Thursday, September 7, 2017

உயர் மருத்துவம் நாளை கவுன்சிலிங்
பதிவு செய்த நாள்  06செப்
2017
23:28

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., என்ற படிப்புகளுக்கு, 192 இடங்கள் உள்ளன. நாடு முழுவதும், 1,215 இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், 1,140 பேர் இடங்கள் பெற்றனர்.மீதமுள்ள இடங்கள் மற்றும் கல்லுாரியில் சேராதோர் இடங்களுக்கான கவுன்சிலிங், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன் லைன்' வழியே, நாளை நடைபெற உள்ளது.



நெல்லையில் பலத்த மழை

பதிவு செய்த நாள்06செப்
2017
22:25

திருநெல்வேலி: நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெய்த மழையில், குளம் உடைப்பெடுத்தது. நெல்லை, துாத்துக்குடியில், இரண்டு தினங்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த மழை பெய்தது. கழுகுமலை- - குமாரபுரம் இடையே, சாலையில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தை உடைத்து, தண்ணீர் வெள்ளமாக சென்றது. கோவில்பட்டியை அடுத்துள்ள பாப்பான்குளத்தில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள குளம் உடைந்து, தண்ணீர் முழுவதும் வெளியேறியது. நெல்லையில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பேட்டை, என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலை, 4:30 முதல், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, மழை பெய்தது.
சென்னையில் பரவலாக மழை
பதிவு செய்த நாள்

07செப்
2017
01:36



சென்னை: சென்னை - ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நான் நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பதிவு செய்த நாள்

06செப்
2017
22:32




சென்னை: நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன் என சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறி உள்ளார். தனக்கு உடல்நலமில்லை என வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.நான் வெறுமனே சளி என மருத்துவமனை செல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர பாதிப்படைந்திருப்பதாகவும், பாடல் வாய்ப்புகளை ரத்து செய்துவிட்டதாகவும் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராஜபாளையத்தில் மலையில் இருந்து பாறாங்கல் உருண்டு விழுந்தது


ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது.

செப்டம்பர் 05, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது. அடிவாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து உருண்டு நின்றது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட்னர். சஞ்சீவி மலை உச்சியில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து உச்சியில் இருந்த கற்களில் ஒன்று உருண்டு அடிவாரத்தில் விழுந்துள்ளது. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் கண்டுபிடிப்பு



ராஜபாளையம் அருகே 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளும் பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 06, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் அரசு பள்ளிதமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:–

ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 5 குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல சிறிய குகைகள் உள்ளன. அவற்றில் 3 குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன.

இதனை நானும் மாங்குடியை சேர்ந்த மலைக்கனி என்பவரும் சேர்ந்து ஆய்வு நடத்தி கண்டறிந்தோம். இந்த பாறை ஓவியத்தில் வேட்டைகாட்சிகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் சிலர் ஒரு புலியை சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி சிறப்பாக தீட்டப்பட்டுள்ளது.

மற்றொரு கூட்டத்தினர் வேறொரு விலங்கை சுற்றி வளைத்து பிடித்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்கிற காட்சியையும், கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதர்களையும் சூரியன் காட்சியையும் வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்துக்கொண்டு வரும் மனிதனையும் வரைந்துள்ளனர். மேலும் யானையின் உருவத்தையும் கருவுற்ற விலங்குகளின் உருவத்தையும் அந்த கூட்டத்தின் தலைவனையும் அழகாக தீட்டி இருக்கின்றனர். இன்னும் பல கோணங்களில் ஆய்வு செய்வதற்கும் இந்த பாறை ஓவியங்கள் இடம் அளிப்பதாக அமைந்துள்ளன.

இந்த பாறை ஓவியங்கள் உள்ள குகைகள் மற்றும் இதனை சுற்றியுள்ள பழங்கால மனிதர்கள் வாழ்ந்த சில குகைகளையும் கொண்டுள்ள இந்த குன்றினை பாதுகாக்கப்பட்ட தொன்மரபு சின்னமாக தொல்லியல்துறை உடனடியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனாட்சிபுரம் கிராமம் மாங்குடி என்ற கிராமத்தோடு இணைந்த பகுதியாக உள்ளது. இதில் மாங்குடி நெல்லை மாவட்ட பகுதியில் உள்ளது. சங்ககால புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் மாங்குடியாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2002–ம் ஆண்டு இங்கு தொல்லியல் துறை, அகழாய்வு மேற்கொண்டுள்ளது. அந்த அகழாய்வில் இங்கு நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், இடைக்காலம் என தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும் இவர்கள் சீன நாட்டோடும் ரோமானிய நாட்டோடும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த தகவலையும் சங்கரநாராயணன்
தலையங்கம்
டிஜிட்டல் லைசென்சுக்கு அங்கீகாரம்




தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே போகிறது.

செப்டம்பர் 07 2017, 02:32 AM

தமிழ்நாடு முழுவதும் இப்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் மற்றும் கார், லாரி, பஸ், டிராக்டர் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. இதுபோல, விபத்துக்களின் எண்ணிக்கையிலும், விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 2–வது இடத்தில் இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகும். பெரும்பாலும் விபத்துக்கான காரணம் சாலை விதிமீறல் என்பதில் சந்தேகமே இல்லை. நிறையபேர் லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதை தடுக்கும் வகையில், வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுடன் அசல் டிரைவிங் லைசென்சை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையினரும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது. விரிவான விசாரணைக்குப்பிறகு, நீதிபதிகள் இவ்வாறு ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பதில் என்ன சிரமம் இருக்கிறது?. கண்டிப்பாக டிரைவிங் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.

அசல் டிரைவிங் லைசென்சு கையில் வைத்திருப்பது நிச்சயமாக எல்லோராலும் முடியாது. திருட்டு போய்விட்டால் திரும்ப லைசென்சு வாங்குவதற்கு பல நாட்களாகும். அதுவரையில் வாகனம் ஓட்டாமல் இருக்க வேண்டும் என்றநிலை இப்போது இருக்கிறது. ஆனால், இவ்வாறு டிரைவிங் லைசென்சு தொலைந்து விட்டது என்று கூறுபவர்கள், டூப்ளிகேட் லைசென்சுக்காக விண்ணப்பிக்கும்போது போலீஸ் ஸ்டே‌ஷனில் புகார் கொடுத்து, அங்கிருந்து இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழ் பெறவேண்டியதில்லை என்ற அளவில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் குழப்பத்தை போக்குவதற்காக சென்னை கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு பரிந்துரைப்படி, ‘அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல்’ போன்ற 6 விதிமீறல்கள் மட்டுமே கடுமையான குற்றமாக கருதப்பட்டு, 9–ந்தேதி முதல் போலீசார் அசல் டிரைவிங் லைசென்சை கேட்பார்கள் என்று அறிவித்துள்ளார். போலீசாரின் அனாவசியமான கெடுபிடி இருக்கும் என்ற அச்சத்தை தவிர்க்கும்வகையில், இதுபோன்ற நடைமுறைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் அமல்படுத்தவேண்டும்.

2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம், அனைவரும் டிரைவிங் லைசென்சையும், ஆர்.சி.புக் என்ற வாகனப்பதிவு சான்றிதழையும், செல்போனில் உள்ள டிஜிலாக்கரில் பதிவுசெய்து போலீசார் கேட்கும்போது, அதை டவுன்லோடு செய்து காட்டிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று போலீசாரும், வட்டாரபோக்குவரத்து அலுவலகமும் தங்கள் செல்போனில் இதற்கான ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை வைத்திருந்தால் இந்த லைசென்சு ஒரிஜினல்தானா? என்பதை உடனடியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். செல்போனில் இந்த வசதி இருக்கும்போது, ஒரிஜினல் லைசென்சை கொண்டுவா என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. தமிழக அரசு உடனடியாக தனது மோட்டார் வாகன விதிகளில் ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்கவேண்டும் என்ற பிரிவோடு, டிஜிலாக்கரில் பதிவுசெய்து வைத்திருக்கலாம் அதுவும் செல்லும் என்ற திருத்தத்தை கொண்டுவரவேண்டும். மேலும், இதுகுறித்து முறையாக, அதிகாரபூர்வமாக அறிவித்து, டிஜிலாக்கரில் வைத்திருக்கும் லைசென்சு செல்லுபடியாகக் கூடியதுதான், அதையே போலீசாரிடம் காட்டிக்கொள்ளலாம் என்று அங்கீகரிப்பதன் மூலம், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்கமுடியும்.

SC verdict on super speciality seats ‘historic’, says Minister

SC verdict on super speciality seats ‘historic’, says Minister He attributes the verdict to the timely filing of writ petition by T.N. gover...