Monday, November 20, 2017


காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?
By ஹரிணி | Published on : 16th November 2017 10:51 AM

வாழைப்பழம் மிகச் சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்று என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, சாப்பிடும் போது பழத்தைக் கழுவத் தேவையில்லை, கடித்து, அரைத்து விழுங்கத் தேவையில்லை, வெறுமே மென்றாலே தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்று காரணம் காட்டி வேறு சத்தான காலை உணவுகளைச் சாப்பிட சோம்பல் பட்டுக் கொண்டு அன்றாடம் காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்வது தவறு. ஏனெனில் வாழைப்பழங்களில் நிறைந்திருக்கும் மைக்ரோ நியூட்ரியன்டுகளான பொட்டாசியம், மக்னீசியம், மற்றும் ஃபைபர் எனும் மூன்று சத்துக்களுமே வெறும் வயிற்றில் வாழைப்பழங்களைச் சாப்பிடும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என உணவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.



வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய இயற்கைச் சர்க்கரையின் அளவு அதை உண்டதும் ஆற்றலைத் தூண்டி மனிதர்களைச் சுறுசுறுப்பானவர்களாக உணரச் செய்வதாக இருந்தாலும் கூட நேரமாக, ஆக அப்படியே எதிர்மறையாகி மிக, மிகச்சோர்வான உணர்வைத் தரக்கூடியதாக மாற்றி விடக்கூடியதாம்.
தற்காலிகமான பசியை அடக்க வாழைப்பழங்களை உண்டால் சற்று நேரத்தில் தூக்கக் கலக்கமாக உணர்வீர்கள். அதோடு உடல் எடையையும் உடனடியாக அதிகரிக்கக் கூடிய தன்மை வாழைப்பழங்களுக்கு உண்டு என்கிறது உணவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று.
வாழைப்பழங்கள் எல்லாப் பழங்களையும் போலவே இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவற்றை வெறும் வயிற்றில் உண்ணும் போது குடல் சம்மந்தமான பிரச்னைகள் வரக்கூடும்.




அதெல்லாம் சரி தான். ஆனால், அதற்காக காலை நேரத்தில் வாழைப்பழங்களே சாப்பிடக்கூடாது என்பதில்லை. ஆனால் எப்படிச் சாப்பிடுவது? என்பதில் சில விதிமுறைகள் உள்ளன. வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து ஒரு நாளின் காலைப்பொழுதைத் துவக்க மிகச்சிறந்த உற்சாக டானிக்காகச் செயல்படக்கூடும், எப்போது தெரியுமா? வாழைப்பழங்களை நாம் பிற பழங்கள் மற்றும் நட்ஸ்களுடன் இணைத்துச் சாப்பிடும் போது பொட்டாசியம் மிகச்சிறந்த விளைவைத் தரும். வாழைப்பழத்திலுள்ள மெக்னீசியம் சத்து, வெறும் வயிற்றில் சாப்பிடுகையில் ரத்தத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம் அளவுகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளில் கொண்டு விடக்கூடும், ஆனால், அதே பழத்தை பிற பழங்கள், நட்ஸ்கள், பிரெட் அல்லது சப்பாத்தி உள்ளிட்ட எளிய உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் அதன் அமிலத்தன்மை குறைக்கப்பட்டு ஆரோக்யமான விளைவுகளைத் தரும்.

இதைப் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்;

ஆயுர்வேதம் வாழைப்பழங்களை மட்டுமல்ல, எந்த ஒரு பழமுமே காலை வேலையில் வெறும் வயிற்றில் உண்ணத்தக்கது அல்ல என்று வகுத்துள்ளது. ஏனெனில் எல்லாப் பழங்களுமே அமிலத்தன்மை கொண்டவை தான். அது மட்டுமல்ல இன்று நாம் உண்ணக்கூடிய எல்லாப் பழங்களுமே இயற்கையாக விளைந்தவை அல்ல, பல்வேறு விதமான ரசாயண உரங்கள் இட்டு வளர்க்கப் பட்டவை தான். எனவே அவற்றில் முன்னதாகவே ரசாயனங்களால் விளையும் விஷத்தன்மை இருக்கும். அவற்றை வெறும் வயிற்றில் தனித்தனியே சாப்பிட்டு வயிற்றைப் புண்ணாக்கிக் கொள்வதைக் காட்டிலும் பிற சத்தான உணவுகளோடு கலந்து சாப்பிட்டால் கொஞ்சமாவது ஆரோக்யமாக இருக்கும். எனவே வாழைப்பழங்கள் மட்டுமல்ல, எல்லா வகைப் பழங்களையுமே நட்ஸ்களோடு கலந்து உண்பதே சிறந்தது என்கிறது ஆயுர்வேதம்.

ஆகவே இனிமேல் காலையில் அலுவலகமோ, பள்ளியோ எங்கு செல்வதாக இருந்தாலும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட விரும்பினீர்கள் என்றால் அவற்றோடு சேர்த்து பாதாம், முந்திரிப்பருப்பு, பிஸ்தா, வால்நட் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி, கொய்யா, திராட்சை, மாதுளை என எல்லாவற்றையும் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்!

சபரிமலை கோயிலில் ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனத்துக்கு பதிலாக புதிய பாடல்: நிர்வாகம் முடிவு
By திருவனந்தபுரம் | Published on : 20th November 2017 01:55 AM |






பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒலிக்கப்படும் "ஹரிவராசனம்' பாடலில் குறைகள் இருப்பதால், அந்தப் பாடலுக்குப் பதிலாக திருத்தங்களுடன் கூடிய புதிய பாடலைப் பதிவு செய்து பயன்படுத்த அந்தக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப்படப் பாடகருமான ஜேசுதாஸ் பாடியுள்ள "ஹரிவராசனம்' பாடல், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மூலவருக்கான தாலாட்டுப் பாடலாக ஒலிக்கப்பட்டு வருகிறது.




1975-ஆம் ஆண்டு வெளியான "சுவாமி ஐயப்பன்' திரைப்படத்துக்காக, மறைந்த ஜி.தேவராஜனால் இசையமைக்கப்பட்டு ஜேசுதாஸால் பாடப்பட்ட அந்தப் பாடல் மிகவும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பாடல் சபரிமலை கோயிலில் வழக்கமாக ஒலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1920-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த பக்திப் பாடலை ஏராளமானோர் பாடி வெளிவந்திருந்தாலும், ஜேசுதாஸ் பாடிய பாடலே மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது.


இந்த நிலையில், திரையிசைக்காக "ஹரிவராசனம்' மூலப் பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாலும், பாடலில் தவறான உச்சரிப்பு இருப்பதாலும் ஜேசுதாஸ் பாடியுள்ள அந்தப் பாடலை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக, மூலப் பாடலை முழுமையாகக் கொண்டுள்ள புதிய பாடலைப் பதிவு செய்து பயன்படுத்த சரிமலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ஏ.பத்மகுமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


"ஹரிவராசனம்' பாடலில், இசையின் நேர்த்திக்காக மூலப் பாடலில் எழுதப்பட்டிருந்த "சுவாமி' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பாடலில் வரும் "அரி' மற்றும் "விமர்தனம்' ஆகிய இரு வார்த்தைகள் தவறான முறையில் ஒன்றாகச் சேர்த்து உச்சரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


"எதிரி' என்னும் பொருள் கொண்ட "அரி' என்ற வார்த்தையையும், "அழித்தல்' என்னும் பொருள் கொண்ட "விமர்தனம்' என்னும் வார்த்தையையும் தனித் தனியாகத்தான் உச்சரிக்க வேண்டும் என்றும் பாடகர் ஜேசுதாúஸ ஒப்புக் கொண்டுள்ளார்.


இந்த நிலையில், குறைகள் களையப்பட்ட புதிய வடிவில் "ஹரிவராசனம்' பாடலைப் பதிவு செய்து, அதை இனி சபரிமலைக் கோயிலில் ஒலிக்கச் செய்ய முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தம் வாரியத் தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
"ஹரிவராசனம்' பாடலைப் பாடியுள்ள பாடகர் ஜேசுதாஸ், சபரிமலை ஐயப்பனின் அதிதீவிர பக்தர் ஆவார். மேலும், அவர் அந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருகிறார்.
தற்போது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவராகியுள்ள ஏ. பத்மகுமார், சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் "ஹரிவராசனம்' பாடலை எழுதியதாகக் கருதப்படும் ஜானகி அம்மாவின் வழித்தோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது.

நலம் நலமறிய ஆவல் 09: அரிப்பைத் தரும் ‘எதிரிகள்!’

Published : 18 Nov 2017 12:37 IST

டாக்டர் கு. கணேசன்

 

என் மனைவிக்கு வயது 30. அவருக்கு ஒவ்வாமைபோல தலை முதல் கால்வரை ஒரே அரிப்பு. சொறிந்தவுடன் தடித்துவிடும். நானும் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் எனக் காண்பித்தேன். அரசு சித்த மருத்துவமனையில் லேகியம், பொடி ஆகியவற்றைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். பத்தியம் இருக்கச் சொன்னார்கள். அதேபோல் செய்ததில் குணமானது. கடந்த 2 மாதங்களாக முன்பு போலவே ஒவ்வாமை வந்து, தலை முதல் கால்வரை ஒரே அரிப்பு, சொரிந்தவுடன் தடித்துவிடுகிறது. இயற்கை முறையில் குணமாக்க வழி சொல்லுங்கள்.

- சே.காரல் மார்க்ஸ், பூதலூர்.

பெரும்பாலும் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. அதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். எது ஒவ்வாமை ஆகிறது என்று கண்டுபிடிப்பதுதான் சவாலுக்குரியது. ஒவ்வாமையைத் தூண்டும் எதிராளிகள், உடலுக்குள்ளும் இருக்கலாம். உடலுக்கு வெளியிலிருந்தும் வரலாம்.

உடலுக்கு வெளியே எதிரிகள்

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்து விடும்.

ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனப் பொருட்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்குத் தங்க நகைகள், கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு ‘கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ என்று பெயர்.

அப்படி ஆகும்போது தோல் தடிப்பதுடன், சொரசொரப்பாகி கறுப்பாகிறது. இந்த இடங்களைச் சொரியச் சொரிய நீர்க்கொப்பளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்கு ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் ஒவ்வாமையாகி அரிப்பு வரும். கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்று பட்டு, தோல் வறட்சி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் முதன்மையானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்துத் தடிப்புகள் உண்டாகும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி எனப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு, தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக் கூடிய ஒரு நோய்தான். இவை தவிர தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

உடலுக்குள் இருக்கும் எதிரிகள்

இனி, உடலுக்குள் இருக்கிற எதிராளிகளைப் பார்ப்போம். பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றில் ஏதோ ஒன்று ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். உணவைப் போலவே வேறு நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் தங்கள் உடலில் எந்நேரமும் ஒரு பூச்சி ஊறுவதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

அரிப்புக்குக் காரணம் தெரிந்து, அதைக் களைந்தால் மட்டுமே அரிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். சில வகை அரிப்புகள் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் தொல்லை கொடுத்துவிட்டு, அந்த சீசன் முடிந்ததும் தானாகவே விடைபெற்றுவிடும்.

உங்கள் மனைவிக்கு அனுபவம் நிறைந்த சரும நோய் நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். குணம் கிடைக்கும். இயற்கை வழியில் இதற்கு நிவாரணம் கிடைப்பது சிரமம்.

‘நலம், நலமறிய ஆவல்'

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை ஏன்? ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

Published : 18 Nov 2017 18:27 IST
 


குருமூர்த்தி (கோப்பு படம்)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில் இதுகுறித்து, ஆடிட்டர் குரூமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மன்னார்குடி மாபியா மோசடிக்கான ஆதாரங்களை மின்னணு வடிவில் வைத்திருந்தது. சசிகலாவிடம் சாவி உள்ளதால், ஜெயாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது என அவர்கள் நினைத்திருந்தனர். வருமான வரித்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வருமான வரித்துறைக்கு பாராட்டுகள்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் பள்ளம்: வாகனங்கள் செல்ல அனுமதியில்லை

Published : 19 Nov 2017 20:59 IST

சென்னை

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பணியால் பள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துவிட்ட பிறகே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் எதனால் பள்ளம் ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. ஆய்வுக்குப் பிறகே அது தெரியவரும்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

Published : 19 Nov 2017 15:15 IST

சென்னை


அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும், ஆனால், கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்று தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''கிழக்குதிசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகம், கடற்கரைப்பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆதலால், வரும் வாரத்தில் வெளியே செல்லும் போது 'குடை' அல்லது 'ரெயின்கோட்' உடன் எடுத்துச் செல்லவும். கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.

கடந்த வாரத்துக்கு முன் பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த வாரம் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த முறை டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் மழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் அடுத்த நான்கு நாட்கள் வரை மழை இருக்கும்.மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்யும்.வடகடலோர மாவட்டங்களாகன சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை இருக்கும். உள்மாவட்டங்களிலும் ஒரு சில நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு உண்டு. வடக்கு உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளிலும் ஒரிருமுறை மழை இருக்கும்.

மிதமான மழைமட்டுமே இருக்குமே என்பதால், வெள்ளத்துக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்… இந்த மழை என்பது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்யாது. அடுத்த 4 நாட்களில் வெள்ளம் வரும் அளவுக்கும் மழை பெய்யப் போவதில்லை. ஆதலால், மழையை அனுபவியுங்கள்.

வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்துவிடும். ஆதலால், இந்த மாதத்தின் கடைசி நாட்களும், டிசம்பர் மாதத்தின் முதல்பாதியும் மழையோடு மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம். சென்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் மழையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதால், நல்ல மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
போனில் திட்டினாலும் வன்கொடுமை சட்டம் பாயும்

புதுடில்லி:'போனில் பேசும் போது, வேறொரு இடத்தில் உள்ள ஒருவரை, ஜாதியின் பெயரைக் கூறி திட்டினாலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்' என, உச்ச நீதி
மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.



உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரைக் கூறி திட்டியதாக, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த சட்டத்தின்படி, அதிக பட்சம், ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப் படும். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அந்த நபர்மேல்முறையீடு செய்தார். 'பொது இடத்தில் ஒருவரை ஜாதியின் பெயரைக் கூறி திட்டினால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். தொலை பேசியில் பேசியது, இரு நபர்களுக்குஇடையேயான உரையாடல்; அது பொது இடமாகாது' என, அந்த நபர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்காத, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் அமர்வு, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. 'தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரில் திட்டினாலும், அது குற்றமாகும்' என, அமர்வு கூறியுள்ளது.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...