Wednesday, September 13, 2017

மாநில செய்திகள்

144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது

t
மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM

மயிலாடுதுறை,

இந்தியாவில் உள்ள 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். அதைத் தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த புஷ்கர விழா காவிரியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு வருவதால் காவிரி மகாபுஷ்கர விழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 8.25 மணிக்கு காவிரி ஆற்றில் புஷ்கர பிரவேசம் நடைபெற்றது.

தீர்த்தவாரி

முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை வந்தடைந்தனர். இதைப்போல வள்ளலார், படித்துறை காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலா கட்டத்தை அடைந்தனர்.

மேலும், பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பட்டு காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைந்தார். பின்னர் துலாகட்டத்தில் 4 கோவில்களின் அஸ்திரதேவர்களுக்கும், யானைக்கால் படித்துறையில் தீர்த்தபேரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.

புனித நீராடினர்

அப்போது துலாகட்டத்தின் வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீனங்களும், கிரீஸ் நாட்டு இளவரசி ஐரீன் ஆகியோரும் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணியளவில் ஆன்மிக ஊர்வலம் மயிலாடுதுறை கேதாரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இந்த விழாவுக்காக மயிலாடுதுறை துலாகட்ட காவிரியின் மையப்பகுதியில் 100 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் புஷ்கரணி (தீர்த்தக்குளம்) அமைக்கப்பட்டு உள்ளது. துலாகட்டத்தின் நடுவில் உள்ள ரிஷப நந்திமண்டபம், துலாகட்ட தீர்த்தவாரி மண்டபம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது.
தேசிய செய்திகள்

கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்


கேரளாவில் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM
திருவனந்தபுரம்

கேரளாவில் கண்ணபுரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், புதிதாக வீடு கட்டி பரியாரம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பழைய வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றபோது, ஒரு பழைய இரும்பு பெட்டியை பேரீச்சம்பழ வியாபாரியிடம் விற்று பேரீச்சம்பழம் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

பின்னர்தான் தாங்கள் வைத்திருந்த 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்துடன் இரும்பு பெட்டியை பேரீச்சம் பழத்துக்கு விற்றது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். பேரீச்சம்பழ வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் இரும்புப்பெட்டியில் இருந்த நகை, பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

ஆனால் போலீசார் விடவில்லை. அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பழைய இரும்பு பெட்டிக்குள் 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் இருக்க கண்டனர்.

அதைத் தொடர்ந்து நகைகளையும், பணத்தையும் போலீசார் மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த ருசிகர சம்பவம், அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட செய்திகள்

குடும்பத்தலைவி படத்திற்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரேஷன்கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம்


ஸ்மார்ட் ரேஷன்கார்டில் குடும்பத் தலைவி படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 13, 2017, 04:45 AM

ஓமலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் அச்சிட்டு வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆண் வாக்காளருக்கு பதிலாக பெண் வாக்காளரின் பெயர் மற்றும் புகைப்படம் மாறி இடம் பெறுவது கடந்த காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. இதுபோன்ற தவறுகளை களைந்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுஒருபுறம் இருக்க தற்போது தமிழக அரசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி ஒருவரின் படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மாறி இடம் பெற்றுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வடக்கு தாலுகா ஆர்.சி.செட்டிபட்டி காமலாபுரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவர் பெயரில் குடும்பத் தலைவர் என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன்கார்டில் தான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் சரோஜா படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் மாறி இடம் பெற்றுள்ளது.

நேற்று காலையில் இந்த ரேஷன்கார்டை கடை ஊழியர் சரோஜாவிடம் வழங்கும் போதே இந்த தவறை குறிப்பிட்டு திருத்தம் செய்து தருவதாக தான் கொடுத்துள்ளார். இருப்பினும் இதை பார்த்த சரோஜா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வட்ட வழங்கல் துறையினரிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த ஸ்மார்ட் ரேஷன்கார்டு வாட்ஸ்-அப்பிலும் வலம் வர தொடங்கி உள்ளது.

இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் குறித்த ஆய்வு



அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குதல் குறித்த ஆய்வு கூட்டம் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் தலைமையில் நடந்தது.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM

காஞ்சீபுரம்,

அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் குறித்த ஆய்வு கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளரும், ஆணையருமான ஜவகர் பேசியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 31 ஆயிரத்து 219 அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் விரைவில் கணினி மயமாக்கப்படும். இதர மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.288 கோடியே 91 லட்சம் நிதி ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இதனால் தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கூடுதல் இயக்குனர் (நிர்வாகம்) சித்ரா ஜானர் பெர்னான்டோ, கூடுதல் இயக்குனர் (மின் ஆளுகை) ஏ.பி.மகாபாரதி, சென்னை மண்டல கரூவூலம் மற்றும் கணக்குத்துறை இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், காஞ்சீபுரம் மாவட்ட கருவூலம் இணை இயக்குனர் காத்தவராயன், நேர்முக உதவியாளர் (கருவூல கட்டுபாடு) புவியரசு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தலையங்கம்

‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள்



‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

செப்டம்பர் 13 2017, 03:00 AM

‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. பிளஸ்–2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே பெறமுடிந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழகமே கண்ணீர் வடிக்கிறது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெற முயற்சி செய்கிறோம், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று வீண் நம்பிக்கையை மாணவர்களிடம் வளர்க்காமல், இனி ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற நோக்கில் ஒருவழியாக தமிழக அரசு அதற்குரிய நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், மொத்தம் உள்ள 3,534 இடங்களில், மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த 2,314 மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தின்கீழ் படித்த 1,220 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்குத்தான் அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளமுடியாது. ஏனெனில், இதில் 43 சதவீத மாணவர்கள் அதாவது, 1,004 மாணவர்கள் ஒரு ஆண்டுக்கோ அல்லது 2 ஆண்டுகளுக்கு முன்போ படித்த பழைய மாணவர்கள். இதில் பெரும்பாலானோர் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சி மையங்களில் படித்து தங்களை தயார்படுத்திக்கொண்டவர்கள். அனைத்து மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கவேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. இதை புரிந்துகொண்ட காரணத்தினால் தமிழக அரசு, மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 412 ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்க முடிவுசெய்துள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுமட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்களிலும் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும். இனிமேலும் அனிதா உயிரிழப்பு போன்ற சம்பவம் ஏற்படாதவகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

வார இறுதி நாட்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து திறமைமிக்க ஆசிரியர்கள் மூலம் ‘நீட்’ தேர்வுக்கு நமது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த பயிற்சியை மாணவர்களுக்கு செல்போனில் உள்ள ‘ஸ்கைப்’ மூலமாக பெற்றுக்கொள்வதற்கும் வகைசெய்யப்படும். ‘நீட்’ தேர்வுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய குறிப்பேடுகளை அதற்குரிய வரைபடத்துடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த தேர்வு வந்தாலும், அதை ஜெயித்துக்காட்டுகிற வல்லமை தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது என்ற சரித்திரம் படைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளார். நிச்சயமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கத்தக்கது. நமது மாணவர்களால் முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்காமல், நமது மாணவர்களாலும் நிச்சயமாக முடியும் என்ற நிலையை உருவாக்குவதுதான் சிறந்ததாகும். ஆனால், இதை வெறும் அறிவிப்பு அளவில் நிறுத்திவிடாமல், இந்த கல்வி ஆண்டு தொடங்கும் இந்த நேரத்திலேயே அடுத்த ஒரு மாதங்களுக்குள்ளேயே தொடங்கினால்தான், வரும் ஆண்டு மாணவர்களால் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளமுடியும். இப்போது உருவாக்கப்படும் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக அல்ல, சி.பி.எஸ்.இ.க்கு மேல் உள்ள தரத்தில் தயாரிக்கப்படவேண்டும். இதை கற்றுக்கொடுக்கும் அளவில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும். மொத்தத்தில், எங்கள் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதத்தில் பயிற்சியும், பாடத்திட்டமும் இருக்கவேண்டும்.

Tuesday, September 12, 2017

CBSE TEACHERS


Colleges told not to take blank cheques

Fee panel says it has received complaints from students

The R. Rajendra Babu Fee Regulatory Committee has directed the principals of medical colleges not to collect blank cheques from students or their parents while admitting students to the MBBS course.
Further, the colleges are authorised to ask for a bank guarantee only for the first year as directed by the Supreme Court and the High Court of Kerala.
Order promises action
The order is consequent to the committee receiving complaints from the students admitted to the MBBS course and their parents that some colleges were insisting on getting a blank cheque and a bank guarantee for the second and third year also.
“Any demand for excess tuition fee, collection of blank cheques, and demand of bank guarantee for future years’ tuition fee i.e. for the second year onwards will be construed as collection of capitation as per Section 8(3) of Ordinance 13 of 2017 and action will be initiated against the erring medical colleges under Section 8(4) of the aforesaid Ordinance,” the committee’s order reads.
Mr. Babu told The Hindu here on Monday that he had received both written and oral complaints from students and parents. Both were treated with equal seriousness. Many students who called the committee said they did not want to give a complaint under their name as they feared retribution from the college managements. There were at least 15 written complaints against the colleges.
Case of capitation fee
“The complaints were about two or three colleges. I did not want the colleges to be able to identify the complainants. That is why I issued a general order. I have made it clear that any such action will be defined as capitation fee,” he said.
A couple of colleges had demanded, in addition to the blank cheque, bank guarantee for the full five years of the MBBS course, he added.
A couple of colleges had demanded bank guarantee for the full five years of the MBBS course
R. Rajendra Babu

NEWS TO DAY 16.07.2026