Wednesday, September 13, 2017

தேசிய செய்திகள்

கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்


கேரளாவில் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM
திருவனந்தபுரம்

கேரளாவில் கண்ணபுரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், புதிதாக வீடு கட்டி பரியாரம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பழைய வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றபோது, ஒரு பழைய இரும்பு பெட்டியை பேரீச்சம்பழ வியாபாரியிடம் விற்று பேரீச்சம்பழம் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

பின்னர்தான் தாங்கள் வைத்திருந்த 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்துடன் இரும்பு பெட்டியை பேரீச்சம் பழத்துக்கு விற்றது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். பேரீச்சம்பழ வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் இரும்புப்பெட்டியில் இருந்த நகை, பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

ஆனால் போலீசார் விடவில்லை. அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பழைய இரும்பு பெட்டிக்குள் 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் இருக்க கண்டனர்.

அதைத் தொடர்ந்து நகைகளையும், பணத்தையும் போலீசார் மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த ருசிகர சம்பவம், அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...