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அதனால், அப்படியே இந்த ‘ப்ளூவேல்’ விளையாட்டுக்கான லிங்கை தடை செய்தாலும், அது வெறொரு வடிவத்தில் மீண்டும் வர வாய்ப்புள்ளது. மேலும், இந்த விளையாட்டு வெப்சைட்டாக இல்லை. லிங்க்காக வைத்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் தற்போது கிடைக்கவில்லை.

கேள்விக்குறி

‘ப்ளூவேல்’ விளையாட்டை ஆரம்பித்தவுடனேயே, முதல் நிலையிலே யார் கட்டளையிட்டாலும் உடனே கையை வெட்டி கொள்வார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு முன் எதுவும் நிலை உண்டா? எங்கிருந்தோ மிரட்டுவதற்கெல்லாம், சாதாரணமாக யாராவது தற்கொலை செய்துவிடுவார்களா? உள்ளிட்ட கேள்விகள் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

ரஷ்யாவில் நவ. 2015- முதல் ஏப். 2016 வரை இந்த விளையாட்டால் 130 பேர் வரை இறந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இந்த விளையாட்டால்தான் இறந்துள்ளார்களா? என்பது பற்றி அந்நாட்டு அரசிடம் உறுதியான, அதிகாரப்பூர்வ தகவல், ஆதாரம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாணவர்களையும், இளைஞர்களையும் காக்க, அந்த விளையாட்டை தேர்ந்தெடுக்கவோ, நெருங்கவிடாமல் தடுக்கவோ விழிப்புணர்வு என்ற தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம்

Published : 02 Sep 2017 11:51 IST

விருதுநகர்



ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.


ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.




ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் இரு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.


இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம்., பட்டதாரியான ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகள் காயத்திரி(20) என்பவரையும் வரும் 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், காயத்திரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ஒரு இளைஞர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ராமூர்த்தியின் மாமாவும், மணமகள் ரேணுகாதேவியின் தந்தையுமான அழகர்சாமி மற்றும் உறவினர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்தை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ராமமூர்த்தித்துக்கு ரேணுகாதேவியைதான் திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் அவருக்கு இருதார தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால் முதலில் மனநலம் பாதித்த காயத்திரிக்கு தாலி கட்டிய பிறகு ரேணுகாதேவிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த இருந்ததாகவும், தோஷம் கழிப்பதற்காகவே இருவருக்கு தாலி கட்டி திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமணம் நடத்துவது என மற்றொரு பத்திரிகையை அச்சடித்து வந்து விளக்கக் கடிதத்துடன் கொடுத்தனர். அதைப் பெற்ற சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

ராமமூர்த்திக்கு திருமணம் நடைபெறும்போது அங்கு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறை அலுவலர்களும், போலீஸாரும் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர் கஜேந்திரன் கூறுகையில், இரு மணப்பெண்களும், குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தாலும் சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இது குறித்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மத்ய கைலாஷ் பகுதியில் சோதனை.   -  கோப்புப் படம். | எம்.வேதன்.
வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு காலக்கெடு அளிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்காத சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அசல் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற அரசு உத்தரவு மீதான புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை.
மேலும் இது தொடர்பான பொதுநல மனு மற்றும் ரிட் மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
எனவே செப்டம்பர் 6 முதல் வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

neet issue

clip

NEWS TODAY 13.07.2026