Sunday, September 17, 2017

22. தந்தையை விஞ்சிய தனயன் - ஆர்.டி. பர்மன் 

By கருந்தேள் ராஜேஷ்  |   Published on : 05th May 2017 09:28 PM  |   
main_image


எஸ்.டி. பர்மனைப் பற்றி நாம் கவனித்திருக்கிறோம். அவரது புதல்வர் ஆர்.டி. பர்மன் என்ற ராகுல் தேவ் பர்மன், இந்தியாவின் புதழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். எஸ்.டி. பர்மனின் மறைவுக்குப் பின்னர் ஹிந்தித் திரையுலகைப் பல வருடங்கள் அரசாண்டவர். ஐம்பத்து நான்கே வயதில் வாரிசில்லாமல் இறந்துவிட்டாலும்கூட, இன்றும் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பல பாடல்கள் இவர் இசைத்தவையே.
ஆர்.டி. பர்மனின் முதல் ட்யூன், அவரது ஒன்பதாவது வயதில் இசையமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமானது. சிறுவயதில் அவர் கம்போஸ் செய்த ட்யூனை, ‘ஃபந்தூஷ்’ (1956) படத்தில் எஸ்.டி. பர்மனால் ‘ஆயே மெரி டோபி பலட் கே ஆ’ என்ற பாடலுக்காகப் பின்னர் எஸ்.டி. பர்மன் உபயோகித்துக்கொண்டார். ஆர்.டி. பர்மன் மிகச்சிறுவயதில் இப்படி இசையமைத்ததில் ஆச்சரியமே இல்லை. அவரது தந்தை எஸ்.டி. பர்மன் எப்படியெல்லாம் இசை கற்றுக்கொண்டார் என்று நாம் ஏற்கெனவே கவனித்திருக்கிறோம். அதேபோல் ஆர்.டி. பர்மனுக்கும், தந்தையிடமிருந்தும், பின்னர் அலி அக்பர் கான் (சரோட்), சம்தா பிரஸாத் (தப்லா) முதலிய சிறந்த இசைக்கலைஞர்களிடமிருந்தும் இசை கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதை அவர் திறம்படவும் கற்றார்.
இசையை நன்கு கற்றுத் தேர்ந்தபின்னர், ‘சொல்வா சால்’ (1958), ‘சல்த்தி கா நாம் காடி’ (1958), ‘காகஸ் கி ஃபூல்’ (1957) முதலிய சில படங்களில் தந்தையிடமே உதவியாளராகவும் பணியாற்றினார் ஆர்.டி. பர்மன். இவைகளைத் தொடர்ந்து, தனது இருபதாவது வயதில், 1959ல், ‘ராஸ்’ என்ற படத்தில் இசையமைப்பாளராகும் வாய்ப்பு ஆர்.டி. பர்மனுக்குக் கிடைக்கிறது. ஆனால், குருதத்தை வைத்து அவரது உதவியாளர் நிரஞ்சன் இயக்க இருந்த அப்படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தந்தையிடமே உதவியாளராக மாறினார் பஞ்ச்சம் (ஆர்.டி. பர்மனின் செல்லப்பெயர். இப்பெயராலேயே இன்றும் ‘பஞ்ச்சம் தா’ என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார்).
1961ல், ‘ச்சோட்டே நவாப்’ என்ற படத்தை, பிரபல நகைச்சுவை நடிகர் மெஹ்மூத் தயாரிக்கிறார். இப்படத்தில் எஸ்.டி. பர்மன் இசையை நாடி அவரது வீட்டுக்குச் செல்கிறார். எஸ்.டி. பர்மன்  நேரமின்மையால் இசையமைக்க மறுக்க, வீட்டில் தப்லா வாசித்துக்கொண்டிருந்த இளைஞன் பஞ்ச்சமையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்கிறார் மெஹ்மூத். இதுதான் ஆர்.டி. பர்மனின் முதல் படம். இதன் பின்னர் ‘பூத் பங்ளா’, ‘தீஸ்ரா கோன்’ ஆகிய படங்கள் 1965ல் வெளியாகின்றன. அடுத்த ஆண்டு வெளியான ‘தீஸ்ரி மன்ஸில்’ (1965) படம்தான் ஆர்.டி. பர்மனை ஊரெல்லாம் அறியச்செய்தது. பூத் பங்ளாவிலேயே ‘ஆவோ ட்விஸ்ட் கரே(ன்)’, ‘எக் சவால் ஹை’ முதலிய ஹிட்கள் இருந்தன. ஆனால் தீஸ்ரி மன்ஸில்தான் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆன முதல் ஆர்.டி பர்மன் படம். ஷம்மி கபூர் நடித்திருந்த இப்படத்தின் கதாநாயகி ஆஷா பாரேக். படத்தை இயக்கியவர் தேவ் ஆனந்தின் சகோதரர் விஜய் ஆனந்த். படத்தை எழுதித் தயாரித்தவர் பிரபல இயக்குநர் நஸீர் ஹுஸைன். தீஸ்ரி மன்ஸில், தேவ் ஆனந்த் நடிக்கவேண்டிய படம். ஆனால் தேவ் ஆனந்தும் நஸீர் ஹுஸைனும் ஒரு பார்ட்டியில் (நடிகை சாதனாவின் நிச்சயதார்த்தத்துக்கான பார்ட்டி அது) லேசாகக் குடித்துவிட்டுச் சண்டையிட்டதால், நஸீர் ஹுஸைன், தேவ் ஆனந்தை இப்படத்தில் இருந்து விலக்கி, ஷம்மி கபூரைச் சேர்த்தார்.
படம் பிரம்மாண்ட ஹிட் ஆனது. பாடல்களின் ட்யூனை ஆர்.டி. பர்மன் ஷம்மி கபூருக்குப் பாடிக்காட்டியபோதே அங்கேயே ஷம்மி கபூர் எழுந்து சந்தோஷமாக நடனமாடியிருக்கும் அளவு அவருக்குப் பாடல்கள் பிடித்துவிட்டன. அதேபோல், ‘ஓ ஹஸீனா ஸுல்ஃபோவாலி ஜானே கஹா’, ஓ மேரா சோனா ரே சோனா ரே’, ‘தும்னே முஜே தேகா ஹோ கர்’ முதலிய பாடல்கள் இந்தியாவெங்கும் பிரபலம் ஆயின. உடனடியாக ஆர்.டி. பர்மனுக்குப் பல வாய்ப்புகள் குவிந்தன. அன்றில் இருந்து அவர் இறந்த 1994 வரை இந்தியாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக விளங்கினார் ஆர்.டி. பர்மன். இந்தப் படத்துக்குப் பின்னர், 1985ல் நஸீர் ஹுஸைன் இயக்கிய ‘ஸபர்தஸ்த்’ படம் வரை அவரது அத்தனை படங்களுக்கும் ஆர்.டி. பர்மன் தான் இசை.
‘தீஸ்ரி மன்ஸில்’ படத்தைத் தொடர்ந்து, பதி பத்னி, சந்தன் கா பால்னா, பஹாரோ(ன்) கே சப்னே, படோசன், ப்யார் கா மௌசம், வாரிஸ் என்று வரிசையாக இசையமைக்கத் துவங்கினார் ஆர்.டி. பர்மன். 1970ல் வெளியான கடீ பதங்க் திரைப்படம், ஆர்.டி. பர்மனுக்கு ஒரு மிகச்சிறந்த ஹிட்டாக அமைந்தது. இப்படத்தின் ‘யே ஜோ மொஹப்பத் ஹை’, ‘யே ஷாம் மஸ்தானி’, ‘ப்யார் திவானா ஹோதா ஹை’, ஆஜ் ந ச்சோடேங்கே’, ‘நா கொயீ உமங் ஹை’ ஆகிய பாடல்கள் பிரம்மாண்ட ஹிட்கள் ஆயின. இதற்கு முன்னரே இயக்குநர் ஷக்தி சமந்தா & ராஜேஷ் கன்னா ஆகியோரின் கூட்டணியில் வெளியான ஆராதனா பிரபல ஹிட் ஆகியிருந்தது (இசை, எஸ்.டி. பர்மன். ஆனாலும் படத்தின் இரண்டு பாடல்கள் ஆர்.டி. பர்மன் இசையமைத்ததாகவே இன்றுவரை பேசப்படுகிறது).

இதற்குப் பிறகு, ‘கேரவான்’ (1971), ‘புட்டா மில் கயா’ (1971), ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ (1971), ‘சீதா ஔர் கீதா’ (1971) என்று தடதடவென்று சூப்பர்ஹிட் இசை ஆர்.டி. பர்மன் வழியாக இந்தியாவெல்லாம் பாய்ந்தது. குறிப்பாக ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில், ‘தம் மாரோ தம்’ பாடல் உலக ஹிட் ஆனது. அப்பாடலின் வீச்சால் பயந்துபோன இயக்குநர்-நடிகர் தேவ் ஆனந்த், அப்பாடலைப் படத்தில் முழுதாக வைக்கவே இல்லை. வைத்தால், படத்தைப் பாடல் மிஞ்சிவிடும் என்று அஞ்சினார்.

3 வயது குழந்தை, ரூ.100 கோடி சொத்துகளை உதறிவிட்டு துறவறம் செல்லும் ஜெயின் மத தம்பதியினர்


By DIN  |   Published on : 17th September 2017 01:32 AM  | 
family
Ads by Kiosked
ராஜஸ்தான் மாநிலத்தில், 3 வயதே ஆகும் பெண் குழந்தை, ரூ.100 கோடி மதிப்புடையச் சொத்துகளை உதறிவிட்டு, ஜெயின் மதத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் துறவறம் செல்லவுள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
ராஜஸ்தான் மாநிலம், நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் ராத்தோர் (35). ஜெயின் மதத்தின் ஸ்வேதம்பர் பிரிவைச் சேர்ந்த ராத்தோர், ராஜஸ்தானில் தனது குடும்பத்தினரின் தொழிலை நிர்வகித்து வருகிறார். 
அதற்கு முன்பு லண்டனில் அவர் பணியாற்றினார். அவரது மனைவி அனாமிகா (34) என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவருக்கும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 
இந்நிலையில், சூரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமித் ராத்தோர், ஜெயின் மத வழக்கப்படி, துறவறம் செல்ல விருப்பம் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த துறவி ஆச்சார்ய ராம்லால் மகராஜ் என்பவர், துறவறம் செல்வதற்கு அனாமிகாவின் சம்மதத்தை கேட்டுப் பெறும்படி தெரிவித்துள்ளார். இதை அனாமிகாவிடம் ராத்தோர் தெரிவித்தபோது, அதை அவர் உடனடியாக ஏற்றார். மேலும், ராத்தோருடன் சேர்ந்து தாமும் துறவறம் பூண்டு கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
பின்னர் இந்த முடிவை ராத்தோரும், அனாமிகாவும், தங்களது பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்ட உறவினர்கள், துறவறம் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தங்களது முடிவில், ராத்தோரும், அனாமிகாவும் உறுதியாக இருந்தனர். அதனால், அந்த முடிவை உறவினர்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதன்படி, சூரத்தில் வரும் 23}ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், இருவருக்கும் ஜெயின் மதத் துறவி ஆச்சார்ய ராம்லால் மகராஜ் துறவறம் செய்து வைக்கவுள்ளார். இதற்கு ஏற்ப, இருவரும் தற்போதிலிருந்தே மௌன விரதம் இருந்து வருகின்றனர்.
இருவரும் துறவறம் பூண்டதும், அவர்களது தலைமுடி முழுவதும் மழிக்கப்பட்டு மொட்டை அடிக்கப்படும். வெள்ளை நிறத்திலான உடையையே இருவரும் அணிய வேண்டும். தம்மை அறியாமல் கூட உயிரினங்களுக்கு கெடுதல் செய்து விடக் கூடாது என்பதற்காக, பேசும்போது வாய்க்குள் சிறிய வகை பூச்சிகள் சென்றுவிடாமல் இருக்கும் வகையில், வாயைச் சுற்றிலும் வெள்ளைத் துணியை சுற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடைமுறையை வாழ்நாள் முழுவதும் ராத்தோரும், அனாமிகாவும் கடைபிடிக்க வேண்டும்.
சுமித் ராத்தோர், லண்டனில் படிப்பை முடித்து, அங்கேயே 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆவார். அனாமிகா, 8ஆம் வகுப்புத் தேர்வில் நீமுச் மாவட்டத்தில் முதலாவது வந்து தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் தற்போது ரூ.100 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. அதேபோல், பெண் குழந்தையும் உள்ளது.
ராத்தோரும், அனாமிகாவும் துறவறம் செல்வதால், பெண் குழந்தையை பெற்றோரிடம் விட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து அனாமிகாவின் தந்தை அசோக் சந்தாலியா கூறுகையில், "எனது பேத்தியை நாங்கள் கவனித்துக் கொள்வோம். எனது மகள் துறவறம் செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை' என்றார். இதே கருத்தை ராத்தோரின் தந்தை ராஜேந்திர சிங்கும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, குஜராத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வில் வணிகப் பாடத்தில் 99.99 சதவீதம் மதிப்பெண் எடுத்த சிறுவன் ஒருவர், துறவறம் பூண்டது குறிப்பிடத்தக்கது.
 

More girls cornering MBBS seats

Statistics show the situation has remained in their favour for the past decade

Over the last nine years, the number of girls getting into medical colleges, whether self-financing or government, has been equal to or higher than the number of boys. While one indicator of this should have been better performance of girls in the Standard XII examinations, perusing the statistics over the years makes it clear that more girls than boys are entering medical colleges in Tamil Nadu, and that statistics remain unshaken with NEET too.
The percentage of girls (to boys) entering MBBS courses in government medical colleges has been between 49 and 56 since 2009, and this year (2017- 2018), it was 54. Only in 2010 was it higher at 56. The performance in the self-financing side has swung between 54 and 60. Put together, these admissions allow the gender meter to rest comfortably on the female side in the last decade or so.
Change in 2 decades
“It has been like this for many years now. Maybe 40 years back, when we were students, the gender ratio would have been 70:30 in favour of the boys. However, that started gradually changing, and more girls started entering the profession. Gradually it evened out, and then in the last 15-20 years, the tide has turned in favour of girls,” says S. Mohanasundaram, former Director of Medical Education.
A senior woman professor in a government medical college explains that the tide turned in 1990s with entrance examinations, and then Standard XII marks, or sheer merit deciding the entry of candidates.
In 1990s with entrance exams, the girls were performing better. With girls having an edge over the boys in the Standard XII results, they naturally had a better chance of getting into medical colleges.
Additionally, she reminds us, came social change. “Earlier, when we were studying to be doctors, things like finding appropriate grooms for their daughters governed what kind of course the girls could take. Even if the girls performed well, their parents may not have been so keen on sending them to medical college. That seems to have changed in the 1990s,” she explains, providing the context.
However, for the years for which data was available for government school students who entered medical schools, there was no consistent pattern.
In two years, more girls from government schools secured admission to MBBS course, and in the other two years, it was boys. Also traditionally, in Tamil Nadu, the number of government school students getting MBBS has been low, less than 1 per cent.
That number crashed to an all-time low in recent years, five seats, this year.


அமெரிக்கா போக ஆசையா?- நிராகரித்தாலும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா?

Published : 15 Sep 2017 10:39 IST






அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவோர் விசா தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்ன? மாதமொருமுறை உங்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்கள் சென்னையில் உள்ள‌ அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரிகள்.

நான் தற்போது திருப்பூரில் இருக்கிறேன். அடுத்த 6 மாதங்களில் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். இணையம் மூலமாக விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமா அல்லது நேரடியாக சென்னையில் உள்ள‌ துணைத் தூதரகத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டுமா?

- ஆனந்த், திருப்பூர்.

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதில் அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன. முதல் கட்டமாக, குடியுரிமை அல்லாதோர் விசாவுக்கான DS -160 படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அடுத்து கைரேகைப் பதிவுகளுக்கெனத் தனியாகவும் விசா நேர்காணலுக்குத் தனியாகவும் இருவேறு நேரப் பதிவுகளை (அப்பாயின்ட்மென்ட்) பெற்றிட வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visaapply.asp

விசிட்டர் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது DS-160 என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமாமே? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

- சிவரஞ்சனி, கொடைக்கானல்.

ஆமாம். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் DS-160 என்ற படிவத்தை இணைய வழியில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதில் இதுதான் முதல் படி. விண்ணப்ப நடைமுறைகள் சார்ந்த முழு விவரங்களை அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visaapply.asp

கடந்த 2016‍‍-ம் ஆண்டு நவம்பர் மாதம் என் பெற்றோர் B2 விசாவைப் புதுப்பிக்க விண்ணப்பித்தனர். அது இப்போதுவரை நிலுவையில் உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவரின் விசாவைப் புதுப்பிக்க எவ்வளவு காலம் ஆகும்?

- நடராஜன், திருச்சி.

ஒவ்வொரு விண்ணப்பமும் அவரவர் தனிப்பட்ட காரணங்களைச் சார்ந்தது. விசா நேர்காணலுக்குப் பிறகு 60 நாட்களுக்குள் பெரும்பாலும் விசா நிர்வாக நடைமுறைகள் முடிந்துவிடும். சில விண்ணப்பங்களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படும். நிர்வாக நடைமுறையின் காரணமாக உங்கள் பெற்றோரின் விண்ணப்பம் இன்னமும் நிலுவையிலிருந்தால், விசா நேர்காணல் முடிந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தால், support-india@ustraveldocs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரம் கேட்டு அனுப்புங்கள். உங்கள் பெயர், விண்ணப்ப எண், தொடர்பு முகவரி, தொலைபேசி உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடுவது அவசியம்.


நான் என் தாத்தாவை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். அவருக்கு வயது 86. முதியவர்களுக்கு ‘விசா வெய்வர்’ திட்டம் என ஒன்று உள்ளதாமே? அது குறித்து விளக்கம் தேவை.

- மானஸி, கோவை.

உங்கள் தாத்தாவுக்கு நேர்காணல் இல்லாமல் விசா வழங்கும் சலுகை கிட்டலாம். தற்போதைய அமெரிக்கக் குடியேற்றச் சட்டப்படி, சில வகை விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே விசா மறுக்கப்பட்டவர்களாக இல்லாதிருப்பின், இச்சலுகையைப் பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய: http://www.ustraveldocs.com/in/in-niv-visarenew.asp#qualifications

நான் மூன்றாண்டுகளுக்கு முன்பு B2 விசாவுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், இரண்டு முறையும் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இப்போது, நான் F1 விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். ஏற்கெனவே எனது சுற்றுலா விசா நிராகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது நான் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமா?

- ரஞ்சித், திண்டுக்கல்.

அமெரிக்கக் குடியேற்ற மற்றும் குடியுரிமைச் சட்டம் விதி 214 (பி)-யின் கீழ், ஒரு முறை விசா நிராகரிப்பு என்பது, விசா பெறும் தகுதியை நிரந்தரமாக இழப்பதாகாது. உங்கள் பயணத் திட்டத்தையொட்டி, எப்போது வேண்டுமானாலும் அதே அல்லது வேறு விசா பிரிவின் கீழ் விசா கோரி நீங்கள் விண்ணப்பிக்கலாம். வேறு விசா பிரிவாக இருக்கும்பட்சத்தில், அதற்குரிய தகுதிகளை நீங்கள் பெற்றிருத்தல் அவசியம். F1 விசா பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட இதர விசா பிரிவுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய: travel.state.gov

நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை.
டிஜிட்டல் போதை -1: விழித்துக்கொண்டு பிழைத்துக்கொள்வோமா?

Published : 16 Sep 2017 11:48 IST

வினோத் ஆறுமுகம்






அது ஒரு சின்னஞ்சிறிய கிராமம். இயற்கை எழில் கொஞ்சுகிறது. வெப்பமும் அதிகமில்லை, குளிரும் அதிகமில்லை. இதமான ஒரு காலை நேரம். மரங்களுக்கு நடுவே அமைதியான ஆசிரமம்போல் அமைந்துள்ளது அந்த வீடு. இயற்கையின் அரவணைப்பில் இருக்கும் அந்த வீட்டில் பதின் வயது இளைஞர்கள் சிலர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அலறும் சீழ்கை ஒலி அவர்களை எழுப்புகிறது. உறக்கம் கலந்த கண்களுடன் அனைவரும் வெளியே வருகிறார்கள். மருத்துவர்கள் வருவதற்குள் காலை உடற்பயிற்சியை முடிக்க வேண்டும். வேகமாகப் புறப்படுங்கள் என்று கட்டளை வருகிறது. அனைவரும் காலைக் கடன்களை முடிக்கிறார்கள். வெளியே மிதமான வேகத்தில் ஓட்டப்பயிற்சி, பின்பு எளிதான உடற்பயிற்சி. சிறிது நேரம் தியானம். குளிக்க செல்கிறார்கள். அப்புறம் காலை சிற்றுண்டி. சிற்றுண்டி முடிந்ததும் மீண்டும் தியானம். இப்பொழுது அவர்களின் கையில் கைபேசி அல்லது மடிக்கணினி கொடுக்கப்படுகிறது. செல்போனுடன் சிறிது நேரம். இணையத்துடன் சிறிது நேரம். வேண்டுமென்றால் கேம் விளையாடலாம்,பேஸ்புக் பார்க்கலாம், படம் எடுக்கலாம். ஒரு மணி நேரம்தான். மீண்டும் தியானம். ஒரு சிறு இடைவெளி. பின்பு வீட்டு வேலைகள் அல்லது தோட்ட வேலைகள்.

மாறுபட்டதொரு முகாம்

மனநல மருத்துவர் வருகிறார். அனைத்தையும் கண்காணிக்கிறார். அவர்களுடன் புன்னகை தவழப் பேசுகிறார். சில மனநலப் பரிசோதனைகளையும் பயிற்சிகளையும் நடத்துகிறார்.சில ஆலோசனைகளை வழங்குகிறார். மதிய உணவு. சிறிது நேர உறக்கம். மீண்டும் தியானம். மீண்டும் அரை மணி நேரம் கைபேசி. மாலை நேர உடற்பயிற்சி. மீண்டும் மனநல மருத்துவருடன் உரையாடல். இரவு உணவுக்குப் பிறகு மீண்டும் தியானம். அன்றைய நாள் பணிகள் முடிவடைந்தன.

இது ஏதோ பள்ளி முகாம் அல்லது என்.சி.சி.-சாரணர் பயிற்சி முகாம் போலத் தோன்றுகிறது, இல்லையா. இந்த முகாம் நடைபெறுவதற்கான காரணம் வேறு. கொஞ்சம் அதிர்ச்சிகரமான முகாம்தான். சீனாவில் இணையத்துக்கு அடிமையானவர்களுக்காக ஹுனான் மாகாணத்தில் செயல்பட்டுவரும் மறுவாழ்வு மையம் இது. இணையம், ஸ்மார்ட்போன், வீடியோ கேம்களால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்க மனநல மருத்துவர்களும் பெற்றொர்களும் இணைந்து சில லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த மையத்தை நடத்திவருகிறார்கள்.



தோள்கொடுக்கும் அரசு

டிஜிட்டல் விளையாட்டு போதைக்கு ஆட்பட்டிருக்கும் இளம் சமூகத்தை மீட்டெடுக்கும் டிஜிட்டல் போதை நீக்க மையங்கள் சீனாவிலும் தென்கொரியாவிலும் அதிகரித்துவருகின்றன. அவற்றுக்கு அந்நாட்டு அரசுகளும் உதவுகின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, அந்த நாடுகளிலும் டிஜிட்டல் போதை நீக்க மையங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்த நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் செல்போன், இணையம், எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்களை குடிநோயாளிகள் அல்லது போதைப் பழக்கம் கொண்டவர்களைப் போல முகாமில் அடைத்து ராணுவக் கட்டுப்பாடுபோல் கண்காணிக்க வேண்டுமா? இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று தோன்றலாம். சீன, கொரிய அரசுகள் அப்படி நினைக்கவில்லை.

அந்த நாடுகளில் இளைஞர்களும் சிறுவர்களும் டிஜிட்டல் தொழில்நுட்ப போதைக்கு அடிமையாகி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால்தான், ‘டிஜிட்டல் போதை’ பெரும் தொற்றுநோயைப் போல் அங்கு அதிவேகமாகப் பரவிவருகிறது. உடனே மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தைநல ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் டிஜிட்டல் போதை நீக்க மையங்களை அந்நாட்டு அரசுகள் நிறுவிவிட்டன.

தொடர்புக்கு: write2vinod11@gmail.com
It’s free data raining

Airtel offers 60GB free data to postpaid users; here’s how to claim it


Bharti Airtel on Saturday announced a new free data plan for its postpaid users. Under the new plan, Airtel is giving up to 60GB of free data to postpaid users upon downloading and installing the Airtel TV application on their mobile phone. The company is also offering free Live TV services under this offer.

The latest offer comes shortly after the company announced a Postpaid Promise plan under which users could carry forward their unused data to another month and accumulate up to 200GB.

How to claim 60GB bonus data?

If you are an Airtel user, you need to download or open MyAirtel app. On the home screen, you’ll see a banner prompting you to claim free data. Tap on the banner and follow the on-screen instruction. The data can only be availed by downloading and installing the Airtel TV app.

Claim your bonus data. (HT Photo)

If you have successfully downloaded and installed the app, Airtel will send you a notification through SMS on your registered mobile number. The data will be credited to your account within 24 hours.

President's medal for former DIG D Roopa who exposed alleged jail irregularities

PTI | Updated: Sep 16, 2017, 21:32 IST

HIGHLIGHTS

Former DIG D Roopa was today conferred the President's Medal.

She had highlighted alleged irregularities at the Bengaluru central jail

She had also highlighted preferential treatment to AIADMK leader V K Sasikala

DIG Roopa greeted by her son


BENGALURU: Former DIG D Roopa, who highlighted in a report alleged irregularities at the central jail here, including preferential treatment to AIADMK leader V K Sasikala, was on Saturday conferred the President's Medal.

The award was presented to Roopa for her meritorious service by Governor Vajubhai Vala at a ceremony at Raj Bhavan in the presence of Karnataka Chief Minister Siddaramaiah and Home Minister Ramalinga Reddy.

Other police officials selected for the President's medal for their meritorious service were also conferred the medals.

In July, Roopa, then DIG of Prisons, D Roopa, had submitted a report to the Director General of Prisons stating that Sasikala, serving a four-year sentence in the disproportionate assets case at Parapanna Agrahara Central Prison, was given preferential treatment and there was "a talk" that Rs two crore had exchanged hands.

TOP COMMENThearty congratulations to dig d. roopa. your deserve it. i appreciate your boldness. dr.shanthakumarshanthakumar mahadevaiah

Subsequently, both Roopa and the DG were transferred after they were locked in a public spat over the issue and a high-level probe ordered into the claims.

Roopa was posted as Deputy Inspector General of Police and Commissioner for Traffic and Road Safety here.

NEWS TODAY 17.07.2026