Monday, November 20, 2017

குற்றவாளிகள் நாடாளக்கூடாது: - கமல் கொதிப்பு

Added : நவ 20, 2017 02:52



சென்னை: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான், என நடிகர் கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

சிங்கப்பூரிலும் கால் பதிக்குது ஆவின்

Added : நவ 20, 2017 02:15

ஆவின் நிறுவனத்தின், 'டெட்ரா பேக்' பால் பாக்கெட்டுகள், சிங்கப்பூரில், நவ., 25ல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், பால் கொள்முதல் மற்றும் விற்பனையில், ஆவின் நிறுவனம் பிரதானமாக உள்ளது. சந்தையில் நிலவும் போட்டிகளுக்கு சவால் விடும் வகையில், விதவிதமான பால் பொருட்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

அவை, மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை நடைமுறைகளிலும் மாற்றம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கோலோச்சிய ஆவின், கடல் கடந்தும் தன் விற்பனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.இதன்படி, சிங்கப்பூரில், வரும், 25ல், ஆறு மாதங்களுக்கு கெடாத, 'டெட்ரா பால்' பாக்கெட்டுகளை, ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. 


இதற்காக, ஆவின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகள் குழு, சிங்கப்பூருக்கு செல்ல உள்ளது. அடுத்த கட்டமாக, மலேஷியாவிலும், பால் விற்பனை துவக்கப்படும் என, ஆவின்
அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -
சிறுபான்மை இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு உத்தரவு

Added : நவ 20, 2017 00:27

சென்னை: 'சிறுபான்மை இன்ஜி., கல்லுாரிகள், சிறுபான்மை அந்தஸ்து பெற்றதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில், 50க்கும் மேற்பட்ட சிறுபான்மை இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்று, 50க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் இயங்குகின்றன.
அவற்றில் சில கல்லுாரிகள், சிறுபான்மை பெயர் வைத்திருந்தாலும், சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் சலுகை பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதை தொடர்ந்து, முறையாக சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளின் தகுதி, அங்கீகார காலம் போன்றவற்றை ஆய்வு செய்ய, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 'சிறுபான்மை இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள், சிறுபான்மை அந்தஸ்து பெற்றதற்கான ஆவணங்களை, வரும், 20க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டி தீர்த்த மழை 

Added : நவ 20, 2017 03:16

சபரிமலை: சபரிமலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.,15-ம் தேதி திறந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் பகலில் அதிக வெயிலும், இரவில் கடும் குளிரும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சில நிமிடம் மட்டும் மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்த தால் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.18-ம் படி ஏறிய பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தரிசனம் செய்தனர். மலை ஏறிய பக்தர்கள் சிரமப்பட்டனர்.

Sunday, November 19, 2017

54 DMCH girls fined Rs 25,000 each for ragging

| Nov 19, 2017, 02:00 IST
 
DARBHANGA: As many as 54 girl students of the Darbhanga Medical College and Hospital

(DMCH) have been fined Rs 25,000 each in connection with incidents of ragging.

This is the second instance of medical students being fined for ragging in the state within a fortnight.

The fined Darbhanga students include both second-year and first-year students. While the seniors have been fined for their alleged involvement in ragging, the juniors have been financially punished for refusing to identify their tormentors.

DMCH principal Dr R K Sinha on Saturday said a first-year student had sent a complaint to the Medical Council of India (MCI) about the ragging. "The MCI on Friday informed my office and sought action against the culprits," he said and added he immediately convened a meeting of the college's anti- ragging committee on Friday.

The committee members went to the girls' hostel for investigation, but neither the seniors nor the juniors confirmed incidents of ragging.

"As per the MCI rule in such a case, all the girls of the hostel have been fined Rs 25,000 each," the principal said, adding the penalty was to be deposited by November 25 or else further action would be taken.

Earlier this month, the administration of Jawaharlal Nehru Medical College and Hospital in Bhagalpur imposed a fine of Rs 25,000 each on 33 second-year students for ragging juniors.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

By சென்னை,  |   Published on : 19th November 2017 01:45 AM  

போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

"லூட் லோ' என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 60 சதவீத கட்டணச்சலுகை மற்றும் 500 சதவீத டேட்டா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போஸ்ட் பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவைகளின் கீழ், 60 சதவீதம் வரை சலுகை கொடுக்கப்படுகிறது. இதில், ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1125 ஆகிய 7 போஸ்ட் பெய்டு திட்டங்களில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 


இது தவிர நிரந்தர மாதாந்திரக் கட்டணம் இருக்கும் திட்டங்களுக்கு 500 சதவீதம் கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.99, ரூ.149, ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125 ஆகிய மாதாந்திரக் கட்டணங்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. 500 எம்பி, 3 ஜிபி, 7ஜிபி, 15 ஜிபி, 60 ஜிபி மற்றும் 90 ஜிபிஆகியவற்றுக்கு இலவச டேட்டா வசதியை பயன்படுத்த முடியும். இந்த சலுகைகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


இது தொடர்பாக கூடுதல் தகவல்களை www.bsnl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் சென்னை நிலைய தலைமை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி தெரிவித்தார்

மரணமடைந்த பெண்ணின் தாய், சகோதரிக்கு இலவச மருத்துவ சிகிச்சை கோரி வழக்கு

Added : நவ 19, 2017 01:15

சென்னை:பெண்களை பின் தொடர்வது, கேலி செய்வது போன்ற வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், பயிற்சி பெற்ற பெண் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை, ஜன., ௫க்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:காதலை நிராகரிப்பதாலும், திருமணம் செய்ய மறுப்பதாலும், அப்பாவி இளம் பெண்கள், சிறுமியர் மீது, வெறி பிடித்த மனித மிருகங்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது; அதேநேரம், நிராகரிக்கும் உரிமையும் உள்ளது.

தங்கள் விருப்பத்துக்கு எதிராக பெண்கள் செயல்பட்டால், அவர்கள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி, கொலை செய்கின்றனர் அல்லது முகத்தை அலங்கோலப்படுத்துகின்றனர்.இதனால், பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் நிலை கொடுமையானது. அவர்கள் படும் வேதனை, நிரந்தரமாகி விடுகிறது. கல்லுாரி, பள்ளி மாணவி யரின் பின் சென்று,காதலிக்கும்படி வற்புறுத்துவது, தாக்குவது என்ற மனப்போக்கு தற்போது வளர்ந்து வருகிறது.

சமீபத்தில், ஆதம்பாக்கத்தில், திருமணம் செய்ய மறுத்ததால், இந்துஜா என்ற இளம் பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதில், அந்த பெண் மரணமடைந்தார். தடுக்க வந்த தாயார், சகோதரி, படுகாயம் அடைந்துள்ளனர்.மருத்துவக்கல்லுாரி மாணவி அளித்த புகாரில், சட்டக் கல்லுாரி மாணவன் ஒருவன், சமீபத்தில் கைது செய்யப்பட்டான். 'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய்நஷ்டஈடு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிட் வீச்சால் பாதிப்புக்கும், பெட்ரோல் வீச்சால் ஏற்படும் பாதிப்புக்கும், வேறுபாடு ஒன்றும் இல்லை. அதனால், இரண்டையும் இணையாக கருத வேண்டும்.எனவே, ஆதம்பாக்கத்தில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், மரணமடைந்த பெண்ணின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா ஆகியோருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில், பயிற்சி பெற்ற பெண் இன்ஸ்பெக்டரை நியமித்து, இத்தகைய வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்படு பவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., ௫க்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...