Tuesday, September 12, 2017

ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு



ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

செப்டம்பர் 12, 2017, 04:00 AM
மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–


தமிழ்நாடு ஆசிரியர்–அரசு ஊழியர்கள் சங்கங்கள் (ஜாக்டோ, ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப்பள்ளிகளில் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இடைக்கால தடை

இந்த மனுவை, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 14–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.


போராட்டம் தொடர்ந்து வருவது குறித்து நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்துக்கு மனுதாரர் தரப்பினர் கொண்டு சென்றனர். போராடும் அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு வழக்கை கோர்ட்டு தானாக முன்வந்து (சூமோட்டோ) பதிவு செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அவமதிப்பு வழக்கு

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று கடந்த 7–ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் ஏராளமானவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். இந்தநிலையில் போராட்டத்தை தொடர்ந்து வரும் 74,675 ஊழியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, தொடரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது தெரிந்து இருந்தும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

னவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தலையங்கம்
‘டுவிட்டர்’ அரசியல்




காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள்.

செப்டம்பர் 12 2017, 03:00 AM

காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை, அடுத்த கட்சியும் ஒரு பொதுக்கூட்டம் போட்டு மறுப்பு தெரிவிக்கும். பிறகு பரஸ்பர அறிக்கை போர்கள் நடந்தன. அதேபோல, பத்திரிகை நிருபர்களை இரு தரப்பும் சந்தித்து தங்கள் கருத்துக்களை மாறி மாறி சொல்லி வந்தனர். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி, தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு எல்லோருமே சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு தொடங்கி, டுவிட்டரிலேயே அறிவிப்புகள், எதிர்மறை கருத்துகள் என எல்லாமே நான்கைந்து வரிகளில் கூறப்படுகின்றன. பத்திரிகை நிருபர்களுக்கு டுவிட்டரில் செய்திகளை பார்க்க வேண்டும் என்பது அவசர அவசியமாகிவிட்டது. குறிப்பாக தமிழக அரசியலில் இப்போது முதலில் அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், டுவிட்டரில் தங்கள் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

1972–வரையில் தமிழ்நாட்டில் காங்கிரசா, தி.மு.க.வா? என்ற நிலையிலேயே அரசியல் சுற்றி சுற்றி வந்தது. 1972–ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு இன்று வரை தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்ற நிலையில்தான் தமிழக அரசியல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. 1967–ல் தோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளை சார்ந்தே தங்கள் அரசியல் பாதையை வகுத்துக் கொண்டது. தற்போது நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டனர். 1996–ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என்று சொல்லி அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அதன்பிறகு ‘இதோ வருகிறார்’, ‘அதோ வருகிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவர் இன்றுவரை அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கவில்லை. ஆனால், கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நேரத்தில் அரசியலுக்குள் வருவதை சூசகமாக தெரிவித்தார். கடந்த மாதம் திருச்சியில் நடந்த ‘காந்திய மக்கள் இயக்கம்’ சார்பில் நடந்த அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், ‘நான் அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். இது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை’ என்று ரஜினிகாந்த் சொன்னதாக தமிழருவி மணியன் பகிரங்கமாக அந்தக் கூட்டத்தில் அறிவித்தார். நான் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தென்னக நதிகளை இணைத்து, தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது, ஊழலற்ற ஆட்சியை தருவது, வெளிப்படையான ஆட்சியை தருவது என்பதே எனது மூன்று கனவுத்திட்டங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசனை பொறுத்தமட்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் டுவிட்டரில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டே வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு திருமண விழாவில், ‘நான் அரசியலுக்கு நேரடியாக வந்துவிட்டேன். அந்த அரசியல் டுவிட்டரிலேயே தொடங்கி விட்டேன். எனது அரசியல் பிரவேசம் எப்போதோ தொடங்கிவிட்டது’ என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். நேற்று முன்தினம் நதிநீர் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் டுவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார். இருவருமே அறிக்கையோ?, பத்திரிகையாளர்கள் சந்திப்பையோ நடத்தாமல், டுவிட்டரிலேயே தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில், தமிழக அரசியலில் உள்ள பெரிய எதிர்பார்ப்பு, டுவிட்டர் அரசியல் நடத்தும் ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?. இதில் யார் முதலில் அரசியல் அரங்கிற்குள் நுழையப்போகிறார்கள்?, அவர்கள் தொடங்கும் அரசியல் கட்சிகள் எந்த அணியோடும் சேருமா? அல்லது தனியாக நிற்கப்போகிறார்களா? என்பதும் பலத்த விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.

Monday, September 11, 2017

IndiGo

அனிதா குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சம் நிதியுதவி: திருநாவுக்கரசர் அறிவிப்பு

Published : 10 Sep 2017 16:10 IST

சென்னை




நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலைக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் பொறுப்பாகும். அனிதாவின் தற்கொலையினால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
உயிர் வளர்த்தேனே 52: ஒவ்வொரு கவளத்தையும் உணர்ந்து சுவைப்போம்!

Published : 09 Sep 2017 09:57 IST






காய்கள், கிழங்குகள் பற்றி இன்னமும் நாம் பேசவில்லை. நடுத்தர வருமானமுள்ளவர்கள் சமைக்கும் உணவு வகைகளில் வெங்காயம், தக்காளி தவிர மேலும் ஒன்றிரண்டு காய்கள், கிழங்குகள் இடம்பெறுவது பெரும் கொடுப்பினை.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தமிழகம் அளவுக்குப் பல்வேறு விதமான காய், கிழங்கு பயன்பாடு இல்லை என்றே கருதுகிறேன். மித வெப்பமண்டலப் பகுதியான நம் நிலத்தில் அத்தனை வகை காய் கிழங்குகள் பயிராகிக் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்து விடுகின்றன.

ஆதி வேட்கை

வெங்காயம், தக்காளி, ஒரு காய் இருந்தால்போதும் இவற்றை மட்டுமே வைத்து துளி மசால் அல்லது மிளகாய் சேர்த்து அற்புதமான கூட்டு அல்லது பொரியல் அல்லது குழம்பு அல்லது பெயரிட முடியாத ஒரு பண்டத்தை நம் இல்லத்தரசிகள் படைத்தருளி விடுவார்கள்.

தக்காளி புளிப்பு, வெங்காயம் காரம். இரண்டுமே சதைப் பற்றானவை என்பதால் சொத சொதவென குழம்பு கிடைத்து விடுகிறது. அத்துடன் கூடவே ஒரு காய் அல்லது கிழங்கு கிடைத்தால் கடித்துண்ண ஒரு நிறைவு கிடைக்கிறது.

நம் உடலின் மரபணுவில் ஆதி வேட்டைக் கூறு மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. எனவே, நார்த்தன்மை மிகுந்த இறைச்சி போன்ற ஒன்றைக் கடித்து உண்டால்தான் நிறைவு கிடைக்கிறது. எதுவும் இல்லாமல் போனால் பொரித்த அப்பளம், வற்றலாவது இருக்க வேண்டும். இப்போது தொடங்கிவிட்ட கார்காலத்தில் மொறுமொறுப்பான ஒரு பண்டம் இருந்தால்தான் உண்பதற்கு வாய் ஒத்துழைக்கும்.

புலம்பெயர்ந்த கத்திரிக்காய்

'இங்கிலிஷ் காய்கள்' என்று பொதுவாக அறியப்படுகிற கேரட், பீன்ஸ், கோஸ், காலி பிளவர் மட்டுமல்ல, பெரும்பாலான மற்ற காய்களும் அயல் இறக்குமதிதான்.

நாம் மிக மலினமாகக் கருதும், வார்த்தைக்கு வார்த்தை 'இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா?' என்று சொல்லிக்கொள்கிற; விழுந்தால், புரண்டால், தடுக்கினால் நம்மை அணைத்துச் செல்கிற கத்திரிக்காய்கூட நம் காய் இல்லை. தென்னமெரிக்க நாடான பிரேசிலில் இருந்துவந்து, பூர்வகுடிபோல நம்முள் இரண்டறக் கலந்துவிட்டது.

மெலிதான காரல் சுவையும், வழுவழுப்பான சதைப்பற்றும் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் முழுவெள்ளை, முழுப்பச்சை, அப்பன் வாங்கித் தந்த ரிப்பன் கலரில் அடர்ஊதா, உருண்டை, நீலம், முட்டை வடிவம் எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் காண முடியும். ஈரப் பதத்துடன் தளதளப்பாக மின்னும் கத்திரிக்காய்கள் காணக் கிடைத்தால் ஓரிரு நிமிடங்கள் நின்று அவற்றைக் காதலுடன் பார்க்காமல் கடக்க முடிவதில்லை என்னால்.

கோசுமல்லிக் கூட்டணி

நமது தாய்மார்களை விட்டால் கத்திரிக்காய்க்கு நூறு வகையான வேஷங்கட்டி விதவிதமாக ஜொலிப்பேற்றி அதன் அடையாளத்தையே மறக்கடித்து விடுவார்கள். வெண்ணெய் போன்ற சதைப்பற்றும் மினுமினுப்பும், அதை என்ன செய்தாலும் ஈடுகொடுக்கும்.

ஐந்தாறு இளம் முற்றல் கத்திரிக்காயை எடுத்து முழுதாக மண் சட்டியில் இட்டு, இளஞ்சூட்டில் கடலை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிதளவு விட்டுப் புரட்டிப் புரட்டி விடவேண்டும். தோல் வற்றி, கருகல் புகைக் கிளம்பும் பக்குவத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

வெங்காயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயில் இரண்டு சேர்த்து தாளிப்பிட்டு வெங்காயம் சுருளுவதற்கு முன்பாக ஆறின கத்திரிக்காயை உடைத்துத் தாளிப்புடன் சேர்த்துச் சிறிதளவு நீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். மூன்று பல் பூண்டை உரித்துப் போட்டுவிட்டு கொஞ்சமாகப் புளிக் கரைசல் சேர்த்து வாசம் போகக் கொதித்த பின்னர், எடுத்துக் கடைந்தால் கலவை வெண்ணெய்போலத் திரண்டு வரும். நார்த்தன்மையும், இளங்கசப்பும், காரல் சுவையும் உடைய இந்தக் கடைசலை செட்டிநாட்டில் கோசுமல்லி என்பார்கள். இட்லி, தோசை, சோறு எதனுடனும் கூசாமல் கூட்டணி வைத்துக்கொள்ளும் இந்தக் கோசுமல்லி.

வாய்தா கேட்கும் வாயுத்தொல்லை

பத்து நாளைக்குக்கூட வாடாமல் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்திருக்கும் உருளைக் கிழங்கு கிடைப்பதால், நம் பொழுது இந்த மட்டிலும் தொல்லை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

உருளைக் கிழங்கு… காய்க்குக் காய், கிழங்குக்குக் கிழங்கு, இறைச்சிக்கு இறைச்சி! கறிமசால் போட்டுத் தாராளமாக எண்ணெய்விட்டுப் புரட்டி எடுத்து உண்டால், இறைச்சி உண்ட திருப்தி தரும் கிழங்கு.

கைக்கும், மெய்க்கும், கட்டுப்படியான விலைக்கும் ஈடுகொடுக்கும் நமது நேசத்துக்குரிய உருளைக்கிழங்கு மீது வாயு என்று வாய்க்கு வாய் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள் நாற்பது வயதைக் கடந்தவர்கள். அப்படியே சுமத்தினாலும் அதை விட்டு வைக்கிறார்களா என்றால் இல்லை. தெரிந்து இரண்டு வாயும், தெரியாமல் நான்கு வாயும் உண்டுவிட்டு அதைக் கரித்துக் கொட்டுகிறார்கள்.

உருளைக் கிழங்கைத் தோலுடன் நன்றாக அவித்து ஆற வைத்து, தோல் நீக்கி உடைத்து மசிக்க வேண்டும். கனமான இரும்பு வாணலியில் தாராளமாக வெண்ணெய்விட்டு இளகியதும் சிறிதளவு இஞ்சி, பூண்டுத் தொக்குப் போட்டுப் புரட்டிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி போட்டு மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். இதை உண்டால் எந்த வயதினரும், அதைக் கொண்டா கொண்டா என்று கொண்டாடுவார்கள். அதன்மீது பழி சுமத்தியவர்கள்கூட குற்றவுணர்வில் வருத்தப்படுவார்கள். வாயுத் தொல்லை வாய்தா வாங்கிக்கொண்டு ஓடிப் போய்விடும்.

இதேபோல, அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லாத சேப்பங்கிழங்கு எனப்படும் வழுவழுப்பான கிழங்கும், நார்த்தன்மை மிகுந்த கருணைக் கிழங்கும் நமது உடல் நலனுக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

சுவைத்து உண்கிறோமா?

நமது உணவின் நன்மை தீமை என்கிற குணங்கள் இரண்டுமே உணவில் இருந்து வருபவை அல்ல. உண்பவரின் உடலுக்குள் முன்னரே சேமிக்கப்பட்டக் கூறுகள்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றன. முன்னர் உண்ட உணவு செரித்ததா இல்லையா என்பதை உணராமல், பசியின் அளவறியாமல் கிடைக்கிற நேரத்துக்குக் கிடைக்கிற உணவை சுவைக்கு அடிமைப்பட்டு உண்டு வைப்பதே நோய்கள் அனைத்துக்கும் மூலகாரணம்.

அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடி துய்க்குமாறு

- என்கிறார் நமது வள்ளுவப் பாட்டன். உங்கள் நாவுக்குப் பிடித்த உணவைப் போதும் போதும் என்று மறுத்தே உண்ணுங்கள் என்கிறார். நம்மில் பலர் இதுதான் கடைசிக் கவளம் என்று ஆவேசத்துடன் உண்கிற பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், மிகவும் பிடித்த உணவையும் தியாகம் செய்ய வேண்டிய உடல்நிலைக்கு ஒருநாள் வலிந்து தள்ளப்பட்டு விடுகிறோம்.

நாம் பிறந்த நிமிடத்தில் நமக்கான உணவை இயற்கை அன்னை எடுத்து வைத்துவிடுகிறாள். சிறிது சிறிதாக உண்டு நெடிய வாழ்நாள் முழுமைக்கும் அதை எடுத்துச் செல்வதையும், அவசர அவசரமாக அளவுக்கு அதிகமாக உண்டு வாழ்நாளை விரைவிலேயே முடித்துக்கொள்வதையும் நம் பொறுப்புக்கே அவள் விட்டுவிட்டாள்.

சுவையான உணவை உண்ண விரும்புகிறோம். ஆனால் சுவைத்து உண்கிறோமா என்றால் இல்லை. அடுத்த கவளத்தை உண்கிற ஆவேசத்தில் வாயில் உள்ள உணவைச் சுவைப்பதில்லை. கன்வேயரில் வைத்துத் தள்ளுவதுபோல தொண்டையில் வைத்து, இரைப்பையை நோக்கி உந்தி விடுகிறோம்.

இரைப்பையில் இல்லை பற்கள். பற்கள் உள்ள வாயில் உணவை அரைத்துவிட்டால் மென் உறுப்பான இரைப்பையின் வேலை எளிதாகி விடும். வாயில் மெல்லுகிற போதுதான் சுவையுணர்வு நாவில் நின்று நர்த்தனமாடும்.

சுவைக்கச் சுவைக்க உடலின் உயிர்த் தேவை முழுமையாக நிறைவடையும். தேவை நிறைவுற்றால் அளவு தானாகவே குறையும். உணவின் அளவு குறைந்தால் உடலின் செரிமான ஆற்றல் வீணாகாமல், நம் வாழ்நாளை அது நீடிக்கச் செய்யும். வாழ்கிற நாள் முழுமைக்கும் நலனை வழங்கும்.

நம் உயிர் வளரும்!

பெரு விருந்து களித்த நிறைவு

சமைத்துச் சுவைத்த சுவை உடலின் செல்தோறும் பரவும் அனுபவத்தையே 'உயிர் வளர்த்தேனே' தொடரில் கடந்த ஓராண்டாகப் பகிர்ந்துகொண்டேன். சுவைத்தலைப் போலவே, சுவைத்தலைப் பகிர்ந்துகொள்வதும்கூட ஒரு இன்ப அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. அதைத் துய்க்க வாய்ப்பளித்த வாசகர்களுக்கு நன்றிகளைப் பரிமாறுகிறேன்.

உடலியல் நுட்பத்தை அறியும் பொருட்டு உணவின் மீதான நுகர்வு ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் இத்தொடர் எழுதி முடித்த பிறகு பெரு விருந்து களித்த நிறைவெய்தினேன்.

இந்தத் தொடர்ஓட்டத்தைத் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் சென்றது வாசகர்களே. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் மின்னஞ்சல்கள், தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். இத்தொடர் புதிய நட்புறவுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

- போப்பு

(நிறைந்தது)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

Blue Whale Challenge: teen denies knowledge of game

‘The boy’s case cannot be determined as addiction to the game as yet’



“Nothing has happened to me; I have no idea of any harmful game,” mutters sixteen-year-old Suresh (name changed), kept under observation for the last few days at the Intensive Care Medical Unit (ICMU) at the Mahatma Gandhi Memorial Government Hospital.
The boy had been spending hours on end with his mobile phone particularly during late night and early morning hours for many weeks, downloading and playing games. At one point, his father could not tolerate any further and smashed the phone.
But this act angered the son and he became abnormally aggressive and was taken to the Thuraiyur Government Hospital where he was examined by a visiting psychiatrist before being shifted to the Mahatma Gandhi Memorial Government Hospital under sedation.
At the ICMU, the boy is restive and wants to get back home immediately. “No body wants to listen to me. All keep saying that I am being treated for bringing down my stress. But, they suspect that I am stubborn and lying about not knowing a thing about the so-called ‘blue whale’ game. I am helpless,” he says.
A distraught father Nallendran (41) of Thuraiyur town who had known his son’s interest for car racing games said he had admitted the latter forcibly at the hospital for counselling support so as to rule out the boy’s attraction towards the ‘blue whale’ game.
A team of psychiatrists formed newly under instructions of the Health Ministry has kept him under observation at the ICMU.
The hospital Dean In-Charge Anitha is tight-lipped about the progress in the treatment. On the instructions of the DME, a team consisting of two chief doctors and three assistant doctors has been formed, the Dean said, adding: “The boy's case cannot be determined as addiction to ‘blue whale’ game as yet. There is no inscription of whale on him. But, the counselling is nevertheless eliciting desired results.”
The Thuraiyur police say there was no way to relate the boy’s aggression to the game as the phone had been destroyed.
“But, indications are that the boy was prone to anger due to mental stress, and this condition is being made out to be a symptom of addiction to the game,” an official attached to the station said.
Nallendran says overbearing media attention was only making matters worse. “I now understand that his aggression was an outcome of inadequacies on my part in handling his adolescence. I should have been flexible. He feels disgraced and is reluctant to face his friends and teachers again. I am in a quandary,” lamented Nallendran.

Mayiladuthurai ready for Cauvery Maha Pushkaram

The water tank that has been constructed at Thula Kattam in Mayiladuthurai for the Cauvery Maha Pushkaram festival.  

Tank filled with water awaits devotees at Thula Kattam

Arrangements are in place for the celebration of Cauvery Maha Pushkaram at Thula Kattam, the mouth of the river, in Mayiladuthurai from September 12 to 24.
Since the particular configuration of stars happens once in 144 years, the organisers have constructed a tank for the devotees to have a holy dip as it is believed that it not only cleanses the inner selves but washes away evil.
All through the grand celebration, there will be Veda Parayanam, Homam, Maha Yengam, cultural activities such as music, traditional dances, spiritual discourses, Cauvery Arthi, Thirumurai (Tamil Vedas) Parayanam, Annadanam, poor feeding, and pithru tharpanam.
A permanent tank with concrete flooring and one feet of sand has been constructed to hold water to a depth of two feet. Water has been filled into the tank from a borewell using a 10 hp motor.
The tank will be maintained permanently to address water scarcity in the area, as per the plan of the district administration.
Nevertheless, the organisers expect the Tamil Nadu Government to release water stored at Kallanai for the convenience of the several thousands of devotees converging in Kumbakonam and Thiruvaiyaru.
There is still time for the government to ensure that the devotees do not go back disappointed, Chairman of Cauvery Pushkaram Festival Commitee Swami Ramananda said.
The organising committee, he said, has been advising devotees anticipating water flow in the river to go to Mayanur in Karur district; Kodumudi and Bhavani Kooduthurai in Erode district; and Mettur in Salem district.
There is enough inflow into Tamil Nadu from Karnataka for release of water from the Mettur dam. Efforts were still on to prevail upon the government to ensure water flow into the river during the festival, Swami Ramananda said.
Parking points
For the convenience of devotees coming for a holy dip, the district administration has put up the map of the location at various points. Buses coming from Sirkazhi need to be parked at the temporary bus stand created opposite to Maruti showroom.
A parking lot has also been created close to TVS new showroom along the Poompuhar Road.
Vehicles coming from Manalmedu, Kumbakonam and Needur have to be parked at Mayiladuthurai old bus stand, and those coming from Senbanarkovil would have to be stationed at the grounds of Chinna Mariaman Kovil near Dhrumapuram Arch. For vehicles coming from Thiruvarur, a temporary shelter has been created at Rathinam Nagar near Seenivasapuram.
At Srirangam
Elaborate arrangements have been made for the Cauvery Maha Pushkaram that begins on Tuesday.
It will be celebrated for 12 days from September 12 to September 23.
It is estimated that at least 20,000 devotees across the country mainly from Andhra Pradesh and Telengana are expected to visit Srirangam daily.
The organisers have lined up various programmes including homams, special pujas and cultural events.
Though the festival is being viewed as a private one, the district administration conducted a review meeting a few days ago to discuss the steps to be taken for providing amenities to the devotees.
A senior official said that Tiruchi Corporation, Public Health, police, Public Works Department, Hindu Religious and Charitable Endowments and Tourism have been asked to provide necessary facilities to the devotees.
As of now there was no chance for opening Mettur dam for the festival.
If the dam level shot up to 90 feet, there might be chances for water flow in Cauvery particularly during the last leg of the 12 day-festival.
Water would be made available to the devotees at Amma mandapam bathing gate, sources said.

NEWS TODAY 15.07.2026