Monday, September 4, 2017


மீன் குழம்பு, சட்ட புத்தகங்களுடன் சிறைவாசத்தில் முன்னாள் நீதிபதி கர்ணன்

Published : 04 Sep 2017 11:48 IST

செளம்யா தாஸ்கொல்கத்தா




நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி, சிறை வாசத்தை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, ''கர்ணன் சக கைதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் மரியாதையாக நடத்தப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவி வருகிறது.

கர்ணன் சட்டக்கல்லூரி மாணவராக இருந்த தன்னுடைய ஆரம்பகட்ட நாட்களுக்குள் சென்றுவிட்டார். தற்போது சட்ட புத்தகங்களையும், தீர்ப்புகளையும் வாசித்து வரும் கர்ணன், விடுதலைக்குப் பிறகு வழக்கறிஞராகத் தொடர்வார்'' என்றார்.

பெங்காலி உணவுகளுக்குப் பழகிவிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், தென்னிந்திய மற்றும் பெங்காலி உணவான சாதம் மற்றும் மீன் குழம்பை ரசித்து உண்கிறார்.

பின்னணி:

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஜூன் 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே போலீஸார் கர்ணனை கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் ஜூன் 20-ம் தேதி அன்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Apex court issues notice on PIL questioning NAAC functioning

Apex court issues notice on PIL questioning NAAC functioning  ‘Working Is Marred By Corruption And Lack Of Transparency’ AmitAnand.Choudhary...